மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைக்கான அழைப்பு -கடைசி நாள் 15.07.2013.





சிட்னியில் 2013 செப்டம்பர் 6, 7, மற்றும் 8 தேதிகளில் நடைபெற உள்ள உலகத் தமிழ் இலக்கிய மாநாட்டுக்கு மாணவர்களிடமிருந்து பின்வரும் தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளை வரவேற்கின்றன.
மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைக்கான தலைப்புகள்
·         முத்தமிழின் சிறப்புகள்
·         தமிழின் முச்சங்கங்கள்
·         “எட்டுத்தொகை நூல்கள்
·         “பத்துப்பாட்டு நூல்கள்
·         “பதினெண் கீழ்க்கணக்கு” நூல்கள்
·         மகாகவி பாரதி - தோரதி மெக்கெல்லர் (Dorothea Mackeller):  இலக்கியப் படைப்புகள் ஒரு ஒப்பீடு
·         மகாகவி பாரதி - ஷெல்லி (Shelley)  - இலக்கியப் படைப்புகள் ஒரு ஒப்பீடு
·         திருக்குறளின் முப்பால் விளக்கம் - மற்ற மொழிகளில் குறள் போன்ற இலக்கியப் படைப்புகள்

கட்டுரை விதி முறைகள்
·         கட்டுரைகள் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளுக்குள் ஒன்றாக அடங்கவேண்டும்.
·         கட்டுரைகள் 3 பக்கங்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும்
·         10 அளவு ஒருங்குறியீடு எழுத்துரு உபயோகித்தல் வரவேற்கத்தக்கது.
·         கட்டுரைகளின் தரம் நடுவர் குழு பரிந்துரைக்கு ஏற்புடையதாக இருக்கவேண்டும்
·         நடுவர்களின் பார்வையில் கட்டுரைகளின் கருத்துக்களில் சில பகுதிகள் அகற்றப்படவேண்டும் எனத்தோன்றினால், அவற்றை அகற்றவேண்டியது படைப்பாளியின் பொறுப்பாகும்.
·         நடுவர்களின் முடிவே கட்டுரை பிரசுரமாவதைத் தீர்மானிக்கும்.


·         கட்டுரைகளின் கருத்துக்கள்பாடைப்பாளியின் பொறுப்பாகும்.
·         கட்டுரைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 15.07.2013.

 அனுப்பப்பட வேண்டிய முகவரி
 utimsydney@gmail.com  என்ற மின்னஞ்சல் மூலமாக
அனுப்பலாம்.


No comments: