பெருமை பொருளில் இல்லை – அன்பு ஜெயா, பா வகை: குறளடி வஞ்சிப் பா.


அருச்செயல்களே ஆற்றிடாமல்

பெருமைதனைநீ பெற்றாளுமோர்

பெருவிருப்பினால் பெருங்காலமும்

தெருவெங்குமே தேடினாலும்

ஒருபயனுமே உனக்கில்லையே!

பெருமையுடனே பெரியோர்களும்

ஒருமித்துதான் உரைத்தார்களே

 

உணர்வீர்,

 

இன்றுநம் உலகில் யாவரும் தேடிடும்

அன்பெனும் உள்ளமே ஆளும்,

என்றும் எங்கும் ஏற்பீர் இதையே!

---------------------

No comments: