பெருத்த பிள்ளையாரும் கனத்த சுமையும்

.


கோஷங்களாலும்
உற்சாக மிகுதியின்
உரத்த குரலாலும்
தாரை,தப்பட்டைகளின்
சப்தங்களாலும்
எழும் மிரட்சி
கண்களில் தெரிகிறது

கடலில் கரைக்கப்படும்
பல மைல் தூரம் வரை
பெருத்த மண் பிள்ளையாரையும்
கனத்த பத்து பதினைந்து ஆட்களையும்
சுமக்கும் வேதனை
வாய் வழியே
நுரையென வழிகிறது

அடிக்கடி முதுகில் விழும்
அடியால்
அடிவயிறு கலங்குவது
புரிகிறது

Nantri:ilakkiyam.nakkheeran