இருள் கவ்வ இரத்தமாய்க் கிடந்த ஒரு காலைப் பொழுது -கவிதை

.                                                                          ந.சத்தியபாலன் 

ஒளியின் பாதை மூடிக் கொள்கிறது
பீடம் விட்டெழுந்து தடித்த இருளிடை
கொலைக் கருவிகளுடன் அலைகின்றன
தெய்வங்கள்
மெல்லப் பரவுகிறது இரத்த வாடை
ஊர் முழுதும்
திறந்து கிடந்த கதவை அவசரமாய்
அறைந்து மூடிப்போகிறது காற்று




அப்பழுக்கற்ற பாசத்தின்
ஊற்றுக்கண்ணில் விஸம்
ஆவலாய் அணைந்த மழலை
மடியிலே சுருள்கிறது பிணமாய்
பால் கட்டிப்போய்
தாளாத வலியெடுக்கின்றன மார்புகள்
அனைத்தினாலும் கைவிடப்பட்ட
மனிதன்
திசையிழந்து அலைந்தலைந்து
இடுகின்ற ஓலம் வியாபிக்கிறது
எங்கும்


No comments: