UNSW பல்கலைக்கழகத்தின் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோர் துறையின் முன்னாள் துணைவேந்தரும், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்புப் பொறியியல் பீடத்தின் முன்னாள் தலைவருமான பேராசிரியர் இளையதம்பி அம்பிகைராஜா,
2026-ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலிய தின கௌரவப் பட்டியலில் Officer of the Order of Australia (AO) என்னும் ஆஸ்திரேலியாவின் உயரிய தேசிய விருதைப் பெற்றுள்ளார். இவர் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி, மின்சாரப் பொறியியல், தொழில்நுட்பப் புத்தாக்கம் மற்றும் ஆஸ்திரேலியாவின் இலங்கைச் சமூகத்திற்கு அவர் ஆற்றிய சிறப்பான சேவையைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. Order of Australiaவின் நான்கு முக்கிய விருது பிரிவுகளில், Officer of the Order of Australia (AO) என்பது நாட்டின் மிக உயரிய
கௌரவமாகும்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான இவர்,
UNSW பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட தலைமைப் பதவிகளை வகித்த முதல் இலங்கையை சேர்ந்த முதல் கல்வியலாளர் ஆவார். அவர் கல்வித்துறைக்கு ஆற்றிய வாழ்நாள் பணிக்காக இந்த உயரிய விருது வழங்கப்பட்டிருப்பது, அவரது அர்ப்பணிப்புக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும். இது ஆஸ்திரேலியாவில் உள்ள இலங்கைச் சமூகத்திற்கு ஒரு பெருமைமிக்க தருணமாகும்.
மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டத்தைப் பெற்ற இவர், இலங்கையில் CISIR நிறுவனத்தில் அறிவியல் ஆராய்ச்சியாளராக தனது பணியைத் தொடங்கினார். நெதர்லாந்தில் மதிப்புமிக்க புலமைப்பரிசிலை (Philips Research Scholarship) வென்ற முதல் இலங்கையர் இவராவார். அங்கு இவரின் ஆராய்ச்சிகள் கார் வானொலிகளில் நவீன தானியங்கி ட்யூனிங் (Automatic Radio Tuning) கண்டுபிடிப்பிற்கு பங்களித்தது. ஐக்கிய இராச்சியத்தின் கீல் (Keele) பல்கலைக்கழகத்தில் Signal Processing துறையில் முனைவர் (PhD) பட்டம் பெற்றார். பின்னர் அயர்லாந்தின் அத்லோன் தொழில்நுட்பக் கல்லூரியில் (Athlone Institute of Technology) விரிவுரையாளராகச் சேர்ந்து, துறைத் தலைவர் மற்றும் பொறியியல் பீடாதிபதி என மிக விரைவாக உயர்ந்தார். அயர்லாந்தில் பேராசிரியர் அம்பிகைராஜா தான் முதல் முறையாக வெளிநாட்டு கல்வியாளராகவும், தலைமைப் பொறுப்பில் பீடாதிபதியாகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


.jpeg)
.jpeg)


.jpg)
.jpeg)
.jpeg)


.png)
.png)

