சுதந்திர தினம் --முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன்

.

அகிம்சையெனும் ஆயுதமேந்த

அடிபணிந்தனர் ஆங்கிலேயர்

கிடைத்தது சுதந்திரம்

-------------------------------------------------------

சுதந்திரம் கொடுத்த சுதந்திரத்தில்

சுதந்திரமாய்ச் சுற்றித்திரிகிறது

ஜாதி

-------------------------------------------------------

விடுதலை கிடைத்தும்

விழலுக் கிறைத்த நீரானது

ஊழல் அரசியலால்

-------------------------------------------------------

நாம் விடுதலையடைந்ததை

ஆண்டுக்கொருமுறை நினைவுபடுத்துகிறது

சுதந்திரதினம்

-------------------------------------------------------

பள்ளிகளில் மிட்டாய் கொடுக்கப்பட்டது

குழந்தைகள் நன்றி சொன்னனர்

சுதந்திர தினத்திற்கு

-------------------------------------------------------

No comments: