உலகச் செய்திகள்

காசாவில் உணவுவிநியோகம் இடம்பெறும் பகுதிக்கு அருகில் இஸ்ரேலிய டாங்கிகள் தாக்குதல் - 26 பேர் பலி 150க்கும் அதிகமானவர்கள் காயம்

ஒபரேஷன் சிந்தூர்: இழப்பை சந்தித்த பின் விமானப் படை உத்தியை மாற்றியதாக இந்திய முப்படை தலைமை தளபதி தகவல்

60 நாள் யுத்தநிறுத்த திட்டத்தை முன்வைத்தது அமெரிக்கா- இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது - ஹமாஸ் ஆராய்கின்றது.

 பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கவேண்டும் - பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகளிற்கு அழுத்தம் கொடுக்கின்றது பிரான்ஸ்

தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம்- நடிகர் கமல்ஹாசனின் பேச்சுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு 


காசாவில் உணவுவிநியோகம் இடம்பெறும் பகுதிக்கு அருகில் இஸ்ரேலிய டாங்கிகள் தாக்குதல் - 26 பேர் பலி 150க்கும் அதிகமானவர்கள் காயம்

01 Jun, 2025 | 12:50 PM

காசாவின் ரஃபாவில் உணவுவிநியோக நிலையத்திற்கு அருகில் இஸ்ரேலிய டாங்கிகள் மேற்கொண்ட தாக்குதலில் 26 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 150க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்கா ஆதரவுடனான மனிதாபிமான உதவி பொருட்கள் விநியோகிக்கப்படும் நிலையத்திற்கு அருகில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் உணவுகளை பெறுவதற்காக காத்திருந்தவேளை அந்த பகுதியை நோக்கிவந்த இஸ்ரேலிய டாங்கிகள் தாக்குதலை மேற்கொண்டன என உள்ளுர் ஊடகவியலாளர் ஒருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

 இறந்தவர்களினது உடல்களையும் காயமடைந்தவர்களையும் கழுதைவண்டிகளில் செஞ்சிலுவை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதை காண்பிக்கும் படங்கள் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

பெருமளவு பாலஸ்தீனியர்கள் அல்அலாம் சுற்றுவட்டத்தில் காணப்பட்டவேளை இஸ்ரேலிய டாங்கிகள் தாக்குதலில் ஈடுபட்டன என கரீப் என்ற உள்ளுர் ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்டவர்களும் காயமடைந்தவர்களும் நீண்டநேரம் நிலத்தில் விழுந்த நிலையில் காணப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அந்த பகுதிக்கு மீட்புபணியாளர்கள் செல்ல முடியாத நிலை காணப்பட்டது என தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக மக்கள் கழுதை வண்டிகளை பயன்படுத்தி காயமடைந்தவர்கள் உயிரிழந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

26 கொல்லப்பட்டுள்ளனர் 150க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என செஞ்சிலுவை மருத்துவமனை தெரிவித்துள்ளது.   நன்றி வீரகேசரி 


ஒபரேஷன் சிந்தூர்: இழப்பை சந்தித்த பின் விமானப் படை உத்தியை மாற்றியதாக இந்திய முப்படை தலைமை தளபதி தகவல்

01 Jun, 2025 | 10:36 AM

சிங்கப்பூர்: ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது ஆரம்பத்தில் இந்திய விமானப்படை இழப்புகளை சந்தித்ததாகவும் பிறகு தனது உத்திகளை மாற்றிக்கொண்டதாகவும் பாதுகாப்புப் படைத் தலைவர் அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் நடந்த பாதுகாப்பு தொடர்பான ஷாங்க்ரி-லா மன்றத்தில் பங்கேற்ற பாதுகாப்புப் படைத் தலைவர் அனில் சவுகான் பின்னர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இதைத் தெரிவித்துள்ளார்.

அதன் விவரம்: இந்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தானுடனான மோதலின் முதல் நாளில் இந்தியா வான்வழி இழப்புகளை சந்தித்தது. பிறகு இந்தியா தனது தந்திரோபாயங்களை மாற்றிக் கொண்டது. அதன்பிறகு மூன்று நாட்கள் நடந்த மோதலில் ஒரு தீர்க்கமான நன்மையை இந்தியா பெற்றது.

மே 7 8 மற்றும் 10-ம் தேதிகளில் பாகிஸ்தானுக்குள் உள்ள விமானத் தளங்களைத் தாக்கினோம். அவர்களின் அனைத்து வான் பாதுகாப்புகளையும் ஊடுருவி துல்லியமான தாக்குதல்களை நடத்தினோம்.

பெரும்பாலான தாக்குதல்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட புள்ளியில் இருந்து ஒரு மீட்டர் வரை மட்டுமே இருந்தது.

மோதலின் போது அணு ஆயுதங்கள் இருப்பதாக கருதப்பட்ட எந்த இடத்திலும் எந்த ஆபத்தும் இல்லை. அணு ஆயுதங்கள் வரம்பைத் தாண்டுவதற்கு முன்பு நிறைய இடம் இருப்பதாக நான் நினைக்கிறேன் அதற்கு முன்பு நிறைய சமிக்ஞைகள் இருந்தன அப்படி எதுவும் நடக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். வழக்கமான நடவடிக்கைகளுக்கு நிறைய இடம் உருவாக்கப்பட்டுள்ளதுஇ இது புதிய விதிமுறையாக இருக்கும்.

மோதல் நடக்கும்போது மிகவும் பகுத்தறிவுள்ளவர்கள் சீருடையில் இருப்பவர்கள் என்பது எனது தனிப்பட்ட கருத்து. இந்த நடவடிக்கையின் போது இரு தரப்பினரும் தங்கள் எண்ணங்களிலும் செயல்களிலும் நிறைய பகுத்தறிவைக் காட்டியதைக் கண்டேன்.

சீனாவுடன் பாகிஸ்தான் நெருக்கமான நட்பு கொண்டிருந்தாலும் மோதலின் போது பெய்ஜிங்கிலிருந்து எந்த உண்மையான உதவியும் அதற்கு கிடைக்கவில்லை. ஏப்ரல் 22-ம் தேதி முதல் நமது வடக்கு எல்லைகளில் எந்த அசாதாரண நடவடிக்கையையும் நாங்கள் காணவில்லை. பொதுவாக விஷயங்கள் சரியாக இருந்தன.

போர் நிறுத்தப்பட்டிருந்தாலும் பாகிஸ்தானில் இருந்து ஏதேனும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தால் துல்லியமாகவும் தீர்க்கமாகவும் பதிலளிப்போம். இவ்வாறு பாதுகாப்புப் படைத் தலைவர் அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 










60 நாள் யுத்தநிறுத்த திட்டத்தை முன்வைத்தது அமெரிக்கா- இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது - ஹமாஸ் ஆராய்கின்றது.

Published By: Rajeeban

30 May, 2025 | 01:29 PM

காசாவில் அறுபது நாள் யுத்த நிறுத்தம் பணயக்கைதிகள் விடுதலை உட்பட பல யோசனைகளை உள்ளடக்கிய 60 நாள் யுத்தநிறுத்த திட்டமொன்றை அமெரிக்கா முன்வைத்துள்ளது.

அமெரிக்க வெள்ளை மாளிகை இதனை தெரிவித்துள்ளதுடன் இஸ்ரேல் இதற்கு ஆதரவளித்துள்ளதாகவும் ஹமாஸ் ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

எனினும் அமெரிக்காவின் யுத்த நிறுத்த திட்டத்தில் இடம்பெற்றுள்ள விடயங்கள் குறித்து உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதேவேளை அமெரிக்காவின் யுத்தநிறுத்த திட்டத்தில் 60 நாள் யுத்த


நிறுத்தம், ஹமாசிடம் எஞ்சியுள்ள பணயக்கைதிகளை உயிருடனோ அல்லது பிணமாகவோ ஒப்படைப்பது, இஸ்ரேலிய சிறையில் உள்ள பாலஸ்தீனியர்கள் விடுதலை போன்ற யோசனைகள் காணப்படுவதாக ரொய்ட்டர் செய்தி சேவை தெரிவித்துள்ளது.

ஹமாஸ் யுத்த நிறுத்த திட்டத்தை ஏற்றுக்கொண்டதும் காசாவிற்குள் ஐநா மற்றும் மனிதாபிமான அமைப்புகள் ஊடாக மனிதாபிமான உதவிகள் அனுப்பப்படவேண்டும் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

நிரந்தர யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்ததும் ஹமாசின் பிடியில் உள்ள ஏனைய பணயக்கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள்,யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்ததும இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தும் என அமெரிக்கா தனது யுத்தநிறுத்த  திட்டத்தில் தெரிவித்துள்ளது.   நன்றி வீரகேசரி 






பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கவேண்டும் - பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகளிற்கு அழுத்தம் கொடுக்கின்றது பிரான்ஸ் 

Published By: Rajeeban

28 May, 2025 | 02:33 PM

பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீன தேசத்தினை அங்கீகரிக்கவேண்டும் என பிரான்ஸ் அழுத்தம் கொடுத்துவருவதாக பொலிட்டிகோ செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

அடுத்தமாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மாநாட்டில்  பாலஸ்தீன தேசத்தை பிரிட்டன் நெதர்லாந்து பெல்ஜியம் உட்பட ஐரோப்பிய நாடுகள் அங்கீகரிக்கவேண்டும் என்ற அழுத்தத்தை பிரான்ஸ் கொடுத்துவருகின்றது..

பல ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்க


செய்வதன் மூலம் அதேவேளை சில மத்திய கிழக்கு நாடுகள் இஸ்ரேலை அங்கீகரிக்க செய்வதன் மூலம் ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டினை இஸ்ரேல் பாலஸ்தீன பேச்சுவார்த்தைகளிற்கான ஆரம்பமாக பயன்படுத்தலாம் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கருதுகின்றார்.

இரு அரசுகள்  தீர்வு முன்னர் எப்போதையும் விட அவசியமானதுஇஎனினும் யுத்தம்இ .இடம்பெயர்வுஇதீவிரதன்மை மிகுந்த இஸ்ரேலிய குடியேற்றவாசிகளின் வன்முறை போன்றவற்றால் அது முன்னர் எப்போதையும் விட அதிக குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது என பெயர் குறிப்பிட விரும்பாத பிரான்ஸ் இராஜதந்திரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.


எனினும் இஸ்ரேலின் காசாமீதான குண்டுவீச்சுக்கள் காரணமாகவும்இஇஸ்ரேலின் மூன்று மாத கால தடைகள் காரணமாக உணவிற்கும் மருந்திற்கும் நீருக்கும் காசாவில் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றதாலும் சவுதி அரேபியாவில் இடம்பெறவுள்ள அந்த மாநாட்டின் மூலம் ஏற்படக்கூடிய சாதகமான விளைவுகள் குறித்து பிரான்ஸ் தனது நம்பிக்கைகளை குறைத்துள்ளது.

அராபிய தேசங்கள் இஸ்ரேலிற்கு எதிராக தடைகளை விதிப்பது குறித்தே ஆர்வமாக உள்ளன பாலஸ்தீன தேசம் குறித்து ஆர்வம் கொண்டிருக்கவில்லை என ஐரோப்பிய இராஜதந்திரியொருவர் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன தேசத்திற்கான அடித்தளத்தினை ஆதரிப்பதற்காக


பிரிட்டன் சகாக்களுடனும் ஏனைய நாடுகளுடன் இணைந்து எதனையும் செய்ய தயார் என பிரிட்டிஸ் பிரதமரின் பேச்சாளர் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

பாலஸ்தீன தேசத்தை அங்கீகரித்த முதல் ஜி7 நாடுகளாக பிரான்சும் இங்கிலாந்தும் மாறலாம்.

பாலஸ்தீன தேசம் என்பது பாலஸ்தீனியர்களின் தசாப்தகால கோரிக்கை.

இதேவேளை பிரான்ஸ் இராஜதந்திரிகளின் முயற்சிகளை இஸ்ரேல் தொடர்ந்தும் கடுமையாக விமர்சித்து வந்துள்ளது.பிரான்சின் நடவடிக்கை ஹமாசினை சட்டபூர்வமான அமைப்பாக மாற்றுகின்றதுஇ2023 பயங்கரவாத தாக்குதலிற்காக அந்த அமைப்பிற்கு வெகுமதி வழங்குகின்றது என இஸ்ரேல் தெரிவித்து வருகின்றது.

பாலஸ்தீன தேசத்தை பிரிட்டனும் பிரான்சும் அங்கீகரித்தால் இஸ்ரேல் இதனையே தெரிவிக்கப்போகின்றது.


கடந்த ஆண்டு ஸ்பெயின் அயர்லாந்து மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரித்த நிலையில் 140க்கும் மேற்பட்ட ஐ.நா. உறுப்பு நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ளன. பல வட ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் இஸ்ரேலை அங்கீகரிக்கவில்லை

மக்ரோனின் முன்னிலை

பல ஆண்டுகளாக பாரிஸ் பாலஸ்தீன பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கும் நிலையில் இருப்பதாக பிரெஞ்சு அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

ஆனால் சமாதான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்பட்டால் மாத்திரமே பிரான்ஸ் பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கவேண்டும் என எச்சரிக்கiயும் விடுத்துவந்துள்ளனர்.

ஏப்ரல் மாதத்தில் "அங்கீகாரத்தை நோக்கி நகர" வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன அரசு இரண்டும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கூட்டு செயல்பாட்டில் பங்கேற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் மக்ரோன் கூறினார்.

ஆனால் அது ஒருபோதும் நடக்கவில்லை.

இப்போது காசா பகுதியில் மனிதாபிமான நெருக்கடி ஆழமடைந்து


வருவதால் பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிப்பது என்பது அமைதியை நோக்கி அடியெடுத்து வைப்பதற்குப் பதிலாக ஒரு இஸ்ரேலிற்கு எதிரான ஒரு  கண்டனமாகத் தோன்றும் என்று சிரியாவிற்கான முன்னாள் தூதரும் இன்ஸ்டிட்யூட் மோன்டைக்னேவின் உறுப்பினருமான மைக்கேல் டக்லோஸ் விளக்கினார்

இது இஸ்ரேலுக்கு எதிரான கண்டனமாக இருக்கும்" என்று அவர் கூறினார்.

இருப்பினும் பாலஸ்தீனிய பிரதேசங்களை ஐரோப்பிய நாடுகள் அங்கீகரிப்பது "இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்குவதற்கான நிபந்தனைகளை வரையறுக்க அரபு நாடுகளை ஊக்குவிக்கும்" என்று டுக்லோஸ் கூறினார். ஜூன் 17 முதல் 20 வரை நியூயார்க்கில் நடைபெற உள்ள மாநாட்டில் மத்திய கிழக்கு நாடுகள் இன்னும் இயல்பாக்கத்தை நோக்கி "நடவடிக்கைகளை" எடுக்கும் என்று பிரான்ஸ் நம்புவதாக மேலே மேற்கோள் காட்டப்பட்ட பிரெஞ்சு தூதர் கூறினார்.

இறுதியில் காசா பகுதியில் வன்முறையை நிறுத்துவதும் ஓரளவிற்கு மேற்குக் கரையில் வன்முறையை நிறுத்துவதும் இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் மிகப்பெரிய இராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா என்ன செய்ய முடிவு செய்கிறது என்பதைப் பொறுத்தது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீதான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அணுகுமுறையில் ஒரு மாற்றத்தை ஐரோப்பிய அதிகாரிகள் கவனித்தாலும்இ வாஷிங்டன் ஒரு பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கத் தயாராக இருப்பதற்கான அறிகுறிகள் இன்னும் இல்லை.

இது இறுதியில் வெற்றுப்பட்டாசாக மாறலாம் என ஐரோப்பிய அதிகாரியொருவர் தெரிவித்தார்.   நன்றி வீரகேசரி 



தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம்- நடிகர் கமல்ஹாசனின் பேச்சுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு 

29 May, 2025 | 12:45 PM


பெங்களூரு: கன்னட மொழி குறித்த நடிகர் கமல்ஹாசனின் கருத்துக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அவர் மன்னிப்பு கேட்காவிடில் 'தக் லைஃப்' படத்துக்கு தடை விதிக்கப்படும் என அம்மாநில கலாச்சாரத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி எச்சரிக்கை விடுத்தார்.

இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நடித்துள்ள‌ தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ் குமார் பங்கேற்றார்.

விழாவில் கமல்ஹாசன் பேசுகையில், ''கன்னட நடிகர் ராஜ் குமாருடைய குடும்பம் அந்த ஊரில் (கர்நாடகாவில்) இருக்கும் என்னுடைய குடும்பம். தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம். அதனை நீங்களும் (சிவராஜ்குமார்) ஒப்புக் கொள்வீர்கள் என நம்புகிறேன்" என தெரிவித்தார்.

கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு கர்நாடகாவில் கன்னட ரக்ஷன வேதிகே, கன்னட சலுவளி உள்ளிட்ட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பெங்களூருவில் உள்ள வணிக வளாகங்களில் வைக்கப்பட்டிருந்த தக் லைஃப் படத்தின் விளம்பர பதாகைகளை கிழித்து எறிந்தனர். சமூக வலைதளங்களில் இந்த படத்தை புறக்கணிக்க வேண்டும் எனவும், கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க‌க் கூடாது எனவும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா கூறுகையில், "கமல்ஹாசன் ஒன்றும் வரலாற்றாசிரியர் இல்லை. அவர் எந்த மொழியில் இருந்து எந்த மொழி பிறந்தது என கூற முடியாது. அவரது பேச்சின் காரணமாக 6.5 கோடி கன்னடர்களின் மனம் புண்பட்டுள்ளது. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

தென்னிந்தியாவில் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தி வருவதாக கூறும் கமல்ஹாசன் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து இந்து மதத்தை அவமதித்து வருகிறார். தனது படங்கள் வாயிலாக இந்துக்களின் மனதையும் காயப்படுத்தி வருகிறார். இதனை ஒருபோதும் ஏற்க முடியாது. கன்னடர்கள் தங்களின் நிலம், மொழி, மக்கள், நீர் ஆகியவற்றை ஒருபோதும் விட்டுத்தர மாட்டார்கள் என்பதை கமல்ஹாசனுக்கு நினைவூட்டுகிறேன்" என்று கூறியுள்ளார்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறுகையில், ''கமல்ஹாசன் பாவம். அவருக்கு கன்னட மொழி குறித்த வரலாறு தெரியவில்லை'' என விமர்சித்துள்ளார். இதனிடையே கன்னட கலாச்சாரத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி, ''கன்னட மொழி குறித்த கமல்ஹாசனின் கருத்து தேவையற்றது. கன்னட மக்கள் இதுபோன்ற கருத்துக்களை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.

அவர் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால், கர்நாடகாவில் அவரின் திரைப்படத்துக்கு தடை விதிக்கப்படும். இதுதொடர்பாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கடிதம் எழுத இருக்கிறேன்'' என தெரிவித்தார்.

இது தொடர்பாக நேற்று கமல்ஹாசனிடம் கேரளாவில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அத‌ற்கு அவர், ''அரசியல்வாதிகள் மொழி குறித்து கருத்து சொல்வதற்கு தகுதியற்றவர்கள். மொழியியல் அறிஞர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள், வரலாற்று ஆசிரியர்கள் அதுபற்றி கருத்து சொல்லட்டும்.

தமிழகத்தில் எனக்கு நெருக்கடி வந்தபோது, கன்னடர்கள் தங்களது ஊருக்கு வருமாறு என்னை அழைத்தார்கள். அன்பின் காரணமாகவே நான் அவ்வாறு கூறினேன். அன்பு எப்போதும் மன்னிப்பை எதிர்ப்பார்க்காது" என்றார்.    நன்றி வீரகேசரி 










No comments: