பொக்கிஷம்!


ண்ண‌ற்ற பரிசுகள்
உன்னிடமிருந்து
முதல்பார்வை கொண்டு 
இன்றுவரை 
ஒவ்வொன்றும் 
ஒரு பொக்கிஷமாகவே!

ஜெபமாலை......
சிறிது ஏமாற்றம்தான் என்றாலும்
உன்னிடமிருந்து 
முதலாய் வ‌ந்த பெருமையதற்கு...
தெய்வத்திடமிருந்தே ஆரம்பம் 
நமதுறவு என்பதால்!



காய்ந்தப்பின்பும்
காதலுடன் 
வாழ்ந்துக் கொண்டிருக்கிறது
நீ கொடுத்த ரோஜா.....
காலம் கடந்தும் தொடரும் 
உன் அன்பைப் போலவே!

என்னில் நீ ரசிப்பவைகளில் 
என்றும் முதலிடம் பிடிப்பது
என் நெற்றி பொட்டு......

அன்று நீ வாங்கிக்கொடுத்தது 
இன்றும் என்னிடம் 
பத்திரமாக‌!

குழந்தையின் பாதமாக 
எண்ணி கொஞ்சிடும் நீ 
அழகுபடுத்திட‌ பரிசளித்தாயே 
தங்க கொலுசு......
என்றுமே என் கால்களை தழுவியபடி
வைக்கும் ஒவ்வொரு அடியிலும் 
எழும் சலங்கை சப்தம்
உன்னை நினைப்படுத்திக்கொண்டு!

என்னை நினைத்து எழுதிய 
கவிதை பக்கங்கள்….....
எனக்காக பார்த்து பார்த்து 
வாங்கிய ஆடைகள்….....
கடைசியாக
என் பிறந்த நாளுக்கு
பரிசளித்த கைகடிகாரம் வரை 
அனைத்துமே என்னிடம் 
பொக்கிஷங்களாக‌……..

நமதுறவில் எழுதிய க‌விதையாய்
உன்னால் மட்டுமே தரக்கூடிய‌.....
தந்த உயிரின் பரிசைமட்டும் 
தொலைத்து விட்டவளாய்
கண்ணீருடன் நான்!

Nantri tamilkavithai11.blogspot


No comments: