மெல்பனில் கவிஞர்கள் ஒன்றுகூடும் கவிதா மண்டலம்


   
               அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் கவிஞர்கள்  ஒன்றுகூடும் கவிதா மண்டலம் நிகழ்ச்சி எதிர்வரும்  08-04-2018 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணி முதல் மாலை  6.00 மணி வரையில் மெல்பனில்  நடைபெறவுள்ளது.  
சங்கத்தின் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் தலைமையில் இக் கவிதா மண்டலம்,   நடைபெறும் இடம்:  கிளேய்ட்டன் பொது நூலகம் (Clayton Community Centre   Library Meeting Room - 9-15, Cooke Street ,  Clayton, Victoria - 3168 ) 
சங்கத்தின் உறுப்பினர்களான கவிஞர்களும் மெல்பனில் வதியும் இதர கவிஞர்களும் பங்குபற்றலாம். கலந்துகொள்ள விரும்பும் கவிஞர்கள்,  தமது கவிதையை அல்லது தமக்குப்பிடித்தமான கவிதையை இந்நிகழ்ச்சியில் சமர்ப்பித்து கலந்துரையாடும் வகையில் இந்நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.  கவிஞர்கள் தங்கள் கவிதையை 5 முதல் 7  நிமிடத்திற்குள் சமர்ப்பிக்கலாம்.
மேலதிக விபரங்களுக்கு:
சங்கர சுப்பிரமணியன்
(தலைவர்- அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்)
atlas25012016@gmail.com     ----     maniansankara@gmail.com
தொலைபேசி:     0423 206 025

-->




No comments: