இயற்றியவர்: பல் வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்
சிந்தைக்கும் செவிக்கும் இனிய சிறுவர் பாடல்கள் அறிஞர் ஒளவை நடராசன் அவர்கள் தந்த அணிந்துரை! (வேந்தர் - பாரத் பல்கலைக் கழகம் )
ஈழம்
எங்கள்உயிர் நாடு - அதை
என்றும்
மறவாதே பாப்பா
வாழும்
செம்மைமொழி தமிழே- அதை
வாழ்த்தி
வளர்த்திடடி பாப்பா!
தூய்மை
யானதமிழ் கற்பாய் – தொன்மை
தொடரத்
தமிழ்தொடர வைப்பாய்
வாய்மை
அன்புமன உறுதி - இவை
வாழ்க்கைக்
குகந்ததடி பாப்பா!.
என்றும்
மயில்
ஆடும் காட்சியை,
அழகுத்
தோகை விரித் ஆடும்
ஆணின்
நடனம் கண்டதும்
உளம்
மகிழ்ந்து பேடை தானும்
ஓடிச்
சுற்றி ஆடுது!
மழையும்
பொழிய இடி முழங்க
மந்தி
கெந்தி ஓடுது
குழையைத்
தின்ற மான்கள் கூடிக்
குதித்து
மருண்டு துள்ளுது!.
சோடிக்
கிளிகள் ஆடிக் களித்துச்
சோபை
யுடனே பாடுது
வேடிக்
கையாய்க் குயிலும் கூவி
விரும்பி
நடனம் பார்க்குது.
என்றும்
சிறுவர் விரும்பும் நடையிலே தருகிறார்.
அன்னையின்
அருமையை,
விரத
மிருந்து பரனைத் தொழுது
வேண்டி
வரத்தாற் பெற்று
இரவு
பகலாய்க் கண்ணின் மணிபோல்
என்னை
வளர்த்த அம்மா!
நேசக் கரத்தால் நித்தம் தூக்கி
நெஞ்சில் அணைக்கும் அம்மா
பாசத்தோடு ஆசைபொங்கப்
பாலை ஊட்டும் அம்மா!
என்றும்
அன்னையின்
அன்பை, -
பஞ்சு
அஞ்சும் பாதந் தன்னைப்
பற்றிக்
கண்ணில் ஒற்றியே
பிஞ்சுக்
கையின் விரல்கள் அஞ்சைப்
பிடித்துக்
கொஞ்சும் அம்மா!
மெள்ளப்
பாலைக் குடிக்கும்போது
மெத்த
இனிக்கும் தமிழை
அள்ளி
அள்ளிக் கலந்து தினமும்
அன்பாய்
ஊடடும் அம்மா!
நெஞ்சில்
எந்தன் தலையைச் சாய்த்து
நீவி
மகிழும் அம்மா!
கெஞ்சும்
விழியால் அன்பைச் சிந்திக்
கொஞ்சும்
தெய்வ அம்மா!
இப்படிச்
சித்தரிக்கும் அழகே அழகு!
மகளிர்
கூடியோடிப் பந்தடிக்கும் காட்சியை சிறப்புறக் காட்டுகிறார்..
பந்த டிப்பமே நாங்கள் பந்த டிப்பமே!
வலமும் இடமும் மாறி மாறி ஓடிப் பந்த டிப்பமே!
பலமும் பண்பும் ஒன்று கூடி மலரப் பந்த டிப்பமே!
கள்ளம் அற்ற வெள்ளை உள்ளப் பள்ளித் தோழ ரோடுநாம்
கொள்ளை இன்பம் பொங்க மெல்லத்
துள்ளிப் பந்த டிப்பமே!
உயர்ந்த தாழ்ந்தசாதி இல்லை உலகில் வேண்டும் சமத்துவம்
அயர்விலாது சோர்வு நீங்க ஆர்வ மாய்ப்பந் டிப்பமே!
----------------------------இப்படித்
தொடர்கிறது
பந்தணை
விரலார் என மகளிரைப் பாராட்டுதல் மரபு. சிற்றிலக்கியங்களிலே பந்தடித்தல் மரபைப்
பாடல்களாகச் சந்தம் மலியப் புலவர்கள் பாடியுள்ளனர். பாரதியும் அதே பாங்கில் ஆடிப்
பாடி மகிழ்தற்குரிய இப்பாடல்களைப் புனைந்துள்ளார். சிறார் மனங்களிக்க அவர்
விழையும் பொருண்மைகளில் பாடல்களைத் தெரிவு செய்த திறம் பாராட்டுதற்குரியது.
நோயில்
நொந்து கிடந்த எனக்கு அப்பாடல்கள் மருந்தாகவும் எதிர்காலத் தமிழ் வளம் காட்டும்
தொலைப் படமாகவும் அமைந்தன. செல்வத் திருமகனார் கவியரசர் பாரதி எழுதிய பாடல்கள்
உலகமெங்கம் பரவுதல் வேண்டும். இந்நூலை வெளியிடும் போது ஆஸ்திரேலியா நாட்டில்
வாழும் பல்லின மழலையர் அவர் தத்தம் மொழிகளில் பாடி மகிழும் சிறார் பாடல்கள் அமைந்த
திறத்தையும் தமிழோடு ஒப்பீட்டளவில்
கண்டறிந்து ஒரு கருத்துரையை எழுதுமாறு வேண்டுகின்றேன். இதுவே தமிழுக்கு அமையும்
தனித்த ஆய்வாகும்.
அறிவியல்
அறிஞர் பாரதியின் ஆர்வம் நெகிழ்தற்குரியது. பிள்ளைத் தமிழ் பாடும் திரு பாரதி
தொடர்ந்து பல்வேறு பெரிய நிலையில் தமிழை எழுதி மகிழ்விப்பாராக. பாரதியின்
சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கோங்குக!.
Ø (புகழ்பூத்த தமிழ் அறிஞராகிய அவ்வை நடராசன் அவர்கள் அவரது
இறுதிக் காலத்திலே உடல் நலக்குறைவோடு இருந்த காலத்திலே இந்த அணிந்துரை
எழுதப்பெற்றது)
No comments:
Post a Comment