தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில்

 தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை  அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு

அப்பா எனும் பொழுது ஆண்டவனே தெரிகிறார் !

 


























மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா



அப்பா எனும் பொழுது
        அன்பு தெரிகிறது
அப்பா எனும் பொழுது
       கருணை தெரிகிறது
அப்பா எனும் பொழுது
       ஆண்டவனே தெரிகிறார்
அப்பா எனும் வார்த்தை
       அனைவர்க்கும் மந்திரமே !

அன்னையால் நாம் பிறந்தோம்
       அப்பாதான் வேராவார்
அவரருகில் இல்லை என்றால்
       அனைத்துமே அகன்றிடுமே
வழித் துணையும் அவரே
         மருத்துவரும்  அவரே
மா மருந்தாய் இருந்து
      காத்திடுவார் அப்பா !

புரட்சிக் கவிஞனைப் போற்றி மகிழ்வோம்!

 


மகாகவி பாரதியார் (திசம்பர் 1882 - 11 செப்டம்பர் 1921)


 பல் வைத்தியகலாநிதி பாரதி இளமுருகனார்



கலைமகளே பாரதியி;ன் காதல் தெய்வம்!

    கவிதையென்றால் அவனுக்கோ வற்றா ஊற்று!

விலையறியா இலகுநடை எளியோர்; போற்றும்

    வித்துவத்தில் லர்ந்துவிட்ட புரட்சிப் புதுமை!

அலைகொஞ்சும் மணிகளைப்போல் அருஞ்சொற் கூட்டம்

    அவன்நாவில் ஏவலுக்கு இரங்கி ஏங்கும்!

நிலைகொண்டு தமிழ்வாழும் நிமிடம் மட்டும்

    நீழாயுள் கொண்டதன்றோ பாரதி பாடல்!

 

பொன்னேட்டுக்  கவியேறு காளி தாசர்

    புவிபோற்றும் கவியின்பம் தந்த கம்பர்

பின்னாலே எழுந்தகவி  பாரதி யாரும்

    பிராமணர்கள் எதிர்ப்பெல்லாம் தாண்டி யன்னார் 

பன்நாட்டுப் பாவலர்கள் வியந்து போற்றப்

    பாவாலே சாதிவெறி கொண்டோர் நாண

என்நாட்டு மக்களெலாம் என்சோ தரரென

    இனவெறிக்குச் சாவுமணி அடித்தவன்; அன்றோ?..

;

மொழிமீது அத்தனை உயர் அக்கறையே!

 


-சங்கர சுப்பிரமணியன்.




மொழியின்மேல் பற்றில்லாமல் படைப்பும்
சிறப்பேதுமில்லா சிந்தனை வெளிப்பாடும்
இயந்திரம்போல் படைப்பின் எச்சமேயாம்
மொழியின் நடையோட்டம் முற்றுமிராதாம்

புகழடையவேண்டி படைப்பாரும் உண்டு
பற்றோடு படைப்பவரும் பாரினில் உண்டு
ஒன்று இயற்கையான மணமுள்ள மலராம்
மற்றதும் செயற்கையான காகிதமலராம்

சிலர் சிரிப்பார் சிலர் அழுவாரென கவிதை
கண்ணதாசன் சொன்ன கவிதையைப்போல
சிலர் மொழிக்காக படைப்பை படைப்பார்
சிலர் புகழுக்காகவும் படைப்பை படைப்பார்

சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் 2025

 .

உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க   tamilmurasu1@gmail.com  or  paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில்  தொடர்பு கொள்ளவும்



                              

சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள்                    

27-09- 2025  Sat: சிட்னி சிலோன் லயன்ஸ் கிளப் வழங்கும் நடன, இசை நிகழ்ச்சி at The Bryan Brown Hall, Bankstown 6pm.:'

25-10-2025 Sat: சிட்னி துர்கா கோவிலில்  நிதி திரட்டும் இரவு விருந்து

26-10-2025 Sun: சிட்னி துர்கா கோவில்  மண்டபத்தில் தமிழர் விழா - துர்கா போட்டிகள் மற்றும் திருக்குறள் போட்டிகளுக்கான பரிசளிப்பும் நடைபெறும்

26-10-2025 Sun: ஈழத் தமிழர் கழகம் கலைக்கதம்பம் 2025 நிகழ்வு 6.00 PM at Redgum Centre, Wentworthville

09-11-2025  Sunமாத்தளைசோமுவின்  100 சிறுகதைகள் நூல் வெளியீடு   ANTHONY CATHOLIC CHURCH-TOONGABBIE-4-00 pm to 6-30 pm.

29-11- 2025  Sat: Australian Medical Aid Foundation proudly presents முத்தமிழ் மாலை

கச்சத் தீவு , கச்சால் தீவு!

 - ச. சுந்தரதாஸ்

 கச்சத் தீவு , கச்சால் தீவு!

இந்திய பிரதமர் இந்திரா காந்திக்கும்,


இலங்கைப் பிரதமர் சிறிமா பண்டாரநாயவுக்கும் இடையில் இருந்த நட்புறவின் அடிப்படையில் கச்சத் தீவு உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு ஒப்படைக்கப் பட்டது. எத்தனையோ ஆண்டுகள் எந்த தொல்லையும் இல்லாமல் இருந்த இந்தத் தீவு அண்மைக் காலமாக இந்தியா, இலங்கை இரு நாடுகளிடையேயும் பேசும் பொருளாக மட்டும் இன்றி, ஏசும் பொருளாகவும் மாறியுள்ளது. 
குறிப்பாக கச்சத் தீவு இலங்கைக்கு கொடுக்கப் பட்ட போது அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்று என்று அவருக்கு எதிறானோர் குற்றம் சாட்டத் தொடங்கிய பின் இப் பிரச்னை வேகம் எடுத்தது. டெல்லியில் இந்திரா எடுத்த முடிவை எதிர்ப்பதை விட , தமிழகத்தில் கருணாநிதி எடுத்த நிலைப்பாடே பிரச்னைக்கு கரணம் என்பது இன்றைய அரசியலின் புது கணக்கு. 




இப்போது இந்த கச்சத் தீவு விவகாரத்தை கையில் எடுத்திருப்பவர்

இளைய தளபதி விஜய். கச்சத் தீவை மீண்டும் இந்தியா கையகலப் படுத்த வேண்டும் என்று அவர் தனது கட்சி மகாநாட்டில் பற்ற வைத்த பொறி இலங்கையிலும் சுடர் விடத் தொடங்கியது. கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் கூட்டத்தில் அமைச்சர் விஜித ஹேரத்திடம் , விஜயின் அறைகூவல் பற்றி ஊடகவியலாளர் ஒருவர் பற்ற வைக்க , அமைச்சர் இலங்கையின் ஒர் அங்குல நிலம் கூட வேறு நாட்டுக்கு வழங்கப் படாது என்று கூறி விட்டார். தமிழக அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் இலாபத்துக்கு இது போல் பேசுவது புரிந்து கொள்ளக் கூடியதே என்றும் முற்றுப் புள்ளி வைத்து விட்டார் அவர். 
இந்த கிழமை வட பகுதிக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க விஜயம் செய்திருந்தார். விஜயகாந்த் பட பாணியில் அதிரடி அரசியல் செய்து வரும் அனுர தன் வட பகுதி விஜயத்தின் போது கச்சத் தீவு பகுதிக்கும் சென்று பார்வையிட்டு அத் தீவு மீது இலங்கைக்கும், தன் அரசுக்கும் இருக்கும் பிடிமானத்தை வெளிப்படுத்திக் கொண்டார். இது இலங்கை மக்கள் மத்தியில் அவரின் இமேஜை கூட்டியது. தன் மனதுக்குள் விஜய்க்கு அனுர நன்றி சொல்ல மறந்திருக்க மாட்டார் தானே!

எடுப்பார் கைப் பிள்ளை - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் என்று அறிஞர் அண்ணாவினால்


பாராட்டப் பெற்றவர் பி. பானுமதி. தியாகராஜ பாகவதர், பி. யு . சின்னப்பா காலத்தில் இருந்து எம்.ஜி ஆர், சிவாஜி என்று பல நடிகர்களுடன் இணைந்து நடித்து தனக்கென்று திரையுலகில் ஓர் இடத்தை தக்க வைத்துக் கொண்ட பானுமதிக்கு இவ்வாண்டு செப்டம்பர் ஏழாம் திகதி நூற்றாண்டாகும்! 


1975ம் வருடம் இளைய நடிகர்களுடனும் ஓர் படத்தில் நடித்தார் பானுமதி. அந்தப் படம் தான் எடுப்பார் கைப் பிள்ளை. இந்தப் படத்துக்கு இது பொன் விழா ஆண்டாகும். கலரில் உருவான இப் படத்தின் கதை பானுமதியை சுற்றியே அமைக்கப் பட்டிருந்தது. 


ஊரில் பெரிய வக்கீலாக விளங்கும் இந்திரா , ஒருவன் எந்த

பரம்பரையில் பிறக்கிறானோ அந்த பரம்பரை புத்திதான் அவனிடம் இருக்கும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டவளாக திகழ்கிறாள். அதன் அடிப்படையில் குற்றப் பரம்பரையில் பிறக்கும் பிள்ளையும் குற்றவாளியாகவே வருவான் என்பதில் உறுதியாக இருக்கும் அவளினால் குற்றப் பரம்பரையை சேர்ந்த ராஜலிங்கத்தின் அப்பாவி மகன் பாடசாலையில் திருடனாக பழி சுமத்தப் படுகிறான். இதன் காரணமாக அதிர்ச்சியினால் அவன் இறக்க ராஜலிங்கம் இந்திராவை பழி வாங்க திட்டமிடுகிறான். இந்திராவின் ஒரே மகனை கடத்தும் ராஜலிங்கம் அவனை ஒரு கை தேர்ந்த திருடனாக வளர்க்கிறான். திருடனாக வளரும் மோகன் திருடுகிறான், காதலிக்கிறான், இன்னுமொரு திருடியை தங்கையாக ஏற்றுக் கொள்கிறான். ஆனால் சந்தர்ப்ப சூழ் நிலையால் அவன் மீது கொலைப் பழி விழுகிறது. தன் மகன் என்று அறியாமல் அவனுக்கு எதிராக வழக்குப் பேசி தண்டனை பெற்று கொடுக்கிறாள் இந்திரா. ஒரு பாரம்பரியமிக்க குடும்பத்தை சேர்ந்த ஒருவனை குற்றவாளியாக்கி விட்டதை சொல்லி இந்திராவிடம் கொக்கரிக்கிறான் ராஜலிங்கம். 



செம்மணி மனித புதைகுழியின் வலி – உளவியல் பார்வை

 

05 Sep, 2025 | 02:09 PM















புதைந்த குரல்கள் கேட்காத காற்றில்,
புரியாத சுமையாய் மண்ணில் மறைந்த உயிர்கள்.
ஒவ்வொரு அடியிலும் ஒலிக்கும் நினைவுகள்,
மௌனக் கத்தல்கள் மனதை சிதைக்கும்.

மண்ணின் கீழ் அல்ல, மனதில் புதைந்தது,
மறக்க முடியாத காயங்கள், விழிகள் மூடும் கனவுகள்.
மன அழுத்தம் ஆழமாகக் குடிகொண்டது,
மறைந்தவரின் முகம் தினமும் கண்ணீராய் தோன்றியது.

குழந்தை சிரிப்பை காண முடியாத தாய்,
வழி தெரியாமல் துயரத்தில் உறையும் குடும்பம்.
அந்தக் குழிகள் வெறும் நிலம் அல்ல,
அவை உளவியல் புண்களின் உயிர்ப்புகள்.

இலங்கைச் செய்திகள்

செம்மணி புதைகுழியில் எட்டு எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் – சுத்திகரிப்பு நடவடிக்கைகள் தொடக்கம்

காணாமல்போனர் குறித்த முறைப்பாடுகள் பற்றிய விசாரணைகளை 2027ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்ய 25 விசேட உப குழுக்கள்

செம்மணி–சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் 4 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

மன்னாரில் 33 ஆவது வது நாளாக தொடரும் போராட்டம் ; புனித செபஸ்தியார் பேராலய பங்கு சபை, பங்கு மக்கள் பங்கேற்பு

செம்மணி நீதி கோரிய கையொழுத்து போராட்டம் கிழக்கில் இன்று ஆரம்பம் ; ஆதரவு வழங்குமாறு தமிழ் தேசிய கட்சிகள் அழைப்பு 



செம்மணி புதைகுழியில் எட்டு எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் – சுத்திகரிப்பு நடவடிக்கைகள் தொடக்கம்

Published By: Vishnu

05 Sep, 2025 | 03:27 AM

செம்மணி புதைகுழியில் குவியலாக எட்டு என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றை சுத்தப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

குறித்த என்புகூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டதன் பின்னரே , அவை தொடர்பிலான விபரங்களை கூற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை புதன்கிழமை (3) இரண்டு என்பு கூடுகளின் குறுக்காக காணப்பட்ட என்பு கூடும் , ஒரு என்பு கூட்டின் தோள்பட்டையுடன் தொடுகையுற்றவாறு காணப்பட்ட என்பு கூடும் இன்றைய தினம் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. 

உலகச் செய்திகள்

 உக்ரைனுடனான போர் நெருக்கடியைத் தீர்க்க சீனா, இந்தியா மேற்கொண்ட முயற்சிகளுக்கு புட்டின் பாராட்டு!

குண்டு துளைக்காத ரயிலில் சீனா சென்ற வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்

பாலஸ்தீன கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் மீதான விசா கட்டுப்பாடுகளை விரிவுபடுத்தினார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்

சீனா சென்ற இந்தியப் பிரதமர் மோடி சீன மற்றும் ரஷ்ய ஜனாதிபதிகளை சந்தித்தார் !

சீனாவில் பிரமாண்ட இராணுவ அணிவகுப்பு



 உக்ரைனுடனான போர் நெருக்கடியைத் தீர்க்க சீனா, இந்தியா மேற்கொண்ட முயற்சிகளுக்கு புட்டின் பாராட்டு!

Published By: Vishnu

01 Sep, 2025 | 05:44 PM

உக்ரைனுடனான போர் நெருக்கடியைத் தீர்க்க சீனா மற்றும் இந்தியா மேற்கொண்ட முயற்சிகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பாராட்டு தெரிவித்தார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) இரண்டு நாள் உச்சி மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உரையாற்றும் போதே, உக்ரைன் போர் நெருக்கடியைத் தீர்க்க சீனா மற்றும் இந்தியா மேற்கொண்ட முயற்சிகளுக்குப் பாராட்டு தெரிவித்தார்.

மாநாட்டில் சீன ஜனாதிபதி சி ஜின்பிங், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், ஈரான் ஜனாதிபதி உட்பட 10 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

நவராத்திரி பூசை - சிட்னி முருகன் கோவில்

 


சிட்னி சிலோன் லயன்ஸ் கிளப் வழங்கும் நடன, இசை நிகழ்ச்சி 27/09/2025



முத்தமிழ் மாலை 29/11/2025

 


கீதையைப் படிப்போம் பாதையை அறிவோம் !

 



 
     






















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் …. அவுஸ்திரேலியா





எண்ணாய் இருப்பான் எழுத்தாய் இருப்பான்
கண்ணாய் இருப்பான் மணியாய் இருப்பான்
உண்ணும் உணவாய் பருகும் நீராய்
எல்லாம் ஆகி இருப்பான் கண்ணன்

கடலாய் இருப்பான் அலையாய் எழுவான்
முகிலாய் இருப்பான் மழையாய் பொழிவான்
வயலாய் இருப்பான் பயிராய் இருப்பான்
வளமாய்க் கண்ணன் நிறைந்தே இருப்பான்

ஆக்கும் சக்தியாய் அழிக்கும் சக்தியாய்
காக்கும் சக்தியாய் கண்ணன் இருப்பான்
நோக்கும் இடமெலாம் இருப்பான் கண்ணன்
வாக்கும் கண்ணனே வரமும் கண்ணனே 

வன்னி ஹோப்பிற்கு வரவேற்கிறோம்


 

வன்னி ஹோப் 👉 இணையதளம்:

Vanni Hope – Be The Reason Someone Smiles Today!

தமிழ் மூத்த குடிமக்கள் சங்கத்தின் பல்முகபண்பாட்டு நிகழ்ச்சி 30/08/2025

 

தமிழ் மூத்த குடிமக்கள் சங்கத்தின் பல்முகபண்பாட்டு நிகழ்ச்சியை நீங்கள் அனைவரும் விருப்பமாக அனுபவித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.  

முதலில்,  சங்கத் தலைவர் திரு. ஆருமுகம் பெருமையனார் மற்றும் திருமதி பெருமையனார், மற்றும் இணை அமைப்பான தமிழ் மூத்த குடிமக்கள் நலச்சங்கத்தின் (Tamil Senior Citizens' Benovolent Society) தலைவர் திரு. சபாரத்னம் கேதாரநாதன் மற்றும் திருமதி சிவகௌரி கேதாரநாதன் ஆகியோரும் பங்கேற்று, நமது தென்னாசிய பாரம்பரியத்தினமான விளக்கேற்றத்துடன் நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள்.

இந்த நிகழ்ச்சியை நடைமுறைப்படுத்த உதவிய ஆஸ்திரேலிய அரசாங்கத்தின்


Community Grants Hub அமைப்பின் Multicultural Grassroots Initiatives Funding Program வழியாக வழங்கிய பொருளாதார ஆதரவிற்கும்  நன்றி. 

பல்முகபண்பாட்டு நிகழ்ச்சியை உணர்வுபூர்வமாக உயிர்ப்புடன் கொண்டுவர உதவிய அனைத்து கலைஞர்கள்:

  • திருமதி வரலக்ஷ்மி ஸ்ரீதரன் மற்றும் அவருடைய இசைக் குழுவினருக்கு, சுருதி மற்றும் லயத்தில் அற்புதமான வீணை இசை.


  • நேபாள நண்பருடைய உணர்ச்சி பூர்வமான புல்லாங்குழல் இசை.

  • மூத்த உறுப்பினர் திரு. சிவசூரியர் அவருடைய கர்நாடக இசை பாணியில் மௌத் ஆர்கன்.

  • திருமதி அமேஷா மற்றும் அவருடைய அர்ப்பணிப்பு கொண்ட குழு, ஐந்து தன்மைகள் — நீர், மண், ஆகாயம், நெருப்பு, காற்று — ஆகியவற்றை பிரதிபலிக்கும்  choreographyக்கு இளம் கலைஞர்கள் மிகச் சிறப்பான பரதநாட்டியம்.

  • இலங்கை நடனக் குழு, கண்டிய நடனம் மற்றும் பரதநாட்டியம் ஆகிய இரண்டையும் இணைத்து அரங்கேற்றிய மறக்க முடியாத சிறப்புப் பெறும் நிகழ்வு.

சிறப்பு விருந்தினராக Reid தொகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கும் கௌரவ MP Sally Sito அவர்கள் கலந்து கொண்டது  மிகவும் பெருமைப்படுத்துகிறது. 

சிறப்பு ழகரமான சீராளர்!

 


-சங்கர சுப்பிரமணியன்.



கண்ணுக்கு மையழகு கவிதைக்கு சொல்லழகு என்பதைப் போன்று தமிழிக்கு சிறப்பு ழகரம் அழகு. எத்தனை மொழிகள் இருந்தாலும் தமிழ் மொழிபோல் சிறப்பு ழகரம் போன்ற எழுத்து எம்மொழியிலும் இல்லை. அதன் எழுத்து வடிவமின்றி அதனை நாவைச் சுழற்றி உச்சரிக்கும் முறையும் இணைந்துதான் சிறப்பு ழகரம் என்ற தகுதியை அதற்கு வழங்கியுள்ளது.

தமிழ் என்று எழுதும்போது சிறப்ப ழகரத்தை எழுதினாலும் அதன் மேல் புள்ளி வைக்காது போனால் அது பொருளற்றே நிற்கும். தமிழ்பால் கொண்ட ஈர்ப்பால் தமிழை வாழ்வதற்கு ஏற்ற பணியாகத் தேர்வு செய்தவர் வாழும் பணியாகவும் கொண்டு வாழ்ந்து வருகிறார்.

அவர் வேறு யாருமல்ல உலகத் தமிழர் யாவரும் அறிந்த பல நூல்களுக்குச் சொந்தக்காரரான அன்பரும் நண்பருமான எழுத்தாளர் திரு.  லெட்சுமணன் முருகபூபதி அவர்கள்தான். ஒரு ஆறு என்றால் அது சீராக ஓடிக்கொண்டிராது. அகன்றும் குறுகியும் வேகமாகவும் மெதுவாகவும் சுழல்கள் நிறைந்தும் சுழல்கள் அற்றும் ஓடிக் கொண்டிருப்பதுதான் ஆறு.

கிட்டத்தட்ட நட்பு அவ்வாறே. விருப்பு வெறுப்புக்கள் இருக்கும். கருத்து முரண்பாடுகள் இருக்கும் குற்றம் குறைகள் இருக்கும். வாழ்வில் மேடு பள்ளங்கள் இருப்பது போல் நட்பிலும் இவையெல்லாம் இருக்கத்தான் செய்யும்.

வைர நெஞ்சம் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 பிரபல இயக்குனர் ஸ்ரீதர் தன்னுடைய படங்களுக்கு வசீகரிக்கும்


பெயர்களையே வைப்பதுண்டு. அந்த வரிசையில் 1972ன் ஆண்டு படத்தை வெளியிடுவேன் என்ற வைர நெஞ்சம் கொண்டு அவர் உருவாக்கிய படத்துக்கு வைத்த பெயர் தான் ஹீரோ 72. 


சிவாஜியை ஹீரோவாகப் போட்டு தயாரான இந்தப் படம் ஸ்ரீதரின் திரை வாழ்வில் மறக்க முடியாத வடுவாக நெஞ்சத்தில் நிலைத்தது. காரணம் துரித தயாரிப்பாக உருவாகி வெளிவரும் என்று எதிர்பார்த்த படம் மூன்றாண்டுகள் தயாரிப்பில் இருந்து இழுபட்டு இறுதியில் படத்தின் பெயரும் மாற்றப் பட்ட பின்னரே திரைக்கு வந்தது. 

தமிழ், ஹிந்தி என்று இரு மொழிகளிலும் ஒரே சமயத்தில் படம்

தயாரானது. ஹிந்தியில் ஜித்தேன்திரா, ஹேமமாலினி, அமிதாப்பச்சன் ஆகியோர் நடிக்க , தமிழில் சிவாஜி, முத்துராமன் , பத்மப்ரியா ஆகியோர் வேடம் ஏற்றனர். தமிழிலும் ஹேமாமாலினி நடிப்பதாக இருந்தும் பின்னர் அது நடக்காமல் , ஹேமாவின் முக சாயலை கொண்ட புது முகம் பத்மபிரியா ஹீரோயினாக நடித்தார். இவர்களுடன் பாலாஜி, சி ஐ டி சகுந்தலா , தூலிபாலா ஆகியோரும் நடித்தனர். 

ரசிகர்களின் ரசனை மாறி விட்டது , ஆக்சன் படங்களைதான் விரும்புகிறார்கள் என்ற அபிப்பிராயத்தில் ஓர் அடிதடி படத்தை சிவாஜியின் நடிப்பில் உருவாக்க முனைந்தார் ஸ்ரீதர். ஏற்கனவே ஹிந்தியில் எடுத்த தர்த்தி , அவளுக்கென்று ஓர் மனம் , அலைகள் படங்களின் தோல்வியால் பொருளாதார ரீதியில் பாதிக்கப் பட்டிருந்த ஸ்ரீதர் இந்தப் படத்தின் மூலம் பொருளாதார சரிவில் இருந்து மீளலாம் என்ற நம்பிக்கையில் இப் படத்தை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் கிடைத்த சிவாஜியின் கால்ஷீட் நாளடைவில் கிடைக்காமல் போகவே படம் இழுபடத் தொடங்கியது. 1973ல் ஹிந்திப் படம் தயாராகி வெளியான நிலையில் தமிழ் படம் பாதி தான் முடிந்திருந்தது. 

விரிசலும் உறவும்

 

31 Aug, 2025 | 02:43 PM

லோகன் பரமசாமி

பூகோள அரசியலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இறக்குமதி வரி நெருக்கடிகள் பெரும் பொருளாதார நெருக்குதல்களை உருவாக்கி இருக்கும் இந்த நேரத்தில், அமெரிக்க - இந்திய உறவில் ஏற்பட்ட தளம்பல் நிலை சீன-  இந்திய உறவை சுமூகமாக்கும் நிலைக்குத் தள்ளி உள்ளது.  

இந்திய - சீன உறவில் கடந்த காலங்களில் ஏற்பட்ட விரிசல்கள் புதிய சமாதான புரிந்துணர்வு நோக்கி நகர்ந்து வருகிறன்றன. அண்மையில் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, புது டெல்லிக்கு மேற்கொண்ட பயணம் புதிய திருப்பு முனையை உருவாக்கி உள்ளது.  புதிய வர்த்தக உடன் படிக்கைகள் எட்டப்பட்டுள்ளன ,  சீன, இந்திய நகரங்கள் மத்தியில் நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவும் ஏற்பாடாகி உள்ளது. 

மேலும், ஊடகவியலாளர்களுக்கான பயண அனுமதி வழங்கல், கலாசார பரிமாற்றம், வியாபார வசதிகள் செய்து கொடுத்தல் போன்ற  பல புதிய உறவுகளை வளர்த்துக் கொள்வதற்கான  செயற்பாடுகள் ஆரம்பிக்க ஏற்பாடாகி உள்ளது .  அத்துடன், இன்று சீனா செல்லும் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஷீ  ஜின்பிங்கும் சந்திக்கவுள்ளனர்.

அமெரிக்காவின் உற்ற நண்பனாக கடந்த காலங்களில் இந்தியா  கணிக்க பட்டது. குறிப்பாக, சீனாவின் பிராந்திய விஸ்தரிப்பிற்கு எதிரான ஒரு பதில் பலம் தரக்கூடிய கூடிய ஒரு ஆசிய வல்லரசாக அமெரிக்காவினால் இந்தியா நகர்த்தப்பட்டு வந்தது.  இதற்கு ஏதுவாக ‘நாற்கர நாடுகள் கூட்டு’ என்ற ‘குவாட்’ அமைப்பில் இந்தியா சேர்த்து கொள்ளப்பட்டதற்கு சீன எதிர்ப்பில் இந்தியா துனை நிற்கும் என்ற எண்ணப்பாடே காரணமாக இருந்தது. 

ஆனால், இந்த நிலை இன்று பெரும் மாற்றம் காணும் நிலையை எட்டி உள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்,  இந்தியப் பொருட்கள் மீதான தீர்வை வரியை 50 சத வீதமாக அறிவித்ததை தொடர்ந்து அமெரிக்கா மீது இந்தியா  அதிருப்தி வெளியிட்டது. 50 சதவீத வரி விதிப்பிற்கு அமெரிக்காவால் தரப்பட்ட காரணங்களாக  ரஷ்யாவிடம் இருந்து ஆயுத தளபாடங்களை பெருமளவில் இந்தியா கொள்வனவு செய்வதையும், ரஷ்ய மசகு எண்ணையை இந்தியா அதிகளவில் கொள்வனவ செய்வதையும் அமெரிக்கா குறிப்பிட்டது. 

இலங்கைச் செய்திகள்

 வட, கிழக்கு மனிதப்புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்குமாக நீதிகோரி முல்லையில் கையெழுத்து போராட்டம் வட, கிழக்கு மனிதப்புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்குமாக நீதிகோரி முல்லையில் கையெழுத்து போராட்டம்

கிளிநொச்சியில் மனித புதைகுழிகள், இனவழிப்புக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கையெழுத்து போராட்டம்

வவுனியாவில் சர்வதேச நீதி கோரி கையெழுத்து போராட்டம்

ராஜித சேனாரத்னவுக்கு விளக்கமறியல்!

ஒரு இலட்சத்து 30 ஆயிரம் தமிழ் மக்களின் கையொப்பத்துடன் ஐ.நா செல்கின்றது "நீதியின் ஓலம்"

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு




வட, கிழக்கு மனிதப்புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்குமாக நீதிகோரி முல்லையில் கையெழுத்து போராட்டம் வட, கிழக்கு மனிதப்புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்குமாக நீதிகோரி முல்லையில் கையெழுத்து போராட்டம்

29 Aug, 2025 | 02:05 PM

செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு, கிழக்கு மண்ணில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழிகள் மற்றும் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலைகளுக்கும் நீதியைக் கோருவதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கையெழுத்துச் சேகரிக்கும் செயற்பாடு வடக்கு, கிழக்க மாகாணங்களின் பல பகுதிகளிலும் இடம்பெற்றுவருகின்றன. 

அந்தவகையில் குறித்த கையெழுத்துச் சேகரிக்கும் செயற்பாடு முல்லைத்தீவு நகரில் வெள்ளிக்கிழமை (29) கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஞா.ஜுட்சன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. 

உலகச் செய்திகள்

 யூதர்களுக்கு எதிரான தாக்குதல்கள் : ஈரானியத் தூதுவரை நாடுகடத்தியது அவுஸ்திரேலியா

காசா வைத்தியசாலை மீதான தாக்குதலில் 5 ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழப்பு : தவறுதலான விபத்து என நெதன்யாகு கவலை !

ஜம்மு காஷ்மீரில் மண்சரிவு : உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக உயர்வு

 “சிறுவர்கள் மயானமாக” மாறிவிட்ட காசா! ; பாலஸ்தீனம் போரை நிறுத்துவதற்காகவும் குரல் கொடுங்கள்! - மெலனியா ட்ரம்புக்கு துருக்கியின் முதல் பெண்மணி கடிதம்

சீன ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய பிரதமர் மோடி  


யூதர்களுக்கு எதிரான தாக்குதல்கள் : ஈரானியத் தூதுவரை நாடுகடத்தியது அவுஸ்திரேலியா

Published By: Digital Desk 3

27 Aug, 2025 | 12:36 PM

அவுஸ்திரேலியாவில் யூத சமூகத்திற்கு எதிராக நடந்த தாக்குதல்களுக்கு ஈரான் அரசுதான் காரணம் என அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

சிட்னி மற்றும் மெல்போர்னில் இடம்பெற்ற இரண்டு யூத விரோதத் தாக்குதல்களை ஈரான் அரசு திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டின் பின்னணியில், அவுஸ்திரேலியா ஈரானியத் தூதுவரை நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது. 

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஒரு வெளிநாட்டு தூதரை அவுஸ்திரேலியா நாடு கடத்துவது இதுவே முதல் முறை என அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இருக்கும் வரைக்கும் ஏற்றதைச் செய்வோம்!




   

















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் …. அவுஸ்திரேலியா 


குடும்பம் என்றால் குதூகலம் வேண்டும்
தாத்தா பாட்டியைத் தாங்கிட வேண்டும்
மூத்தோர் வார்த்தை கேட்டிட வேண்டும்
முடியும் வரைக்கும் உதவிட வேண்டும்

உறவுகள் ஒன்றாய் இணைந்திட வேண்டும்
மறைவுகள் நமக்குள் அகன்றிட வேண்டும்
கரவுடன் பழகுதல் மறந்திட வேண்டும்
கனிவுடன் உறவினைப் பேணிட வேண்டும்

செல்வம் பார்க்கா சேர்ந்திட வேண்டும்
சிறந்த பண்பை மதித்திட வேண்டும்
பொய்மை நட்பை உதறிட வேண்டும்
பொங்கும் சினத்தைப் பொசுக்கிட வேண்டும்