நாமுணர்வோம் !


image1.JPG



                               நாமுணர்வோம் !
  
     ( எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா )  

         முள்ளிருக்கும் செடியினிலே
         முகிழ்த்துவரும் ரோஜாவே 
         முள்பற்றி எண்ணாமல்
         முறுவலுடன் மலர்ந்துநிற்கும்
         நல்லவர்கள் வாழ்வினிலே
          நஞ்சுநிறை முள்வரினும் 
          மெல்லவரும் விலக்கிநின்று
           நல்லவற்றை நமக்களிப்பர்  !


             செடிவளரும் கொடிவளரும்
             சிலவெமக்கு மருந்தாகும்
             அதனூடே வளர்ந்துவரும்
             ஆகாத செடியுமுண்டு
              அதுபோல வாழ்வினிலே 
               ஆலகாலம் வரும்வேளை 
              அதைப்போக்க வருபவரே
              அகிலத்தின் இரட்சகர்கள் !

              வருவார்கள் போவார்கள்
              வரவெமக்குத் தெரியாது 
               வரமளித்து விட்டுவிட்டு
               மெளனமாய் போய்விடுவார்
                தெருவோரம் நின்றாலும்
                திரும்பியே நாம்பாரோம்
                அவர்சென்ற பின்னால்த்தான்
                 அவர்பெருமை நாமுணர்வோம் !