இராமநாத பாதமே நிழல் என்று அஞ்சலி - SRIVIDYA INDRASARMA SYDNEY

.

பாலூட்டி வளர்த்த பாட்டி எமையெல்லாம் உறவுக்குள் காட்டி
பலருக்கு உன் அன்பைப் பூட்டி அமைதியாய் பாசத்தைக் கொட்டி எம் 
நெஞ்சில் நிறைந்த இமயப்பெட்டியே கொஞ்சிக்குலாவியஇராசம்மாவே
பஞ்சு நிறைந்த தலையணையில் துஞ்சலுற்றிரோ!

பேரன் பேத்தி பெயரளவில் பலராகி பூட்டன் பூட்டி பெரிதாகப் பரந்து
கொள்ளுப்பேரன் பேத்திஎனஅள்ளி வளர்ந்த ராசம்மா விழுது
என்றென்றும் நினைவில் இருந்து மீளாது மனம். 
தானுண்டு தனக்குண்டு எனத் தனியாகத்தான் நடந்து-பிறர்
தவிக்கவிடாது உணவூட்டி பாச உணர்வூட்டித்தந்த உத்தமி

இதயங்கள் பல இருந்தாலும் தன் இருப்பிடம் இணுவில்
என இராமநாத பாதமே நிழல் என்று இறைபதம் பெற்றீரோ!

No comments: