.
மழைக்காலத்து மாலைப்பொழுதை எவ்வளவு அழகாக விவரிக்கிறார் பாடலாசிரியர்!
வெள்ளி வள்ளி வீங்குஇறைப் பணைத் தோள்
மெத்தென் சாயல்,முத்து உறழ் முறுவல்
பூங்குழைக்கு அமர்ந்த ஏந்துஎழில் மழைக்கண்
மடவரல் மகளிர் பிடகைப் பெய்த
செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து
அவ்விதழ் அவிழ்பதம் கமழப் பொழுதறிந்து
இரும்புசெய் விளக்கின் ஈர்ந்திரி கொளீஇ
நெல்லும் மலரும் குஉய் கைதொழுது
மல்லல் ஆவணம் மாலை அயர (36 – 44)
வெண்சங்குவளையல் முன்கையழகைக் காட்ட,
இரவும் பகலும் இன்னதென விளங்காது
மீன் ஆடும் கம்மல் மென்செவிக்கு அழகூட்ட,
முத்தொளியை இதழ் விரிக்க,
புத்தொளியை விழி தெறிக்க,
தளிரிளம் கொடியிடை மகளிர்,
இளந்தளிர் கொடியிடை புகுந்து
கொய்த பிச்சியரும்புகள் யாவும்
பெய்த மழை காரணமாய்
பொழுது அறியாப் பொழுதிலும்
பழுதிலாது இதழ் விரித்து
அந்தி இதுவென்று உணர்த்தி
முந்தி அதன் மணம் பரப்ப...
நெய்விளக்கேற்றிவைத்து
நெல்லோடு மலர் தூவித்தொழுது
இல்லுறை இறையை வணங்கி
வானகம் பொழியினும்
வாணிகம் பொலிவுறும்
அங்காடித் தெருவில்
கொண்டாடி மகிழ்ந்தார்..
மனைஉறை புறவின் செங்காற் சேவல்
இன்புறு பெடையொடு மன்றுதேர்ந்து உண்ணாது
இரவும் பகலும் மயங்கி கையற்று
மதலைப் பள்ளி மாறுவன இருப்ப
கடியுடை வியல் நகர்ச் சிறுகுறுந் தொழுவர்
கொள்உறழ் நறுங்கல் பலகூட்டு பறுக
வடவர் தந்த வான்கேழ் வட்டம்
தென்புல மருங்கில் சாந்தொடு துறப்பக் (45- 52)
இரவும் பகலும் இன்னதென விளங்காது
இரையுண்ணவும் முற்றத்தில் இறங்காது
அடுத்தமர்ந்து பெட்டையோடு
கடுத்த கால் மாற்றி இணைபுறா தவிக்க....
காவல் மிகுந்த இல்லங்களில்
ஏவல் பணிந்த வேலையாட்கள்
நறுமணமிகுந்த கத்தூரியை
கருநிற அம்மியில் அரைத்தெடுக்க....
படங்கள்; நன்றி இணையம்