மரண அறிவித்தல்

 



மரண அறிவித்தல்

 


 

 

சிட்னியை வதிவிடமாகக்கொண்ட திருமதி தனவதி கனகரத்தினம் அவர்கள் 11.5.2025 ஞாயிறு அன்று அவுஸ்திரேலியாவில் இறைபதம் அடைந்தார்

அன்னார் காலஞ்சென்ற கண் சத்திர சிகிச்சை நிபுணர் திரு ராஜதுரை கனகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான SM கந்தையா, திலகவதி அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், மற்றும் ருக்மணியின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற லீலாவதி, காலஞ்சென்ற பத்மநாதன், பத்மாவதி, ராமநாதன், ஸ்ரீகரநாதன் ஆகியோரின் ஆருயிர் சகோதரியும், சாந்தகுமாரி, சிவகுமாரி, செல்வகுமாரி ஆகியோரின் அருமைத் தாயாரும், கனகராஜா, தேவதாசன், சதீஷ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,, அர்ஜுனா-கம்சாயினி, அபிராமி, அமிர்தன், தினேசன், திவ்யன், வரலிகா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரிகைகள் 18/05/2025 ஞாயிற்றுக்கிழமை

Magnolia Chapel

Macquarie Park Cemetery and Crematorium

Cnr Delhi Rd &, Plassey Rd, Macquarie Park NSW 2113

இல் காலை 9:30 மணி முதல் 11:30 மணி வரை இடம்பெற்று தொடர்ந்து தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையோடு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் குடும்பத்தினர்

தொடர்பு: +61 405 016 629

அன்னையள் என்றும் அன்பின் உருவாவாள் !




















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா 




ஐயிரண்டு திங்கள் சுமப்பவள் அன்னை
மெய்வருந்தி எம்மை வளப்பவள் அன்னை
கண்ணிமையா எம்மைக் காப்பவள் அன்னை
கருணையின் வடிவா யானவளும் அன்னை 

பொய்மையிலா அன்பை பொழிபவள் அன்னை
வாய்மையினை மனதில் நிறைப்பவள் அன்னை
தாய்மையெனும் பெருமை பெறுபவளும் அன்னை 
தரணியிலே தெய்வ வடிவானவளும் அன்னை 

கருவுற்றால் மகிழ்வை காட்டுபவள் அன்னை
கருவளர்ந்தால் அதனைக் காப்பவளும் அன்னை
கருகலைந்தால் உள்ளம் கலங்குபவளும் அன்னை 
கருவுருவாய் மலர கடவுளையே நினைப்பாள்

தகுதியின்றிப் புகழைத் தேடாதே – அன்பு ஜெயா (பா வகை: வஞ்சி மண்டிலம்)

 

போற்றும் செயலினால் புகழ்வரும்

ஏற்றம் பெற்றிட எண்ணிடு

போற்றும் செயல்களே புரிந்துநீ

ஏற்றம் பெற்றுமே இன்புறு!       (1)

 

உன்னை உயர்த்திடும் உழைப்புமே

என்றும் அவ்வழி ஏற்றிடு,

நன்றாய்ப் போற்றிடும் நாடுமே

இன்பம் பெருகிடும் என்றுமே!     (2)

 

உழைப்பால் ஆயிரம் உயர்ந்தவர்

தழைத்து வாழ்ந்திடும் தளமிது,

பிழைகள் விலக்கிநீ பெரிதுமே

உழைத்தால் போற்றிடும் உலகமே!   (3)

   -----------------------

 

வினை தன் கடமையைச் செய்யும்!



-சங்கர சுப்பிரமணியன்.




சிலசமயங்களில் நாம் ஒரு வார்த்தைகூட சொல்ல வேண்டிய அவசியமில்லை. வினை நமக்காக தன் கடமையைச் செய்யும். சில மதங்களில் கர்மா என்று இந்த வினையைச் சொல்கிறார்கள். சிலர் கர்மாவைத்தான் கடவுள் என்கிறார்கள். நான் சமீபத்தில் படித்த ஒரு செய்திதான் எனது கற்பனையுடன் கலந்து கதையாக உங்கள் முன் உலாவவருகிறது.

கோடைகாலம் தொடங்கி வெப்பம் தன் கைவரிசைய மும்முரமாக காட்டிக் கொண்டிருந்தது. வெப்பத்தின் அதிகரிப்பால் மளமளவென்று மெர்குரி நாற்பதை தாண்டிச் சென்றுகொண்டிருந்தது. மெல்பனில் ஒரு சாதாரணப் பல்பொருள் அங்காடி. பெயருக்கு குளிரூட்டம் என்ற பெயரில் ஏதோ ஓடிக்கொண்டிருந்தது.

பொருட்களை வாங்கிவிட்டு வெளியில்
வருமிடத்தில் பணம் கொடுப்பதற்காக நான்கு சேவை முகப்புகள் இருந்தன. நான்கிலும் பணிப்பெண்கள் பொருட்களின் விலையைச் சரிபார்த்து பணம் பெற்றுக் கொண்டிருந்தனர். கிறிஸ்துஸ் காலமாக இருந்ததால் நல்ல கூட்டம். காலை ஏழு மணிக்கு வந்தவர்கள் மூன்று மணிக்கு பணிமுடிய இன்னும் முக்கால் மணிநேரமே இருந்தது.

முருகபூபதியின் காலமும் கணங்களும் மின்னூல் - ( முதல் பாகம் )

படைப்பிலக்கியவாதி முருகபூபதி எழுதி விரைவில் வெளியாகவுள்ள புதிய நூல்  காலமும் கணங்களும்  - முதல் பாகத்தின் முன்னுரையும்,  இத்தொகுப்பில் இடம்பெற்றிருப்பவர்களும்.  

 

                           முன்னுரை

 


லங்கையிலிருந்த காலப்பகுதியிலும், அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த பின்பும், நான் மிகவும் நேசித்த பல கலை இலக்கியவாதிகளையும் ஊடகவியலாளர்களையும் சமூகப்பணியாளர்களையும் அடுத்தடுத்து இழந்துவிட்டேன். எனினும் அவர்கள் நினைவுகளாக என்னுள்ளே  வாழ்கின்றார்கள்.

நினைவுகளுக்கு இழப்பில்லை. அவை சாசுவதமானவை. எனது நேசர்களின் மறைவு துயரம்கப்பிய வெறுமையை என்னுள் ஏற்படுத்தியபோதிலும் - அவர்களை சந்தித்த காலமும் - உரையாடிய கணங்களும் என்றென்றும் ஊற்றாகச் சுரந்து பரவசப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. அவர்கள் என்னுடன் தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கும் குருட்டுணர்வுடன்  காலத்தையும் கணங்களையும் கடந்துகொண்டிருக்கின்றேன்.

அவுஸ்திரேலியாவுக்கு 1987 இல் வந்த பின்னரும்  எனது எழுத்துப்பணிகளை தொடர்ந்தபோது பிரான்ஸிலிருந்து வெளியாகும் பாரிஸ் ஈழநாடுஇதழில் நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் என்ற தலைப்பில் தொடர் ஒன்றை எழுதத் தொடங்கினேன்.

இந்த இதழின் ஆசிரியர் நண்பர் திரு.எஸ்.எஸ்.குகநாதன், கலை,


இலக்கியவாதிகளைப்பற்றிய நினைவுகளைப்  அந்தத் தொடரில் பதிவு செய்வதற்கு களம் அமைத்துத் தந்தார்.

 இரகசியமணி கனகசெந்திநாதன், கே.டானியல், மு.தளையசிங்கம், க.கைலாசபதி, எச்.எம்.பி.மொஹிதீன், கே.ஜி.அமரதாஸ, நவசோதி, காவலூர் ஜெகநாதன், என்.எஸ்.எம். இராமையா, ருஷ்ய இலக்கியவாதி விதாலி ஃபூர்ணிக்கா, ஈழவாணன், நெல்லை.க.பேரன் ஆகியோர் என்னிடத்தில்   விட்டுச்சென்ற நினைவுகளை பதிவு செய்து வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

இவற்றில் சில வெவ்வேறு இதழ்களில் மறுபிரசுரம் செய்யப்பட்டதாகவும் அறிந்தேன். இத்தொடர் சிட்னியிலிருந்த நண்பர், எழுத்தாளர்  மாத்தளைசோமுவை வெகுவாகக் கவர்ந்தமையால் தனது தமிழ்க்குரல்பதிப்பகம் ஊடாக  நூல் வடிவில் வெளியிட விரும்பினார். விரும்பியவாறே பதிப்பித்தார். 

இந்த நூலுக்கு மெல்பனிலும் சிட்னியிலும் அறிமுகம் கிடைத்த சமயம், ஆரோக்கியமான வரவேற்பும் விமர்சனங்களினூடாக வந்தன.