30/08/2018 பங்களாதேஷின் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் பெண் ஊடகவியலாளர் ஒருவர் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொலைக்காட்சி மற்றும் நாழிதழ் ஒன்றிலும் பணியாற்றி வந்த 32 வயதான சுபர்னா அக்டெர் நோடி என்ற பெண் ஊடகவியலாளரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
கணவரிடமிருந்து விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்;ந்துள்ள சுபர்னா தனது 9 வயது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந் நிலையில் கடந்த செவ்வாய்க் கிழமை இரவு 11 மணியளவில் மர்ம கும்பல் ஒன்று கூரிய ஆயுதங்களால் சரமாரியாக குத்தியுள்ளது.
சுபர்னாவின் அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு ஓடி வந்த அயலவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்த சுபர்னாவை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி சுபர்னா உயிரிழந்துள்ளார்.
சுபர்னா மீது கொலை வெறி தாக்குதல் நடாத்திய மர்ம கும்பலில் அவரது முன்னாள் கணவரும் தொடர்புபட்டுள்ளார் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் இச் சம்பவம் தொர்பாக பொலிஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   நன்றி வீரகேசரி