உரிமை மனு

.


தவண்டு தவண்டு முடியாமல் -
மீண்டும்
தொட்டில் தேடும்
மழலையின் அவஸ்த்தை 
அடைந்து கொள்ள முடியாமல் 
அடங்கிப் போகும் 
என் கனவுகளுக்குள்
º

குயில் கூடு கட்டுமென்று 
காத்திருப்பார் எவரும் 
கூடு கட்டும் காகத்தை 
கண்டுகொள்ள விரும்பவில்லை
º

தாகமுள்ள ஜீவனுக்கு
தண்ணீர் தர நாட்டமில்லை 
தாகமூட்டி சிலருக்கு ஏனோ
பன்னீர் பிச்சை போடுகிறார்?
º

போட்டிகள் இல்லாமலே 
தோற்றுப் போகிறேன்
போர்வைகள் இல்லாமலே
போர்த்தப் படுகிறேன் 
º

உரிமை கேட்டு என் நாவும் 
உதட்டோரம் எட்டிப் பார்க்கும்...

'வாடகை வெளிச்சத்தில் 
வெள்ளி நிலா கைக்கொட்டும்..
நகைத்துத் தூற்றும் 
மெய்யழகன் கதிரவனை... 

கதிரவனும் காத்திருப்பன் 
என்றும் போல 
விடியலோடு விடிவு வரும் 
நம்பிக்கையில் '

றிணை  உதாரணங்களோடு 
அன்பான அடக்கு முறைகள் - 
உதட்டோடு என் நாவை  
கட்டிப் போடும் 

-ஜாவிட் ரயிஸ்

No comments: