அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை 28/04/2024 - 04/05/ 2025 தமிழ் 16 முரசு 03 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
அகிம்சையில்
தொடங்கி, ஆயுதபாதைக்கு தள்ளப்பட்டு, இப்போது இராஜதந்திர அரசியல் செய்கிறோம் எனச்சொல்லும்
தமிழர் தரப்பின் பேச்சாளர்களை சமகாலத்தில் பார்த்துவருகின்றோம்.
இலங்கைத்
தீவுக்கு விஜயன் வந்து ஈராயிரம் ஆண்டுகள் கடந்த
நிலையில், உள்நாட்டு சுதேச மன்னர்கள், சிற்றரசர்கள்
வசமிருந்தபோது, யாழ்ப்பாணம், கண்டி,
கோட்டே முதலான இராஜதானிகள் இருந்ததாக வரலாறு கூறுகிறது.
வர்த்தக
நோக்கத்துடன் வந்த விதேசியர்கள் நாட்டைப்பிடித்து, தங்கள் உள்நோக்கங்களை நிறைவேற்றிவிட்டு,
எங்கள் தேசத்தை அம்போ என கைவிட்டுச்சென்ற பின்னர், ஏதோவெல்லாம் நடந்து
முடிந்துவிட்டன.
அன்றையசெய்திகள்
யாவும் வரலாறாகியதுதான் மிச்சம்.
தந்தை
செல்வா, வட்டுக்கோட்டை தீர்மானத்தின் பின்னர் 1976 ஆம் ஆண்டு, தேசிய அரசுப்பேரவையில் ( அன்றைய நாடாளுமன்றம்
) பேசுகையில், தமிழ் மக்கள் இழந்த உரிமைகளை
மீட்க, நாங்கள் ஒரு காலத்தில் இணைப்பாட்சி ( சமஷ்டி ) கேட்டோம்.
அதன் மூலம் தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவது சாத்தியம் இல்லை என்பதை பட்டறிவு
மூலம் உணர்ந்தோம். எனவே, நாங்கள் பிரிந்து
வாழ்வதுதான் வழி என்ற முடிவுக்கு வந்துவிட்டோம். இதை நாம் செய்யாவிடின் தமிழினம்
இழந்த தனது உரிமைகளை ஒருபோதும் மீட்க முடியாது. எங்களுக்கென ஒரு பாரம்பரிய பூமி உள்ளது.
நாங்கள் பிரிவினை கோரவில்லை. இழந்த எங்கள் உரிமைகளை , எங்கள் அரசை மீட்டுப் பெறுவதே
எங்கள் நிலை. தனித்தமிழ் ஈழம் என்ற இலட்சியத்தை நோக்கி நாங்கள் முன்னேறுவோம்.
மனித வாழ்வில் அந்தரங்கங்களுக்கு குறைவிருக்காது. அந்தரங்கம் அவரவர்க்கு புனிதமானது. ஜெயகாந்தனும்
அந்தரங்கம் புனிதமானது என்ற தலைப்பில் ஒரு சிறுகதையை எழுதியவர்.
அவுஸ்திரேலியாவில்
மூன்று தசாப்த காலங்களுக்கும் மேலாக வதியும்
நடேசன், இங்கு வந்தபின்னரே இலக்கியப்பிரதிகளும்
அரசியல் பத்தி எழுத்துக்களும் எழுதத் தொடங்கியவர்.
சிறுகதை,
நாவல், பயண இலக்கியம், அரசியல் பத்தி எழுத்து மற்றும் தான் சார்ந்த விலங்கு மருத்துவத்துறை
அனுபவங்கள் சார்ந்த பதிவுகள் என்பனவற்றை தொடர்ச்சியாக எழுதிவரும் நடேசனின் சிறுகதைகளும், நாவல்களும் ஆங்கிலத்திலும், சிங்களத்திலும்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இவ்வாறு
படைப்பிலக்கியத்துறையில் ஈடுபட்டுவரும் நடேசனுக்கு இதழாசிரியர் என்ற முகமும் உண்டு.
சிலவருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் உதயம் என்ற மாத இதழின் நிருவாக
ஆசிரியராகவும் பணியாற்றியிருப்பவர்.
சிறுகதையாகட்டும்,
நாவலாகட்டும், அரசியல் பத்திகளாகட்டும், இவர் எழுதும் எந்தவொரு படைப்பிலும் அங்கதம் இழையோடியிருக்கும்.
அந்தரங்கம்
கதைத்தொகுதியும் விலக்கல்ல.
இதனை
வெளியிடுவதற்கு முன்னின்றுழைத்த கருணாகரன், இந்நூலுக்கு அசாதாரணங்களின் கதை என்ற தலைப்பில் மிகவும்
பொருத்தமான அருமையானதோர் முன்னுரையை வழங்கியிருக்கிறார்.
2010
ஆம் ஆண்டு, முதல் முதலில் நடேசனை யாழ்ப்பாணத்தில் சந்தித்தது
தொடக்கம், இத்தொகுதி வெளியாகியிருக்கும் இந்தத்
தருணம் வரையில் தான் அவதானித்த நடேசன் பற்றியும்,
நடேசனின் இலக்கியம், மற்றும் சமூக அரசியல் பணிகள் பற்றியும் விளக்கியிருக்கிறார்.
தமிழகத்தின்
மூத்த இதழாளரும் இலக்கியப்படைப்பாளியுமான மாலன் இத்தொகுதியில் இடம்பெறும் கதைகள்
தொடர்பான தமது வாசிப்பு அனுபவத்தை முன்னுரையாக
எழுதியுள்ளார்.
“ நடேசனுடைய புனைவுகளின் பொதுத்தன்மை என்ற ஒன்றை
வகுக்கமுடியுமானால், அது மனிதனின் பாலுணர்வு அவனை ஆட்டிவைக்கும் தருணங்களைப் பற்றியதாக
இருக்கும். அந்தத் தருணங்களில் நிகழும் அகப்போராட்டங்களைப்பற்றியதாகவோ அல்லது அந்த அகப்போராட்டங்களின்
காரணமாக நிகழும் புறநிகழ்வுகள் பற்றியதாகவோ இருக்கும். “ என்று
கூறுகிறார் மாலன். இது நடேசனின் கதைகளில் இடம்பெறும்
பாலுணர்வு சம்பந்தமான விடயங்களை அவதானிக்கும் வாசகர்களுக்கு முன் தீர்மானத்தையும் தரும்.
1 Temple Road, Helensburgh, Sydney, NSW – 2508, Australia
உங்களுக்குத் தெரியும், கடந்த ஆண்டு தொற்றுநோய்களின் தொடக்கத்திலிருந்து, இந்தியா முழுவதும் தொற்று மற்றும் இறப்பு மிக அதிகமாக எழுந்ததால் இந்தியா ஒரு பெரிய சுகாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. நாட்டின் தேசிய மருத்துவமனை முறை சரிந்துவிட்டது மற்றும் தனியார் மருத்துவமனைகளும் சரிவின் விளிம்பில் உள்ளன, ஏனெனில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற விரும்பும் நோயாளிகளின் எண்ணிக்கை. ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், பாதுகாப்பு உடைகள், மருந்துகள் போன்ற மருத்துவ உபகரணங்கள் நாட்டிற்கு தேவை.
தேவைப்படும் இந்த நேரத்தில் இந்தியாவுக்கு உதவி வழங்க பல நாடுகள் முன்வந்துள்ளன. முதலில் இந்துக்களாகவும், இரண்டாவதாக ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய புலம்பெயர்ந்தோராகவும், நமது கடமை, தேவைப்படும் இந்த நேரத்தில் அந்த நாட்டுக்கு உதவ எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். இந்தியாவில் வாழும் நம் சக மனிதர்களிடம் நாம் இரக்கத்தையும் தயவையும் காட்ட வேண்டும். எனவே, SVT யின் மேலாண்மை இந்த உன்னதமான காரணத்தில் தனது பங்கைச் செய்ய முடிவு செய்துள்ளது:
மிக இளவயது முதல் ஒரு புலம்பெயர் தேசத்தில் வளர்ந்து,
கலை பயின்றுகொண்டிருக்கும் இளைஞர்களின் நலம்பயக்கும் புதிய முயற்சியை,
நாம் தமிழ்ச் சமூகமாக அறிந்து; அவர்தம் நன்முயற்சிகளும் கலைப் பயணமும், மென்மேலும் வளர வாழ்த்தவேண்டும் என்ற விருப்பத்தோடு, இப்பதிவை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.
முடக்கம்
உலகெங்கும் கொள்ளை நோயால் ஸ்தம்பித்து, அச்சத்தோடு கழிந்தது 2020ஆம் ஆண்டு.
நல்ல கலையாட்சிமிக்க சிட்னி சபாக்களிலும் சதங்கைகளின் நாதம் நிசப்தமாய்ப்போன வேளையிது.
அல்லற்பட்ட பலரையும்போல, விழா அமைப்பாளர்களிடமும் எழுந்த,
புரட்சிக் கவி என்னும் காப்பியத்தைப் பாரதிதாசன் 1937 ஆம் ஆண்டு வெளியிட்டார். வடமொழியில் எழுதப்பட்ட பில்கணீயம் என்னும் காவியக் கருத்தில் தமிழ் உணர்வு கொடுத்துப் ‘புரட்சிக் கவி’ என்னும் காப்பியமாகப் பாரதிதாசன் படைத்துள்ளார்.
மன்னன் ஒருவன் தனது மகள் அமுதவல்லி என்பவளுக்குத் தமிழ்க் கவிதை புனையும் ஆற்றலைக் கற்பிக்க விரும்பினான். அமுதவல்லிக்குத் தமிழ்க் கவிதை கற்பிக்கச் சிறந்தவன், உதாரன் என்பவன் ஆவான் என்று அமைச்சர் தெரிவித்தார். ஆனால் அவன் இளைஞன்; நல்ல அழகன் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
3.3.1 மன்னனின் திட்டம்
இளமை வாய்ந்த அமுதவல்லியும் இளைஞனான உதாரனும் நேரில் சந்திக்கக் கூடாது என்று மன்னன் கருதினான். எனவே, அமுதவல்லி தொழு நோயாளி என்று உதாரனிடம் தெரிவித்தான். உதாரன், குருடன் என்று அமுதவல்லியிடம் தெரிவித்தான். குருடனை நேரில் பார்ப்பது அபசகுனம். எனவே இருவருக்கும் இடையில் ஒரு திரையைக் கட்டித் தொங்க விடுங்கள் என்று தெரிவித்தான். அதன்படி அமுதவல்லிக்கும் உதாரனுக்கும் இடையில் ஒரு திரை கட்டித் தொங்க விடப்பட்டது. திரைக்கு இந்தப்பக்கம் இருந்து உதாரன் கவி புனையும் திறனைக் கற்பித்தான். திரைக்கு அந்தப் பக்கம் இருந்து அமுதவல்லி கற்றாள்.
இந்தத்
தலைமுறை இடைவெளி கவிதையை ஒரு வடபகுதி மகளிர்
கல்லூரி மாணவி எழுதி வீரகேசரிக்கு அனுப்பியிருந்தார்.
இதனை
மித்திரன் நாளிதழில் பணியற்றிய நண்பர் மயில் தவராஜா எனக்கு காண்பித்தார். அக்கவிதையை இற்றைவரையில் என்னால் மறக்கமுடியவில்லை.
அச்சமயம்
1980 காலப்பகுதி, போர்மேகங்கள் படிப்படியாக
சூழும் காலகட்டம். அந்தக்கவிதை எழுதிய மாணவி
அப்போது எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார்.
இறுதியாக
அக்கவிதையில் இடம்பெற்ற வரியில் “ தம்பி “ என்ற சொல்லுக்கு அவர் அழுத்தம் கொடுத்திருக்கவில்லை.
ஆனால், பின்னாளில் ஈழத்தமிழ் சமூகமும் புலம்பெயர் தமிழ் சமூகமும் அந்தச்சொல்லுக்கு
அழுத்தம் கொடுத்துப் பேசியது!
ஜனாதிபதி - சீன பாதுகாப்பு அமைச்சர் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை
இலங்கையின் முதல் தமிழ் பெண் வேந்தர் பேராசிரியர் யோகா இராசநாயகம் காலமானார்
ரிசாட் பதியுதீன் எம்.பியை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்
சிவராமின் நினைவு தினம் அனுஷ்டிப்பு
கிளிநொச்சி நகர் இராணுவத்தினர் கண்காணிப்பில்
ரிஷாட்டின் கைதுக்கு எதிராக நிந்தவூர் பிரதேச சபையில் கண்டன தீர்மானம்
ஜனாதிபதி - சீன பாதுகாப்பு அமைச்சர் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை
Wednesday, April 28, 2021 - 4:22pm
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் பிங் (Wei Fenghe) அவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த சீன பாதுகாப்பு அமைச்சரை ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர மற்றும் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் வரவேற்றனர்.
அஸ்ட்ரா செனெகாவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் வழக்கு
பைசர் தடுப்பூசி போட்டவர்கள் இடையே இதய வீக்கப் பாதிப்பு
டெல்லியில் உடல்களை தகனம் செய்வதற்கு இடப்பற்றாக்குறை
இந்திய வகை கொரோனா 17 நாடுகளில் கண்டுபிடிப்பு
இந்தியாவில் தற்போது பரவுவது கொவிட் வைரஸின் 3ஆவது திரிபு
இடு காடாக மாறும் இந்தியா; இறந்த உடல்கள் கொத்து கொத்தாக தகனம்
இந்தியாவில் நாளுக்கு நாள் தீவிரமடையும் கொரோனா
இஸ்ரேலில் சமய விழாவில் நெரிசலில் சிக்கி 44 பேர் பலி
உயிரிழக்கும் பொலிஸாரை வீடியோ எடுத்தவருக்கு 10 மாதங்கள் சிறை (அவுஸ்திரேலியாச் செய்தி)
அஸ்ட்ரா செனெகாவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் வழக்கு
Wednesday, April 28, 2021 - 6:04pm
அஸ்ட்ரா செெனகா மருந்துத் தயாரிப்பு நிறுவனம், குறைந்த அளவு தடுப்பூசிகளை மீண்டும் மீண்டும் விநியோகம் செய்ததற்காக அந்நிறுவனத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் வழக்குத் தொடுத்துள்ளது.
உரிய காரணமின்றித் தொடரப்பட்டுள்ள அந்த வழக்கில் தனது தரப்பு நியாயத்தை நீதிமன்றத்தில் வலுவாக முன்வைக்கவிருப்பதாக அஸ்ட்ரா செெனகா தெரிவித்துள்ளது. ஏற்கனவே உறுதியளித்திருந்த 120 மில்லியன் தடுப்பு மருந்தில் 31 மில்லியனை அஸ்ட்ரா செெனகா, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு விநியோகித்து விட்டது. அதேபோன்று ஜூன் மாதத்துக்குள் வழங்க உறுதியளித்த 180 மில்லியன் தடுப்பு மருந்தில், 70 மில்லியனை மட்டும் வழங்கப்போவதாக அந்நிறுவனம் கூறியிருந்தது.
தமிழன்னையை ஆட்சிக்கட்டிலில்
ஏற்றி அழகு பார்த்த சிங்கப்பூர்த் தமிழர்கள் அவ்வன்னைக்குச் சூட்டிய மணிமகுடம்தான்தமிழ்மொழிவிழா.
ஓவ்வொரு ஆண்டும் தமிழைநேசிப்போம்தமிழில்பேசுவோம்’என்றமுழக்கவரியோடுவளர்தமிழ்இயக்கம்மற்றும்தமிழ்மொழிகற்றல்வளர்ச்சிகுழுவின்ஆதரவோடுஇவ்விழா சிறப்பாக அரங்கேறி வருகிறது. இத்துணை
ஆண்டுகள் தீவெங்கும் ஒலித்த தமிழ்
முழக்கம் கடந்தாண்டு கொரோனா நோய்தொற்றுக்
காரணமாக இணையத்தின் வழியே உலகெங்கும் ஒலித்தது. அதுபோல இவ்வாண்டும் மெய் நிகர்
தொழில் நுட்பத்தின் வழியாகத்தமிழோசைப் பாரெங்கும் ஒலித்து வருகின்றது.இவ்விழாவில்2014 ஆண்டுமுதல்அண்ணாமலைப்பல்கலைக்கழகமுன்னாள்மாணவர்கள்சங்கமும்இணைந்துஒவ்வொருஆண்டும்நிகழ்ச்சியைமுன்னெடுத்துவருகிறது.
இதன்தொடர்ச்சியாகஇவ்வாண்டும்ஏப்ரல் 24ஆம்தேதி“தமிழ்கூறும்நல்லுலகம்”என்றதலைப்பில்நிகழ்ச்சியைஇணையத்தில்நடத்தியது.‘வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி’ என்ற
பாரதியின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலோடு நிகழ்வு சரியாக ஆறு மணிக்குத்
தொடங்கியது. இந்த நிகழ்வின் நிகழ்ச்சி நெறியாளர்களாக நின்று நிகழ்ச்சியை வழி
நடத்தினார்கள் திரு முத்து மாணிக்கம் மற்றும் திருமதி பிரதீபா அவர்கள்.
அடுத்தஅங்கமாகவரவேற்புரையைவழங்கினார்சங்கத்தின்
தலைவர்திரு.சௌந்தரராஜன் அவர்கள். ஆறு
தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழ்மொழி
இன்று உலகின் பல்வேறு கண்டங்களில்
பேசப்பட்டு வருகின்றது. அதனை அனைவரும்
அறிந்துகொள்ளும் பொருட்டு ‘தமிழ்கூறும் நல்லுலகம்’ என்ற தலைப்புத்
தேர்ந்தெடுக்கப்பட்டது என்று இந்நிகழ்வின் நோக்கத்தைப்பற்றி எடுத்துரைத்தார்.
மேலும், இந்த நிகழ்விற்குத்தளம்அமைத்துக்கொடுத்தவளர்தமிழ்இயக்கம்
மற்றும் கற்றல் வளச்சிக்குழுஉறுப்பினர்கள்,
சிங்கப்பூரின் பல்வேறுஅமைப்புகளின்தலைவர்கள்,சிறப்புப்
பேச்சாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என்று நிகழ்வில் பங்கேற்ற அனைவரையும்
வரவேற்று வரவேற்புரையை வழங்கினார்.
தமிழ்மொழிவிழாவின் முக்கிய நோக்கம் சிங்கப்பூரில்தமிழ்மொழியைவாழும்மொழியாகநிலைபெறசெய்வதோடுமாணவர்களிடையேதமிழ்ப்புழக்கத்தைஅதிகரிக்கச்செய்வதே
ஆகும்.அந்தவகையில்அண்ணாமலைப்பல்கலைக்கழகமுன்னாள்மாணவர்கள்சங்கமும்மாணவர்களிடையேதமிழ்ஆர்வத்தைத்தூண்டும்வகையில்ஒவ்வொருஆண்டும்ஒவ்வொருகருப்பொருளில்மாணவர்களுக்குப்போட்டிகளைநடத்திவருகின்றது. தமிழ்மொழியின்இலக்கியச்சிறப்புகளைநடைமுறைவாழ்வியலோடுபொருத்திப்பார்க்கும்வகையில்தலைப்புகள்கொடுக்கப்படுகின்றன.
இதன்மூலம்மாணவர்களிடையேமொழியின்பால்ஆர்வத்தையும்ஈர்ப்பையும்உருவாக்குவதேஇந்நிகழ்வின்முக்கியநோக்கமாகும். அந்தவகையில்இந்தஆண்டும் "பிறமொழிகளில்தமிழ்மொழிமற்றும்கலாச்சாரத்தின்செல்வாக்கு"
என்றதலைப்பில்ஆய்வுசெய்துதங்களதுபடைப்பைபடைக்கஉயர்நிலைமற்றும்தொடக்கக்கல்லூரிமாணவர்களிடையேபோட்டிநடத்தப்பட்டது. இப்போட்டியில்பதினான்குபள்ளிகளைச்சேர்ந்தமொத்தம்56 மாணவர்கள்கலந்துகொண்டுதங்களதுபங்களிப்பினைவழங்கினர். உயர்நிலை1&2, உயர்நிலை3&4 மற்றும்தொடக்கக்கல்லூரிஎன்றுமூன்றுபிரிவுகளில்நடத்தப்பட்டபோட்டியில்
வெற்றி பெற்ற மாணவர்களைப்பற்றிய விவரங்கள்
முதலில் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு பிரிவிலும் முதல்
பரிசைப்பெற்ற மாணவர்கள் தங்கள் படைப்பைப் படைத்தார்கள்.
முதலில் உயர்நிலை1&2, பிரிவில்முதல்பரிசுபெற்றதெமாசெக்தொடக்கக்கல்லூரியைச்சேர்ந்தமாணவிசித்வியாசிதம்பரம் ‘ஜப்பானியமொழியிலேதமிழ்மொழிமற்றும்கலாச்சாரத்தின்செல்வாக்கு’என்றதலைப்பில்தன்னுடையபடைப்பைப்
படைத்தார். தமிழ் மொழிக்கும் ஜப்பானிய
மொழிக்கும் இடையே உள்ள மொழியியல் கூறுகள், இலக்கியம், கலாசாரம், விழாக்கள், உணவு
என்று பல நிலைகளில் இரண்டுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளைப் பற்றி எடுத்துரைத்தார்.
இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே நெடுந்தொலைவு இருந்தபோதும் தமிழின் செல்வாக்கு
ஜப்பானிய மொழியில் காணும்போது தமிழின்தொன்மையும், தமிழின்செம்மையும்நன்கு
புலப்படுகின்றது. அடுத்தாகஉயர்நிலை3&4 பிரிவில்முதல்பரிசுபெற்றதெமாசெக்தொடக்கக்கல்லூரிமாணவர்விஷால்அருண்குமார் ‘கொரியமொழியிலேதமிழ்மொழிமற்றும்கலாச்சாரத்தின்செல்வாக்கு’என்றதலைப்பில்தன்னுடையபடைப்பைப் படைத்தார்.முதலாம்நூற்றாண்டிலேவாணிகத்தின்பொருட்டுஉருவானதொடர்பின்தாக்கத்தால்தமிழின்பலபடிமகூறுகள்அம்மண்ணில்வேரூன்றதொடங்கியசெய்தியைப்
பகிர்ந்துகொண்டார். மேலும், இரண்டுமொழிகளுக்கிடையேஉள்ளசொற்களின்ஒலிப்புமுறை, கலாசாரம், பழக்கவழக்கம், நடனம்ஆகியவற்றில்காணப்படுகின்றஒற்றுமைகளைப்
பற்றிக் குறிப்பிடபோது நம்பண்டையதமிழர்களின்மரபும், பண்பாட்டுசிறப்பும்எத்தகையநிலைப்பாட்டினைக்கொண்டுஇருக்கிறதுஎன்பதைநம்மால்கண்கூடாக
அறிய முடிந்தது. நிறைவாக, தொடக்கக்கல்லூரிபிரிவில்முதல்பரிசுபெற்றடி.பி.எஸ் (D.P.S) சர்வதேசப்பொதுப்பள்ளியில்படிக்கும்மாணவிஅனுஷாசந்திரன் ‘தமிழ்மொழிக்கும்தாய்மொழிக்கும்இடையிலானஉன்னதஉறவு’என்றதலைப்பில்தன்னுடையபடைப்பைபடைத்தார்.கங்கைகொண்டசோழனால்தொடங்கப்பட்டகலாசாரப்புரட்சியின்விளைவால்தாய்லாந்துமக்களின்கலை, கலாசாரம், கடவுள்வழிபாடுமற்றும்அரசியல்என்றுஅனைத்துதளங்களிலும்
முத்தமிழின் முத்திரையைப்பற்றி எடுத்துரைத்தார். "பிறமொழிகளில்தமிழ்மொழிமற்றும்கலாச்சாரத்தின்செல்வாக்கு"
என்றதலைப்புமாணவர்களின்சிந்தனையைத்தூண்டியதோடு, தமிழ்மொழியின்செல்வாக்கைஅறியஏதுவாகஅமைந்திருந்ததுஎன்பதைஅவர்களின்படைப்பின்வழி அறிய முடிந்தது. அடுத்தஅங்கமாகஅண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னால் மாணவர்கள் சங்கம்2014முதல் 2020வரைதமிழ்மொழிவிழாவில்கடந்துவந்தபாதையைப்பற்றியகண்ணோட்டம் இடம்பெற்றது.
இதனைத்தொடர்ந்து விழா சிறப்பாக நடைபெற நிதி
உதவி நல்கிய ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
அடுத்த அங்கமாகச் சிறப்புப் பேச்சாளர்களின்
சிறப்புரை தொடங்கியது. ‘திரைகடலோடியும்திரவியம்தேடு’என்றபழமொழிகேற்பகடல்தாண்டிதிரவியம்தேடசென்றபுலம்பெயர்ந்ததமிழர்கள்பொருளைத்தேடுவதில்மட்டும்நாட்டம்கொள்ளவில்லை. அதனோடுதங்கள்மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடுபோன்றவற்றைத்தாங்கள்வாழ்ந்தமண்ணில்வேரூன்றுவதற்குத்தங்களால்முயன்றமுயற்சிகளைப்பன்னெடுங்காலமாகத்தொடர்ந்துமுன்னெடுத்துவருகின்றனர். அவர்களின்அரும்பெரும்பணியால்பலநாடுகளில்இன்றுதமிழ்மொழியின்மணம்கமழ்ந்துகொண்டிருக்கிறது. அங்ஙனம்மணம்வீசும்ஐந்துகண்டத்திலிருந்துஅனுபவமிக்கப்பேச்சாளர்கள்“தமிழ்கூறும்நல்லுலகம்”என்றதலைப்பில்தங்கள்
உரையை ஆற்றினார்கள். முதலில் அமெரிக்காகண்டத்திலிருந்துமுனைவர்சோமலெசோமசுந்தரம்அவர்கள்சிறப்புரைஆற்றினார்.
அமெரிக்காவில் அடுத்ததலைமுறையினருக்குத்தமிழைக்கொண்டுசேர்க்கஇசை, நடனம், சமயம்என்றுபல்வேறுவழிகளில்
அவர்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளைப்பற்றி
எடுத்துரைத்தார். அடுத்ததாக, ஆசியகண்டத்திலிருந்துபேராசிரியர்முனைவர்நா. கண்ணன்அவர்கள்இன்றையதொழில்நுட்பத்தின்வளர்ச்சிக்குஈடுகொடுக்கும்வகையில்பல்வேறுதடைகளைக்கடந்துஇன்றுஇணையஉலகில்பீடுநடைபோடும்தமிழ்மொழிக்குஏற்பட்டசவால்களைப்பற்றிவிரிவாகஎடுத்துரைத்தார். அடுத்ததாக, ஆப்பிரிக்காகண்டத்திலிருந்துதிருலயன்ஜி. சிவசன்முகம்அவர்கள்சிறப்புரைஆற்றினார்.
சீஷெல்ஸ் நாட்டில் வாழும் இன்றையபிள்ளைகளிடம்நம்முடையகலாசாரத்தையும், பண்பாட்டையும்தாய்மொழியின்வழியேகொண்டுசேர்க்கமுடியும்என்பதை
உணர்ந்து அதற்காக அவர்கள் முன்னெடுத்து முயற்சிகளைப்பற்றி
எடுத்துரைத்தார். அடுத்ததாக, ஐரோப்பாகண்டத்திலிருந்துமுனைவர்அலெக்சிஸ்தேவராஜ்சேன்மார்க்அவர்கள்உரையாற்றானார்.
இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்காட்லாந்து, போலாந்துபோன்றஐரோப்பியநாடுகளில்தமிழின்வளர்ச்சிக்குப்பல்வேறுஅறிஞர்கள், தமிழ்ச்சங்கங்கள், அமைப்புகள், கழகங்கள்போன்றவைஅரும்பாடுபட்டுவருவதைப்பற்றிப்
பகிர்ந்துகொண்டார். நிறைவாக, ஆஸ்திரேலியாகண்டத்திலிருந்துநாகைகா.சுகுமாரன்அவர்கள்சிறப்புரைஆற்றினார்.
தாய்மொழிசிந்தனையைப்பெற்றவன்தரணிஆள்வான்என்றகூற்றைமெய்ப்பிக்கும்வகையில்ஆஸ்திரேலியாதமிழர்கள்கல்வி, அரசியல், பொருளாதாரம், பொழுதுபோக்குஎன்றுபலதுறைகளில்சிறந்துவிளங்குவதைப்பற்றிப் பகிர்ந்துகொண்டார்.மேலும் பன்முகக்கலாசாரமிக்கஆஸ்திரேலியாவில்தமிழைஅடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்க
அவர்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைப்பற்றிப் பகிர்ந்துகொண்டார்.
நிறைவாக, நன்றியுரைஆற்றினார்செயலாளர்செல்வி ஸ்வர்ணா
வீரப்பன்அவர்கள்.ஏற்பாட்டுக்குழுவினர், ஆதரவாளவர்கள், சிறப்புப்பேச்சாளர்கள்,
மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என்று இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற ஆதரவாக
நின்ற அனைவருக்கும்நன்றி தெரிவித்தார்.‘தேமதுர தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல்
வேண்டும்’ என்ற பாரதியின் வரிகளுக்கேற்ப பல்வேறு கண்டங்களில் தமிழ் முழங்கி
வருகின்றது என்பதன் எதிரொலியாக ஐந்து கண்டங்களிலிருந்து பேசிய பேச்சாளர்களின் உரை
அமைந்திருந்தது.‘தமிழ்கூறும்
நல்லுகம்’ என்ற தலைப்பு உலகளவில் பிறமொழி மற்றும் கலாசாரங்களில் தமிழ்மொழியின் செல்வாக்கைப்பற்றி அறிந்துகொள்ள ஏதுவாக அமைந்திருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.எட்டாம்ஆண்டுநிகழ்ந்தஇந்நிகழ்வுஇணையத்தின்வாயிலாகஎட்டுதிக்கும்பயணித்ததோடு
இதனைக் கண்டு களித்ததமிழர்களின் நெஞ்சம் தமிழால் நிறைந்தது என்றால் மிகையில்லை.
உங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா? புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்
விளம்பரங்கள்
உங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.