ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான சைவ சமய அறிவுப்போட்டி 2021 - 30/01/2022

 

இப் போட்டிகள் ஐனவரி  மாதம் 30ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (30/01/2022) சிட்னி துர்க்கை அம்மன் கோவிலில் பிற்பகல் 2 மணியிலிருந்து  நடைபெறவுள்ளது. 

வர்ணம் தீட்டுதல் (பாலர் ஆரம்ப பிரிவுக்கும் பாலர் பிரிவுக்கும் மட்டும்), சமய அறிவுப் போட்டி, திருமுறை ஒப்புவித்தல் போட்டி என மூன்று போட்டிகள் நடைபெறும். (அறிவுப்போட்டிக்கான மாதிரி வினாக்களும் கீழே தரப்பட்டுள்ளது)

இப்போட்டிகளில் பங்குபற்றுபவர்களுக்கு பரிசில்கள் முதற் பிரிவு, இரண்டாம் பிரிவு, மூன்றாம் பிரிவென மூன்று வகையாக வழங்கப்படவுள்ளது. ஓவ்வொரு பிரிவிலும் ஓன்றுக்கு மேற்பட்ட திறமையானவர்களுக்கு பரிசில்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காக இப்படி வகுக்கப்பட்டடுள்ளது.


போட்டி நடாத்தப்படும் பிரிவுகளும் போட்டிகளும்

பாலர் ஆரம்ப பிரிவு

01.08.2016 இலும் அதன் பின்னரும் பிறந்தவர்கள்

சமய அறிவுப் போட்டி

வர்ணம் தீட்டும் போட்டி


பாலர் பிரிவு

01.08.2014 க்கும் 31.07.2016 க்கும் இடையில் பிறந்தவர்கள்

சமய அறிவுப் போட்டி 

வர்ணம் தீட்டும் போட்டி


கீழ்ப்பிரிவு

01.08.2012 க்கும் 31.07.2014 க்கும் இடையில் பிறந்தவர்கள்

சமய அறிவுப் போட்டி 

திருமுறை ஒப்புவித்தல் போட்டி


மத்தியபிரிவு

01.08.2009 க்கும் 31.07.2012 க்கும் இடையில் பிறந்தவர்கள்

சமய அறிவுப் போட்டி 

திருமுறை ஒப்புவித்தல் போட்டி


மேற்பிரிவு

01.08.2006 க்கும் 31.07.2009 க்கும் இடையில் பிறந்தவர்கள்

சமய அறிவுப் போட்டி 

திருமுறை ஒப்புவித்தல் போட்டி


அதிமேற்பிரிவு

31.07.2006 இலும் அதன் முன்பும் பிறந்தவர்கள்

சமய அறிவுப் போட்டி 

திருமுறை ஒப்புவித்தல் போட்டி


போட்டிகளுக்கான விண்ணப்படிவத்தை கீழேயும்,   அல்லது Durgacompetition@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பியும்  பெற்றுக்கொள்ளலாம். 

மேலும் விபரங்களுக்கு போட்டி ஒருங்கிணைப்பாளர் திரு கு கருணாசலதேவா (0418 442 674)  விடம் தொடர்பு கொள்ளவும்.


விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து 11 செப்டம்பர் 2021 க்கு முன்பாக கிடைக்கக் கூடியதாக Durgacompetition@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் 

ஓருவர் அந்தந்த வயதிற்கேற்ற போட்டிகளில் பங்குபற்றலாம். எத்தனை போட்டிகளில் பங்கு பற்றினாலும் ஒரு நபருக்கு அன்பளிப்பாக  $10 (போட்டி நடைபெறும் தினத்தில்) பெறப்படுகின்றது.   

போட்டிக்கான விதிமுறைகள், புள்ளிகள் வழங்கும் முறை பற்றிய குறிப்புகள் என்பனவற்றை    கீழே பெற்றுக்கொள்ளலாம்.

விதிமுறைகள்

அறிவுப் போட்டி 

1) ஒவ்வொரு போட்டிக்கும் நடுவர்கள் இருவர் சேர்ந்து போட்டியை நடாத்துவார்கள். நடுவர்களின் தீர்ப்பே முடிவானதாகும். போட்டி முடிவுகள் அன்றே தெரிவிக்கப்படும்.

2) போட்டியின்போது பெற்றோர் இருந்து பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள். 

3) போட்டிகள் தொடர்பாக முறைப்பாடு செய்ய விரும்புவோர், எமக்கு எழுத்தில் கொடுக்க வேண்டும். முறைப்பாட்டுப் படிவம் கொடுக்கப்படும்.

4) முதலாவதாக வந்த பிள்ளையின் புள்ளிகள் 100க்கு உயர்த்தப்பட்டு மற்றய பிள்ளைகளுக்கும் அதே விகிதாசாரப்படி புள்ளிகள் வழங்கப்படும்.

5) 90 புள்ளியும் அதற்கு மேலாகவும் பெற்ற பிள்ளைகள் Band A ஆகவும், 75 புள்ளியும் அதற்கு மேலாகவும் பெற்ற பிள்ளைகள்; Band B ஆகவும், 60 புள்ளியும் அதற்கு மேலாகவும் பெற்ற பிள்ளைகள் Band C ஆகவும் கணிக்கப்படுவார்கள். 60 புள்ளிகளுக்கு குறைவாக பெற்ற மாணவர்களுக்கு பங்குபற்றியமைக்கான சான்றிதழ்கள் வழங்கப்படும்.


திருமுறை ஒப்புவித்தல் போட்டி

புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும்.

1.    மனனம் செய்யும் திறமை (40 புள்ளிகள்)

தடங்கலின்றி திருமுறையை ஒப்புவிக்கவேண்டும் நீங்கள் பயின்ற ராகத்தில் பாடலாம் அல்லது ஒப்புவிக்கலாம்  சரியாக மாணவர்கள் மனனம் செய்திருக்க வேண்டும். மாணவர்கள் ஒப்புவிக்கும்போது  கருத்துப் பிழையின்றி ஒப்புவிக்க வேண்டும்

2.     உச்சரிப்பு: (40 புள்ளிகள்)

மாணவர்கள் தமிழை சரியாக உச்சரிக்க வேண்டும். அதாவது சொற்களையும் எழுத்துக்களையும் கேட்பவர்கள் விழங்கிக் கொள்ளக் கூடிய முறையில் தெளிவாக உச்சரிக்க வேண்டும். கீழ்ப்பிரிவில் மழலை உச்சரிப்பு இருத்தல் பிழையன்று.

3.     சபை மரபு: (20 புள்ளிகள்)

சபைக்கு வருதல், சபையில் உள்ளவர்களை விழித்தல், சபைக்கு முன் நிற்றல், சபையை விட்டகலல் என்பவற்றிக்கு வயதிற்கேற்ற பக்குவமும் தமிழர் மரபிற்கேற்ற செயற்பாடுகளும் இருத்தல் வேண்டும்.  ஒப்புவித்து முடித்தவுடன் இயற்கையான முறையில் வணக்கம் தெரிவித்து. தனது இருப்பிடம் சென்று அமர்தல் வேண்டும்.

விதி முறைகள்

1)  ஒவ்வொரு போட்டிக்கும் நடுவர்கள் நியமிக்கபடுவார்கள். நடுவர்களின் தீர்ப்பே முடிவானதாகும்.

2) போட்டியின்போது பெற்றோர் தமக்குள் உரையாடுவதும், தம் பிள்ளைகளுடன் உரையாடுவதும், இடையிட்டு கருத்து தெரிவிக்க முயல்வதும் தவிர்க்கபட வேண்டும். போட்டிகளின் போது பெற்றோர் அமைதியாக இருந்து ஒத்துழைக்க வேண்டும்.

3)  போட்டிகள் தொடர்பாக முறைப்பாடு செய்ய விரும்புவோர் எமக்கு எழுத்தில் கொடுக்க வேண்டும்.

4)  பிள்ளைகளின் பங்களிப்புக்கேற்ப பரிசுகள் வழங்கப்படும்.

5) முதலாவதாக வந்த பிள்ளையின்  புள்ளிகள் 100க்கு உயர்த்தப்பட்டு மற்ற பிள்ளைகளுக்கும் அதே விகிதாசாரப்படி புள்ளிகள் வழங்கப்படும்.  90 புள்ளியும் அதற்கு மேலாகவும் பெற்ற மாணவர்கள் Band A ஆகவும் 75 புள்ளியும் அதற்கு மேலாகவும் பெற்ற மாணவர்கள்;  Band B ஆகவும் 60 புள்ளியும் அதற்கு மேலாகவும் பெற்ற மாணவர்கள்; Band C  ஆகவும் கணிக்கப்படுவார்கள். 60 புள்ளிகளுக்கு குறைவாக பெற்ற பிள்ளைகளுக்கு பங்குபற்றியமைக்கான சான்றிதழ்கள் வழங்கப்படும்.

 

விதிமுறைகள்

வர்ணம் தீட்டும் போட்டி 

இப்போட்டி பாலர் ஆரம்பப்பிரிவுக்கும் (5 வயதிற்கு கீழ்), பாலர் பிரிவுக்கும் (7 வயதிற்கு கீழ்) மட்டுமே நடாத்தப்படும். பங்குபற்றுவர்களின் வயது கணிக்கப்படும் திகதி 31/07/2021.

விதி முறைகள்

புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும்.

1) கொடுக்கப்பட்டிருக்கும் படத்திற்கு பொருத்தமான நிறங்களை பாவித்தல்(50 புள்ளிகள்)

2) ஒழுங்காக வர்ணத்தை தீட்டுதல் (50 புள்ளிகள்)

   வர்ணம் தீட்டும் பொழுது கோடுகளுக்கு வெளியில் செல்லாமல் தீட்டுதல்.

   பொருத்தமான அளவில் நிறங்களைப் பாவித்தல்.

3) ஒவ்வொரு போட்டிக்கும் 2 நடுவர்கள் நியமிக்கபடுவார்கள். 

நடுவர்களின் தீர்ப்பே    முடிவானதாகும்.

4) போட்டிகள் தொடர்பாக முறைப்பாடு செய்ய விரும்புவோர் எமக்கு எழுத்தில் கொடுக்க 

வேண்டும்.

5) பிரிவில் முதலாவதாக வந்த பிள்ளைக்கு புள்ளிகள் 100க்கு உயர்த்தப்பட்டு மற்ற பிள்ளைகளுக்கும் அதே விகிதாசாரப்படி புள்ளிகள் வழங்கப்படும்.

6) 90 புள்ளியும் அதற்கு மேலாகவும் பெற்ற பிள்ளைகள் Band A ஆகவும், 75 புள்ளியும் அதற்கு மேலாகவும் பெற்ற பிள்ளைகள்; Band B ஆகவும், 60 புள்ளியும் அதற்கு மேலாகவும் பெற்ற பிள்ளைகள் Band C ஆகவும் கணிக்கப்படுவார்கள். 60 புள்ளிகளுக்கு குறைவாக பெற்ற மாணவர்களுக்கு பங்குபற்றியமைக்கான சான்றிதழ்கள் வழங்கப்படும்.

__________________________________________________________________

பாலர் பிரிவு

(01.08.2014 க்கும் 31.07.2016 க்கும் இடையில் பிறந்தவர்கள்)


1    உங்கள் சமயம் எது? சைவ சமயம்

2    சைவ சமயத்தில் முழுமுதற் கடவுள் யார்? சிவபெருமான்

3    பூசைக்குத் தேவையான பொருள்கள் 3 கூறவும். பழம், தேங்காய், கற்பூரம், பூக்கள், ஊதுபத்தி.

4    கோயிலுக்கு வேறொரு பெயர் கூறுக? ஆலயம்.

5    கோயில் வாசலில் நீர் காண்பது என்ன? கோபுரம்

6    தேர்த்திருவிழா ஒரு ஆண்டில் எத்தனை முறை நடைபெறும்? ஒரு முறை

7    நாம் கோயிலுக்குச் சென்றதும் முதலில் யாரை வணங்குவோம்? பிள்ளையாரை

8    திருநீற்றின் நிறம் என்ன? வெள்ளை அல்லது வெண்மை

9    பிள்ளையாரை எப்படி வணங்குகிறோம்? நெற்றியில் 3 முறை குட்டி, தோப்புக்கரணம் போட்டு வணங்குவோம்.

10   கோயிலில் பூசை முடிந்ததும் என்ன கொடுப்பார்கள்? இறைவனின் பிரசாதமாக திருநீறு, தீர்த்தம், சந்தனம், குங்குமம், பூ

11    திருநீற்றுக்கு இன்னொரு பெயர் கூறுங்கள்? விபூதி

12    பிள்ளையாருக்கு உதந்த புல் எது? அல்லது பிள்ளையாருக்கு எந்தப் புல்லினால் அருச்சனை செய்வார்கள்? அறுகம் புல்

13 கடவுளுக்கு இன்னுமொரு பெயர் கூறுங்கள்? இறைவன்

14 திருநீற்றை எப்படிக் குருக்களிடமிருந்து வாங்கவீர்? இடது கையின் மேல் வலது கையை வைத்து இரண்டு கைகளாலும் வாங்க வேண்டும்.

15 திருநீற்றை எப்படிப் பூசுவீர்?     தலையை உயர்த்தி அண்ணாநது. சிவ சிவ என்று உச்சரித்துக் கடவுளை வணங்கியபடி திருநீற்றைப் பூசவேண்டும்.

16    சிவப்புத் தாமரைப் பூவில் அமர்ந்திருக்கும் கடவுள் (சக்தி) யார்? இலக்குமி

17    சந்தனத்தின் நிறம் என்ன? மஞ்சள் நிறம்

18    குங்குமத்தின் நிறம் என்ன? சிவப்பு நிறம்.

19 கையில் வேல் வைத்திருக்கும் கடவுளின் பெயரைக் கூறுங்கள்? முருகன், முருகப்பெருமான், வேலாயுதன், மயில்வாகனன்.

20 மோதகத்தைக் கையில் ஏந்திய கடவுள் யார்? பிள்ளையார்.

21 புலித்தோலை அணிந்த கடவுளின் பெயரைக் கூறுங்கள்? சிவபெருமான்

22    கல்வித் தெய்வம் என அழைக்கப்படுபவர் யார்? அல்லது கல்வியைத் தரும் தெய்வத்தின் பெயரைக் கூறுக. சரஸ்வதி தேவி

23 பிள்ளையாரின் தம்பி என்று எந்தக் கடவுளின் பெயரைக் கூறுக. முருகப் பெருமான், முருகன்

24 முருகப் பெருமானின் கையில் உள்ள ஆயுதம் எது? வேல்

25 மூன்று வயதில் தேவாரம் பாடிய நாயனாரின் பெயர் என்ன? திருஞானசம்பந்தர்

26 கோயிலில் எந்தக் கடவுளுக்கு முதலில் பூசை நடைபெறும்? பிள்ளையாருக்கு முதலில் பூசை நடைபெறும்.

27 கோயிலில் எந்தக் கடவுளுக்கு கடைசியாகப் பூசை நடைபெறும்? சண்டேசுவரருக்கு நடைபெறும்.

28 பிள்ளையாரின் வாகனம் எது? எலி 

29 சிவபெருமானுடைய வாகனம் எது? இடபம், எருது

30 யானை முகத்தையுடைய கடவுள் யார்? பிள்ளையார்

31 முருகப் பெருமானின் கொடியில் உள்ள பறவை எது? சேவல்

32 முருகப் பெருமானின் வாகனம் எது? மயில்

33 வீரத்தை தரும் கடவுள் யார்?    துர்க்கை

34 சரஸ்வதி கையில் வைத்திருக்கும் இசைக்கருவி எது? வீணை

35 கோயிலுக்கு எப்படி போகவேண்டும்? குளித்து தூய ஆடை அணிந்து போகவேண்டும்.  பூசைக்குரிய பொருள் ஏதாவது ஒன்று கொண்டு போனால் நன்று.  பூக்கள், பழம் கொண்டு போகலாம்

________________________________________________________________________________



கீழ்ப் பிரிவு

(01.08.2012 க்கும் 31.07.2014 க்கும் இடையில் பிறந்தவர்கள்)


பாலர் பிரிவுக்குரிய வினாக்களுடன் கீழ்வரும் வினாக்களும் உரியதாகும்.

1    சிவபெருமான் தலையில் அணிந்துள்ளவை எவை? பிறைச் சந்திரன், கங்கை, கொன்றைப்பூ

2 நீலகண்டன் என அழைக்கப்படும் கடவுள் யார்? சிவபெருமான்

3 சிவபெருமானின் கழுத்தை அலங்கரிப்பது எது? நாகபாம்பு

4 சிவராத்திரி எந்த மாதத்தில் வருகிறது? மாசி மாதத்தில் வரும்

5 காத்தல் தொழிலைச் செய்யும் கடவுள் யார்? திருமால், விஷ்ணு

6 சிவபெருமானின் இடப்பாகத்தினை அலங்கரிக்கும் தெய்வத்தின் பெயரைக் கூறுங்கள்? உமாதேவியார்

7 பிள்ளையாருக்கு வேறு இரண்டு பெயர்களைக் கூறவும். கணபதி, விநாயகர், ஐங்கரன் ஆனைமுகன், கரிமுகன்;

8 படைத்தல் தொழிலைச் செய்யும் கடவுள் யார்? பிரம்மா

9 திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டியவர் யார்? உமை அம்மை, உமாதேவியார்

10 திருஞானசம்பந்தர் பிறந்த ஊர் எது? தமிழ் நாட்டில் உள்ள சீர்காழி

11 கோயில் திருவிழாவில் பெருவிழா எது? தேர்த் திருவிழா

12 நவராத்திரி காலத்தில் முதல் மூன்று நாள்களில் எந்த சத்திக்கு விசேட பூசை நடைபெறும். துர்க்கை அம்மனுக்கு. 

13 சிவசின்னங்கள் எவை?    விபூதி, உருத்திராக்கம்.

14 ஐங்கரன் என்று அழைக்கப்படுபவர் யார்? பிள்ளையார்

15 சேக்கிழார் பாடிய புராணம் எது?    பெரியபுராணம்.

16 சிவபுராணத்தின் முதல் வரியைக் கூறுக. நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க

17 சிவபுராணத்தை அருளிய நாயனார் யார்? மாணிக்கவாசகர்

18 'உழவாரப் படையாளி' என்று அழைக்கப்பட்ட நாயனார் யார்? திருநாவுக்கரசர் ஃ அப்பர்

19 வேலும் மயிலும் எந்தக் கடவுளுக்குரியவை? முருகப் பெருமானுக்கு

20 மாசி மகத்தின் சிறப்பு யாது? துர்க்கை அம்மனுக்கு விசேட பூசைகள் நடைபெற்று தீர்த்தம் இடம் பெறும் தினம்.

21 தேவாரம் பாடிய மூவர் யார்? திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஃ அப்பர், சுந்தரமூர்த்தி நாயனார்.

22 சொற்றுணை வேதியன் என்ற தேவாரத்தைப் பாடியவர் யார்? திருநாவுக்கரசர் ஃ அப்பர்

23 சிட்னி துர்க்கை அம்மன் கோயில் எங்கே அமைந்துள்ளது? றீயன்ஸ்பார்க் (Regents Park, NSW) என்னுமிடத்தில்

24 திருப்புகழைப் பாடியவர் யார்?    அருணகிரிநாதர்

25 'அபிராமி அந்தாதி' பதிகம் யாரால் பாடப்பட்டது? அபிராமி பட்டரால் பாடப்பட்டது

26 திருநாவுக்கரசருக்கு இறையருளால் உண்டான நோய் என்ன? சூலை நோய்

27 திருநாவுக்கரசரின் தமக்கையார் பெயர் என்ன? திலகவதியார்

28 சைவ சமயத்தவர்களின் (எமது) முழுமுதற் கடவுள் யார்? சிவபெருமான்.

29 திருநாவுக்கரசர் முதலில் பாடிய தேவாரம் எது? 'கூற்றாயினவாறு'

30 இரவு முழுவதும் கண் விழித்திருந்து சிவபெருமானனை வழிபடும் நாள் எது? சிவராத்திரி

31 திருக்கோணேச்சரப் பதிகத்தைப் பாடியவர் யார்? திருஞானசம்பந்தர்.

32 திருக்கேதீச்சரத்தின் மீது தேவாரம் பாடிய நாயன்மார் யாவர்? திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார்.

33 சிவபெருமான் எவற்றைத் தனது தலையில் சூடியிருக்கிறார்? (இரண்டு கூறுக). கங்கை,                     பிறைச்சந்திரன், பாம்பு, கொன்றைப்பூ

34 ஆனை முகன் என அழைக்கப்படும் கடவுள் யார்? பிள்ளையார்.

35 ஆறுமுகன் என அழைக்கப்படும் கடவுள் யார்? முருகன்

36 நெற்றிக்கண்ணை உடைய கடவுள் யார்? சிவபெருமான்.

37 நாம் ஏதாவது காரியத்தைச் செய்யத் தொடங்க முன்னர் எந்தக் கடவுளை வழிபடுகிறோம்? பிள்ளையார்.

38 முருகப் பெருமானின் இருபக்கத்திலும் வீற்றிருக்கும் சக்திகள் யாவர்? தெய்வயானை -                         இடப்பக்கம்,      வள்ளி – வலப்பக்கம்

39 கோயில் திருவிழாவில் முதல் நாள் உற்சவம் எது? கோடியேற்றம்.

40 திருமுறைகளைத் தொகுத்துத் தந்தவர் யார்?    நம்பியாண்டார் நம்பி. தொகுப்பித்தவர் யார்?                இராஐராஐசோழன்.


_____________________________________________________________________________________


மத்திய பிரிவு

பாலர் பிரிவு, கீழ்ப்பிரிவு வினாக்களுடன் பின்வரும் வினாக்களும் உரித்தாகும்

1 சிவபெருமானுக்குரிய வேறு பெயர்கள் 3 கூறுக நீலகண்டன், ஆலமண்டோன், சந்திரசேகர், கங்காதரர், சிவன், அரன், ஆதிரையான், இடபவாகனன்

2 சிவராத்திரி எந்த மாதத்தில் வருகிறது? மாசி மாதத்தில்

3 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்று கூறியவர் யார்? ஒளவையார்.

4 திருநீற்றை எந்த வேளைகளில் தரிக்கலாம் அல்லது பூசலாம்? காலை, மாலை வேளைகளில் நீராடிய (குளித்த) பின்பு, உணவு உண்ணுமுன்னர், நித்திரைக்குச் செல்லும் போது, வீட்டைவிட்டு வெளியேறும் போது, கோயிலில் கடவுளை வணங்கும் போது தரிக்கலாம்.

5 முருகப் பெருமானிடம் சுட்டபழம் கேட்டுப் பெற்ற மூதாட்டி யார்? ஒளவையார்.

6 ஒளவையார் பாடிய நூல்கள் இரண்டு கூறுக. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி, மூதுரை

7 சிவபுராணத்தில் எத்தனை வரிகள் (அடிகள்) உள்ளன. தொண்ணூற்றைந்து (95)

8 கண்ணப்பநாயனாரின் பிள்ளைத் திருநாமம் என்ன? திண்ணனார்.

9 சைவமும் தமிழும் தம்மிரு கண்ணெனப் போற்றி, அரும்பணியாற்றிய யாழ்ப்பாணத்துப் பெரியார்               யார்? ஆறுமுகநாவலர்.

10 திருஞானசம்பந்தர் முத்தியடைந்த போது அவருக்கு எத்தனை வயது? 16 வயது.

11 திருநாவுக்கரசு முத்தியடைந்த போது அவரது வயது எவ்வளவு? 81 வயது

12 சுந்தரமூர்த்தி நாயனார் எத்தனையாவது வயதில் முத்தியடைந்தார்? 18வது வயதில்.

13 மாணிக்கவாசகர் எத்தனையாவது வயதில் முத்தியடைந்தார்? 32வது வயதில்.

14 கோயிலை அடைந்ததும் முதலில் எதைப் பார்த்துக் கும்பிடவேண்டும்? கோயில் கோபுரத்தைப் பார்த்துக் கும்பிட வேண்டும்.

15 பிள்ளையாரை எப்படிக் கும்பிட வேண்டும்? கைவிரல்களை மடக்கி, பொத்திய கையினால் நெற்றியில் மூன்று முறை குட்டி, தோப்புக்கரணம் போட்டுக் கும்பிட வேண்டும்.

16 படைத்தல் தொழிலைச் செய்யும் கடவுளின் பெயரை கூறுக. பிரம்மா.

17 அழித்தல் தொழிலைச் செய்யும் கடவுள் யார்? உருத்திரன்.

18 முருகப்பெருமானுக்கு உகந்த விரதங்கள் எவை? கந்தசட்டி (கந்தசஷ்டி), திருக்கார்த்திகை.

19 முருகப்பெருமானுக்குரிய வேறுபெயர்கள் 5 கூறுக. ஆறுமுகன், சரவணன், சரவணபவன், கார்த்திகேயன், மயில்வாகனன், சேவல்கொடியோன், கந்தன், வடிவேலன், செவ்வேன், மயூரன், வேலாயுதன்.

20 அம்மை அப்பரைச் (சிவபெருமானையும் உமாதேவியாரையும்) சுற்றி வந்து மாங்கனியைப் பெற்ற கடவுள் யார்? பிள்ளையார்.

21 நவராத்திரிக் காலத்தில் கடைசி மூன்று இரவுகளில் எந்த சக்திக்கு விசேட பூசை நடைபெறும்? சரஸ்வதிதேவிக்கு

22 சகலகலாவல்லி மாலையைப் பாடியவர் யார்? குமரகுருபர சுவாமிகள்.

23 சமயகுரவர்கள் என்று யாரை அழைக்கிறோம்? திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர்.

24 பெரியபுராணம் எத்தனை நாயன்மார்களுடைய வரலாற்றைக் கூறுகிறது? அறுபத்துமூன்று நாயன்மார்களின் வரலாறு.

25 குருந்தமர நிழலில் குருவாய் அமர்ந்து சிவபெருமான் யாரை ஆட்கொண்டார்? மாணிக்கவாசகரை.

26 திருநாவுக்கரசருக்கு வழங்கும் வேறு பெயர்கள் எவை? அப்பர், வாகீசர், உழவாரப்படையாளி, ஆளுடைய அரசு, தாண்டகவேந்தர், தருணீக்கியார்.

27 சிவபெருமானுடைய நடனத் தோற்றம் எது? நடராஜர்.

28 'பித்தா பிறை சூடி' என்று தொடங்கும் தேவாரப் பதிகத்தைப் பாடியவர் யார்? சுந்தரமூர்த்தி நாயனார்.

29 ஆலய வழிபாட்டில் இறுதியாக யாரை வழிபடுகிறோம்? சண்டேசுவரரை வழிபடுகிறோம்.

30 ஈழத்தில் தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலங்கள் யாவை? திருக்கேசீச்சரம், திருக்கோணேச்சரம்.

31 தஞ்சைப் பெருங்கோயிலைக் கட்டியவர் யார்? இராஜராஜசோழன்.

32 கந்தபுராணம் யாருடைய கதையைக் கூறுகிறது? முருகப் பெருமானுடைய.

33 கந்தபுராணத்தைப் பாடியவர் யார்? கச்சியப்ப சிவாச்சாரியார்.

34 ஓங்காரரூபன் என அழைக்கப்படுபவர் யார்? பிள்ளையார்.

35 அப்பர் சமணசமயத்தில் இருந்த போது அவருக்கு வழங்கிய பெயர் என்ன? தருமசேனர்.

36 சிவபுராணம் எத்தனையாம் 'திருமுறையில் இடம் பெற்றுள்ளது? 8ம் திருமுறையில்

37 உத்தராயணம் என்றால் என்ன பொருள்? சூரியன் வடக்கு நோக்கிச் செல்லும் காலம் ஆகும்.

38 சுந்தரமூர்த்தி நாயனாரின் திருமணத்தை தடுக்கச் சிவபெருமான் என்ன வடிவில் வந்தார்? கிழப்பிராமணராக வந்தார்.

39 சிவபெருமான் யாருக்காகப் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்பால் அடிபட்டார்? பிட்டுவாணிச்சி அம்மை செம்மனச் செல்விக்காக

40 பாண்டியனுடைய வெப்பு நோய் நீங்க திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் எது? திருநீற்றுப் பதிகம்.

41 திருக்கார்த்திகையை விசேடமாகக் கொண்டாடுகின்ற திருத்தலம் எது? திருவண்ணாமலை.

42 கோயில் திருவிழாக்களில் முக்கியமான நாட்கள் எவை? கொடியேற்றம், தேர், தீர்த்தம்.

43 மாமரமாகச் சூரன் நின்றபோது முருகனுடைய வேல் மாமரத்தை இரண்டாகப் பிளந்த வேளையில் தோன்றிய பறவைகள் எவை? சேவல், மயில்.

44 சைவத் திருமுறைகள் எத்தனை?     பன்னிரண்டு (12)

45 சுந்தரமூர்த்தி நாயனாருடைய தேவாரங்கள் எத்தனையாம் திருமுறையில் அடங்கியுள்ளன? 7 ஆம் திருமுறை.

46 அப்பூதி அடிகள் செய்த திருத்தொண்டு என்ன? தண்ணீர்ப்பந்தல் அமைத்து அடியார்க்குத் தாகம் தணிக்கும் திருத்தொண்டு.

47 அப்பூதியடிகளின் தண்ணீர்ப்பந்தல் யாருடைய பெயரைக் கொண்டிருந்தது? திருநாவுக்கரசர் (தண்ணீர்ப்பந்தல்) பெயரைக் கொண்டிருந்தது.

48 கோயில்களில் அதிகாலையில் பாடப்படும் பாடல் என்ன? திருப்பள்ளியெழுச்சி

49 புனிதவதியார் என்ற இயற்பெயரைக் கொண்டிருந்த அம்மையார் யார்? காரைக்கால் அம்மையார்.

50 சுந்தரமூர்த்தி நாயனாரின் பிள்ளைத்திருநாமம் என்ன? நம்பியாரூரர்.



_______________________________________________________________________________


மேற்பிரிவு

(பாலர்பிரிவு, கீழ்ப்பிரிவு, மத்தியபிரிவு வினாக்களுடன் கீழ்வரும் வினாக்களும் உரியதாகும்.)

1    அன்பும் சிவமும் ஒன்று என்று கூறியவர் யார்?     திருமூலர்

2 சிதம்பரத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் பெயர் என்ன? தில்லைநடராஜர், சிதம்பரேஸ்வரர்

3 பின்வரும் பழமொழிகளை நிறைவு செய்க.

'தந்தை சொல் மிக்க .......'    மந்திரமில்லை

'கோயில் இல்லா ஊரில் .....'    குடியிருக்க வேண்டாம்

'ஆலயம் தொழுவது ......'     சாலவும் நன்று.

4    மும்மலங்கள் எவை? ஆணவம், கன்மம், மாயை

5    சிவராத்திரி அன்று சிவபெருமானை எப்படி வணங்குகிறோம்? பேரொளி வடிவில், இலிங்கோற்பவராக, வழிபடுகிறோம்.

6    தூலலிங்கம் என அழைக்கப்படுவது எது? கோயில் கோபுரம்.

7 திருக்கோணேச்சரம் கோயில் எங்கே உள்ளது? இலங்கையில் உள்ள திருகோணமலையில் திருக்கோணமாமலையின் உச்சியில் உள்ளது.

8 சைவர்களின் சமயநூல்கள் எவை?    பன்னிரு திருமுறைகளும் பதின்னான்கு சித்தாந்தசாஸ்திரங்களும்

9 கொடியேற்றத்தின் போது கொடிமரத்தைச் சுற்றியுள்ள கொடிச்சீலையும் தருப்பைக்கயிறும் எவற்றைக் குறிக்கின்றன. கொடிச்சீலை ஆன்மாவையும் தருப்பைக்கயிறு பாசத்தையும் குறிக்கின்றன.

10 கந்தசஷ்டி எந்த மாதத்தில் எந்தவேளையில் அனுட்டிக்கப்படுகிறது.     ஐப்பசி மாதம், வளர்பிறை (பூர்வபக்கம்) பிரதமை முதல் சஷ்டி வரை ஆறு நாள்கள் கொண்டாடப்படுகிறது.

11    'வேயுறு தோளி பங்கன்' என்று தொடங்கும் பதிகத்தின் பெயர் என்ன? இதனைப் பாடியவர் யார்? கோளறுபதிகம்;     திருஞானசம்பந்தர் பாடினார்.

12 முருகப் பெருமானின் ஆறுபடைவீடுகள் எவை? பழனி, சுவாமிமலை, பழமுதிர்சோலை, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருத்தணிகை.

13    இலங்கையின் தென்கோடியில் அமைந்துள்ள பழமையான முருக திருத்தலம் எது? (கோயில் எது) கதிர்காமம்

14    சிவபெருமான் ஆற்றுகின்ற ஐந்தொழில்கள் எவை?    அவற்றை எத்திருமேனிகளில் நின்று ஆற்றுகின்றார்? படைத்தல் - பிரமா;     காத்தல் - விஷ்ணு;     அழித்தல் - உருத்திரன்;     மறைத்தல் - மகேஸ்வரன்;     அருளல் - சதாசிவன்.

15    அட்டாங்க நமஸ்காரம் என்றால் என்ன?    அது யாருக்குரியது? எட்டு உறுப்புகள் நிலத்தில் படும்படி விழுந்து வணங்கும் முறை ஆகும். இது ஆண்களுக்குரியது.

16 பஞ்சாங்க நமஸ்காரம் என்றால் என்ன?    அது யாருக்குரியது. ஐந்து உறுப்புகள் நிலத்தில் படும்படி விழுந்து வணங்கும் முறை ஆகும்.    இது பெண்களுக்குரியது.

17 ஐந்தொழில்களையும் விளக்கி நிற்கும் சிவவடிவம் எது? நடராஜா வடிவம்.

18 துர்க்கை அம்மனுக்கு வழங்கும் வேறு பெயர்கள் 2 கூறுக. பராசக்தி, கௌரி, சிம்மவாகினி

19 தீபாவளி என்பதன் பொருள் யாது?    தீபங்களின் வரிசை – தீபங்களை – விளக்குகளை வரிசையாக வைத்து வழிபாடு செய்தல்.

20 எட்டு திக்குப் பாலகர்கள் யாவர்? இந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன்.

21 ஈசானன் எந்தத் திக்குக்கு உரியவர்?    (திசைக்கு) வடகிழக்குத் திசைக்கு

22 சமயகுரவர் நால்வரில் சரியைத் தொண்டு புரிந்து உய்தி பெற்றவர் யார்? திருநாவுக்கரசர்.

23 ஆலயத்தில் மூலமூர்த்தி எழுந்தருளியிருக்கும் இடம் எப்படி அழைக்கப்படுகிறது? கருவறை, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம்.

24 கோயிலில் செய்யத்தக்க சரியைத் தொண்டுகள் 2 கூறுக. கோயில் சுற்றாடலைச் சுத்தம் செய்தல்.    கோயிலின் உட்புறத்தைக் கூட்டுதல், கழுவுதல்.    பூந்தோட்டம் அமைத்தல்.    மலர் பறித்தல், மாலை கட்டுதல்

25 முப்புரங்களை எரித்தவர் யார்?    சிவபெருமான்.

26    'விநாயகர்' என்ற சொல்லின் பொருள் யாது? தனக்கு மேல் ஒரு தலைவரில்லாதவர், ஒப்புயர்வற்றவர்.

27 மாணிக்கவாசக சுவாமிகளின் இயற்பெயர் என்ன? திருவாதவூரர்

28 சைவநாற்பாதங்கள் எவை?    சரியை, கிரியை, யோகம், ஞானம்.

29 சிவபெருமானுக்கு ஓம்கார மந்திரத்தின் பொருளை உபதேசித்தவர் யார்? முருகப்பெருமான்.

30 மாணிக்கவாசகர் அருளிய திருப்பாடல்கள் எவை? திருவாசகம், திருக்கோவையார்.

31 'சித்திரை சதயம்' யாருடைய குருபூசை தினமாகும்? அப்பர் / திருநாவுக்கரசருடையது ஆகும்

32 சுந்தரமூர்த்தி நாயனாருடைய குருபூசை தினம் எப்போது வரும்? ஆடிச் சோதி (சுவாதி)

33 'பஞ்சபுராணம்' என்பதில் அடங்கும் தோத்திரப்பாக்கள் எவை? தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புராணம்.

34 பேரிய புராணத்தின் தொடக்கமாகவும் முடிவாகவும் அமைந்த சொற்றொடர் எது? 'உலகெலாம்'

35 தட்சணாமூர்த்திக்கு இன்னொரு பெயர் கூறுக. தென்திசைக் கடவுள்

36 தட்சணாமூர்த்திப் பெருமானிடம் உபதேசம் பெற்ற நான்கு முனிவர்கள் யாவர்? சனகர், சனாதனர், சனந்தனர், சனற்குமாரர்.

37 ஐங்கரன் என்ற பெயரையுடைய கடவுள் யார்? ஏன் அப்படிச் சொல்லப்படுகிறார்? பிள்ளையார்.    நான்கு கரங்களுடன், ஐந்தாவது கையாகத் தும்பிக்கையைக் கொண்டிருப்பதனால்.

38 முருகன் என்பதன் பொருள் என்ன?    அழகு, இளமை, தெய்வநலம் மூன்றும் உள்ளவன். அழகுள்ளவன், இளமை குன்றாதவன், தெய்வநலம் உள்ளவன்.

39 நவக்கிரகங்கள் யாவை? சூரியன் (ஞாயிறு), சந்திரன் (திங்கள்), செவ்வாய், புதன், விழாழன், வெள்ளி, சனி, ராகு, கேது என்னும் ஓன்பதுமாம்.

40 கிரியை வழிபாடு என்பது யாது? அபிடேகம், ஆராதனை, பூசை, தோத்திரம் என்று கிரியைகளைச் செய்து புறத்தும், அகத்தும் கடவுளை வணங்குதல் ஆகும்.

41 இறைவனின் மூவகைத் திருமேனிகள் எவை? அருவம், உருவம், அருவுருவம் ஆகியன.

42 ஆடிப்பூரம் எந்தக் கடவுளுக்கு விசேடமான தினமாகும் அம்மாளுக்கு ஃ உமாதேவிக்கு

43 காரைக்கால் அம்மையார் பாடிய பதிகங்கள் எவை? திருவாலங்காட்டு மூத்ததிருப்பதிகம், திருவிரட்டைமணிமாலை.

44 நமிநந்தியடிகள் செய்த திருத்தொண்டு என்ன? கோயிலில் திருவிளக்கேற்றல்.

45 கிரியை வழிபாட்டிலும், யோக வழிபாட்டிலும் நின்று முத்தி அடைந்தோர் யாவார்? கிரியை – திருஞானசம்பந்தர்,    யோகம் - சுந்தரமூர்த்தி நாயனார்.

46 முருகப்பெருமானுக்கும் தெய்வயானை அம்மனுக்கும் திருமணம் எங்கே நடைபெற்றது? திருப்பரங்குன்றத்தில்

47 தைப்பொங்கல் எப்போது கொண்டாடுகிறோம்? ஓவ்வொரு வருடமும் தை மாதத்தின் முதல் நாளில் கொண்டாடுகிறோம்.

48 முருகப் பெருமான் தந்தைக்குப் (சிவபெருமானுக்கு) பிரணவ உபதேசம் செய்த இடம் எது? சுவாமிமலை.

49 அபிராமிபட்டருக்காக, அபிராமி அம்மன் அமாவாசையை மாற்றி பூரணை நாளாக மாற்றிய தினம் எது? தை அமாவாசை.

50 இலங்கையிலுள்ள 3 முருகன் கோயில்கள் கூறுக. கதிர்காமக் கந்தன் ஆலயம், நல்லூர்க் கந்தசுவாமி கோயில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்,  தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் கோயில், பொலிகண்டிக் கந்தசுவாமி கோயில்

51 ஹவாய் சுப்பிரமுனி சுவாமிகளின் குரு யார்? யாழ்ப்பாணம் யோகர் சுவாமிகள்.

52 யாழ்ப்பாணத்துச் சித்தர்கள் இருவர் பெயர் கூறுக. கடையிற் சுவாமிகள், செல்லப்பா சுவாமிகள் யோகர் சுவாமிகள்

53 நாம் எப்போது சூரியனுக்கு நன்றி செலுத்துகிறோம்? தைப்பொங்கல் அன்று.

54 தைப்பொங்கலுக்கு அடுத்தநாள் இடம் பெறும் விசேடம் என்ன? மாட்டுப்பொங்கல்.

55 சக்திக்குரிய விரதங்கள் 2 கூறுக.    நவராத்திரி,     கேதாரகௌரி விரதம்.

56 'ஐந்து கரத்தனை' என்று தொடங்கும் பாடல் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது? திருமந்திரம்.

57 இறைவனின் அருவுருவத்திருமேனி என்று சொல்லப்படுவது எது? சிவலிங்கம்.

58 பஞ்சபூதங்கள் எவை?    பஞ்சபூதத்தலங்கள் எவை? நிலம் - காஞ்சி;     நீர் – திருவானைக்கா;     தீ – திருவண்ணாமலை:     காற்று – திருக்காளத்தி;     ஆகாயம் - சிதம்பரம்.

59 சேக்கிழார், பெரிய புராணத்தை எங்கே அரங்கேற்றம் செய்தார்? சிதம்பரத்தில்

60 திருவெம்பாவையின் இறுதி பத்தாவது நாள் என்ன நடைபெறும். 'ஆருத்ரா தரிசனம்' கிடைக்கிறது.    திருவாதிரைநாள் என்று சொல்லப்படும்.


___________________________________________________________________________________




அதிமேற்பிரிவு

(பாலர்பிரிவு, கீழ்ப்பிரிவு, மத்தியபிரிவு, மேற்பிரிவு வினாக்களுடன் கீழ்வரும் வினாக்களும் உரியதாகும்.)


1    ஆலயத்தில் இறுதியில் வழிபட வேண்டிய கடவுள் யார்? சண்டேசுவரர்

2    நாவுக்கரசருக்கு பொதி சோறு கொடுத்தவர் யார்? சிவபெருமான்

3    புலித்தோலை ஆடையாக அணிந்தவர் யார்? சிவபெருமான்

4    சிதம்பரத்தில் இருக்கும் இறைவனின் பெயர் என்ன? நடராஜப் பெருமான்

5    சிவபெருமானின் வாகனம் என்ன? இடபம்

6    தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டியவர் யார்? ராஜராஜ சோழன்

7    காரைக்காலம்மையாரின் இயற்பெயர் என்ன? புனிதவதியார்

8    கந்தபுராணத்தைப் பாடுமாறு கச்சியப்பரைக் கேட்டவர் யார்? முருகப்பெருமான்

9    அபிராமி அந்தாதி எத்தினத்தில் பாடப்பெற்றது? தை அமாவாசையில்

10 அபிராமி அந்தாதியில் எத்தனை பாடல்கள் உண்டு? 101 பாடல்கள்

11    நல்வழி நூலை இயற்றியவர் யார்? ஒளவையார்

12    தேவாரங்களை எவ்வாறு பாடுதல் வேண்டும்? பண்ணோடு பாடுதல் வேண்டும்

13 நாயன்மாருடைய வரலாற்றைக் கூறும் நூல் எது? பெரியபுராணம்

14 பெரியபுராணத்தை எழுதியவர் யார்? இதன் மறுபெயர் என்ன? சேக்கிழார்,    திருத்தொண்டர் புராணம்

15 ஈழத்தில் தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் எவை? திருக்கேதீச்சரம்,     திருக்கோணேசுவரம்

16 சொற்றுணை வேதியன் ---- என்ற தேவாரத்தைப் பாடியவர் யார்? திருநாவுக்கரசர்

17    திருப்புகழை இயற்றியவர் யார்? அருணகிரிநாதர்

18 முருகன் எவ்வாறு தோன்றினான்?     சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பொறியாய்

19 முருகனுக்கு சரவணன் என்ற பெயர் எப்படி வந்தது? சரவணப் பொய்கையில் தோன்றியதால்

20 சிவனின் நெற்றிக்கண்ணில் தோன்றிய தீப்பொறிகள் எங்கே விழுந்தன? சரவணப் பொய்கையில்

21 சரவணப் பொய்கையில் தோன்றிய ஆறு குழந்தைகளையும் இணைத்தவர் யார்? உமாதேவியார்

22 ஓங்காரரூபன் என எந்தக் கடவுளைக் குறிப்பிடுகிறோம்? பிள்ளையார்

23    கோயில் கோபுரத்தை எப்படி அழைப்பார்கள்? தூலலிங்கம்

24 தில்லை என்ற திருத்தலத்தில் மறுபெயர் என்ன? சிதம்பரம்

25 தோப்புக்கரணம் செய்து வழிபடப்படும் கடவுள் யார்? பிள்ளையார்

26 அப்பர் சமண சமயத்தில் இருந்த போது எப்படி அழைக்கப்பட்டார்? தருமசேனர்

27 முருகனுக்கு உரிய முக்கிய விரதங்கள் எவை? கந்தசஷ்டி, கார்த்திகை

28 திருக்கார்த்திகை விசேடமாகக் கொண்டாடப்படும் திருத்தலம் எது? திருவண்ணாமலை

29 சுந்தரமூர்த்தி நாயனாரின் கலியாணத்தை தடுத்தவர் யார்? சிவபெருமான்

30    திருவிழாக்களில் முக்கிய நாட்கள் எவை? கொடியேற்றம், தேர், தீர்த்தம்

31 சிவபெருமான் யாருக்காக பிட்டுக்கு மண் சுமந்தார்? செம்மனச்செல்வி

32 சம்பந்தருக்கு உமாதேவியார் ஞானப்பால் ஊட்டிய தலம் எது? சீர்காழி

33 சம்பந்தர் பாண்டியனுக்கு வெப்பு நோய் நீங்கப் பாடிய பதிகம் யாது? திருநீற்றுப் பதிகம்

34 மாசி மகத்தின் சிறப்பு என்ன? அம்மனுக்குரிய விசேட நாள் மாசி மகம். அன்று அம்மனுக்கு தீர்த்தம் நடைபெறும்.

35 கண்ணப்பா என்ற பெயருக்கு காரணம் என்ன? தனது கண்களை சிவனுக்கு தானமாகக் கொடுத்ததால்

36 பொல்லாப் பிள்ளையாருக்கு மோதகம் செய்து படைத்த சிறுவன் யார்? நம்பியாண்டார் நம்பி

37 தேவாரங்களைத் திருமுறையாகத் தொகுத்தவர் யார்? நம்பியாண்டார் நம்பி

38 வேல் மாமரத்தை இரண்டாகப் பிளந்த போது தோன்றிய பறவைகள் எவை? சேவல், மயில்

39 சம்பந்தர் பாடிய தேவாரங்கள் எத்தனை திருமுறைகளில் உள்ளன? மூன்று

40 ஏன் இறைவனைப் பல பெயர்கள் கொண்டு அழைக்கின்றார்கள்? உருவம், நாமம் இல்லாதபடியால்

41    திருமுறைகள் எத்தனை? பன்னிரண்டு

42    தேவாரங்கள் எத்தனை திருமுறைகளில் உள்ளன? ஏழு

43    பிரதோச விரதக்குரிய கடவுள் யார்? சிவபெருமான்

44    பிள்ளையாருக்குச் சாத்தப்படும் புல் எது? அறுகம்புல்

45    விநாயக விரதங்களுள் மிகவும் சிறப்புடையது எது? விநாயக சதுர்த்தி விரதம்


__________________________________________________________________



திருமுறை ஒப்புவித்தல் போட்டி

கீழ்ப்பிரிவு

மூன்று திருமுறைகள் தரப்பட்டுள்ளன. இவற்றில் இரண்டு திருமுறைகள் கேட்கப்படும். 

தேவாரம் (1)

அங்கமும் வேதமும் ஓதும் நாவர்

அந்தணர் நாளும் அடிபரவ

மங்குல் மதிதவழ் மாடவீதி

மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்

செங்கயலார்புனற் செல்வமல்கு

சீர்கொள்செங்காட்டங் குடியதனுள்

கங்குல் விளங்கெரி யேந்தியாடுங்

கணபதி யீச்சரங் காமுறவே


தேவாரம் (2)

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தரமாவது நீறு துதிக்கப் படுபது நீறு

தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு

செந்துவர் மாயுமை பங்கன்திரு ஆலவாயன் திருநீறே.


திருவாசகம் (3)

பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்

பேசுவதுந் திருவாயால் மறைபோலுங் காணேடீ

பூசுவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண்டென்னை

ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ


மத்தியபிரிவு

நான்கு திருமுறைகள் தரப்பட்டுள்ளன. இவற்றில் மூன்று திருமுறைகள் கேட்கப்படும்.

1. தேவாரம்

மண்ணில்நல் லவண்ணம் வாழலாம் வைகலும்

எண்ணில்நல் லகதிக்கு யாதுமோர் குறைவிலை

கண்ணில்நல் லஃதுறும் கழுமல வளர்நகப்

பெண்ணில்நல் லாளொடும் பெருந்தகை இருந்ததே


2. தேவாரம்

நிரைகழல் அரவஞ் சிலம்பொலி யலம்பு

நிமலர்நீ றணிதிரு மேனி

வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த 

வடிவினர் கொடியணி விடையர்

கரைகெழு சந்துங் காரகிற் பிளவும்

அளப்பருங் கனமணி வரன்றிக்

குரைகடல் ஓதம் நித்திலங் கொழிக்குங்

கோணமா மலையமர்ந் தாரே


3. திருவாசகம்

நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச்

சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம்

குறியொன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தையெனக்கு

அறியும்வண்ணம் அருளியவா றார்பெறுவார் அச்சோவே.


4. திருப்புகழ்

துள்ளுமத வேள்கைக் கணையாலே

தொல்லை நெடுநீலக்  கடலாலே

மெள்ளவரு சோலைக் குயிலாலே

மெய்யுருகு மானைத் தழுவாயே

தெள்ளுதமிழ் பாடத் தெளிவோனே

செய்யகும் ரேசத் திறலோனே

வள்ளல்தொழு ஞானக் கழலோனே

வள்ளிமண வாளப் பெருமானே



மேற்பிரிவு

ஐந்து திருமுறைகள் தரப்பட்டுள்ளன. இவற்றில் நான்கு திருமுறைகள் கேட்கப்படும் 

1 தேவாரம்

மாதர்ப் பிறைக் கண்ணி யானை

மலையான் மகளொடும் பாடிப்

போதொடு நீர் சுமந்தேத்திப்

புகுவாரவர் பின் புகுவேன்

யாதுஞ் சுவடு படாமல்

ஐயாறடை கின்ற போது

காதன் மடப்பிடி யோடுங்

களிறு வருவன கண்டேன்

கண்டேனவர் திருப்பாதங்

கண்டறி யாதன கண்டேன்


2 திருவாசகம்

பால் நினைந் தூட்டும் தாயினுஞ் சாலப்

பரிந்து நீ பாவியே னுடைய

ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி

உலப்பிலா ஆனந்த மாய

தேனினைச் சொரிந்து புறம் புறந் திரிந்த

செல்வமே சிவபெருமானே

யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்

எங்கெழுந் தருளுவ தினியே


3 திருவிசைப்பா

நீறணி பவளக் குன்றமே நின்ற

நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே

வேறணி புவன போகமே யோக

வெள்ளமே மேருவில் வீரா

ஆறணி சடைஎம் அற்புதக் கூத்தா

அம்பொன் செய் அம்பலத்தரசே

ஏறணி கொடிஎம் ஈசனே உன்னைத்

தொண்டனேன் இசையுமா றிசைய


4 திருப்பல்லாண்டு

பாலுக்குப்பாலகன் வேண்டி அழுதிடப்

பாற்கடல் ஈந்தபிரான்

மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்

மன்னிய தில்லை தன்னுள்

ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்

பலமே இடமாகப்

பாலித்து நட்டம் பயிலவல்லானுக்கே

பல்லாண்டு கூறுதுமே


5 திருப்புகழ்

பக்தியால் யானுனைப் பலகாலும்

பற்றியே மாதிருப் புகழ்பாடி

முத்தனா மாறெனைப் பெருவாழ்வின்

முத்தியே சேர்வதற்கருள் வாயே

உத்தமா தானசற் குணர்நேயா

ஒப்பிலா மாமணிக் கிரிவாசா

வித்தகா ஞான சத் திநி பாதா

வெற்றி வேலாயுதப் பெருமாளே.




அதிமேற்பிரிவு

ஆறு திருமுறைகள் தரப்பட்டுள்ளன. இவற்றில் ஐந்து திருமுறைகள் கேட்கப்படும் 


1 தேவாரம்

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து

மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே

மன்னே மாமணியே மழ பாடியுள் மாணிக்கமே

அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே


2 திருவாசகம்

அன்றே என்றன் ஆவியும் 

உடலும் உடைமை எல்லாமும்

குன்றே அனையாய் என்னைஆட்

கொண்ட போதே கொண்டிலையோ

இன்றோர் இடையூறெனக்குண்டோ

எண்தோள் முக்கண் எம்மானே

நன்றே செய்வாய் பிழை செய்வாய்

நானோ இதற்கு நாயகமே


3 திருவிசைப்பா

கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்

கரையிலாக் கருணைமா கடலை

மற்றவர் அறியா மாணிக்க மலையை

மதிப்பவர் மனமணி விளக்கைச்

செற்றவர் புரங்கள் செற்ற எம் சிவனைத்

திருவீழி மிழலை வீற்றிருந்த

கொற்றவன் றன்னைக் கண்டுகண்டுள்ளம்

குளிர என் கண் குளிர்ந் தனவே.



4   திருப்பல்லாண்டு

மன்னுக தில்லை வளர்கநம் பக்தர்கள்

வஞ்சகர் போயகலப்

பொன்னின் செய் மண்டபத்துள்ளே புகுந்து

புவனியெல் லாம் விளங்க

அன்னநடைமடவாள் உமைகோன் அடி

மோமுக் கருள் புரிந்து

பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப்

பல்லாண்டு கூறுதுமே.


5 புராணம்

தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன்

திருநடங் கும்பிடப் பெற்று

மண்ணிலே வந்த பிறவியே யெனக்கு

வாலிதாம் இன்பமாம் என்று

கண்ணிலா னந்த அருவிநீர் சொரியக்

கைம்மல ருச்சி மேற்குவித்து

பண்ணிலால் நீடி அறிவரும் பதிகம்

பாடினார் பரவினார் பணிந்தார்


6 திருப்புகழ்

துள்ளுமத வேள்கைக் கணையாலே

தொல்லை நெடு நீலக் கடலாலே

மெள்ளவரு சோலைக் குயிலாலே

மெய்யுருகு மானைத் தழுவாயே

தெள்ளுதமிழ் பாடத் தெளிவோனே

செய்யகும ரேசத் திறலோனே

வள்ளல்தொழு ஞானக் கழலோனே

வள்ளிமண வாளப் பெருமானே




No comments: