மதிமயக்கும் பொருளை உண்டு
மனங்குழம்பும் கூட்டம் இன்று
பொறியழிந்து நெறி பிறழ்ந்து
புதை குழிக்குள் விழுகிறதே
அறிவிழந்து தனை உணரா
அக்கூட்டம் விடிவு பெற
ஆன்மீக வழி ஒன்றே
அருந்துணையாய் அமையும் அன்றோ !
கடவுளில்லை என்று சொல்லி
கருவறுக்கும் ஒரு கூட்டம்
காமுகராய் மாறி நின்று
கற்பழிக்கும் ஒரு கூட்டம்
கடவுள் சிலை திருடிநின்று
காசுசேர்க்கும் ஒரு கூட்டம்
கண்ணியமாய் திருந்தி வர
காட்டி நிற்போம் ஆன்மீகம் !
மற்றவர்கள் மனம் உடைய
வைக்கச் செய்யும் ஒருகூட்டம்
பெற்றவர்கள் வருந்தி நிற்க
பிரியச் செய்யும் ஒருகூட்டம்
கற்றுத் தந்த ஆசானை
கலங்கச் செய்யும் ஒருகூட்டம்
கட்டாயம் திருந்தி நிற்க
கை கொடுக்கும் ஆன்மீகம் !
அதை விட்டு வரவேண்டும்
அறவழியை மறந்து செல்வார்
அதை நாடி வரவேண்டும்
பூமிதனில் வாழும் மக்கள்
புனிதமுடன் வாழ வேண்டில்
சாமி என ஆன்மீகம்
தான் துணையாய் ஆகுமன்றோ !
ஈனமுடை எண்ணம் எலாம்
எமை விட்டுப் போவதற்கு
ஈசன் அருள் எப்போதும்
எமக்கு துணை ஆகிநிற்கும்
ஊனமுடை எண்ணம் எலாம்
உளம் விட்டு போவதற்கு
ஆழம் உடை ஆன்மீகம்
அருந்துணையாய் ஆகும் அன்றோ !
No comments:
Post a Comment