மூழ்கிய ஆஸி. புகலிடக் கோரிக்கையாளர் படகிலிருந்து அறுவர் மீட்பு

31/08/2012

ஆஸி, இந்தோனேஷியா தொடர்ந்து தேடுதல்
இந்தோனேஷிய கடற்பகுதியில் மூழ்கிய சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களின் படகில் இருந்த 6 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய கடற் பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது.
150 புகலிடக் கோரிக்கையாளர்களுடன் அவுஸ்திரேலியா சென்று கொண்டிருந்த படகு இந்தோனேஷிய கடற்பகுதியில் மூழ்குவதாக அந்த படகில் இருந்து ஆஸி. கடற்படைக்கு நேற்று முன்தினம் அபாய அழைப்பு வந்தது.
இதனைத் தொடர்ந்து இந்த பகுதியில் ஹெலிகொப்டர் மற்றும் மீட்புப் படகுகள் கொண்டு தேடுதலில் ஈடுபட்ட இந்தோனேஷிய மீட்புக் குழு படகை காணாததால் தேடுதலை கைவிட்டது.
இந்நிலையில் கடலில் மிதந்து கொண்டிருந்த 6 பேரை அவுஸ்திரேலிய கடற் பாதுகாப்புப் பிரிவு மீட்டுள்ளது. மேற்கு ஜாவாவில் 42 கடல் மைல் தொலைவில் இவர்கள் மீட்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப் பட்டோர் ஆப்கான் நாட்டவர்களாவர். படகு மூழ்கும் போது அதில் பெண்கள் மற்றும் சிறுவர்களும் இருந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் அவுஸ்திரேலிய மற்றும் இந்தோனேஷிய மீட்புக் குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நன்றி தினகரன் 

No comments: