பட்டமும் பறக்க நல்லதோர் திட்டம்
பயன்தான் அளித்திடுமே!
பட்டறி வளித்தப் பாடமும்
அதுவே,
பகுத்தே அறிந்திடுவீர்!
திட்டமும் தீட்டும் முன்னரே நமக்கோர்
தெளிந்த பார்வைவேண்டும்!
தீரவே ஆய்ந்துத்
தொடங்கியத் திட்டம்
திறமாய் நிறைவுறுமே!
திட்டமும் ஐந்தைந் தாண்டென அன்று
திறமாய் நடந்ததுதான்;
திரும்பியே பார்த்தால்
அதுவுமே கரைந்தும்,
தேய்ந்தும் போனதன்றோ?
சட்டமும் இயற்றும் ஆள்பவர் இன்றும்
சற்றே சிந்தித்தால்
சார்பிலாத் தன்மை
நிறைந்தவோர் சிறப்பாம்
சட்டம் பிறந்திடுமே!
No comments:
Post a Comment