.
குழந்தைகளே கூறுங்கள்
குதூகலமாயிருப்பதை எங்கே கற்றீர்களென்று
கவலையால் என் வாழ்வு
கருகிப்போகிறது – உங்கள்
கலையில் ஒரு சிறிதாவது
கற்க விரும்புகிறேன்.
மலர்களே மலருங்கள்
சிரிப்பை எப்படிப் பழகினீர்களென்று
பிள்ளைப் பருவத்தின்போது மட்டுமே
பொழுதெல்லாம் சிரித்திருந்தேன் – உங்கள்
செக்கச் சிவந்த இதழ்களால் சிறிதாவது
சொல்லிக் காட்டுங்கள்!
ஆறுகளே இயற்றுங்கள்
ஆற்றலும் அழகும்
எப்படி இணைய முடியுமென்று
இளவயதுக் காலத்தில்
கனவுகளை மட்டுமே
கண்டு கொண்டிருந்ததால்
ஆற்றலை வளர்க்க
அறிவிழந்து போனேன்.
எறும்புகளே அறிவியுங்கள்
ஓய்வில்லா துழைப்பது எங்ஙனமென்று
ஓரிரு நிமிடத்துக்குள்
ஓய்ந்துபோய்விடுவேன்
இளைஞனைப் போலெப்போதும்
உற்சாகமாய் இருப்பதை
ஒழிக்காமல் ஓதுங்கள்.










அந்த கிராமத்தில் தனது நண்பர்களான அப்புக்குட்டி, இமான் அண்ணாச்சி ஆகியோருடன் சேர்ந்து மீன் பிடித் தொழிலை செய்து வருகின்றார்.
மறுமுனையில் நடுக்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற தன் நண்பன் அப்புக்குட்டி குண்டடிபட்டு சடலமாக அவரது உடல் கரை ஒதுங்குகின்றது.
கடனையெல்லாம் ஒரு வழியாக அடைத்துவிட்டு காதலியை காண வரும் தனுஷ் தீவிரவாதிகளால் கடத்தப்படுகின்றார்.
இயக்குனர் பரத்பாலா இப்படத்தை ஒரு பொழுதுபோக்கு படமாக இல்லாமல், ஆவணப் படம் போல் படமாக்கியுள்ளார்.