நாவலர் பெருமானை நாமென்றும் போற்றுவமே !


 










 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா




சைவத்தைத் தமிழைத்  தம்முயிராய் எண்ணி
வையத்தில் பலரும் வந்தார்கள் தந்தார்கள் 
திருமுறைச் செல்வர்கள் அளவிலாத் தந்தார்கள்
அவர்வழியைத் தொடர்ந்து வந்தார்கள் சிலபேர்கள் 

நாயன்மார் வழியைத் தடம்பற்றி நின்று
நல்லைநகர் நாவலரும் நற்றடத்தைப் பதித்தார் 
நற்றமிழை அணைத்தார் நம்சைவம் காத்தார்
கற்றபடி நடந்தார் கடவுளையே நினைத்தார்

நீறணியும் குடும்பம் நேர்மையுடை குடும்பம்
நாவலரின் குடும்பம் நல்லதொரு குடும்பம்
சைவமொடு தமிழை தாங்கிவிடும் குடும்பம்
சன்மார்கம் நிறைந்த நாவலரின் குடும்பம்

"யார் அந்தத் தீ?"... மெல்போர்ன் அறவேந்தன்

 



பலர் பரவசமடைய ஒரு கவிதை!



-சங்கர சுப்பிரமணியன்.




மருதமலை வாழ் முருகா வா வா
தருவதை அள்ளி எனக்கு தா தா
விரதமிருந்து காண நான் வரவா
நிரந்தரம் உன் நினைவு வேலவா

துள்ளிவரும் மயில்மேல் ஏறிவா
கொள்ளை இன்பம் தந்திட வா
தேவர் படைத்தளபதியே நீ வா
பாவம் போக்கி அருளிடவே வா

அன்னதான பிரபோடு பிறந்தாய்
தன்னலமற்றே நீயும் திகழ்ந்தாய்
கோபமாய் மலமீது ஏறி நின்றாய்
சாபமெலாம் அகற்ற நீ எழுந்தாய்

மூத்த எழுத்தாளர் மாத்தளைச் சோமு அவர்களின் நூல் வெளியீடு

 


       

 



பல்மருத்துவக் கலாநிதி ---  பாரதி இளமுருகனார் 

 

சாகித்திய விருது - தமிழக அரசின் விருது - மதுரை உலக தமிழ்ச் சங்க விருது எனப் பலவித விருதுகளைப் பெற்ற பிரபல மூத்த எழுத்தாளராகிய மாத்தளைச் சோமு அவர்களின் 100 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு நூலின் வெளியீடு கடந்த 30- 11 – 2025 ஞாயிற்றுக் கிழமை சிட்னியில் அமைந்துள்ள துங்காபி புனித அந்தோனியார் தேவாலய மண்டபத்திலே கோலாகலமாக அரங்கேறியது. அரங்கு நிறைந்த தமிழ் ஆர்வலர்களுடன் விழா ஆரம்பமாகியது. மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய விழா வழமைபோலத் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் இசைத்ததைத் தொடர்ந்து வரவேற்புரையை தமிழ் ஆர்வலர் வசந்தராஜா அவர்கள் (தலைவர் - கம்பலாந்து தமிழர் கழகம்) சிறந்த முறையிலே  வழங்கினார்.அவரின் கம்பீரமான பேச்சு நடை எல்லோரையும் கவர்ந்திருந்தது. சிட்னியிலே பல தமிழ் நிகழ்ச்சிகளிலே பங்கேற்றுத் தனது ஆளுமையை நிலைநாட்டியவர் திருவாளர் ம. தனபாலசிங்கம் அவர்கள். அவரே இந்த விழாவுக்குத் தலைமை வகித்து ஒரு சிறந்த உரையை அற்புதமாக வழங்கினார். வழமைபோல அவரின் பேச்சு தனித்துவமானதாக அமைந்திருந்தது.  தொடர்ந்து     கலாபூசணம் நாவை குமரிவேந்தன் அவர்கள் சிறப்பான வகையிலே வாழ்த்துரை வழங்கினார். வளர்ந்துவரும் சிறந்த எழுத்தாளர் ஐங்கரன் விககினேஸ்வரா அவர்களின் அற்புதமான வாழ்த்துரை பாராட்டிற்கு உரியது.

அம்பலம் - சிறுகதை - கே.எஸ்.சுதாகர்

வயது முதிர்ந்தோர் இல்லத்தில் பிரபல எழுத்தாளர் நிரஞ்சன் இருந்தார். அவரைச் சந்திப்பதற்காக பத்திரிகை நிருபரான தணிகாசலம் சென்றிருந்தார்.

“எழுத்தாளர் நிரஞ்சனைப் பாக்க வேணும்…”

“செகண்ட்  ஃப்ளோர் மூண்டாவது ரூமுக்குப் போங்க…”

தணிகாசலம் லிப்ற் இருக்கத்தக்கதாக படிகளின் வழியே ஏறி மேலே போனார். அறை திறந்து இருந்தது. உள்ளே உறக்கத்தில் இருந்தார் நிரஞ்சன். அவரை எழுப்புவதா விடுவதா என்ற தயக்கத்தில், அவரின் கட்டிலுக்கு எதிராக இருந்த கதிரையில் அமர்ந்து கொண்டார்.

நிரஞ்சனின் முகத்தில் சவரம் செய்யப்படாமல் வெள்ளி முடிகள் எங்கும் பரவிக் கிடந்தன. படுக்கையிலும் தனது மொட்டையை மறைப்பதற்காக தொப்பி அணிந்திருந்தார். அவரை முதன்முதலாகச் சந்தித்தது அப்படியே நெஞ்சில் நிழலாட்டமாக இருந்தது தணிகாசலத்திற்கு. தொப்பியைக் முழுகும்போதும் கழட்ட மாட்டாரோ?

இருவருக்கும் வயதில் பெரிதளவு வித்தியாசம் இல்லை. ஆனால் மூப்பும் பிணியும் வயது பார்த்து வருவதில்லை. அவர்களின் பரம்பரை அலகுகள், உணவுப் பழக்க வழக்கங்கள் போன்ற பல சங்கதிகள் அவற்றில் அடங்கியிருக்கின்றன. நிரஞ்சன் உடலாலும் மனதாலும் கொஞ்சம் தளர்ந்து போய் விட்டார். மனித வாழ்வின் நிலையான துன்பங்களில் ஒன்றான நோய் அவரை வாட்டி வதைக்கத் தொடங்கிவிட்டது. அவர் ஒரு தண்ணிச்சாமி. அதுவே அவரை நோயாளியாகவும் ஆக்கியிருக்கலாம். நீரிழிவும் கொலஸ்ரோலும் ஒவ்வொரு பக்கமாகப் பிடித்திழுக்க, ஒரு தடவை ஸ்ரோக்கும் வந்திருந்தது. மனைவி இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. பிள்ளைகள் வேலைக்குப் போவதால் இதுவே பாதுகாப்பான இடம் எனக் கருதி, இங்கே கொண்டு வந்து விட்டுவிட்டார்கள். இடையிடையே வந்து பார்த்து உணவும் குடுத்துவிட்டுச் செல்வார்கள்.

தமிழ் மக்களுக்கான அந்த முதியோர் காப்பகத்தில் நிரஞ்சனுடன் ஆணும் பெண்ணுமாக மேலும் பதினான்கு பேர்கள் இருக்கின்றார்கள்.

நிரஞ்சன் `வாசல்’ என்ற சிறுகதைத்தொகுப்பையும், `ஊர்வலம்’ என்ற புதுக்கவிதைத் தொகுப்பையும் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் வெளியிட்டிருக்கின்றார். அதன் பின்னர் உதிரிகளாகச் சில கதைகளும், புதுக்கவிதைகளும் எழுதியிருக்கின்றார். ஆனால் தொகுப்பில் போடுமளவிற்குப் போதுமானதாக இருக்கவில்லை. அந்த உதிரிகளிலும் சில இலக்கியத் தரமில்லாமல் இருந்தன. ஆனால் `வாசல்’ தொகுப்பு சிறுகதை இலக்கியத்திற்கே ஒரு வாசல் என்றும், `ஊர்வலம்’ தொகுப்பு புதுக்கவிதையின் ஒரு திறவுகோல் எனவும் இன்றளவில் பலராலும் சிலாகிக்கப்பட்டு வருகின்றன. சில பல்கலைக் கழகங்களில், இவை இரண்டும் இன்னமும் பாட நூல்களாக இருக்கின்றன.

திடீரென விழித்துக் கொண்ட நிரஞ்சன், படுக்கையில் இருந்து எழுந்தார்.

“சொன்னபடி வந்துவிட்டீர்கள். நான் சற்றே அயர்ந்து போனேன்” சிரித்துக் கொண்டார் நிரஞ்சன்.

“பேட்டியைத் தொடங்கலாமா?” என்றார் தணிகாசலம்.

பரந்தாமன் தலைமையில் பட்டிமன்றம்!


-சங்கர சுப்பிரமணியன்.

 


பேச்சாளர்கள் பேசுவதை நாம் கேட்டிருப்போம். ஒவ்வொருவர் ஒருவகை. எந்தவித முன்னேற்பாடும் இன்றி மணிக்கணக்கில் பேசுவார்கள். இவர்கள் ஒருகாலத்தில் சென்னை கடற்கரை ஒன்றில் இரண்டு மணி நேரம் உரையாற்றிவிட்டு அப்படியே அதையடுத்து அடுத்த கடற்கரைக்கு சென்றும் இரண்டு மூன்று மணி நேரம் பேசுவார்கள்.


இவர்கள் பேசுவதை கேட்ட கூட்டம் அப்படியே அடுத்த கடற்கரையில் நிழ்த்தும் உரையக் கேட்க செல்லும். பேச்சாளரின் உரை அங்கு முற்றிலும் வேறுபட்டு இருக்கும். இது ஒருவகை. சிலர் பேச்சை முன்னமே தயாரித்து வைத்துக் கொண்டு கையில் தாள் ஏதுமின்றி மணிக்கணக்கில் பேசுவார்கள். இப்படி ஒருவகை. சிலர் பக்கம் பக்கமாய் எழுதி வைத்துக்கொண்டு அத்தனை பக்கங்களையும் பார்த்து படித்தபடி பேசுவார்கள்.

இன்னும் சிலர் ஓரிரு பக்கங்களையை வைத்துக்கொண்டும் சிலர் ஓரிரு குறிப்புக்களை வைத்துக் கொண்டும் மணிக்கணக்கில் பேசுவார்கள். இன்னும் சிலர் பேசும் போதே பெரிய பின்னணிப்பாடகர் என்ற நினைப்பில் பாடவும் செய்வார்கள். எல்லாம் காலத்தின் கோலமே. இவர்களுக்கிடையில் ஒரு துண்டுச் சீட்டில் நான்கே நான்கு வாக்கியங்களை எழுதி வைத்துக் கொண்டு அதையும் பார்த்து பார்த்துப் பேசுவார்கள்.

இப்போது பட்டிமன்றத்துக்கு வருவோம். பேச்சாளர்கள் பட்டிமன்றத் தலைவர்களிலும் பலவகை இருக்கிறார்கள். சில பட்டிமன்றத் தலைவர்கள் எந்த முன்னேற்பாடும் இன்றி அந்த நேரத்தில் மனதில் தோன்றுவதை யதார்த்தமாகப் பேசுவார்கள். சிலர் நகைச்சுவையாக பட்டிமன்றத்தை நடத்திச் செல்வார்கள். இன்னும் சிலர் அடுக்குமொழி பேசி பட்டிமன்றத்தை நடத்திச் செல்வார்கள்.

குடிக்கும் காபியிலேயே நம்மவர்கள் லைட் காபி, டபுள் லைட், ஸ்ட்ராங்க் காபி, டபுள் ஸ்ட்ராங்க் மற்றும் ஃபில்டர் காபி என்று இருக்கும்போது பேச்சுகளிலும் பட்டிமன்றங்கிளலும் பலவகை இருக்கக்கூடாது என்று சட்டமில்லையே என்ற எண்ணத்தோடு கதைக்குள் நுழைவோம்.

பட்டமன்றத் தலைவர் பரந்தாமன் பட்டி தொட்டியென்றும் பெயர் பெற்றவர். இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்பதுபோல ஏற்றம் பெற்றவர். இவர் நல்ல தலைவர்தான் ஆனால் பேச்சு படித்து வைத்து ஒப்புவித்தல் போல் இருக்கும். ஏற்றம் இறக்கம் நகைச்சுவை சொந்தக்கருத்து என்று சுத்தமாய் எதுவும் இருக்காது.

தமிழன் அன்று சீனாவில் வணிகம்! தமிழன் இன்று சீனாவில் பயணம்!! தொடர்- 6…..சங்கர சுப்பிரமணியன்.


பொய் சொல்பவர்கள் தொடர்ந்து பொய் சொல்வதையே வாடிக்கையாக வைத்திருக்கும்போது அவர்கள் சொல்வது எல்லாம் பொய்யாகவே தெரியும். சமூகத்தில் அவர்களின்மேல் நம்பகத் தன்மை போய்விடும். நான் என் தவறை உணர்ந்து விட்டேன். சொர்கத்தைப் பொருத்தவரையில் எல்லா இடத்திலும் தெளிவு இல்லாமலேதான் இருக்கிறது.


தெளிவுமட்டும் இருந்தால் அரசியல்வாதிகள் கோடிக் கணக்கில் வைத்திருக்கும் பணத்தை ஸ்விஸ் பாங்கிலும் அந்நிய நாட்டிலும் முதலீடு செய்வதை விட்டு குடும்பம் உற்றார் உறவினர் அனைவருக்கும் சொர்க்கத்தில் முன்பதிவு செய்திருப்பார்கள். அதுமட்டுமா? அங்கு சென்று ரியல் எஸ்டேட் தொழில் தொடங்கியும் இருப்பார்கள்.

அங்கிருக்கும் பூர்வகுடி மக்களான தேவர்களின் நிலங்களை எல்லாம் வாங்கி அவர்களை சொந்த நாட்டிலேயே நிலமற்றவர்களாக ஆக்கிவிடுவார்கள். அது மட்டுமா? அங்கு பூமியிலுருந்து சொர்க்கம் சென்ற மனிதர்களான புதிதாக குடியுரிமை பெற்றவர்களின் நிலைமையும் பரிதாபம்தான். என்னதான் பூமியில் இருந்து சொர்க்கம் சென்றாலும் அவர்கள் முப்பத்து முக்கோடி தேவர்களோடு சேரமுடியாது. இரண்டாந்தர குடிமக்கள் போன்றுதான் இருக்க வேண்டியதிருக்கும்.

ஏனென்றால் அங்கு கணக்கெடுப்புகள் நடக்காது. அப்படி

கணக்கெடுக்கும் பட்சத்தில் புதிதாக சென்றவர்களின் எண்ணிக்கையால் அங்குள்ள பதவி மற்றும் தேவர்களின் ஆட்சி மாறும் நிலை ஏற்படலாம்.

பூர்வீக குடிகளான தேவர்களுக்கு இந்த நிலை என்பதால் புதிதாக பூமியிலிருந்து சொர்க்கம் சென்று குடியுரிமை பெற்றவர்கள் நிலை பற்றி எண்ணிப்பார்க்க வேண்டும். உண்மையில் சொர்க்கம் இருந்து மறைந்த அரசியல்வாதிகள் எல்லாம் அங்கு சென்றிருந்தால் என்னவாகி இருக்கும்? நான் எல்லா அரசியல்வாதிகளையும் சொல்லவில்லை.

நேர்மையானவர்கள் இதில் விதிவிலக்கு. நிலைமையே தலகீழாக மாறி இருக்கும். அந்த அரசியல்வாதிகளிடம் தேவர்கள் நிலங்களை இழந்து உரிமைகளை இழந்து அகதிகளாக பூமிக்கு வந்திருப்பார்கள். அப்படி நடக்காததால் சொர்க்கம் இருக்கிறதா என்றெல்லாம் சந்தேகம் வருகிறது. ஏனென்றால் அரசியல்வாதிகள் பெருஞ்செலவில் செய்யும் யாகங்களுக்கும் பரிகார பூஜைகளுக்கும் பலன் கிடைக்காமலா போயிருக்கும்?

மன்னவன் வந்தானடி - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 சிவாஜி ஏராளமான படங்களில் சீரியஸ் வேடங்களில்


நடித்திருக்கிறார். சில படங்களில் கோமாளியாகவும் நடித்திருக்கிறார். ஆனால் சீரியஸாகவும் , கோமாளியாகவும் அவர் நடித்த படம்தான் மன்னவன் வந்தானடி . ஐம்பது வருடங்களுக்கு முன் வெளிவந்த இந்தப் படத்துக்கு இது பொன் விழா ஆண்டு!  

மன்னவன் வந்தானடி படத்தில் ஆரம்ப காட்சிகளில் ஜிகினா ஆடை அணிந்து குதிரை மீது ஏறி சிவாஜி வருகிறார். வித விதமான மொழிகளில் பேசுகிறார். நாட்டை திருத்தப் போகிறேன் என்று பாடுகிறார் . தேடி வரும் காதலை மறுக்காமல் எற்கிறார் . தன்னுடன் இணையும் இனொரு கோமாளியையும் உதவியாளராக ஏற்கிறார் . ஆனால் திடீர் என்று காணாமல் போய் விடுகிறார். அதன் பிறகு கோட்டும் சூட்டும் போட்டுக் கொண்டு பென்ஸ் காரில் வந்து இறங்குகிறார். அதில் இருந்து மீதிப் படம் தொடர்கிறது. 

 கோமாளியாக வந்து ஆடிப் பாடி சிரிக்க வைக்கும் சிவாஜி பின்னர்

செல்வந்தராக வரும் போது பார்வையாலேயே மிரள வைக்கிறார். நம்பியாரையும் ஆட்டி படைக்கிறார். சாதாரண கதைக்கு கூட தன் நடிப்பால் மெருகூட்ட முடியும் என்பதை நிரூபிக்கிறார் சிவாஜி. 

 படத்தில் இரண்டு வித பாத்திரத்தில் சிவாஜி வந்த போதும் படம் முழுதும் வந்து மிரட்டுபவர் எம் . என் .நம்பியார். அப்பப்பா பயங்கர வில்லன் . உயிரோடு ஆளை பிடித்து புலிக் கூண்டில் தள்ளி புலிக்கு இரையாகும் கிராதகன் . இவரை பழி வாங்கவே சிவாஜி இரண்டு அவதாரங்களை எடுக்கிறார். கோமாளி சிவாஜி நடிப்பு நல்ல தமாஷ் . அவரோடு சேர்ந்த நாகேசும் சிரிக்க வைக்கிறார் . 

இலங்கைச் செய்திகள்

சீரற்ற வானிலை ; உயிரிழந்தோர் எண்ணிக்கை 639 ஆக அதிகரிப்பு

சீரற்ற வானிலை: 4.95 இலட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 17 இலட்சம் பேர் பாதிப்பு - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

கிண்ணியா பல்கலைக்கழக விஞ்ஞான நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட காணியை வெளிவிவகார அமைச்சுக்கு வழங்க தீர்மானம்

மலையக தமிழ் மக்களை வடக்கில் வாழ்வதற்கு அனுமதிக்க வேண்டும் - சிவபூமி அறக்கட்டளைத்தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய இராணுவத்தால் கள வைத்திய சேவை!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் 100 மி.மீ. மழைவீழ்ச்சி மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

வடக்கு - கிழக்கு மலையகத்துக்கான புகையிரத சேவைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான புகையிரத திணைக்களத்தின் அறிவிப்பு

டெய்சி பாட்டிக்கு நாளை மனநலப் பரிசோதனை ; யோஷித ராஜபக்ஷ, டெய்சிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

யாழில். 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி தொகை பெறுவோரின் பெயர் பட்டியல் இன்று முதல் காட்சிப்படுத்தப்படும்!



சீரற்ற வானிலை ; உயிரிழந்தோர் எண்ணிக்கை 639 ஆக அதிகரிப்பு

Published By: Digital Desk 1

12 Dec, 2025 | 12:06 PM

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 639 ஆக அதிகரித்துள்ளது.

கண்டி மாவட்டத்திலேயே அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கண்டி மாவட்டத்தில் 234 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து, பதுளை மாவட்டத்தில் 90 பேரும், நுவரெலியாவில் 89 பேரும், குருநாகலில் 61 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 37 பேரும் உயிரிழந்துள்ளனர்.

உலகச் செய்திகள்

காசாவில் ‘பைரன்’ புயல் தாக்கம் ; 14 பேர் பலி

உக்ரைனில் எரிபொருள் நிலையங்களை குறிவைத்து ரஷ்யா ட்ரோன் தாக்குதல் : 90 ஆயிரம் பேர் மின்சாரமின்றி தவிப்பு

மியன்மாரில் வைத்தியசாலை மீது தாக்குதல் ; 34 பேர் உயிரிழப்பு!

இந்தோனேசிய வெள்ள பேரழிவு ; உயிரிழப்பு 1,000ஐ கடந்தது - ஒரு மில்லியனுக்கு அதிகமானோர் இடம்பெயர்வு

தமிழகத்திற்கு மட்டுமல்ல புதுச்சேரி மக்களுக்கும் குரல் கொடுப்பேன்- விஜய்

ஜப்பான் நிலநடுக்கம் ; 30 பேர் காயம் 


காசாவில் ‘பைரன்’ புயல் தாக்கம் ; 14 பேர் பலி 

13 Dec, 2025 | 09:47 AM

காசா பகுதியில் தாக்கிய ‘பைரன்’ புயலால் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்த பகுதியில் கடும் காற்று, கனமழை மற்றும் முன்பு இஸ்ரேலிய தாக்குதலில் சேதமடைந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால், குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்தாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக அங்கு வாழும் மக்களின் வீடுகள் சேதமடைந்துள்ளதால் சுமார் 8.5 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 

ஸ்ரீ ஹனுமத் ஜயந்தி 19/12/2025