எழுத்தாளர் எஸ்.பொ வின் இறுதி நிகழ்வில் அணி வகுத்த எழுத்துக்கள் - செ பாஸ்கரன்

.
எழுத்தாளர் எஸ்.பொ வின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள சென்றபோது இலக்கிய நண்பர்கள் திரண்டிருந்தார்கள் . இறுதிக் கிரிகையின் பாட்டும் மணி ஓசையும் சந்தன மனத்துடன் சங்கமமானது . பார்ப்பவர் முகங்களில் எல்லாம் சோகத்தின் சாயல் அப்பிக்கிடந்தது . எஸ்.பொ வின் உயிரற்ற உடல் பேழையில் வைக்கப்பட்டிருந்தது. எழுத்தின் ஆளுமை இன்று  உறங்கிக்கிடந்தது. ஆனால் நுளை வாயிலில் பரவிக்கிடந்தது எஸ்.பொ வின்
எழுத்துக் குவியல். ஆறு தசாப்தங்களின் சமூக வரலாறு அதில் தெரிந்தது . எஸ்.பொ என்ற எழுத்தாளன் இறந்துவிடவில்லை நீண்ட வரலாறாய்  விரிந்து கிடக்கிறான். பரவிக்கிடந்த அவர் எழுத்துக்களைப்  போலவே உலக தமிழ் வாசகர்கள் மத்தியில் அவர் வாழ்வது நிட்சயம்.
நனைவிடை தோய்தலில் இனி ஒருபக்கம்   எஸ்.பொ விற்காக .
Photo by kana prabha 

No comments: