.
மனதை உருக்கும்
மக்களின் ஓலம்
ஒன்பது குண்டுகள்
ஒன்றாய் வெடித்தது
புனித ஞாயிறில்
புவியெலாம் அதிர்ந்தது
கோவில் தரையில்
குருதி குளித்த
மனித உடல்கள்
உயித்தெழுந்த
தேவனின் கோவிலில்
செத்து விழுந்த
சேதிகள் வந்தன
அமைதி வாழ்வை
தேடிய மக்கள்
உடலம் கருகி
உயிர் விட்டிருந்தனர்
கழுகுகள் மீண்டும்
இரையினைத் தேடி
அமைதியாய் இருந்த
தீவினில் இறங்கிட
அவலக் குரல்கள்
வானெலாம் எழுந்தது
No comments:
Post a Comment