தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில்

 தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை  அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு

ஆலமரம் நிற்கிறது !


 










மகாதேவ ஐயர் 
ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண்  .... அவுஸ்திரேலியா ]

 

   

  அழகான ஆலமரம் 

          கிளைவிட்டு நின்றதங்கே

   விழுதெல்லாம் விட்டுஅது

          வேரோடி நின்றதங்கே

 

   ஆலமர நிழல்தேடி

           அனைவருமே வருவார்கள்

   வேலையில்லா நிற்போரும்

            விரும்பி வந்திருப்பார்கள்


   காலைமாலை என்றின்றி

          காளையரும் வருவார்கள்

   சேலையுடன் பெண்கள்வந்து

           சிரித்து விளையாடிடுவர்

இலங்கையின் மூத்த எழுத்தாளர் கே. கணேஷ் நூற்றாண்டு முருகபூபதி

 மின்னஞ்சல்  யுகம்  வந்த பின்னர்  காகிதமும்  பேனையும்  எடுத்து


கடிதம்  எழுதி  தபாலில்  அனுப்பும்  வழக்கம்  அரிதாகிவிட்டது.

 தொலைபேசி, கைப்பேசி,  ஸ்கைப், டுவிட்டர்,  வாட்ஸ்அப் , முகநூல், மெய்நிகர்  முதலான   சாதனங்கள்  விஞ்ஞானம்  எமக்களித்த வரப்பிரசாதமாகியிருந்தபோதிலும் , அந்நாட்களில்  பேனையால் எழுதப்பட்ட   கடிதங்கள்  தொடர்பாடலை  ஆரோக்கியமாக               வளர்த்து, மனித  நெஞ்சங்களிடையே  உணர்வுபூர்வமான  நெருக்கத்தை வழங்கின.

 உலகம்  கிராமமாகச் சுருங்கிவரும்  அதே  சமயம்,   மனித  மனங்களும் இந்த   அவசர  யுகத்தில்  சுருங்கி வருகின்றன.

 இலக்கியங்கள்   மனிதர்களை  செம்மைப்படுத்தி


மேன்மையுறச்செய்துள்ளன. அவ்வாறே  கடித  இலக்கியங்களும் படைப்பாளிகளிடத்தே  அறிவுபூர்வமாகவும்  உணர்வு                           பூர்வமாகவும் நெருக்கத்தையும் தேடலையும் வளர்த்து வந்துள்ளன.

 இலங்கையில் மலையகம் தலாத்துஓயாவில்  வாழ்ந்து  மறைந்த எமது இனிய   இலக்கிய   நண்பர்  கே.கணேஷ் அவர்கள்   சுவாமி விபுலானந்தர், சிங்கள  இலக்கிய  மேதை  மார்டின்  விக்கிரமசிங்கா                      ஆகியோருடன் இணைந்து   ஒருகாலத்தில்  அகில  இலங்கை எழுத்தாளர்   சங்கத்தை ஸ்தாபித்தவர்.   பின்னர்  இலங்கை  முற்போக்கு  எழுத்தாளர் சங்கத்தை 1950 களில்  உருவாக்கியவர்.

அப்பொழுது  நான்  இந்த உலகத்தையே எட்டிப்பார்க்கவில்லை.   

 கே.கணேஷ் ஈழத்து  தமிழ்  இலக்கிய முன்னோடி, படைப்பாளி, மொழிபெயர்ப்பாளர். எனக்கும்   அவருக்கும்  இடையே  மலர்ந்த  உறவு  தந்தை -  மகனுக்குரிய   நேசத்தை  உருவாக்கியிருந்தது.   இதுபற்றி      விரிவாக, முன்னர்   எழுதிய  காலமும்  கணங்களும்  என்ற  தொடர்    பத்தியில் குறிப்பிட்டிருக்கின்றேன்.

படித்தோம் சொல்கின்றோம் : வேடர் நாட்டில் சிங்கங்களும் புலிகளும் ! தி. லஜபதிராய் எழுதிய - வரலாற்றை வழிகாட்டியாகக் கொள்ள விரும்புவோர் படிக்கவேண்டிய நூல் !! முருகபூபதி


இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், தோன்றிய அனைத்து சிங்கள – தமிழ் – முஸ்லிம் அரசியல் கட்சிகளும் பல சந்தர்ப்பங்களில் பிளவடைந்துள்ளன. அல்லது நீதிமன்றங்களைச் சந்தித்துள்ளன.

ஆயுதம் ஏந்திப்போராடிய தமிழ், சிங்கள இயக்கங்களும் அரசியல் ரீதியாக தமது இனத்திற்கு விடிவைத் தேடித் தருவதற்காகவே அவ்வாறு ஆயுதம் ஏந்தியதாகச் சொன்னாலும்,  ஆளும் அதிகார வர்க்கத்தினால்தான் அடக்குறைக்கு ஆளாகின. ஆனால்,  இவ்வியக்கங்கள் தமது இயக்க உறுப்பினர்களினால், நீதிமன்றத்தை நாடவில்லை.

தம்மிடமிருந்த ஆயுதங்களினாலேயே தீர்வுகளை கண்டடைய முற்பட்டனர். இவர்களுக்கு நீதிச்சட்டங்களில் நம்பிக்கை இருக்கவில்லை. ஆயுதங்களை மட்டுமே நம்பினர் !

சமகாலத்தில், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும்,  தமிழரசுக்கட்சியும்,


தமிழர் விடுதலைக்கூட்டணியும் தங்கள் உட்கட்சி விவகாரங்களை தீர்த்துக்கொள்வதற்காக நீதிமன்றத்தை நாடியிருக்கின்றன.

இந்தப்பின்னணிகளுடன்தான்,  தமிழ்த்தேசிய விடுதலைக்கு ஆயுதப்போராட்டம்தான் தீர்வு, என்ற நோக்கத்தை இலக்காகக்கொண்டிருந்த ஈ.பி. டி. பி, ஈ.பி. ஆர். எல். எஃப், புளட், டெலோ, ஈரோஸ்  ஆகிய இயக்கங்கள் ஜனநாயக வழிக்குத் திரும்பி, தேர்தல்களிலும் போட்டியிடத் தொடங்கின.

1971 இல் நடந்த ஏப்ரில் கிளர்ச்சியை முன்னெடுத்த மக்கள் விடுதலை முன்னணி என்ற ஜே. வி. பி. இயக்கமும் அக்காலப்பகுதியில் தடைசெய்யப்பட்டு, பொது மன்னிப்பின்பேரில் அதன் முக்கிய தலைவர்கள் 1977 இல் சிறையிலிருந்து விடுதலையாகி, மீண்டும் ஃபீனிக்ஸ் பறவைபோன்று எழுந்து, ஜனநாயக வழிக்குத் திரும்பி தேர்தல்களிலும் ஈடுபட்டு,  1983 ஆம் ஆண்டு அன்றைய ஜே. ஆர். ஜெயவர்தனாவின் ஐ. தே. க. அரசின் பதவிக் காலத்தில் மீண்டும் தடைசெய்யப்பட்டது,  1987 இல் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்து கிளர்ச்சிகளை நடத்தியதையடுத்து,  இவ்வியக்கத்தினர் கொடுரமாக அழிக்கப்பட்டனர்.

அதன் தலைவர்கள் ரோகண விஜேவீரா, உபதிஸ்ஸ கமநாயக்க, சாந்த பண்டார, மாரசிங்க உட்பட பலர் கொல்லப்பட்டனர்.

சகோதர தமிழ் விடுதலை இயக்கங்களை கொன்றழித்துவிட்டு,  ஈழத்தமிழ் மக்களின் ஓரே ஒரு பேரியக்கம் தமது தமிழ் ஈழவிடுதலைப்புலிகள்தான் என்று பல ஆண்டுகளாக வடக்கினையும் கிழக்கினையும் தங்கள் கட்டுப்பாட்டிலும் - தென்னிலங்கையை பதட்டத்திலும்  வைத்திருந்த வேலுப்பிள்ளை பிரபாகரனது போராட்டமும் கடந்த 2009 ஆம் ஆண்டு மேமாதம் 18 ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்தது.

கடந்த பதினைந்து ஆண்டு காலமாக தங்கள் தமிழ்த்தேசியத்தலைவர் மீண்டும் வருவார்… என்று அவரது விசுவாசிகள் பலர் இந்தியாவிலும், இலங்கையிலும், புலம்பெயர் தேசங்களிலும் நம்பிக்கொண்டிருந்த பின்னணியில், அந்தத்தலைவரின் மூத்த சகோதரர் மனோகரன்,      இறுதிக்கட்டப்போரில் தனது தம்பி பிரபாகரனும், அவரது குடும்பத்தினரும் இறந்துவிட்டனர் எனவும், அதற்காக வீரவணக்கம் செலுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முப்பது ஆண்டுகாலப் போருக்குப்பின்னர்,  பதினைந்து ஆண்டு காலம் மற்றும் ஒரு போரினை தமிழின பற்றாளர்கள்  இலங்கை அரசுக்கு எதிராக தொடர்ந்தும்  நடத்தி வருகிறார்கள்.

சிறுத்தொண்டநாயனார் வரலாறு - பகுதி - 1

 உலக சைவப்பேரவை (அவுஸ்திரேலியா) வாரந்தோறும் நடாத்தும் “சிவத்தோடு நாம்” திருமுறை பாராயணத்திபோது சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்திலன்று நடைபெற்ற சிறுத்தொண்ட நாயனார் குருபூசையை முன்னிட்டு திரு தெட்சணாமூர்த்தி சிவராமலிங்கம் அவர்கள் பகிர்ந்துகொண்ட சிறுத்தொண்டர் வரலாறும் அதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியவற்றையும் இரண்டு பகுதிகளாக இங்கே தரப்பட்டுள்ளது.

 

பகுதி - 1                 சிறுத்தொண்டநாயனார்  வரலாறு

ஓம் நமசிவாய


சோழவளநாட்டில்
திருச்செங்காட்டங்குடி என்ற ஊர் அமைந்துள்ளது. இதற்கு செங்காட்டங்குடி எனப் பெயர் வருவதற்கு ஒரு புராணக்கதை உண்டு. விநாயகப்பெருமான் கஜமுகா அசுரனை வதம் செய்தபோது சிந்திய குருதியின் சிவப்பு நிறம் காரணமாக அந்த மண் செம்மண்ணாக மாறியது. இதனால் அந்த வனப்பகுதி செங்காட்டங்குடி எனப் பெயர் பெறலாயிற்று பின்பு அது மருவி திருச்செங்காட்டங்குடி என்ற பெயர் வந்தது. இப் பகுதியில் விநாயகர் சிவபெருமானை வழிபட்ட கணபதீச்சுவரம் என்ற ஆலயமும் அமைந்துள்ளது.

இவ் ஊரிலே மாமாத்தியர் குலத்திலே *பரம்சோதியார்* (சிறுத்தொண்டர்) அவதரிக்கிறார். மாமாத்தியர் குலம் என்பது பூநூல் போட்டு ஆயுர்வேத வைத்தியம் செய்யும் இனம் ஆகும். இதனால் இவர் இளமையிலேயே ஆயுர்வேதம், வடமொழி போன்றன பயின்றதுடன் வாள்வித்தை, குதிரையேற்றம் போன்ற போர்க்கலைகளையும், பிற போர்த்தந்திரங்களையும் பயின்றிருந்தார். இக்காலத்தில் காஞ்சிபுரம் பல்லவ நாட்டின் தலைநகரமாக விளங்கியது. இதனை *நரசிம்மபல்லவ * மன்னன் ஆட்சிசெய்து வந்தார். இம்மன்னர் பரம்சோதியாரின் அறிவு, ஆற்றல், திறமைகளைப் பற்றி கேள்வியுற்றமையால் அவரை அழைத்து பல்லவநாட்டுப் போர்ப்படைகளை தலைமையேற்று வழிநடத்தும்படி வினவினார். அதனால் அவருக்கு சகல வசதிகளும் செய்து சேனாதிபதியாக (தளபதி) நியமனம் செய்தார். அதாவது சேக்கிழார் பெருமானுக்கு, அநபாயசோழன் மன்னனும், மாணிக்கவாசகப் பெருமானுக்கு, அரிமர்த்தனபாண்டிய மன்னனும் செய்தது போன்று.

இந்நிலையில் நரசிம்மபல்லவன் சிறுவனாக இருந்த போது அவர் தந்தை மகேந்திர பல்லவ மன்னன் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் வடபகுதியான பம்பாய்க்கு அருகில் உள்ள பெல்ஹம் என்ற பகுதியின் தலைநகராக வாதாபி நகரம் விளங்கியது. இப் பகுதியை சாளுக்கிய இனத்தின் தலைவராக இரண்டாம் புளகேசி மன்னன் ஆட்சி செய்து வந்தான். இவனது இயற் பெயர் இறைஅம்மான். இவனுக்கு இரு பட்டப்பெயர்கள் உண்டு.

 

 1) புளகேசி, இது மருவி புலிக்கேசி ஆனது.

2) சத்தியாச்சிரே.

புளகேசி என்றால் மயிர்க்கூச்செறியும் தன்மை. அதாவது இவன் போர்

விபுலானந்த அடிகளாரின் நூற்றாண்டு

 

விபுலானந்த அடிகளாருக்கு அவுஸ்திரேலியாவிலே  (குறிப்பாகச் சிட்னி நகரிலே) முதன் முதலாக 26 – 04 – 2015ல்

எடுக்கப்பெற்ற பெரு விழாவை – நினைவு கூருகிறோம்!

விபுலானந்த அடிகளாரின் நூற்றாண்டு நிகழ்வுகள் எங்கும் நடைபெற்று வருகின்றவேளை சிட்னியிலே நடந்தேறிய பெரு விழா வர்ணனையை சுருக்கமாகத் தரப்பெற்றுள்ளது

 முதல்- முதலாக விபுலானந்த அடிகளாருக்குத் தமிழ் வளர்த்த சான்றோர் விழா  மூலம்  சிட்னியிலே எடுத்த பெரு விழாவிற்கு அனுசரணை வழங்கிய பெருமை உலக சைவப் பேரவை(அவுஸ்திரெலியா)  அமைப்பையே  சாரும். தமிழ் வளர்த்த சான்றோர் விழா வினை 2013ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் செவ்வனே வெற்றிகரமாக ஒழுங்குசெய்துவரும் விழா அமைப்பாளர் கலாநிதி பாரதி இளமுருகனார்  என்பது யாவரும் அறிந்ததே!

 உத்தமனார் உறைவதற்கே உள்ளமென்ற கமலம் உகந்த தென்று பாடி நற்றமிழர் போற்றி வந்த நாடகமும் இசையும் நலியாது காத்திட யாழ்நூல் தந்தவர் மீன்பாடும் மட்டுநகர் சுவாமி விபுலானந்தர்   அவர்கள். விபுலானந்த அடிகளாளுக்கு அவுஸ்திரேலியாவிலே  குறிப்பாகச் சிட்னி நகரிலே முதன் முதலாக பெரு விழா எடுத்தது சரித்திரப் பிரசித்தி பெற்ற சிறப்பு நிகழ்வாகும். அருள்மிகுதுர்க்கைஅம்மன்வளாகத்தில்அமைந்துள்ளதமிழர்மண்டபத்தில்அவைநிறைந்ததமிழ்அன்பர்களுடன்கோலாகலமாகவும்வெற்றிவிழாவாகவும் இந்த விழா  நடைபெற்றது.

இளைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக   இந்த மாபெரும்விழாவிலே  இளைஞர்கள் இருவர் சிற்றுரை ஆற்றியிருந்தனர்.

 



பல்வைத்தியகலாநிதி  

பாரதி இளமுருகனார்  அவர்களின் கவிதை

 



இலங்கையில் கண்ணகி வழிபாடு - செந்தமிழ்ச் செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா


வைகாசித் திங்கள் கண்ணகி கோயில் உள்ள ஊர்களுக்கெல்லாம் மகிழ்ச்சியான ஒரு மாதம். வைகாசிப் பூரணையையொட்டிய பத்து நாட்கள் அந்த ஊர்களெல்லாம் விழாக்கோலம் பூணும். ஆம்மன் கோயிலில் திருவிழா. ஊரிலே பெருவிழா. மக்களின் உள்ளங்களில் மகிழ்ச்சி உலா.

கிழக்கிலங்கையில் சிறப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில்


கண்ணகிவழிபாடு மிகவும் பிரசித்திவாய்ந்ததும், பக்திமயமானதுமான வழிபாடாகக் காலம்காலமாக நிலவிவருகின்றது. அந்த வழிபாட்டு முறைகள் எப்படி நடைபெறுகின்றன என்பதைச் சொல்வதற்கு முன்னர், கண்ணகி வழிபாடு தொன்றிய வரலாறு பற்றிச் சிலவிபரங்களைத் தருவது இங்கு பொருத்தமெனப் படுகின்றது.

வழிபாடு தோன்றிய வரலாறு


கண்ணகி சிலப்பதிகாரத்தின் நாயகி என்பதும், கோவலனின் மனைவி என்பதும், பாண்டிய மன்னனுடைய கவலையீனமான தீர்ப்பினால் கோவலன் கொலையுண்டான் என்பதும், கணவன் அநீதியாகக் கொல்லப்பட்டதால் துடித்தெழுந்த கண்ணகி பாண்டியனிடம் நீதிகேட்டு வாதாடி, கோவலன் குற்றமற்றவன் என்பதை நிரூபித்தாள் என்பதும். மறுகணமே, தான் தவறிழைத்தமையைத் தாங்கிக்கொள்ள முடியாத பாண்டிய மன்னன் அரியணையிலிருந்து மயங்கி வீழ்ந்து இறந்தான் என்பதும், அதுகண்ட பாண்டிமாதேவியும் அக்கணமே உயிரைவிட்டாள் என்பதும், இவ்வளவிற்குப் பிறகும் கோபம் தணியாத கண்ணகி மதுரையை எரித்தாள் என்பதும் பெரும்பாலும் எல்லோரும் அறிந்த பொதுவான விடயங்கள்.

பாண்டியனைத் தொடர்ந்து பாண்டிமாதேவி இறந்ததைக் கண்ணுற்ற கண்ணகி இறந்து கிடக்கும் பாண்டிமாதேவியை நோக்கிப் பின்வருமாறு கூறினாள்.
“கற்புள்ள பெண்கள் பிறந்த பூம்புகார் நகரிலேதான் நானும் பிறந்தேன். பாண்டிமாதேவியே! உண்மையில் நானும் ஒரு பத்தினியானால், உன்னைப்போல இப்போதே கணவனுடன் இறந்துவிட மாட்டேன். அரசை மட்டுமல்ல இந்த மதுரையையும் அழிப்பேன். எனது வஞ்சினத்தின் தன்மையை நீ காண்பாய்!” என்று கூறி அரண்மனையை விட்டு வெளியேறினாள். வேகமாக நடந்தாள். மதுரையை மூன்றுமுறை வலம் வந்தாள். தனது இடது மார்பைத் திருகி வீசி எறிந்தாள். மதுரை நகர் எரிந்தது.

விபுலாநந்த அடிகளார் துறவறம் பூண்டு 100 ஆண்டுகள் நிறைவு

அடிகளாருடன் மிகவும் கேண்மை பூண்டு வாழ்ந்த தங்கத் தாத்தா நவாலி ஊர் சோமசுந்தரப் புலவர் விபுலாநந்த அடிகளாருக்கு அளித்த  வாழ்த்து ஒன்றினைத் தமிழ் முரசு நேயர்களுடன் பகிர்வதிலே மகிழ்ச்சி அடைகிறேன்

                                 -------------------------பாரதி இளமுருகனார்.

 


 தங்கத் தாத்தா” சோமந்தரப் புலவர் அவர்கள் விபுலானந்த அடிகளாருக்கு அளித்தருளிய

வாயுறை வாழ்த்து

  வாழி யினியதமிழ் வாழி தமிழகத்தார்

  வாழி மணியிலங்கை வான்கழகம் - - வாழியரோ

  பேரா சிரியன் பெரியவிபு லானந்தன்

  ஓரா யிரம்பாண் டுலகு          


நிலைமண்டில ஆசிரியப்பா

  வடாஅது வான்றொடு வேங்கட மலையுந்

  தெனாஅது கன்னித் தெய்வதன் குமரியுங்

  குடாஅதுங் குணாஅதுந் தொடுகடற் பரப்புமென்

  றுந்நாள் வரைந்த விந்நான் கெல்லையுள்

  கடுவொடு பிறந்த வமிழ்துதலை குளிக்குஞ்

  சுவையொடு பிறந்த தமிழ்வளங் குலகில்

  ஒருகடல் குடித்த குறுமுனி நாணச்

  சீரிய வாரியத் திருமொழி யென்றா

பச்சை விளக்கு - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 திராவிட முன்னேற்ற கழகத்தில் முக்கிய பிரமுகராகத் திகழ்ந்தவர்


இராம அரங்கண்ணல். அறிஞர் அண்ணாவுக்கு நெருக்கமானவராக கருதப்பட்ட இவர் ஒரு திரைப்பட வசனகர்த்தா கூட. ஆனாலும் ஆரம்பத்தில் இவர் வசனம் எழுதிய படங்கள் எல்லாம் குறித்த காலத்தில் வெளிவராமல் தயாரிப்பில் நீண்ட காலம் இருந்து திரைக்கு வந்து தோல்வியை கண்டன. இதனால் இவரை ராசியில்லாத ரைட்டர் என்று பலரும் கிண்டல் செய்து வந்தார்கள். ஆனால் தனது தொடர் முயற்சிக்கு பிறகு அரங்கண்ணல் திரைப்பட தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார். ஏவி எம் பட நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து பச்சை விளக்கு என்ற படத்தை தயாரித்தார். இந்த பச்சை விளக்கு அரங்கண்ணல் திரை வாழ்வில் பச்சை விளக்காக மாறியது.


சிறு வயதில் அன்னையை இழக்கும் சாரதி தன்னையும் தன் தம்பி

மணியையும் வளர்த்து ஆளாக்கிய அன்னம்மாளின் மகள் சுமதியை டாக்டராக உருவாக்குவதாக உறுதி எடுத்துக் கொள்கிறான். இதன் பொருட்டு தன்னுடைய தாம்பத்திய வாழ்வையும் தவிர்க்கிறான். ரயில் சாரதியாக பணிபுரிந்து அதில் கிடைக்கும் வருமானத்தை சுமதியின் கல்விக்காக செலவிடுகிறான் . அதற்கு அவன் மனைவி பார்வதியும் உடன்படுகிறாள். படிப்பில் சிறந்து விளங்கும் சுமதிக்கு எதிர்பாராத விதமாக பார்வதியின் தம்பி பசுபதியுடன் திருமணம் நடக்கிறது. பட்டிக்காட்டானான பசுபதி அவளின் கல்விக்கு தடை சொல்லாவண்ணம் அவள் தொடர்ந்து படிக்க அனுமதி கொடுக்கிறான். இதனால் சுமதி டாக்டராகிறாள். ஆனால் சாரதியின் சித்தப்பா ரஜாபாதர் அவனின் குடும்பத்தை பல வழிகளிலும் துன்பத்துக்கு உள்ளாக்குகிறான். இறுதியில் சாரதியின் தியாகம் உணரப்பட்டதா என்பதே படமாகும்.

சம்பந்தனின் அறிவுரை பொருத்தப்பாடுடையதா?

 May 14, 2024


ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்து வது தொடர்பில் கட்சிகள் அவசரப்படக் கூடாது – குறிப்பாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இந்த விடயத்தில் அவசரப்படக் கூடாது, நிதானமாக செயல்பட வேண்டுமென்று, மூத்த அரசியல்வாதி சம்பந்தன் அறிவுரை கூறியிருக்கின்றார். இதற்கு முன்னரும் தமிழ் பொது வேட்பாளர் தொடர் பில் சம்பந்தன் எதிர்மறையான கருத்துக்களையே தெரிவித்திருந்தார்.
சம்பந்தன் தற்போது அரசியலில் இயங்கும் நிலையில் இல்லை. ஊடகங்கள் அணுகினால், அவ்வப்போது கருத்துக்களைத் தெரிவிக்கும் ஒருவராகவே இருக்கின்றார். இந்த நிலையில், தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாட்டில் அவசரப்பட வேண்டாமென்று சம்பந்தன் கூறுவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. சம்பந்தன் இந்த விடயத்தில் மட்டுமல்ல, கடந்த பதினைந்து வருடங்களாக தமிழ் மக்களின் அரசியல் விடயங்கள் எவற்றிலுமே அவசரப்படவில்லை – நிதானமாக கொழும்பின் நிகழ்ச்சி நிரலுக்கு பின்னால் இழுபட்டுச் செல்லும் ஒருவராகவே இருந்திருக் கின்றார். இந்தியாவை நோக்கிச் செல்ல வேண்டுமென்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும், அவசரப்பட வேண்டாமென்றே கூறினார்.
டில்லியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு அலுவலகத்தை திறக்க வேண்டும், அதன் மூலம் அங்குள்ள இராஜதந்திர தரப்புக்கள், சிந்தனைக் கூடங்கள், ஊடகங்கள் அனைத்துடனும் தொடர்ச்சியான உரையாடலில் ஈடுபட வேண்டும் – அப்போதுதான், இழக்கப்பட்ட இந் திய கரிசனையை மீட்டெடுக்க முடியுமென்று, கூட்டமைப்பின் பங்கா ளிக் கட்சிகளில் ஒன்றான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி எடுத்துரைத்த போது –
அப்போதும் அவசரப்பட வேண்டாம் என்றே குறிப்பிட்டிருந்தார். ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து முற்றிலும் சாதகமானதொரு அரசியல் சூழல் ஏற்பட்டிருந்தது.

டொனால்ட் லூவின் கவனத்துக்கு…!

 May 15, 2024


அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் டொனால்ட் லூவின் இலங்கை வருகை
உணர்வுபூர்வமான காலப்பகுதியில் நடைபெற்றி ருக்கின்றது. முள்ளிவாய்க்கால் பேரவலம் நடைபெற்று பதினைந்து ஆண்டுகளாகின்றன. மே-19இற்கான உணர்வுடன் தமிழ் மக்கள் கலந்திருக்கின்றனர். அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையில் மனித உரிமைகள்சார் கரிசனை அடிப்படையானது. அமெரிக்காவின் தலையீடுகளை அதன் புவிசார் அரசியல் நலன்களிலிருந்து பிரித்து நோக்கமுடியாது.
எனினும், மனித உரிமைகள்சார் விழுமியங்களை உலகளவில் பாதுகாப்பதில் அமெரிக்காவுக்கு முதன்மையான பங்குண்டு.
இறுதியுத்தம் மோசமான அழிவுகளுடன் முற்றுப்பெற்றதைத் தொடர்ந்து யுத்தத்தின்போதான மனித உரிமைகள்மீறல் விவகாரம் உலகளவிலான பேசுபொருளானது.
இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் 2012இல் ஒபாமா நிர்வாகம் இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியு றுத்தி ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கைமீதான பிரே ரணைக்கு ஆதரவளித்தது. அன்றைய சூழலில் அமெரிக்க ஆதரவுப் பிரேரணை என்றே அது பரவலாக அழைக்கப்பட்டது.
அமெரிக்காவின் தலையீடு இல்லையென்றால் அவ்வாறானதொரு பிரேரணை நிறைவேற்றப்பட்டிருக்காது. இந்தப் பின்புலத்தில் நோக்கி னால் இலங்கைமீதான மனித உரிமைகள்சார் அழுத்தங்களுக்கான பிள்ளையார் சுழி 2012இல்தான் இடப்பட்டது. அப்போதிருந்த சீன சார்பு மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் அமெரிக்க அழுத்தங்களை பொருட்படுத்த வில்லை.
மேலும், பொறுப்புக்கூறல் விடயத்தில் மேற்குலகத்துடன் ஒத்துழைக்கவும் மறுத்தது. அன்று ஆரம்பிக்கப்பட்ட பொறுப்புக்கூறல் தொடர்பான அழுத்தங்கள் இன்றுவரையில் தொடர்கின்றது. இங்கு கவனிக்க வேண்டிய விடயம் – இந்த அழுத்தங்களால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களுக்கான நீதி விவகாரத்தில் ஒரு சிறிய முன்னேற்றமும் ஏற்படவில்லை.

வன்னி ஹோப் - மட்டக்களப்பு மாவட்டம் புத்தூர் கதிரவெளி கிராமத்தில் வாழ்வதற்கு தங்குமிடம்.

 

வன்னி ஹோப்


மட்டக்களப்பு, கதிரவெளியில் அமைந்துள்ள புத்தூர் மிகவும் பின்தங்கிய மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட கிராமமாகும், இது பல தலைமுறைகளாக பழங்குடி சமூகத்தினரால் வசித்து வருகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலகத்தின் கீழ் அமைந்துள்ள இந்த கிராமத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் சுமார் 75 குடும்பங்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போராடுகின்றன. வேலையின்மை மற்றும் வரையறுக்கப்பட்ட பொருளாதார வாய்ப்புகள் போன்ற பல சவால்களை பழங்குடியினர் எதிர்கொள்கின்றனர்.

மார்ச் 2024 இல் வன்னி ஹோப் ஃபீல்ட் குழுவால் (the Vanni Hope Field team) நடத்தப்பட்ட சமீபத்திய மதிப்பீடு, பல குடும்பங்கள் மற்றும் சமூக உறுப்பினர்களுடன் நேர்காணல்களை உள்ளடக்கியது, கிராமத்தின் அவசரத் தேவைகளை எடுத்துக்காட்டுகிறது. பெரும்பான்மையான குடும்பங்கள் தென்னை ஓலையால் வேயப்பட்ட குடிசைகளில் வசிக்கின்றனர். அவர்களுக்கு உடனடி மனிதாபிமான உதவி கடுமையாகத் தேவைப்படுகிறது. பெரும்பாலான குடும்பங்கள் தங்கள் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்த இடைக்கால அல்லது அரை நிரந்தர தங்குமிடங்களின் தேவையை வெளிப்படுத்தின.

தேவைகள் / Problems
மழை அல்லது வறண்ட காலங்களில் அவர்களால் குடிசையில் இருக்க முடியாது, எனவே அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் வெளியே தூங்குகிறார்கள். இப்பகுதியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்கள் என்ற வகையில் அவர்களுக்கு வீடு கட்டுவதற்கான வாய்ப்புகளும் வளங்களும் இல்லை. அவர்களுக்கு சிறந்த வாழ்க்கை நிலைமைகள் தேவைப்படுகின்றன, ஆனால் தேவையான முன்னேற்றங்களைச் செய்வதற்கான வளங்கள், திறன் மற்றும் திறன்களில் வரம்புகளை எதிர்கொள்கின்றனர், இது அவர்களின் தேவைகளுக்கு பெரும்பாலும் மனிதாபிமான உதவியைச் சார்ந்திருக்க நிர்ப்பந்திக்கப்படுகிறது.

நோக்கங்கள்
தேவைப்படும் குடும்பங்களுக்கு மேம்படுத்தப்பட்ட புகலிடங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குதல்.
பணியின் நோக்கம்

ஆரம்ப அவசரகால பதிலாக இலக்கு மக்கள்தொகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு தற்காலிக தங்குமிட ஆதரவை இந்த திட்டம் வழங்கும். தேவைகள் மதிப்பீடு மற்றும் முன்னுரிமையின் அடிப்படையில், மலிவான தற்காலிக தங்குமிடங்களை நிர்மாணிக்க இந்த திட்டம் உதவும். ஒவ்வொரு அரை நிரந்தர தங்குமிடமும் சுமார் 15 X 15 சதுர அடி அளவில், சிமென்ட், மணல் மற்றும் செங்கல் போன்ற பொருட்களால் கட்டப்படும். இந்த கட்டுமானத்தில் அஸ்திவாரம் போடுவது, தங்குமிடத்தை சுற்றி சுவர்கள் கட்டுவது, தகர ஷீட்டுகளால் மூடப்படுவது ஆகியவை அடங்கும். இது குறைந்தபட்ச தரத்தை பூர்த்தி செய்யும் பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பான தங்குமிடத்தை உறுதி செய்கிறது.

சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் 2024

 .

உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க   tamilmurasu1@gmail.com  or  paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில்  தொடர்பு கொள்ளவும்



                              

சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள் 2024

25 - 05 - 2024   Sat     2024   மானிஇன்னிசை மாலை

01 - 06 - 2024  Sat    ஈழத் தமிழர் கழகம் வழங்கும் 

                                "தொண்டு வழங்கும் இராத்திரி"  சிட்னி

8 - 06 - 2024  Sat    சிட்னி இசை விழா 2024

9 - 06 - 2024  Sun    சிட்னி இசை விழா 2024

15 - 06 - 2024  Sat    எந்திரமாலை


இலங்கைச் செய்திகள்

யாழில் பல்வேறு தரப்பினருடனும் அமெ. தூதுவர் ஜூலி சங் சந்திப்பு

LankaPay உடன் இணைந்து PhonePe UPI கட்டண முறை அறிமுகம்

யாழில் போதைப்பொருள் உற்பத்தி மையம் சுற்றிவளைப்பு

முன்னாள் இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க சஜித்துடன் இணைவு 

கொக்குத்தொடுவாய் அகழ்வாய்விற்காக நிதி ஒதுக்கீடு

சிறப்பாக நடைபெற்ற நுவரெலியா சீதாஎலிய ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு


யாழில் பல்வேறு தரப்பினருடனும் அமெ. தூதுவர் ஜூலி சங் சந்திப்பு 

May 17, 2024 8:37 am

யாழ்ப்பாண மாவட்டத்துக்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்,  பல்வேறு தரப்பினரையும் நேற்று முன்தினம் புதன்கிழமை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

உலகச் செய்திகள்

இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்க அமெரிக்கா திட்டம்

இஸ்ரேல்–ஹமாஸ் போராளிகள் இடையே வடக்கு, தெற்கு காசாவில் உக்கிர மோதல்

காசாவின் ரபா, ஜபலியாவில் இஸ்ரேலிய டாங்கிகள் முன்னேற்றம்: கடும் மோதல்

வடக்கு காசாவில் முன்னேறிவரும் இஸ்ரேலிய படைக்கு கடும் எதிர்ப்பு

காசாவின் ரபாவுடன் ஜபலியா முகாமிலும் தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்

ரபாவின் மேலும் பல இடங்களில் இருந்து மக்களை வெளியேற இஸ்ரேல் உத்தரவு

ஸ்லோவாக்கியா பிரதமர் ரொபட் ஃபிகோ மீது துப்பாக்கிச்சூடு


இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்க அமெரிக்கா திட்டம்

May 16, 2024 10:14 am 

இஸ்ரேலின் ரபா தக்குதலுக்கு எதிர்ப்பு வெளியிட்டு வரும் நிலையில் அமெரிக்கா ஒரு பில்லியன் டொலருக்கு மேல் ஆயுதங்களை இஸ்ரேலுக்கு வழங்கவிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

22-05- 2024 வைகாசி விசாகம், விசேஷ தேர்த்திருவிழா

 


வைகாசி விசாகம் - சத்ரு சம்ஹார திரிசதி ஹோமம், 22 மே 2024, 5.30 PM

சிட்னி ஸ்ரீ துர்கா தேவஸ்தானம்  


முருகனின் பிறந்த நாளாக வைகாசி விசாகம் கொண்டாடப்படுகிறது. இது வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தன்று கொண்டாடப்படுகிறது.

துர்க்கை கோவிலில் ஹோமம், ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தேவசேனா ஆகியோருக்கு பால கலச அபிஷேகம், தங்கத்தேர் ஊர்வலம் மற்றும் மகா தீபாராதனை ஆகியவை நடைபெறுகின்றன.

நிகழ்ச்சி நிரல்:

ஹோமம் - 5.30 மணி

பல் கலாச அபிஷேகம் 

முருகனுக்கு தங்கத்தேர் ஊர்வலம்

மகா தீபாராதனை மற்றும் பிரசாதம் - இரவு 8.30 மணி


வைகாசி விசாகம் நம்மாழ்வார் திருநாக்ஷத்ரம் - புதன்கிழமை 22 மே 2024

 




பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார், விஷ்ணு பக்தியைப் பற்றி பல பாடல்களைப் பாடியதற்காக நன்கு அறியப்பட்டவர். கலியுகம் தொடங்கிய 42-வது நாளில் வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தார். நம்மாழ்வார் வைணவ குலபதி என்று போற்றப்படுகிறார்.
நம்மாழ்வார் திருக்குறுகூரில் (ஆழ்வார் திருநகரி) பிறந்தார். தனது வாழ்நாள் முழுவதும் (இந்த சம்சாரத்தில் 32 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது), அவர் புளிய மரத்தடியில் (திருப்புலி ஆழ்வார்) தங்கி எப்போதும் யோகம் (தியானத்தில்) இருந்தார்

நம்மாழ்வார் நான்கு திவ்யப் பிரபந்தங்களைப் பாடியுள்ளார்.

· திருவிருந்துத்தம் (ரிக் வேதசாரம்)

· திருவாசிரியம் (யஜுர் வேதசாரம்)

· பெரிய திருவந்தாதி (அதர்வண வேதசாரம்)

· திருவாய்மொழி (ஸம வேத சாரம்)

நம்மாழ்வாரின் பிரபந்தங்கள் 4 வேடங்களுக்கு இணையாக அமைந்துள்ளன. தனது தமிழ்ப் பிரபந்தங்கள் மூலம் ஸம்ஸ்கிருத வேதங்களின் சாரத்தை வழங்கியவர் "வேதத் தமிழ்ச் சேத மாறன்" என்றும் அழைக்கப்படுகிறார்.

ஆழ்வார்களால் பாடல் பெற்ற 4000 திவ்யப் பிரபந்தங்களின் சாரம் திருவாய்மொழி.

SVT இல் 22 மே 2024 அன்று அவரது புனிதரின் திருநக்ஷத்திரத்தை கொண்டாடுகிறோம். 
 
இதன் முன்னோட்டமாக, திவ்ய பிரபந்தம் (திருவாய்மொழி - 1102 ஸ்லோகங்கள்) ஒவ்வொரு மாலையும் மே 19 ஆம் தேதி தொடங்கி மே 22 ஆம் தேதி காலை முடிவடையும்.
 
நிகழ்ச்சி நிரல் 
 
காலை 09.00 மணி: ஸ்ரீமகாலட்சுமி தாயார், ஸ்ரீராமர், ஸ்ரீ சீதை, ஸ்ரீ லட்சுமணர் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் சன்னதியில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேகம்.
 
காலை 10.30 மணி: சுவாமி நம்மாஸ்வருக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்)
தொடர்ந்து அலங்காரம், மகா தீபாராதனை, சற்றுமுறை.
 

வைகாசி விசாகம் - 22 மே 2024



வைகாசி விசாகம்  & மூல மந்திர ஹோமம் புதன்கிழமை, 22 மே 2024


அருவமும் உருவமாகி அநாதியாய்ப்
பலவா யொன்றாய்ப்
பிரம்மமாய் நின்ற சோதிப்பிழம்பதோர்
மேனியாகக்
கருணைகூர் முகங்களாறும்
கரங்கள் பன்னிரண்டுங்கொண்டே
ஒரு தின முருகன் வந்தாங்
குதித்தனன் உலகமுய்ய


வேல்முருகனின் அழகிய தோற்றம் பற்றி கந்தபுராணம் தெரிவிக்கிறது. இந்திராதி தேவர்களைக்கொடுமைப்படுத்திய சூரபத்மனிடமிருந்து அவர்களைக் காக்க, சிவபெருமானின்நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவரே வேல்முருகன்.

ஆறு குழந்தைகளாகத் தோன்றியவரை கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்துவந்தனர். இதனாலேயே முருகன், `கார்த்திகேயன்’ என்று ஆனார்.

சூரனை வதைப்பதற்கான காலம் வந்ததும், அன்னை பராசக்தி ஆறு பிள்ளைகளை அள்ளி அணைத்து, ஒன்றாக்கி ஒரே உருவாக ஆக்கினார். ஆறு முகங்களும், பன்னிரு கரங்களும் என ஸ்கந்தர் உருவானார். உலகில் உள்ள சகல ஜீவராசிகளும் தாயிடம் இருந்து உருவாக, முருகன் ஒருவரே தந்தையின் மூலம் உருவானார்.


முருகப்பெருமானின் உயர்ந்த தெய்வீக அவதாரம் தமிழ் மாதமான வைகாசி மாதத்தில் (மே நடுப்பகுதி - ஜூன் நடுப்பகுதி) நட்சத்திரம் அல்லது நட்சத்திரம் 'விசாக' நாளில் நடந்தது.
மங்களகரமான "விசாக நட்சத்திரம்" என்பது வானத்தில் பிரகாசமாக ஜொலிக்கும் மூன்று நட்சத்திரங்களின் கலவையாகும். இந்த நாளில்தான் முருகப்பெருமான் இருண்ட சக்திகளை அழித்து, தர்மத்தை நிலைநாட்டி, உயர்ந்த பாதுகாப்பையும் ஞானத்தையும் வழங்க தோன்றினார்.
SVT இல் "வைகாசி விசாகம்" திருவிழா 22 மே 2024 புதன்கிழமை கொண்டாடப்படுகிறது.
நிகழ்ச்சி: காலை 9.00 மணி முதல் 12.3 மணி வரை