மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மண்ணில் நல்ல வண்ணம் வாழ வேண்டும். வையத்துள் வாழ் வாங்கு வாழ வேண்டும்.துன்பமில்லா மல் வாழ வேண்டும். குறை வில்லாது வாழ வேண்டும். வாழும் வாழ்வு நிறைவுடையதாக அமைய வேண்டும் என்னும் நோக்கில்தான் சமயங்களும் அதன் வழி முறைகளும் காலத்துக் காலம் வந்தபடி இருந்து கொண்டே இருப்பதைக் காண்கின்றோம்.இப்படி வருகின்ற சமயங்களில் எது உயர்ந்தது ? எது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது ? எது மிக வும் தீவிரமாக வந்திருக்கிறது ? நடைமுறைக்கு ஒவ்வாதவற்றை எது தாங்கி வந்திருக்கிறது ? என்னும் நிலை மண்ணிலே பூதாகரமாகவே வியாபித்து நிற்பதையும் காணமுடிகிறது.
வேதங்களை முதன்மைப் படுத்திய சமயநெறிகள். சித்தாந்தத்தை
முதன்மை படுத்திய சமய நெறிகள்.கட வுளைப் பற்றியே எண்ணாத சமய நெறிகள். அறத்தினையே முழுமையாய் வலியுறுத்தும் சமய நெறி கள்.புராண இதிகாசங்களை நம்பும் சமய நெறிகள். திருமுறைகளை , ஆகமத்தை , ஆலயத்
சமய நெறிகள் பல தோன்றி சமுதாயத்தை பல கோணங்கள் ஆக்கி விட்டிருக்கின்றன என்பதையும் மறுத்துரைத்துவிட முடியாது. சம ணம் வந்தது. பெளத்தம்வந்தது. இஸ்லாம் வந்தது. கிறித்தவம் வந் தது.இந்தியாவில் வைதீக நெறியே மேலோங்கி இருந்தது. இந்தியாவுக்கு புதிதாக வந்த சமய நெறிகளா லும். இந்தியாவில் முகிழ்த் தெழுத்த சமய நெறிகளாலும் - வைதீக சமய நெறிகள் சற்று தடுமாற்ற முறு கின்ற நிலை ஏற்பட்டது.ஆனால் வைதீகம் என்பது தன்னிலையில் இறுக்கமாகவே இருந்தது . இருந்தும் வருகிறது என்பதும் மனங் கொள்ளத்தக்கதாகும்.
இந்தியாவுக்குள் நுழைந்த சமய நெறிகள் பால் பலர் ஈர்க்கப்பட்டார்கள். அந்த சமய நெறிகளின் வழியில் நடந்திடவும் விரும்பிச் சென்றார்கள். வைதீக நெறியில் மாற்றங்கள் கொண்டுவருவது அவசியம் என்று உணரும் ஒரு நிலையும் அப்பொழுது அவசியமாகக் காணப்பட்டது. அந்தவகையில் கெளதம புத்தர் வரு கிறார். மகாவீரார் வருகிறார். தயானந்த சரஸ்வதி வருகிறார். ராஜாராம் மோகன்ராய் வருகிறார். இராம கிருஷ்ண பரமஹம்சரும் வருகிறார்.இவர்களின் சிந்தனைகள் ஒவ்வொன்றுமே வேறு பட்டனவாக இருந் தாலும் , சீர்திருத்தம் என்னும் கருமட்டும் அனைவரது சிந்தனைகளிலும் அமைந்தே இருந்தது என்பதுதான் முக்கியமாகும்.
வந்த சமய நெறிகளில் காணப்பட்ட நல்ல சிந்தனைகள் வைதீக சமய நெறியிலே சீராக்கம் செய்திட வேண்டும் என்னும் நிலைக்கு உந்தித்தள்ளுகிறது.கல்வி அறிவின் பெருக்கமும் சிந்தனைகளில் புத்தூக் கத்துக்கு உந்து சக்தியாகிறது.இந்த நிலையில் தமிழ் நாட்டில் இறைவனது பெருங்கருணையினால் மண்ணில் வந்து பிறக்கிறார் வள்ளலார் பெருமான்.
வைதீக சமய நெறியினை மனதில் இருத்திய குடும்பத்தில்த்தான் வள்ளலார் வந்து பிறக்கின்றார். அவ ரின் உள்ளத்தில் முருகப்பெரு மானே நிறைந்து இருக்கிறார். ஞானப்பாலை முன்று வயதில் அம்மையின் அரவணைப்பில் உண்ட சீர்காழி தந்த ஞானக் குழந்தை சம்பந்தப் பெருமானைப் போற்றுபவராக வள்ள லார் விளங்கினார். மணி வாசகத்தை மனமுருகப் பாடினார். உருகாதார் மனத் தினையே உருக்கும் திருவாசகத்தைத் தேனாகக் கருதியே சுவைத்து தன்னையே அதன் வசமாக்கி நின்றார்.
சிறிய வயதில் அன்னையையும் தந்தையும் இழந்து நின்றார். அண் ணனின் அரவணைப்பில் அவர் வாழும் நிலை ஏற்படுகிறது. அண் ணன் வீட்டிலிருந்து பள்ளிப்படிப்பை ஆரம்பிக்கிறார். பள்ளிப் படிப்பில் செல்லும் கவனம் கலைந்து அவரின் கவனம் - தியானம் , யோகம் பக்கமாய் திரும்புகிறது.கல்வியினைக் கற்காமலேயே அவருக்குக் கலைமகள் கருணையினைத் தாராளமாகவே கொடுத்து விடுகிறாள். வள்ள லார் மனத்திலிருந்து கருத்துக்கள் மழையாகக் கொட்டி சிந் தனை வெள்ளமாய் பெருக்கெடுத்தது.
உருவ வழிபாட்டை ஏற்று நின்றவர் மனத்தில் ஒரு மாற்றம் ஏற் படுகிறது. பரம்பொருளானவன் அரு வாய், உருவாய் , அருவுருவாய் இருக்கிறான் என்றுதான் சமய நெறிகள் சாற்றுகின்றன. வள்ளலார் உள் ளம் மற்றவர்கள் உள்ளத்தைவிட வித்தியாசமாய் சிந்திக்கத் தொடங்குகிறது. எல்லாச் சமயங்களையும் பார்க்கிறார். பார்த்தோடு அமையாமல் அவற்றின் உட்கருத்துக்களையும் உள்வாங்கிக் கொள்ளுகின்றார். அவர் மனதில் ஒரு புது மாற்றம், புதுத்தெளிவு உதய மாகிறது. அந்தத் தெளிவினால் அளப்பருங் கருணை யுடைய அந்தப் பரம் பொருளை அவர் அளப் பெருஞ் ஜோதியாகவே அகமிருத்தியும் கொள்ளுகிறார். நிறைவில் " ஜோதி தரிசனமே " அவரின் நிலையாக மாறுகிறது. " சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே " , " ஒளி வளர் விளக்கே ". " தீபமங்கள ஜோதி நமோ நம " என்றெல்லாம் அடியார் கள் அந்தப் பரம்பொ ருளை விழித்ததைப் , ஏற்றிப் போற்றியதயெல்லாம் வள்ளலார் மனம் உள்வாங்கிக் கொண்டது. அவர் களே அந்தப் பரம் பொருளினை ஜோதி வடிவில் உருவகப்படுத்தி இருக்கிறார்கள் என்னும் பொழுது நானும் அவர் வழியில் ஜோதி தரிசனத்தைச் சொல்லுவதில் ஏதும் மாற்றுக்கருத்துகள் கொள்ள வேண் டாம் என்று அவர் மக்களைப் பார்த்து புகன்று நிற்கிறார்.ஆனாலும் அவரின் இந்த கருத்தினுக்கு எதிர்ப்பா ளர்களும் நிறையவே இருந்தார்கள்.
வைதீக சமயம் மேன்மை மிக்கதான கருக்களைக் கொண்டிருந்த பொழுதிலும் , அதனை வழி நடத்த வந்தவர்களின் மனங்களால் விளைந்தவை சமூக நலன்களைப் பாதித்து நின்றதை வள்ளலார் மனம் ஏற்க மறுத்தது. வள்ளலாருக்கு முன்னர் வந்த பலரின் சீர் திருத்தக் கருக்கள் - வள்ளலாரிடம் பதிந்தே இருந்தது. சமத்துவம் இல்லாமை என்பதுதான் வள்ளலார் உள்ளத்தைக் குத்திக் காயப்ப டுத்திய பெரிய கூரான முள்ளாகவே இருந்தது.அந்தச் சமத்துவத்தை உருவாக்கிட வேண்டும் என்னும் அவா அவரிடம் பேரலையாகவே எழுந்தது.சமரசம் நிலவுவதே சமய நெறிகளின் உயிர் நாடியாக இருக்கவேண்டும் என்ப துதான் வள்ளலாரின் ஆணித்தரமான கொள் கையாகவே அமைந்தது.
பெளத்தத்தின் அட்டசீலம், பஞ்சசீலம், சமணத்தி
பசிப்பிணி மருத்துவராய் வள்ளலார் விளங்கினார். " உண்டி கொடு த்தோர் உயிர் கொடுத்தோர் " என் பதை வள்ளலார் மிகவும் தீவிர மாகவே மனமிருத்திச் செயற்படுத்தி நின்றார். பசித்தவர்களுக்கு முன் னால் தத்துவங்கள் பயனற்றவை என்பதில் வள்ளலார் பெருதும் உறுதியாகவே இருந்தார். அதனால் பசிப்பிணியினைப் பெரும் பிணி யாக எடுத்து அதனைப் போக்குவதையே தம்முழைய சுத்த சமரச சன் மார்க்க சபையின் முக்கிய குறிக்கோளாக்கி நின்றார் வள்ளலார் எனலாம்.அவரால் தொடங்கப்பட்ட இப்பாரிய பணி இன்றும் அவ ரின் சபையினால் அவரின் அன்பர்களினால் தொடர்கிறது என்பது மனங் கொள்ளத் தக்கதேயாகும்.
துறவியாக விளங்கினார். இயற்கை மருத்துவரானார். ஞானியாக ஒளிவிட்டுப் பிரகாசித்தார். துறவியாக தூய்மையினைக் காட்டி நின் றார்.திருமூலரின் பல சிந்தனைகளை வள்ளலாரும் உள்வாங்கி நின் றார். திருமூலரைப் போலவே கருத்துக்களை நுட்பமாகச் , செப்பமாக நல்ல தமிழில் அருமையான பாடல்க ளாக ஆயிரம் ஆயிரமாய்ஆக்கி அளித்தார். அவை அத்தனையும் பல திருமுறைகளாக வகுக்கப்பட்டு " திரு வருட் பாக்களாக " சமூகத்துக்கு பெரு வெளிச்சத்தைக் காட்டியபடியே இருக்கின்றன என்பதை மறுத்து ரைத்து விடல் இய லாது.
இப்பாடல்கள் வாயிலாக வள்ளலாரின் ஆரம்ப நிலையினக் கண்டு கொள்ள க்கூடியதாக இருக்கிறதல்லவா !
ஏகன் அநேகன் என்னும் கருத்த்தில் , ஏகன் என்பதையே வள்ளலார் அகதில் உறுதியாக்கிக் கொண்டிருந்தார். அவரின் மனதில் பல சிந்தனை கள் மலர மலர கடவுள் பற்றிய கொள்கைகளையும் மாற்றியவராகவே வள்ளலார் வந்து நிற்கிறார் என்று அவரின் பாதையினைப் பார்க்கும் பொழுது அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.
சாதிகுலம் என்றும் சமயமதம் என்றுமுப
நீதியில் ஆச்சிர நீட்டென்றும் - ஓதுகின்ற
பேயாட்டம் எல்லாம் பிதிர்த்தொழத்தலேபிறர்தம்
வாயாட்டம் தீர்த்தன்வே மற்று
வேதாக மங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர்
வேதாக மத்தின் விளைவறியீர் - சூதாகச்
சொன்ன வலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை
என்ன பயனோ இலை.
வள்ளலாரின் கருத்தோட்டங்கள் எவ்வாறு பரிணமிக்கின்றன என்ப தற்கு அவரே தன்னுடைய பாடல்களை எமக்கு வழங்கி நிற்கிறார். சாதியினைச் சாடுகிறார். வேதாகமங்களை மிகவும் கடுமையாக எதி ர்க்கும் நிலை வள்ளலாரிடம் ஏன் ஏற்பட்டது என்பதற்கு - அவரின் சீர்திருத்த மனப்பாங்குதான் என்றே கருதைட வைக்கிறதல்லவா !
பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசை
முத்தி பெற்றிடவும் பெற்றிலேன்
உரியதோர் இச்சை எனக்கிலை என்தன்
உள்ளம் நீ அறிந்ததே எந்தாய்
ஆதலால் இரக்கம் பற்றி நான் உலகில்
ஆடலே யன்றி ஓர்விடயக்
காதலால் ஆடல் கருதிலேன் விடயக்
கருத் தெனக் கில்லை
வீடும் வேண்டா விறலினராகவும் வள்ளலார் தன்னை இங்கே வெளிப்படுத்தி நிற்கின்றார்.முத்தியே வேண்டா நிலை என்பதே மிகவும் உன்னதமான நிலை என்று சேக்கிழார் பெருமானே சுட்டிக் காட்டி நிற்பது இங்கு நோக்கத்தக்கதேயாகும்.
மரணமிலாப் பெருவாழ்வு வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையோ பொய்புகலேன் சத்தியஞ் செய்கின்றேன்
இயற்றிதனைத் தடுத்திடலாம் என்னோடுஞ் சேர்ந்திடுமின்
என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம் தானே
தன்னால் உருவாக்கப்பட்ட மார்க்கத்தை எந்த அளவுக்கு உறுதியா னது , பயனானது, புதிய சிந்தனைகளைக் கொண்டது என்பதை தனது பாடல் வாயிலாகவே எவ்வித அச்சமுமின்றி துணிவாய் வெளிப்படுத்தி நிற்பதைக் கருத்திருத்த வேண்டியது முக்கிய மாகு ம்.மரணமிலாம் பெருவாழ்வு என்பதைச் சொல் வதற்கு எவ்வளவு மனவுறுதியும் , தெளிவும் வேண்டும். அந்தத் தெளிவும் உறுதியும் மிக்கவராய் வள்ளலார் விளங்கி இருந்திருக்கிறார்.
செத்தாரை எழுப்புவேன் என்றார். சித்துக்கள் செய்யும் சித்தராயும் விளங்கினார். செத்தாரை எழுப்புவேன் என்பதைப் பலருமே தவறாக விளங்கிக் கொண்டு - அவரையே பல வேளைகளில் வருந்திடும் வண்ணம் செய்திருக்கிறார்கள் என்றும் அறிய முடிகிறது.உயிரோடு வாழ்கின்ற பலர் நல்ல சிந்தனைகளை தூக்கி எறிந்து விட்டு , தனக் கும் பயனில்லாமல் , மற்றவர்களுக்கும் பயனில்லாமல், ஏன் சமு தாயத்துக்கே பயனில்லாமல் வாழுவதைக் காண்கின்றோம். அப்படி யானவர் உயிருடன் வாழ்ந்தாலும் அவர்களைச் செத்தார் என்றுதான் கணக்கில் எடுத்திட வேண்டும். அப்படியானவர்களுக்கு நல்ல உபதே சங்களைச் செய்தால் அவர்களை நல்லுணர்வுள்ளவர்களாக எழுச்சி பெறச் செய்து விடலாம் என்னும் கருத்தில்த்தான் வள்ளலார் " செத்தாரை எழுப்பலாம் " என்று சொன்னார் என்பதுதான் உண்மை நிலையாகும்.
வள்ளலாரின் கொள்ளகைகளை நிறையவே பலரும் விமர்சித்தார் கள். அவரின் கொள்கைகள் ஏற்பதற்குக் கஷ்டமாக இருந்தும் இருக்க லாம். ஆனால் அவர் தான் கொண்ட கருத்தைமட்டும் எதற்காகவும் , யாருக்காகவும் மாற்றிவிட நினைக்கவே இல்லை. தன் மனத்துதித்த சீர் திருத்தங்களை உள்ளடக்கி தன்னுடைய " சுத்த சமரச சன்மார்க்க நெறியினை " முன்வைத்தார். அதனை நடைமுறைப்படுத்தவும் தன் காலத்தில் அவர் செயற்பட்டு நின்றார்.அவருக்கென்றே ஒரு அடியார் திருக்கூட்டமும் திரண்டது. அவரின் ஜோதி வழிபாட்டினையும் ஆத ரித்தும் நின்றது.இன்றும் அந்த ஜோதி தரிசன வழிபாடு நிற்காமலே நடந்த படியேதான் இருக்கிறது என்பது முக்கியமாகும்.
சைவத்திருமுறைகளை நாமனைவரும் ஏற்றிப் போற்றுகின்றோம். வள்ளலாரின் அருட்பாடல்களும் திருமுறைகளாகப் பலராலும் போற் றப்பட்டு வருகிறது என்பதும் கருத்திருத்த வேண்டியதே. அன்னைத் தமிழை நேசித்தார். அந்த தமிழில் அரிய தத்துவக் கருத்துக்களை எமக்கெல்லாம் அள்ளியும் வழங்கினார். தமிழால் தன்கருத்துக்க ளைக் கூறுவதையே அவர் பெருமையாகவும் பெரும் பேறாகவுமே எண்ணினார். விமர்சனங்கள் பல - அவரின் கொள்கைகளுக்கும், அவரின் அருட்பாடல்களுக்கும் முன் வைக்கப்பட்டாலும் அவர்; ஞானியாக , யோகியாக, சீ
No comments:
Post a Comment