சிட்னி அருள்மிகு துர்க்கை அம்மன் திருக்கோயில் வருடாந்த மாசிமக பெருந்திருவிழா 2025

 

வருடாந்த மாசி மக தேர்த் திருவிழா 12/03/2025












முப்பால் நூலினை முழுமையாய் படிப்போம் !

 












    


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா



எப்பொழுதும் எல்லோர்க்கும் இப்புவியில் உதவுதற்கு
முப்பாலை உவந்தளித்தார் முழுமையுடன் வள்ளுவனார் 
முப்பொருளைப் பக்குவமாய் முப்பாலும் செப்பியதே
அச்செயலை அகமெண்ணி ஆனந்தம் அடைந்திடுவோம்

வரலாற்றில் பலநூல்கள் வந்துவந்து போகிறதே 
வரலாறாய் ஒருநூலே வாழ்ந்தபடி இருக்கிறதே 
வரலாறாய் வாழ்வதற்கு வரமதற்கு வாய்த்ததனால்
வள்ளுவவரின் முப்பாலாய் மலர்ந்துமே இருக்கிறதே 

இலக்கியங்கள் இலக்கணங்கள் எவ்வளவோ இருக்கிறது
அதைப்படித்த பலபேர்கள் தலைக்கனத்தில் இருக்கின்றார் 
தலைக்கனத்தைத் தகர்ப்பதற்கு தகுந்தவொரு மருந்தாக
முப்பாலைக் கொடுத்தாரே முறையாக வள்ளுவனார் 

பக்தி இயக்கத்தின் முத்தாய் ஒளிர்கிறார் காரைக்கால் அம்மையார் !






         











 

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா

  

  உலகிலே பல மொழிகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு மொழியும் முக்கியமான மொழிகள்தாம். ஒவ் வொரு மொழிக்கும் ஒவ்வொரு விதமான சிறப்பு இருக்கிறது. ஆனால் எந்த ஒரு மொழிக்குமே இல்லாத சிறப்பினை உலகில் எங்கள் தமிழ் மொழி பெற்றிருக்கிறது. அந்தச் சிறப்புத்தான் " பக்தி இலக்கியம் " என் னும் சிறப்பாகும். பக்தி என்பது - இலக்கியமாக எழுந்திருப்பது உலகமொழிகளில் தமிழ் மொழியில் மட் டுமே என்பதை எல்லா மொழியியல் அறிஞர்களுமே ஏற்றுக் கொள்ளுகிறார்கள். அந்த அளவுக்கு தனித்து வமாய் , வளர்ந்து யாவரும் வியக்கும் வண்ணம் பக்தி இலக்கியம் தமிழில் அமைந்திருக்கிறது என்பது தமிழருக்கெல்லாம் மிகவும் பெருமை அல்லவா !

  பக்தி இலக்கிய வரலாற்றை எடுத்து நோக்கினால் தமிழகத்திற்கு தனித்த தொரு இடமுண்டு எனலாம். சைவ நாயன்மார்களும்வைணவ ஆழ்வார்களும்  உவந்தளித்த பக்தி இலக்கியத்தால் எங்கள் தமிழ் மொழி " பக்தியின் மொழி " என்னும் சிறப்பினைப் பெற்றது என்பது மறுக்கமுடியாத உண்மை எனலாம். இவர்களின் அருட்பாடல்களால் " பக்தி இலக்கியம் " தமிழின் தமிழ்ச் சமூகத்தின் பெருஞ் சொத்தாக ஆகி விட்டது எனலாம்.

வாசிப்பு அனுபவம் : முருகபூபதியின் யாதுமாகி ( இரண்டாம் பாகம் ) அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு அடையாளம் காண்பிக்கப்பட்ட பெண் படைப்பாளிகளும் பத்திரிகையாளர்களும் ! ! நடேசன்


அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும்   நண்பர் முருகபூபதி,  இங்கு  ஒரு காலத்தில்  நான்  வெளியிட்ட  உதயம்  மாதப் பத்திரிகையின் வெளியீட்டிலும் விநியோகத்திலும்  இணைந்திருந்தவர்.  

இங்குள்ள கடைகளுக்கு   உதயம் பத்திரிகையை முருகபூபதி விநியோகித்த போது இவரைக்கண்ட ஒருவர்,  

  “ அவுஸ்திரேலியாவுக்கு  வந்த பின்பும் நீர்  இந்த வேலையை விடவில்லையா ? “ என்று கேட்டதாக எனக்கு முருகபூபதி சொன்னார். அவரது பெயரை அறிந்தபோது, அவர் உணவுகளை வீட்டில்   தயாரித்து கடைகளுக்குக் கொடுக்கும் தொழில் செய்பவர் என  அறிந்தேன்.

வயிற்றுக்கு உணவு கொடுப்பவர்,   அறிவை வளர்க்கப் பத்திரிகையை  விநியோகிக்கும் ஒருவரைப் பார்த்து  இப்படிக் கேட்டிருக்கிறாரே!  என ஆச்சரியப்பட்டேன்.

  “ பத்திரிகையை விட  எனக்கு  வேறு என்ன தெரியும்? “ என


முருகபூபதி மேலும்  என்னிடம் கூறினார் .

முருகபூபதி தற்போது  அனைத்துலக பெண்கள் தினத்தில் ஒரு பத்திரிகையாளராக  இந்த பெண் ஆளுமைகளை   யாதுமாகி இரண்டாம் பாகத்தில்   நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.

பல வருடங்களுக்கு முன்னர் நடந்த   அந்தச்சம்பவத்தை நினைவுபடுத்தியவாறு  இந்நூலில் நான் வாசித்துப்  பெற்ற அனுபவத்தை இங்கு சமர்ப்பிக்கின்றேன்.

 இந்த  நூலில்  லண்டனில் வதியும் பூங்கோதை என்ற கலா ஶ்ரீரஞ்சனை,   தான் சிறுவயதில் சந்தித்த  புவனேஸ்வரி ஆசிரியையின் மகளாகவும், பின்பு “நிறமில்லாத மனிதர்கள் ” என்ற சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியராக ஒரு படைப்பாளியாகவும்  நமக்கு அடையாளம் காட்டியுள்ளார்.

ஒரு பத்திரிகையாளரின்  வேலை அதுவே.  சமூகத்தில் முக்கியமானவர்களை எமக்கு  கைகாட்டி விடுவதே அவர்களின் பணி.   அத்துடன் அவர்களது கடமை முடிந்து விடுகிறது. மேற்கொண்டு  என்ன செய்வது ?  என்பது  சமூகத்தைப் பொறுத்தது.

கலா ஶ்ரீரஞ்சனது இலக்கிய விடயங்கள்பற்றி  நான் வேறு ஒரு இடத்தில் பேசவேண்டும்.

இங்கே நான் கலாவின் தனித்தன்மையைப்பற்றிப்  பேசவேண்டும். இதுவே இங்கு முக்கியமானது .  பலரது மனங்களில் அது பதியவேண்டும் என்பதும் எனது விருப்பம்.

நமது சமூகம் மற்றவர்களது துன்பத்தை உள்வாங்குவது குறைவு . ஏதோ ஒரு விதத்தில் தனது அதிர்ஸ்டத்தை,  பலத்தை  அல்லது தனது உழைப்பை தனக்குத்தானே மெச்சிக்கொள்ளும்.  மிகவும் சிலரே தாம்  நடந்த பாதையில் , காலில் ஒரு கல்லுத் தடக்கி இரத்தம் வரும்போதும் அந்த இடத்தில் நின்று,  அந்தக் கல்லை எடுத்து பாதையிலிருந்து ஓரத்தில் போடுவதுடன், தனக்கு நடந்ததை எடுத்துச் சொல்லி மற்றவர்களுக்கு   விழிப்புணர்வைத் தூண்டுவர்.    இந்த  உன்னதமான விடயத்தை செய்பவர்கள்  சமூகத்தில்  முக்கியமானவர்கள்

என் தேடலில் அம்மா!


-சங்கர சுப்பிரமணியன்.





அம்மா
எந்தன் அம்மா
அம்மா
எந்தன் அம்மா…..

அம்மா
எந்தன் அம்மா
அம்மா
எந்தன் அம்மா…..

உந்தன்பிள்ளை
நானும் இங்கே
வந்தபின்னும்
காணோம் உன்னன

உந்தன் பிள்ளை
நானும் இங்கே
வந்த பின்னும்
காணோம் உன்னன

தொலைநோக்குப் பார்வை வேண்டும் – அன்பு ஜெயா (கழி நெடிலடி ஆசிரியப் பன்னிரு சீர் மண்டிலம்.)

 

பட்டமும் பறக்க நல்லதோர் திட்டம்

      பயன்தான் அளித்திடுமே!

    பட்டறி வளித்தப் பாடமும் அதுவே,

      பகுத்தே அறிந்திடுவீர்!

திட்டமும் தீட்டும் முன்னரே நமக்கோர்

      தெளிந்த பார்வைவேண்டும்!

    தீரவே ஆய்ந்துத் தொடங்கியத் திட்டம்

      திறமாய் நிறைவுறுமே!

திட்டமும் ஐந்தைந் தாண்டென அன்று

      திறமாய் நடந்ததுதான்;

    திரும்பியே பார்த்தால் அதுவுமே கரைந்தும்,

      தேய்ந்தும் போனதன்றோ?

சட்டமும் இயற்றும் ஆள்பவர் இன்றும்

      சற்றே சிந்தித்தால்

    சார்பிலாத் தன்மை நிறைந்தவோர் சிறப்பாம்

      சட்டம் பிறந்திடுமே!

 

பணம் படைத்தவன் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 எம் ஜி ஆருடன் பி. பானுமதி, பத்மினி, சரோஜாதேவி,ஜெயலலிதா


என்று பலர் ஜோடியாக நடித்துள்ளார்கள். ஆனால் சௌகார் ஜானகியும் ஒரு படத்தில் ஜோடியாக நடித்துள்ளார் .அந்தப் படம் தான் பணம் படைத்தவன். ஆர் ஆர் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படதத்துக்கு இப்போது வயது அறுபது.

 
சௌகார் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமாகி குணச்சித்திர நடிகையாக புகழ் பெற்றவர் சௌகார் ஜானகி. தமிழில் சிவாஜி, ஜெமினி ஆகியோருடன் இணைந்து நடித்த இவருக்கு எம் ஜி ஆருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு 1962ல் மாடப்புறா படத்தின் மூலம் கிட்டியது. ஆனால் அது நிறைவேறவில்லை. படப்பிடிப்புத் தளத்துக்கு எம் ஜி ஆர் வரும் போது சௌகார் ஜானகி கால் மீது கால் போட்டு அமர்ந்திருந்ததை எம் ஜி ஆர் ரசிக்க வில்லை. விளைவு படத்தில் இருந்து அவர் தூக்கப்பட்டார். இப்போது மூன்றாண்டுகள் கழித்து மீண்டும் எம் ஜி ஆருடன் இணையும் வாய்ப்பு கிட்டியது. இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்தவர் இயக்குனர் ராமண்ணா. புதிய பறவை படத்தில் நவநாகரீகப்

பெண்ணாக சௌகார் நடித்ததை பார்த்து விட்டு தனது படத்திலும் ஏறக்குறைய அதே மாதிரியான பாத்திரத்தில் நடிக்க அவரை தெரிவு செய்தார். எம் ஜி ஆரும் இம்முறை அதற்கு ஆட்சேபணை தெரிவிக்கவில்லை.

ஆனால் பதிலுக்கு எம் ஜி ஆரும் ஒரு நிபந்தனையை விதித்தார். அதுவரை காலமும் எம் ஜி ஆர் நடிப்பில் ராமண்ணா இயக்கிய எல்லா படங்களுக்கும் கண்ணதாசன் தான் பாடல்களை இயற்றி அப்பாடல்கள் ஹிட் அடித்தன. இப்போது அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இந்தப் படத்துக்கு எல்லாப் பாடல்களையும் வாலிதான் எழுத வேண்டும் என்று சொல்லி விட்டார் எம் ஜி ஆர். வேறு வழியின்றி ராமண்ணாவும் உடன்பட்டார்.

அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம்?

 Published By: Digital Desk 2

15 Mar, 2025 | 06:13 PM
image

வீரகத்தி தனபாலசிங்கம் 

புலம்பெயர் இலங்கை தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் வாழும் மூத்த பத்திரிகையாளரும் சிறந்த அரசியல் ஆய்வாளர்களில் ஒருவருமான டி.பி.எஸ். ஜெயராஜ்  அண்மைக் காலத்தில்  எழுதிய கட்டுரைகள் சிலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பு ஒரு நூலாக வெளிவந்திருக்கிறது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க கடந்த வருடம் செப்டெம்பரில் இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அவரது ஆரம்பகால வாழ்க்கை மற்றும் அரசியல் எழுச்சி குறித்து ஆறு கட்டுரைகளையும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி குறித்து மூன்று கட்டுரைகளையும் ஜெயராஜ் எழுதியிருந்தார். அவற்றின் இந்த மொழிபெயர்ப்பு நூலுக்கு  ' அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம் ; இலங்கையின் முதலாவது இடதுசாரி ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க ' என்று  தலைப்பு. 

இத்தகையதொரு நூல் வெளிவரப்போகிறது என்று முன்கூட்டியே அறிந்துகொண்ட ஜெயராஜின் எழுத்துக்களை பற்றி நன்கு தெரிந்த  அரசியல் ஆர்வலர்களும் ஊடகவியலாளர்களும் அவர் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் குறித்து  மார்க்சியப் பார்வையில்  வர்க்க அடிப்படையிலான  ஆய்வு ஒன்றைச் செய்து  எழுதியிருக்கிறாரா என்று பதிப்பாளர்களிடம் வினவினார்கள். கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (9/3) மாலை  நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்விலும் அந்த கேள்வி எழுந்தது. குறிப்பாக, அங்கு உரையாற்றிய சமூக, அரசியல் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரான சுவஸ்திகா அருலிங்கம்  அந்த விடயம் குறித்து ஒரு வகையான விமர்சன அடிப்படையில்  கருத்து வெளியிட்டார்.

நடராஜர் - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

 


ஆர நவமணி மாலைகள் ஆட

ஆடும் அரவம் படம் விரித்தாட

சீரணி கொன்றை மலர்த்தொடை ஆட

சிதம்பரத்தோர் ஆட

பேரணி வேதியர் தில்லை மூவாயிரம் பேர்களும்

பூசித்துக்கொண்டு நின்றாட

காரணி காளி எதிர்த்து நின்றாட

னகசபை தனிலே…

 

என நர்த்தனம் புரியும் நடராஜரை தில்லையம்பதியிலே தரிசிக்க, பலகாலம் ஆசை கொண்டேன். சிறுமியாக ஆடல் கலையை கற்று, அந்த ஆடல்வல்லானையே நித்தம் ஆடல் தெய்வமாவணங்கிப் பயின்ற என் மனதிலே சிதம்பரம் போய் நடராஜரை தரிசிக்க வேண்டும் என்ற ஆவா வளர்ந்தது. மேலும் ஆழமாக ஆடலைக் கற்று ஆய்வுகள் மேற்கொண்ட காலத்திலே, தில்லை சிதம்பரக் கோயில் கோபுர வாசலிலே, நாட்டிய சாஸ்திர நூலிலே வர்ணிக்கப்பட்ட நடன நிலைகள் சிலைகளாக வடிக்கப்பட்டுள்ளதையும் அறிந்தமையால் மேலும் ஆவல் பெருகியது.றுதியாக அந்த நாளும் வந்து. 

இலங்கைச் செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: இம்முறை 155,976 பேர் புதிய வாக்காளர்கள் - தேர்தல்கள் ஆணைக்குழு

தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிராக போராட்டம்

உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு யாழில் விழிப்புணர்வு நடைபவனி!

அநுராதபுரம் வைத்தியசாலையின் பெண் வைத்தியர் மீது பாலியல் துஷ்பிரயோகம் ; பிரதான சந்தேக நபரின் சகோதரி உட்பட இருவர் கைது

அநுராதபுரம் போதனா வைத்தியசாலை பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவுக்கு வந்தது 



உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: இம்முறை 155,976 பேர் புதிய வாக்காளர்கள் - தேர்தல்கள் ஆணைக்குழு

Published By: Vishnu

14 Mar, 2025 | 03:31 AM
image

(இராஜதுரை ஹஷான்)

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு இம்முறை 1 கோடியே 72 இலட்சத்து  96,330 பேர் வாக்களிக்க தகுதிப்பெற்றுள்ளனர். இவர்களில் 155,976 பேர் முதல் தடவையாக வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உலகச் செய்திகள்

போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொள்கிறோம் ஆனால்.. ’ - புட்டின் நிபந்தனைகள்

உக்ரைன் 30 நாள் யுத்தநிறுத்தத்திற்கு தயார் - பாதுகாப்பு உதவிகளை வழங்குவதை மீண்டும் ஆரம்பித்தது அமெரிக்கா

பனாமா கால்வாயை முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது எப்படி?அமெரிக்க இராணுவத்திடம் ஆலோசனை கேட்டார் டிரம்ப்

பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடேர்டே கைது

கனடாவின் அடுத்த பிரதமராக மார்க் கார்னே தெரிவு




போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொள்கிறோம் ஆனால்.. ’ - புட்டின் நிபந்தனைகள்

14 Mar, 2025 | 01:24 PM
image

“30 நாட்கள் போர் நிறுத்தம் என்ற அமெரிக்காவின் பரிந்துரையை நாங்கள் ஏற்கிறோம். ஆனால் அதற்கு முன்னர் சில பிரச்சினைகளைக் களைய வேண்டும்.” என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்  தெரிவித்துள்ளார்.

தரிசனம் வழங்கும் "இளைய நிலா பொழிகிறதே" 10வது ஆண்டு மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி 22/03/2025