வீ.ஏ. திருஞானசுந்தரம் மறைந்தார்



23/03/2018 இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் வீ. ஏ. திருஞானசுந்தரம் நேற்று கொழும்பில் மறைந்தார்.
வீரகேசரி    நாளிதழில்  துணை  ஆசிரியராக  ஒரு காலத்தில் பணியாற்றியவர்  -  தொடர்ச்சியாக  ஊடகத்துறை  சார்ந்த பணிகளிலேலேயே   ஈடுபட்டவர். மொழிபெயர்ப்பாளராகவும் நிருவாக    மற்றும்  பிரசார  அதிகாரியாகவும் காப்புறுதிக்கூட்டுத்தாபனத்திலும்    ஒலிபரப்பு  கூட்டுத்தாபனத்தில்  பிரதி    நிருவாகப்பணிப்பாளர்  நாயகம்  உட்பட  பல்வேறு  உயர் பதவிகளிலும்    பணியாற்றியிருக்கும்  திருஞானசுந்தரம்   .ரி.என். லக்ஹண்டவில்  பிரதிபொது  முகாமையாளராகவும்  பணியாற்றியவர்.
அத்துடன்,   ஓய்வு பெற்ற   பின்னரும் சில  ஊடகத்துறை  நிறுவனங்களில்   முக்கிய பதவிகளிலும்    சேவையாற்றியவர்.


திருஞானசுந்தரம்   அவர்களுக்கு  1980  முதல்   2012  வரையில் பல்வேறு   ஊடகத்துறை   அமைப்புகளிலிருந்து  விருதுகளும் பட்டங்களும்   கிடைத்துள்ளன.  
சிவாலயம்,   மனோலயம்,   முதலான  நூல்களையும்  எழுதியிருக்கும் இவர்கரவையூற்று,   கரவை   விக்னேஸ்வரா  வழிவந்த  ஒரு  தமிழ் அறுவடை   ஆகிய  நூல்களின்  தொகுப்பாசிரியருமாவார்இதில்  ஒரு தமிழ்  அறுவடை   என்ற  நூல்  மறைந்த  பேராசிரியர் கா. சிவத்தம்பி குறித்த    கட்டுரைகளைக்கொண்டிருக்கிறது.
இலங்கையில் பல அரசியல் தலைவர்களின் உரைகளை மொழிபெயர்த்திருப்பதுடன், சில தலைவர்களுக்காக  Speech Writer ஆகவும் இயங்கியிருப்பவர்.
2008 மே மாதம் மல்லிகை இதழும்  இவரை அட்டைப்பட அதிதியாக பாராட்டி கௌரவித்துள்ளது.
---0---



-->

No comments: