குழலினிது யாழினிது என்பர் ஆனால்
மழலைகள் நிறைந்திடும் போது அங்கு
மகிழ்வெனும் ஊற்று பொங்கியே நிற்கும் !
கோடிகள்கொட்டி திருமணம் செய்வர் ஆனால்
குழந்தைகள் இன்றில் கொடுமையோ கொடுமை
கூழது குடித்துமே வாழ்வார் வீட்டில்
குதூகலம் கொடுத்திட மழலைகள் குவிவார் !
ஓடிநாம் களைத்துமே வந்தால் அங்கு
ஓடியே வந்துமே மடிதனில் அமர்ந்து
நாவினால் மழலைகள் உதிர்ப்பார் அது
நாளுமே நமக்கின்பம் நல்கியே நிற்கும் !
கோபங்கள் வந்திடும் வேளை வீட்டில்
குழந்தைகள் அங்கு வந்துமே நின்றால்
கோபங்கள் ஓடியே போகும் அவர்
குறும்புகள் மழலைகள் கொடுக்குமே இன்பம் !
வறுமையிலே கிடந்தாலும் வாடிநாம் நின்றாலும்
தலைதடவும் பிஞ்சுவிரல் தளர்வெல்லாம் போக்கிவிடும்
புவியினிலே வாழ்கின்றார் பொலிவுடனே வாழுதற்கு
அவர்வீட்டில் மழலைமொழி அருந்துணையாய் அமையுமன்றோ !
No comments:
Post a Comment