“தற்போது மனிதன் பேசும் மொழியே நிரலாக்க மொழியும் ஆகும். உலகில்
உள்ள அனைவரும் இப்போது ஒரு நிரலாளர். இது AI
ஆல் ஏற்பட்ட ஒரு அதியசம்" – ஜென்சன் ஹூவாங்
அன்புச் சகோதரன் ப.முகுந்தன் படைப்பாக வெளிவந்திருக்கும் எல்லோருக்கும்
AI என்ற நூலைப்
படித்துப் பிரமித்துப் போனேன்.
மாணவருக்கான ஒரு வழிகாட்டல் நூலாக இதைக் கோடிட்டுக்
காட்டியிருந்தாலும், AI சார்ந்த
கற்கை நெறிகளைக் கற்ற என் போன்றவருக்கும் கூட மேலதிகமான செய்திகளையும், வரலாற்றுப் பின்புலன்களையும் தாங்கிய
அற்புதமானதோர் தகவல் களஞ்சியமாக விளங்குகிறது.
ஒரு பாட நூலுக்குரிய நேர்த்தியான கட்டமைப்பு, செயன்முறை விளக்கங்கள், பயிற்சி போன்ற அம்சங்களைக் கச்சிதமாக
ஒவ்வொரு அலகிலும் கொடுத்தவாறே பரந்து விரிகின்றது இந்தத் தொழில் நுட்பம் குறித்த
கையேடு.
ஒரு அறிவியல் நூலில் அ ந்நியமில்லாமல் தெளிந்த நீரோடை போலப்
பயணிக்கும் எழுத்து, மிகச் சிறந்த வழிகாட்டியாகக் கருத்தூன்றி
நிற்க உதவுகின்றது.
பக்கங்கள் தோறும் கொடுக்கப்பட்ட AI செயலிகளை நாமும் பரிசோதித்து அந்தந்தக் களங்களை
அனுபவ ரீதியாகப் பயிலக் கூடிய வகையில் வழிகாட்டியாக அமைந்துள்ளது.
நமது இதிகாச புராணங்கள் மட்டுமன்றி மற்றைய மேலைத்தேய
நாகரீகங்களில் பழங்காலத்தில் சொல்லப்பட்ட கற்பனைக்கும் எட்டாத விடயங்களை இப்போது
இந்த எவ்வளவு தூரம் கண் முன் கொடுக்கின்றது என்பதை ஒப்பீட்டு உதாரங்ணங்கள் வழி
பகிர்கின்றார்.
AI குறித்துச்
சமூகத்தில் பேசப்படும் நிலைப்பாடுகளைக் காட்டி அவற்றின் மெய்த்தன்மை குறித்துப் பேசுகின்றார்.
Artificial Intelligence (AI) எனும் செயற்கை நுண்ணறிவின் (நடைமுறை நாம் நினைத்தே பார்க்க
முடியாத அளவுக்குக் குறுகியகாலத்துக்குள் பரந்து விரிந்து விட்டது.
மேலை
நாடுகளில் இதற்கென ஒரு தனிப் பிரிவே உருவாக்கப்பட்டு அதில் நுட்பமும், ஆற்றலும் மிக்கோர்
உள்வாங்கப்படுகின்றனர்.
நுகர்வோர்
சமூகத்தில் நம் அன்றாட வாழ்வில் மறைமுகமாகச் செயற்பட்ட தொழில் நுட்பத்தை இன்று நம்
உள்ளங் கைக்குள் வைத்து நாமே பல செயன்முறைகளைச் செய்யக் கூடிய அளவுக்கு
ஏகலைவர்களாகி விட்டோம்.