அன்பு மனத்துடன் வாழ்ந்திடுவோம் !

.
       [எம்.ஜெயராமசர்மா ... மெல்பேண்]

ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே - நாங்கள்
ஆடிடுவோம் விளை யாடிடிவோம்
பாடிடுவோம் தினம் பாடிடுவோம் - எங்கள்
பரமன் புகழோங்கப் பாடிடுவோம்

அன்னையை தந்தையை போற்றிடுவோம் - நிதம்
ஆண்டவனின் புகழ் பாடிநிற்போம்
கன்னித்தமிழினை நாம் வளர்ப்போம் - என்று
காலம் முழுதும் உழைத்துநிற்போம்

நல்லதை என்றுமே செய்திடுவோம் - என்று
நாளும் பொழுதும் நினத்துநிற்போம்
தொல்லைகள் செய்வதை விட்டிடுவோம் - நிதம்
தூய மனத்துடன் வாழ்ந்திடுவோம்

வல்லவராக வளர்ந்திடுவோம் - என்றும்
வாய்மையே பேசி நின்றிடுவோம்
நல்லவரோடு இணைந்திடுவோம் - நாளும்
நட்புமலர்ந்திடச் செய்திடுவோம்

சோம்பலைத் தூக்கி எறிந்திடுவோம் - நாளும்
சுறுசுறுப் புடனேயே வாழ்ந்திடுவோம்
தேம்பி அழுவதை நிறித்திடுவோம் - என்றும்
சிந்தனை செய்துமே வாழ்ந்திடுவோம்

மற்றவர் மனம் நோகச்செய்திடாமல் - என்றும்
மகிழ்ச்சியை மற்றவர்க் கீந்திடுவோம்
அற்பக் குணங்களை அகற்றிடுவோம் - வாழ்வில் 
அகந்தையை ஒழித்து நின்றிடுவோம்

ஆண்டவனின் புகழ் பாடிடுவோம் - என்றும்
அன்பு மனத்துடன் வாழ்ந்திடுவோம்
வேண்டும் வரமெல்லாம் தந்திடுவான் - எங்கள்
விண்ணில் உறைகின்ற வேதப்பொருள்

No comments: