மாதாவே கருணை மாதாவே - செங்கவி ம.ரமேசு

.

மாதாவே கருணை மாதாவே
கண்கள் பனிக்கத் துதிக்கின்றோம்
கார் சூழ்ந்த வேளை தன்னில்
 நம்மை காத்து அருளும்  தேவி
 ஓடி வரும் துன்பந்தன்னை
 ஒடித்துக்காரும் தேவி

பூத்த மலரின் மக்கள்
 நற் புன்னகை
புரியும் செல்வர்
சேற்று வயலின்உழவர்
 செந்தமிழ் பாடும் குயில்கள்
ஆற்று வெள்ளம் போலே
 அன்பில் அடங்கி வாழும் மாந்தர்
என்றுந் தொழுந் தெய்வம்
 எங்கள் தேவலோக  மாதா

கொட்டுங் குளிரில் அலைமேல்
துணிந்து  தொழில் செய்வோர்
பட்டு நெய்யும் பண்பர்
 மற்றுத் தமரை எல்லாம்
 மானத்தோடு வாழ
மண்டலத்தில் நீரே
  பாதுகாக்க வேண்டுந் தாயே

மாதா மாதா  எங்கள் மரியே மாதா
தா தா தா தா எங்கள் உயிரின் தா தா
மாதா மாதா  எங்கள் மரியே மாதா


No comments: