அமீரகம் - தூங்கா நகரம் ! முனைவர் ப.இப்ராஹிம்

.
அமீரகம் !
சலவைக்குப் போட்ட
தார் சாலைகள் !

கற்பிழக்காத
கற்பனைகளின் கோட்டைகளாய்
கட்டிடங்கள் !

இருளையும், அழகாக்கும்
ஒளி விளக்குகள் !
நிலமகளின் ஹிப்பி !

தூங்கா நகரம்
மதுரை மட்டுமல்ல ….
அமீரகமும் தான் !

அமீரக அகராதியிலிருந்து
அகற்றப்பட்ட
முதல் சொல்
ஏழை !


வானமகளை
முத்தமிடதுடிக்கும்
வானுயரக் கட்டிடங்கள் !

சந்தனமாய தேயும்
கலப்பைகளாய்
அயலக மக்கள் !

மில்கிவேயைக் கூட
மிஞ்சும்
மின்விளக்குகள் !

வன்ணத்துப் பூச்சிகளாய்
பறக்கும்
வாகனங்கள் !

வானுயர உயர்ந்து நிற்பது
கட்டிடங்கள் மட்டுமல்ல
அமீரக மக்களும் தான்

-    முனைவர் பேராசிரியர் ப.இப்ராஹிம், 
தமிழ்த்துறை தலைவர் 
டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி
இளையான்குடி - 630 702
சிவகெங்கை மாவட்டம் 

No comments: