Published By: Digital Desk 2
04 May, 2025 | 10:10 AM
- ஐங்கரன் விக்கினேஸ்வரா
உலகளாவிய ரீதியில் டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கத்தின் வர்த்தக வரிச் சுமைகளால் பாதிப்புக்குள்ளான நாடுகளில் தற்போது தேர்தல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, கனடாவில் நடந்த தேர்தல் முடிவுகள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அடாவடித்தனத்துக்கு எதிரான பலத்த அடியாக கணிப்பிடப்படுகிறது.
அவுஸ்திரேலியாவில் நேற்று சனிக்கிழமை (3) பொதுத் தேர்தல் நடைபெற்றது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தேர்தலை அறிவித்த பின்னர் கடந்த ஐந்து வாரங்களாக தீவிர பிரசாரம் நடைபெற்று வந்தது.
இந்த இரு நாட்டு தேர்தல்களில் ஆளும் கட்சிகளுக்கான ஆதரவே அதிகரித்து வந்துள்ளது. கனேடிய தேர்தலும், அரவுஸ்திரேலிய தேர்தலும் ட்ரம்ப் அரசாங்கத்தின் வரிச்சுமை காரணமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் எதிர்ப்புக் குரலாகவே கருத இடமுண்டு.
ஆஸியில் ஆளும் கட்சி ஆதரவு
2022ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி (அவுஸ்திரேலியாவில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. தற்போதைய நிலவரப்படி அந்தக் கட்சியின் செல்வாக்கு சிலகாலம் சரிந்திருந்தாலும், மீண்டும் முன்னிலையில் இருந்தது.
கொவிட் தொற்றுக் காலத்தின் பின்னர் அவுஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள், அதிக பணவீக்கம் மற்றும் அதிக வட்டி விகிதங்கள் மற்றும் வீட்டுவசதி மற்றும் வாடகை போன்ற காரணங்களில் மக்கள் விரக்தியடைந்துள்ள சூழலில் இந்த பொதுத் தேர்தல் நடைபெற்றது.
இரண்டாவது தடவையாக மூன்று ஆண்டு பதவிக் காலத்தை எதிர்பார்க்கும் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸின் தொழிலாளர் கட்சி, தற்போது பிரதிநிதிகள் சபையில் உள்ள 151 இடங்களில் 77 இடங்களைக் கொண்டிருந்தது.
அதேவேளை பெரும்பான்மையான வாக்காளர்கள் எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் மீது சந்தேகம் கொண்டிருப்பதாக கருத்துக் கணிப்புகள் வெளிப்படுத்தின.
எதிர்க்கட்சி செல்வாக்கு வீழ்ச்சி
அவுஸ்திரேலிய எதிர்க்கட்சியான லிபரல் கட்சியின் தலைவர் பீட்டர் டட்டனின் சில திட்டங்கள், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்நிர்வாகத்தில் இடம்பெற்றிருக்கும் இலோன் மஸ்க்கின் அரசாங்க திறன் துறையின் செயல்பாடுகளோடு ஒத்துப் போவது போன்று இருப்பதாக மக்களிடையே எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இத் தேர்தலில் அவருக்கான ஆதரவு குறைந்துள்ளது என்று கருத்துக் கணிப்புகள் வெளிப்படுத்தின.
அரசு ஊழியர்கள் முழு நேர வேலைக்கு அலுவலகத்துக்கு திரும்ப வேண்டும். பொதுத்துறை ஊழியர்கள் 10 ஆயிரம் பேர் வேலையிழக்கும் திட்டம் ஆகியவை கடும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டதால், அதனை டட்டன் கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
ட்ரம்ப் நிர்வாகத்தின் அடாவடித்தனமான வர்த்தக வரிச் சுமைகளை எதிர்த்து போராட கட்சிகள் முன்வர வேண்டுமெனவும் பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மார்க் கார்னி ஆவேசம்
கனேடிய தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பிரதமர் மார்க் கார்னி, கனடா மக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, அமெரிக்காவையும் கடுமையாக சாடியுள்ளார். ‘கனடாவை சொந்தமாக்கும் நோக்கத்துடன் நம்மை உடைக்க ட்ரம்ப் முயற்சிக்கிறார். அது ஒருபோதும் நடக்காது’ என்று காரசாரமாக பேசியுள்ளார்.
கனடாவில் பிரதமருக்கான போட்டியில் லிப்ரல் கட்சியைச் சேர்ந்த மார்க் கார்னி, கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பியர் பொய்லிவ்ரே ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால், துவக்கம் முதலே மார்க் கார்னி கட்சி முன்னிலை வகித்தது.
கனடாவில் ஆட்சியைப் பிடிக்க மொத்தமுள்ள 343 இடங்களில் 172 இடங்களைப் பெற வேண்டும். ஆனால், ஆளும் லிபரல் கட்சி 169 இடங்களில் முன்னணியில் இருக்கும் நிலையில், கன்சர்வேடிவ் கட்சியினர் 144 இடங்களில் வென்றுள்ளனர்.
கடும் போட்டிக்கு இடையே, தோல்வியை கன்சர்வேட்டிவ் கட்சி ஒப்புக்கொண்டுள்ளது. இதன்படி கனடா பிரதமராக மார்க் கார்னி மீண்டும் பதவியேற்பது உறுதியாகியுள்ளது. கனடா பிரதமர் தனது வெற்றியை அடுத்து நிகழ்த்திய உரையில், கனடாவிற்கு சவாலான நாட்கள் காத்திருப்பதாக கூறினார்.
“நாம் சில தியாகங்களை செய்ய வேண்டியிருக்கும். அதேவேளையில், நமது தொழிலாளர்கள் மற்றும் வணிகங்களை ஆதரிப்பதன் மூலம் இந்த தியாகங்களை நம் பகிர்ந்து கொள்வோம். அமெரிக்கா செய்த துரோகத்தின் பாடங்களை ஒருபோதும் கனடா மறக்க கூடாது. இந்த வர்த்தக போரில் நாம் வெற்றி பெறுவோம்” என்றும் அவர் தெரிவித்தார்.
ஈழத் தமிழர் வெற்றி
இத் தேர்தலில் ஈழத் தமிழர்கள் கெரி ஆனந்தசங்கரி, யுவனிதா நாதன்
வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல், சென்னையை பூர்வீகமாகக் கொண்ட அனிதா ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார்.
நடந்து முடிந்த தேர்தலில் 6 தமிழர்கள் போட்டியிட்ட நிலையில், 3 பேர் வெற்றி பெற்றுள்ளனர். தற்போது வெற்றி பெற்றுள்ள அனிதா ஆனந்த் கனடாவின் ஒக்வில் கிழக்கு தொகுதியிலும், கேரி ஆனந்தசங்கரி ஸ்கார்பரவ்ப் பார்க் தொகுதியிலும், பிக்கெர்லின் புருக்லிவ் தொகுதியில் யுவனிதா ஆகியோர் போட்டியிட்டு வென்றுள்ளனர்.
அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று லிபரல் கட்சி ஆட்சி அமைய உள்ள நிலையில், அனிதா ஆனந்த், கெரி ஆனந்தசங்கரி ஆகியோருக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரம்பிற்கு எதிராக உலகம்
இதேவேளை டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக உலகமெங்கும் பல்வேறு காலகட்டங்களில் பல நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற நாளில் இருந்து அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளிலும் அவருக்கு எதிராக பல்வேறு கண்டன போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ட்ரம்ப் நிர்வாகம் புலம் பெயர்ந்தோரை கையாள மிகப்பெரிய நாடு கடத்தல் திட்டத்தை தொடங்கியது. இது அமெரிக்காவில் மட்டுமன்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் எதிர்ப்பலை
ட்ரம்பின் நிலைப்பாட்டை எதிர்த்து ஐரோப்பிய நாடுகளிலும் மக்கள் பதாகைகளுடன் பேரணி நடத்தினர். ட்ரம்பின் குடியேற்ற கொள்கைகளை எதிர்த்து பாரிஸில் பதாகைகளுடன் பேரணி நடத்தினர்.
அத்துடன் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறும் உத்தரவில் ட்ரம்ப்கையெழுத்திட்டதற்கு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியேற்று வாசிகள், பிறப்புரிமை, குடியுரிமை போன்றவற்றின் ட்ரம்பின் கொள்கைகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
மெக்ஸிக்கோவில் டொனால்ட் ட்ரம்பின் குடியேற்று நடவடிக்கைக்கு எதிராக எல்லை வெளியில் பாரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் போது மெக்ஸிக்கோ வளைகுடாவின் பெயரை அமெரிக்க வளைகுடா என்று ேரணி நடத்தினர்.
அத்துடன் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறும் உத்தரவில் ட்ரம்ப்கையெழுத்திட்டதற்கு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியேற்று வாசிகள், பிறப்புரிமை, குடியுரிமை போன்றவற்றின் ட்ரம்பின் கொள்கைகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
மெக்ஸிக்கோவில் டொனால்ட் ட்ரம்பின் குடியேற்று நடவடிக்கைக்கு எதிராக எல்லை வெளியில் பாரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் போது மெக்ஸிக்கோ வளைகுடாவின் பெயரை அமெரிக்க வளைகுடா என்று மாற்றியதற்கு அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment