.
அதிர்ந்து விழும் இரைச்சலை
அப்படியே விழுங்கி செரிக்கும்
மௌனத்தை போல
கடந்து செல்கிறது இரவின்
இருள் படிந்த வானம்
வண்ணம் அற்ற வானத்தின்
நீர்த்த பரப்புகள்
பெரும் பீதியை தருகிறது
எவ்வளவு முயன்றும் ரசிக்க முடியவில்லை
பால்யத்தின் கோர நினைவுகள்
கோர்வையாய் அணிவகுக்க
உடலும் மனமும்
உலுக்கியது போல வெகுண்டு எழுகிறேன்
அதன் பிடியில் இருந்து தப்புவிக்க
ஓடி ஒளிந்து கொள்கிறேன்
கான்கிரீட் சுவர்களுக்குள்
இழுத்து மூடி கொண்ட
கதவு இடுக்குகள் வழியே
கசிகிறது இருள்
மௌனத்தை போல
கடந்து செல்கிறது இரவின்
இருள் படிந்த வானம்
வண்ணம் அற்ற வானத்தின்
நீர்த்த பரப்புகள்
பெரும் பீதியை தருகிறது
எவ்வளவு முயன்றும் ரசிக்க முடியவில்லை
பால்யத்தின் கோர நினைவுகள்
கோர்வையாய் அணிவகுக்க
உடலும் மனமும்
உலுக்கியது போல வெகுண்டு எழுகிறேன்
அதன் பிடியில் இருந்து தப்புவிக்க
ஓடி ஒளிந்து கொள்கிறேன்
கான்கிரீட் சுவர்களுக்குள்
இழுத்து மூடி கொண்ட
கதவு இடுக்குகள் வழியே
கசிகிறது இருள்
nantri saraladevi.com
No comments:
Post a Comment