உயிர்த்தெழுந்த ஞாயிறு ஒன்றில் - செ .பாஸ்கரன்

.
Image result for sri lankan bomb blast

மனதை உருக்கும் 
மக்களின் ஓலம் 
ஒன்பது குண்டுகள் 
ஒன்றாய் வெடித்தது 
புனித ஞாயிறில் 
புவியெலாம் அதிர்ந்தது
கோவில் தரையில்  
குருதி குளித்த 
மனித உடல்கள்  
உயித்தெழுந்த 
தேவனின் கோவிலில் 
செத்து விழுந்த 
சேதிகள் வந்தன 
அமைதி வாழ்வை 
தேடிய மக்கள் 
உடலம் கருகி 
உயிர் விட்டிருந்தனர் 
கழுகுகள் மீண்டும் 
இரையினைத் தேடி 
அமைதியாய் இருந்த 
தீவினில் இறங்கிட 
அவலக்  குரல்கள் 
வானெலாம் எழுந்தது 

No comments: