இலங்கையில் பாரதி அங்கம் -08 

முருகபூபதி - அவுஸ்திரேலியா

நண்பனுக்கு மற்றும் ஒரு பெயர் மித்திரன். மனிதவாழ்வில் நட்புக்கு மகத்தான அர்த்தம் உள்ளது. நட்பு வலிமையானது. நண்பர்களிடையே உருவாகும் பிரிவு வலிதரக்கூடியது. அத்தகைய பிரிவுகள் வரும்பொழுது பாதிப்புக்குள்ளாகும் நண்பர்கள் விதியையே நொந்துகொள்வார்கள்.
அதனால் விதியும் வலியது. பாரதி விதி குறித்தும்நட்புதொடர்பாகவும் கவிதைகள்  எழுதியிருப்பவர். பாரதியின் நண்பர்கள் சாமியார்களாகவும் எழுத்தாளர்களாகவும்சாதாரண கூ
கடந்த அங்கத்தில்  வீரகேசரியில் பாரதியின் தாக்கம் பற்றிய குறிப்புகளையும்  சலசலப்பு ஏற்படுத்திய விவாதங்கள் பற்றியும் எழுதியிருந்தோம். 
வீரகேசரி 1965 காலப்பகுதியில் ஒரு மாலைத்தினசரியை வெளியிடத்தொடங்கியது.  இந்தியாவில் பாரதியார் சுதேச மித்திரன் பத்திரிகையில்  பணியாற்றியவர். சுதேசிகள் மத்தியில் வாழும நண்பர்களை  இணைக்கும் விதமாக அன்று அவர் அதில் தமது வலிமையான எழுத்துக்களை  வெளியிட்டார்.
சுதேசமித்திரன் இலங்காமித்திரன்இஸ்லாமிய மித்திரன்முஸ்லிம் மித்திரன்மலாயா மித்திரன்உத்தம மித்திரன்முதலான சில பத்திரிகைகள் இலங்கைஇந்தியாமலேசியா முதலான நாடுகளில் ஏற்கனவே வெளியாகியிருக்கின்றன. மலேசிய நண்பன் என்றும் ஒரு பத்திரிகை மலேசியாவில் வெளியாகிறது.
தமிழ் வாசகர்களின் நண்பனாக  இலங்கையில் மித்திரன் வெளியானது.
வீரகேசரி  தேர்ந்த  வாசகர்களுக்காக வெளிவந்தாலும்வாசகபரப்பில் மற்றும்  ஒரு  சாராருக்காக   மாலைத்தினசரியாக  கொழும்பிலிருந்து வெளியான மித்திரன்வேலை முடிந்து வீடு திரும்பும் வாசகர்களின் தேவையை  பூர்த்திசெய்தது.


அதுவெளிவரும்  தினத்தன்று காலையில் அல்லது முற்பகல்  நடந்த செய்திகளும்  அதில் இடம்பெற்றுவிடுவதனால்  தமிழ் வாசகர்கள்  சுடச்சுட  தகவல்களை  தெரிந்துகொண்டனர்.
மித்திரன் வெளிவரத்தொடங்கிய காலப்பகுதியில் வீரகேசரி ஆசிரியராக பணியாற்றிய கே.வி. எஸ். வாஸ்சில மர்மத்துப்பறியும் தொடர்கதைகளை  அதில்  எழுதிவந்தார். ரஜனி என்ற புனைபெயரில் அவர் தினமும் எழுதும் அக்கதைகளின் ஒவ்வொரு அத்தியாயத்தையும்    திகிலூட்டும் முடிச்சுகளுடன் நிறைவுசெய்துமறுநாளும் வாசகர்கள் அதனைத்தொடர்ந்து படிக்கத்தக்கதாக  ஆர்வத்தை தூண்டிவந்தார்.
பின்னாட்களில்  ஜி.நேசன்கே.நித்தியானந்தன்சோ. ராமேஸ்வரன்கே. விஜயன்ஜோர்ஜ் சந்திரசேகரன்ஆர். டி. ராஜாவீ.ஆர். வரதராஜாமொழிவாணன் திமிலை மகாலிங்கம்  உட்பட பலரும் அத்தகைய தொடர்களை எழுதினார்கள்.
இது இவ்விதமிருக்க,  மித்திரன் வாரமலர் சற்று வித்தியாசமாக ஆண் பெண் வாசகர்களை கவரும் வகையில்  தொடர்களையும் சிறுகதைகளையும்  சினிமாச்செய்திகளையும்  வரவாக்கியது.
பாரதி நூற்றாண்டு காலப்பகுதிக்கு முன்பிருந்தே வீரகேசரி ஆசிரிய பீடத்தில் பணியாற்றிவரும் மூத்த பத்திரிகையாளர் திருமதி அன்னலட்சுமி  இராஜதுரையாழ்நங்கை என்ற பெயரிலும் சிறுகதைநாவல்கள் எழுதியிருப்பவர். அதனால்  இலக்கியவாதியாகவும் அறியப்பட்டவர்.
இன்றும்  வீரகேசரி  குழுமத்தின்  மற்றும் ஒரு வெளியீடான கலைக்கேசரியின் பொறுப்பாசிரியராக பணியாற்றுகிறார்.
விழிச்சுடர்  (குறுநாவல்) உள்ளத்தின் கதவுகள் (நாவல்) நெருப்பு வெளிச்சம் (சிறுகதைத்தொகுதி) இருபக்கங்கள் (கவிதை) நினைவுப்பெருவெளி (வீரகேசரி அனுபவங்கள்)  முதலான நூல்களை எமக்கு வழங்கியிருக்கும் அன்னலட்சுமி இராஜதுரைபாரதி நூற்றாண்டு  காலகட்டத்தில் இலங்கை வானொலியிலும் தலைநகரில் நடந்த பல நிகழ்ச்சிகளிலும் பாரதி தொடர்பாக உரையாற்றியிருப்பவர்.
பாரதியும் பெண்விடுதலையும்  அவரது உரைகளின் தொனிப்பொருளாக  உள்ளடக்கமாகியிருந்தன. ஜனரஞ்சகமான அம்சங்களையே பெரும்பாலும்  தாங்கிவரும் மித்திரன் வாரமலர்பாரதியின் நூற்றாண்டை முன்னிட்டு சம்பிரதாயபூர்வமான சிறுகதைப்போட்டியையும் நடத்தியது.
போட்டிக்கென, "சாதிகள் இல்லையடி பாப்பா", " உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்",  நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை" முதலான பாரதியின் வரிகளே சிறுகதைப்போட்டித்தலைப்புகளாகின.
இதில் அறிமுக எழுத்தாளர்களும் மாணவர்களும் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
இளம்தலைமுறையினருக்கு  ஊக்கமளிக்கும் பொருட்டும் அவர்களையும் எதிர்காலத்தில் படைப்பிலக்கியத்துறையில் ஈடுபடவைக்கவேண்டும்  என்ற எண்ணத்திலும் நடத்தப்பட்ட இச்சிறுகதைப்போட்டியைத்தவிர  வேறு குறிப்பிடும்படியாக பாரதி தொடர்பான ஆக்கங்கள் வரவில்லை.  ஆனால்,  மித்திரனை  ஈன்ற தாயான  வீரகேசரியில் அதன்  தொடக்ககாலத்திலிருந்து இற்றைவரையில்  பாரதிக்கான  பரந்த களத்தினை  அதில் நாம் பார்த்துவருகின்றோம்.
தினகரனும் பாரதியும்
ஏரிக்கரை பத்திரிகை Lake House) என வர்ணிக்கப்படும் தினகரன் 1932 ஆம் ஆண்டு முதல் நாளிதழாக வெளியாகிறது. 23-05-1948 ஆம் திகதியன்று தனது முதலாவது தினகரன் வாரமஞ்சரியை தமிழ் வாசகர்களுக்கு  அறிமுகப்படுத்தியது.
ஆங்கிலசிங்கள ஏடுகளையும் சஞ்சிகைகளையும் வெளியிட்டுவரும் ஏரிக்கரையிலிருந்து இயங்கும் Lake House என்ற  பெரிய நிறுவனத்தின் ஒரே ஒரு தமிழ்த்தினசரி  தினகரன்.
அது வெளிவரத்தொடங்கிய காலகட்டத்தில் மற்றும் ஒரு இந்திய ஊடகம் என்ற மாயைதான்  இலங்கை வாசகர்களிடம் உருவாகியிருந்தது.   தினகரனை இலங்கையின் தமிழ்த் தேசியப்பத்திரிகையாக்கிய  பெருமை பேராசிரியர் க. கைலாசபதியையே சாரும்.
இவருக்கு முன்னர் கே.க.ப. நாதன் தினகரன் ஆசிரியராக பணியாற்றினார். பின்னாளில் இவர் கொழும்பில் தினபதிசிந்தாமணி,  வெளியிட்ட  சுயாதீன பத்திரிகை சமாஜத்தின் தந்தி மாலைத்தினசரியின்  ஆசிரியரானார்.
பாரதி ஆய்வாளராகவும் அறியப்படும் பேராசிரியர் க. கைலாசபதியின்  தினகரன் ஆசிரியப்பணி குறித்தும் இருவேறு கருத்தியல்கள்  இலக்கிய உலகில் நிலவியதை அறிவோம்.
பல்கலைக்கழகத்திலிருந்து  தமிழ்ச்சிறப்பு  பட்டதாரியாக  அவர் முதல் வகுப்பில்  சித்தியெய்திய பின்னர்அன்று உயர்வாக மதிக்கப்பட்ட அரச நிர்வாகப்பதவியொன்றினைத் தேடியிருக்கவோ  அல்லது  உயர் கல்வி  ஆராய்ச்சித்துறையில் இந்நாட்டிலோ   வெளிநாடு சென்றோமேலுக்கு வந்திருக்கவோ கூடும்.  ஆனால்கைலாஸ் அவ்வாறு செய்யாது பத்திரிகையுட் புகுந்தார். அதனை வருவாய்க்கு வழியாக அன்றிஅதன் வாய்ப்புகளை  உகந்தவாறு  பயன்படுத்துவதில்  கைலாஸ் குறியாயிருந்தமை  தெளிவாகும்.
கைலாஸ்  பத்திரிகைத்துறையுட்  புகுந்த காலம் மேலைத்தேய நாகரிகமும்  ஆங்கில மொழியும் தம் ஆதிக்கத்தை இழக்கத்தொடங்கிய  காலம். பொருளாதார அரசியல் துறைகளில் மட்டுமின்றிப்பண்பாட்டுத்  துறையிலும் அந்நிய ஆதிக்கம் தளரத்தொடங்கிய  காலம். சிங்களம் மட்டும்  அரசகரும மொழியாக்கப்பட்டதன்  விளைவாகத் தமிழ்ப்பேசும் மக்கள்இந்நாட்டில்,  தங்கள் இருப்புவரலாறுவருங்காலம்தனித்துவம் முதலானவை குறித்து உத்வேகத்துடன் உணர சிந்திக்கத்தலைப்பட்ட  காலம். தமிழ்மொழி  உபயோகச்சட்டம் நிறைவேற்றப்பட்டமைசுதேச மொழி  முக்கியத்துவம் பெறத்தொடங்கியமைபுதிதாக உருவான கலாசார அமைச்சு தமிழ்க்கலை  வளர்ச்சிக்கு  ஊக்கமளித்தமைஅதுவரை ஆங்கிலப்பத்திரிகைகளே  பெற்றிருந்த  அரசியல் செல்வாக்கையும்  முக்கியத்துவத்தையும்  பொதுமக்களைப் பரவலாகச்  சென்றடைந்த  சிங்களதமிழ்ப்பத்திரிகைகளும் பெறத்தக்க  வாய்ப்புத்தோன்றியமைவெளிநாட்டுச்  செலாவணிக்கட்டுப்பாடு   காரணமாக  இந்திய எழுத்தாளர்களுக்குப்  பணம் அனுப்பும் வசதி கட்டுப்படுத்தப்பட்டமை --- இவை யாவும் கவனத்திற் கொள்ளப்படவேண்டியவை"  என்று விரிவாக கைலாசபதியின் தினகரன் பிரவேசம் பற்றி பேராசிரியர் சி. தில்லைநாதன் பதிவுசெய்துள்ளார்நூல்: பன்முக ஆய்வில் கைலாசபதி)
இந்திய  எழுத்தாளர்களுக்கு  பிரசுரம்  களமும்  கொடுத்து  அதற்காக பணமும்  தினகரன்  வழங்கியது  தவறல்ல.  எழுத்தாளர்களுக்கு சன்மானம்  வழங்கத்தக்க  மூலதனமும்  வருவாயும் நிரம்பப்பெற்றதுதான்  லேக்ஹவுஸ் நிறுவனம்.
ஆனால்அக்காலப்பகுதியில் ஈழத்து இலக்கிய கர்த்தாக்கள் புறக்கணிக்கப்பட்டதுதான்  விமர்சனத்திற்குரியது.
தினகரனில்  அவ்வேளையில்  கதைகள் படைத்தவர்கள் சென்னை  மவுண்ட் ரோட்டையும்  மெரீனா பீச்சையும்  பகைப்புலமாகக்கொண்டு எழுதினார்கள்.  இதனால்  அன்றைய  ஈழத்து  தமிழ்த்தேசிய படைப்பிலக்கியம்  தேக்கம் கண்டது.
அதனை உடைத்தெறிந்தவர்தான்  கைலாசபதி. இவர் ஈழத்து எழுத்தாளர்களுக்கு  தினகரனில்  களம்  தந்து ஊக்கமளித்தார். பத்திரிகையின்  செல்நெறியை  வகுத்தார்.  பாரதி  தொடர்பாக ஏராளமான  ஆய்வுகள்  மேற்கொண்டவர்.  இரு  மகாகவிகள்பாரதி இயல்  ஆய்வுகள்  முதலான  இவரது  நூல்கள்  குறித்து  இந்தத்தொடரில்  பிறிதொரு  அங்கத்தில்  விரிவாகப்பார்க்கமுடியும்.
                                       கைலாசபதிக்குப்பின்னர்,  தினகரன்  ஆசிரியராக  பொறுப்பேற்ற    இ. சிவகுருநாதன்,யாழ்.பல்கலைக்கழகத்தில்  முதுகலைமாணிப்பட்டம்    பெறுவதற்காக  சமர்பித்த    ஆய்வில், " தேசிய இலக்கியம்   உருப்பெற்று வளர்ச்சிகாண  கைலாசபதி களம் அமைத்துக்கொடுத்தார் " என்று குறிப்பிட்டிருப்பதையும் பேராசிரியர்  தில்லைநாதன்  ஊடாக  நாம் அறிகின்றோம்.
கைலாசபதி,  தான் மாத்திரம்  வளராமல்,  தன்னைச்சூழ இருந்தவர்களையும்  வளர்த்தெடுத்தார். அவர்கள் பத்திரிகையாளர்களாயினும்  படைப்பாளிகளாயினும்  கலைஞர்கள்ஓவியர்கள்கார்டுனிஸ்ட்டுகளாயினும்  சிற்றிதழ்காரர்களாயினும் அவர்கள்  அனைவரும்  தத்தமது  துறைகளில்  ஆரோக்கியமாக வளர்வதற்கு   உற்றதுணையாக  விளங்கியவர்.
பாரதியாரைச்சுற்றியும்  எப்பொழுதும்  நண்பர்கள்  இருப்பார்கள். அவர்கள்  இருக்குமிடத்தில்  வாதங்களும் இடம்பெறும்.  யார்  யார் என்ன  எழுதியிருக்கிறார்கள்  என்பது  பற்றிய  கலந்துரையாடல்கள் நிகழும். மொழிபெயர்ப்புகள்  தொடர்பாக  பேசப்படும்.
கைலாசபதியும்  பாரதியைப்போன்றே  தமக்கு   நெருக்கமான இலக்கிய  நண்பர்களிடம்  கருத்துப்பரிமாறி  பணிகளையும் ஒப்படைப்பார்.  யார்  யார்  தினகரனில்  என்ன  என்ன  எழுதவேண்டும் எத்தனை  நாளில்  அவற்றை ஆசிரிய  பீடத்தில்  கொடுக்கவேண்டும் என்று  அந்த  மின்னஞ்சல்  யுகமில்லாத  காலத்திலேயே  கிட்டத்தட்ட பத்திரிகை  ஆசிரியர்  பாரதியைப்போன்றே  இயங்கியவர் அவர்.
தமிழ்  இலக்கிய உலகில் தாக்கத்தை ஏற்படுத்திய பாரதி  சிந்தித்த கிருத யுகம் தொடர்பாக எழுதியிருக்கும்  மு. தளையசிங்கத்திற்கு கைலாசபதியின்  மார்க்ஸீய  சிந்தனைகளில்  அபிப்பிராய பேதங்கள் இருந்தன.  கைலாசபதியை  விமர்சித்தவர்களில்  மு.தளையசிங்கம் முக்கியமானவர்.
இவர்  கண்டியிலிருந்து  வெளியான செய்தி எனும் பத்திரிகையில் எழுதிய  ஏழாண்டு  இலக்கிய வளர்ச்சி  என்ற  தொடரில் பின்வருமாறு  பதிவுசெய்திருக்கிறார்:
பத்திரிகைக்கொம்பனியின்  பங்குதாரர்களின்  உறவின் காரணமாய்  சந்தர்ப்பவசத்தால்தினகரன் ஆசிரியரான கைலாசபதிவர்த்தகத்தையே  பிரதான  நோக்கமாகக்கொண்டு இலக்கியத்தைப்பற்றி  அக்கறைப்படாது,  அதுவரையும்  வெறும் புதினத்தாளாக  இயங்கிவந்த  ஒரு  முதலாளி வர்க்கப்பத்திரிகைக்குள்  இலக்கியத்தைப்பற்றிய ஓரளவுக்குத்தரமான  பொதுவுடமைக்கருத்துக்களை  மட்டும் புகுத்தவில்லை.  கூடவே அதே வண்டியில் கா. சிவத்தம்பி,  ஏ.ஜே. கனகரத்னா போன்ற இலக்கியம் பற்றிய தரமான கருத்துக்களையுடைய  வேறு  பலரின்  செல்வாக்கையும் பக்கபலத்தையும்  சேர்த்துக்கொண்டு  வந்தார்."
கைலாசபதியை  தமது  எழுத்துக்களில்  விமர்சித்துவந்த மு.தளையசிங்கமும்  கூட  தினகரனை  இலக்கியத்தரமாக வெளியிடுவதற்கு  அவர் மேற்கொண்ட  ஆக்கபூர்வமான முயற்சிகளை விதந்து பாராட்டியிருக்கிறார்.
இவர்கள்  இருவரதும்  சிந்தனைகளை பாரதியின் வெளிச்சத்திலிருந்தே  இலக்கிய  உலகம்   அவதானித்திருக்கிறது.
கைலாசுக்குப்பின்னர்,                     தினகரன் ஆசிரியப்பொறுப்பை  ஏற்ற  இ. சிவகுருநாதன்  மாத்திரமே  இங்கு நீண்ட  காலம் பணியாற்றிய  மூத்த பத்திரிகையாளராவார்.
இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவராக 1981 இல் தெரிவான  சிவகுருநாதன்அதன் பின்னர் 1983 - 84 காலப்பகுதியிலும்  அந்தப்பதவியை வகித்தவர்.
ஊடகத்துறையிலிருந்தவாறே  சட்டமும் பயின்றுகொழும்பு சட்டக்கல்லூரியில் பகுதிநேர விரிவுரையாளராகவுமிருந்த சிவகுருநாதன்மற்றும் ஒரு பத்திரிகையாளர் எஸ்.திருச்செல்வம் தொடங்கிய  கொழும்பு கலை இலக்கிய நண்பர்கள் என்ற அமைப்பிலும்  காலப்போக்கில் கொழும்பு தமிழ்ச்சங்கத்திலும் தலைவராக  இருந்தவர்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற காலத்தில் அங்கு வெளியான  இளங்கதிர் என்னும் இதழின் ஆசிரியராகவும் இயங்கியிருக்கும் இவர்அங்கு இந்து தர்மம் என்னும் மற்றும் ஒரு இதழ் வெளிவருவதற்கும் முக்கிய பங்காற்றியவர்.
ஈழத்து  இலக்கிய  உலகையும்  இங்குள்ள படைப்பாளிகளையும்  நன்கு தெரிந்துவைத்திருந்த  சிவகுருநாதன்தினகரனில் பல சந்தர்ப்பங்களில் பாரதி தொடர்பான ஆசிரியத்தலையங்கங்களும் எழுதியுள்ளார்.
தினகரன்  வாரமஞ்சரியும் காலத்துக்குக்காலம் பாரதி ஆய்வுகளை வெளியிட்டும் மறுபிரசுரம் செய்தும் வந்திருக்கிறது. ருஷ்ய எழுத்தாளர் ஏ. ஷெலிஷேவ்கைலாசபதிசெ. கணேசலிங்கன்இளங்கீரன்சி. மௌனகுருசொக்கன்க. நவசோதிமு. கனகராசன்மு. சடாட்சரன்வேல் அமுதன்அராலி வெ.சு. நடராசாஅன்புமணிக. கந்தசாமிஅந்தனிஜீவாபொன்னி ஆனந்தன்சகுந்தலா நல்லையாஏ. இக்பால்தமிழக எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் ஆகியோரின் பாரதி பற்றிய ஆக்கங்களும் ஶ்ரீதேவகாந்தன்ஷெய்கு இஸ்ஸதீன்மு. துரைசாமிபாண்டியூரான்வளவை வளவன்சி. ஆறுமுகம்முதலான பலரின் கவிதைகளும் பாரதி நூற்றாண்டு காலத்தில் தினகரன் வாரமஞ்சரியை  அலங்கரித்திருக்கின்றன.
தினகரன் ஆசிரியர்  சிவகுருநாதன்  காலம் அறிந்து அதற்குப்பொருத்தமாகவும்  பல விடயங்களைச்செய்திருப்பவர்.
பாரதி நூற்றாண்டு காலத்தில்தான் பேராசிரியர் கைலாசபதி கொழும்பு அரசினர் மருத்துவமனையில் 1982 டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி காலமானார்.
அவர் அதற்கு சில தினங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் மறைவதற்கு முதல்நாள் டிசம்பர் 5 ஆம்  திகதி  ஞாயிற்றுக்கிழமை  தினகரன் வாரமஞ்சரியில் கைலாசபதி எழுதியிருந்த 'பாரதியின் புரட்சிஎன்ற கட்டுரையை சிவகுருநாதன்  வெளிவரச்செய்திருந்தார்.
 கைலாசபதி  மருத்துவமனைக்கட்டிலிலிருந்து  அதனையும் பார்த்துவிட்டுத்தான்  நிரந்தரமாக  கண்களை  மூடிக்கொண்டார் என்ற  துயரமான  தகவலையும்  இங்கு  பதிவுசெய்கின்றோம்.
(தொடரும்)