இலங்கையின் தென்மாகாணத்தில் புனிதமான பிரதேசமெனப்பிரகடனப்படுத்தப்பட்ட கதிர்காமத்தில் ஒரு காலத்தில் வேடர்கள் வாழ்ந்தனர்.
125
ஆயிரம் வருடத்திற்கும் மேற்பட்ட காலத்திற்கு
முன்னர் இருந்தே அங்கு வற்றாத ஜீவநதியாக
ஓடிக்கொண்டிருக்கிறது மாணிக்க கங்கை.
முருகனை தமிழ்க்கடவுள் எனச்
சொல்கிறார்கள். அவர் மணம் முடித்த வள்ளி வேடுவர்
இனத்தைச் சேர்ந்தவள். ஆனால், ஆரியர்கள் முருகனுக்கு
ஏற்கனவே தெய்வானை என்றும் ஒரு மனைவி
இருக்கிறாள் என்று புராணம் எழுதி முருகனை
உயர்ந்த சாதியில் இணைத்துக்கொண்டார்கள்.
ஆனால் ,
திருப்புகழ் எழுதிய
அருணகிரிநாதர், முருகனின் ஆறு முகங்களுக்கும்
அர்த்தம் கற்பிக்கும்பொழுது "
வள்ளியை மணம் புணரவந்த வந்த முகம்
ஒன்று" எனவும்
பாடிவிட்டார். எங்கிருந்தோ வந்து வள்ளியை
மணம் முடித்து அழைத்துச்சென்ற முருகனை சிங்கள பௌத்த
மக்கள் கதரகம தெய்யோ என
அழைக்கிறார்கள்.
கதிர்காம யாத்ரீகர்கள் காட்டு
மார்க்கமாக ஒற்றையடிப்பாதையிலேயே
முருகனை தரிசிக்கச்சென்று மொட்டையும் அடித்துக்கொண்டு
மாணிக்க கங்கையில் குளித்து, காவடி எடுத்து
ஆடிவிட்டு திரும்பினார்கள். 1951 இல் எனக்கும் அங்குதான்
மொட்டை போட்டதாக அம்மா சொன்னார்கள். 1963 இல் நானும் அங்கு சென்று
காவடி எடுத்து ஆடியிருக்கின்றேன்.
அதன்பின்னர் நான்
அங்கு சென்றது 1972
ஏப்ரில் மாதம்.
வள்ளி எப்படி
முருகனுக்கு அழகியோ, அதுபோன்று அந்த
ஊர்மக்களுக்கும் 1949
ஆம் ஆண்டில் ஒரு அழகி பிறந்தாள் அவள்
பெயர் பிரேமாவதி மனம்பேரி. பத்துப்பேர் கொண்ட
அவளது
குடும்பத்தில் அவள் மூத்த பெண்.
இன்றும் உலகெங்கும் அழகிப்போட்டிகள் நடக்கின்றன. அதே சமயம் பெண்ணியவாதிகள் இந்தப்போட்டிகளை கண்டித்துக்கொண்டிருக்கிறார்கள். உலக அழகிகளுக்கும் புகழ் மங்குவதில்லை. அப்படியாயின் ஒரு கிராமத்து அழகியின் புகழ் அக்கிராமத்தில் எப்படி இருந்திருக்கும்...?
பிரேமாவதி
மனம்பேரி அழகியாக இருந்து உலகம்
அறியப்பட்டவள் அல்ல. கொடூரமான வல்லுறவினால்
நிர்வாணமாக்கப்பட்டு நடுவீதியில் வைத்து
சுட்டுக்கொல்லப்பட்டதனால் அறியப்பட்டாள்.
இலங்கையில்
கோணேஸ்வரி, கிருஷாந்தி, இசைப்பிரியா உட்பட பல பெண்கள் ஆயுதப்படையினரால்
எவ்வாறு கொல்லப்பட்டனர் என்பதற்கான
வரலாறுகள் இருக்கின்றன. அந்த வரலாற்றின்
முதல் அத்தியாயத்தில் இருப்பவள் கதிர்காமம் பிரேமாவதி மனம்பேரி.
அவள் க.பொ.த. சாதாரண தரம் வரையில் பயின்றாள். பின்னர்
பௌத்த தஹம் பாடசாலையில் குழந்தைகளுக்கு பௌத்த தர்மம் போதிக்கும் ஆசிரியையாக பணியாற்றினாள். தனது இருபது வயதில் கதிர்காமத்தில் 1969 ஏப்ரில் மாதம் நடந்த புதுவருடப்பிறப்பு கொண்டாட்டங்களில் நடந்த அழகுராணி போட்டியில் கலந்துகொண்டு இரண்டாவது பரிசு பெற்றாள். அவளது கட்டுக்குலையாத அழகினால் சிநேகிதிகளின் தூண்டுதலுடன் 1970 இலும் போட்டிக்கு வந்தாள். இம்முறை அவள் முதலாவதாக தெரிவுசெய்யப்பட்டாள்.
ஊரில் அவள்தான்
பேரழகி என்ற பிம்பம் சரியாக ஒரு
வருடத்தில் அதே ஏப்ரில் மாதம் இல்லாது ஒழிக்கப்பட்டது.
இறுதி
வகுப்புதான் ஆயுதப்பயிற்சி. அனைத்து விடுதலை
இயக்கங்களும் சாதாரண துவக்குகளை வைத்துக்கொண்டு ஆரம்பமான
அமைப்புகள்தான்.
அரச ஆயுதப்படைகளிடம் இருக்கும்
ஆயுதங்களை கைப்பற்றுவதும் அவற்றின் போர்த்தந்திரங்களில் ஒன்று.
மனம்பேரியும்
ம.வி.முன்னணியில் இணைந்தாள். இயக்கத்திற்கு சீருடைகள்
தைத்துக்கொடுத்தாள். அவள் இலங்கையில் ஏற்றதாழ்வற்ற
ஒரு சமதர்ம ஆட்சி மலரும் என்றே நம்பியிருந்தாள்.
அவளது அழகிற்கு எங்காவது பெரிய இடத்தில் மணம் முடித்துப்போயிருக்கலாம். கதிர்காமத்தில் பொலிஸ் அதிகாரியாக கடமையாற்றிய ஒரு சிங்கள இளைஞனும் அவள் அழகில் மயங்கி விரும்பினான். அந்தக்காதலை அவள் ஏற்கவில்லை. ஆனால், அவள் ஏற்றதும் நம்பியதும் மக்களுக்காக உருவாக்கப்பட்ட விடுதலை இயக்கத்தைத்தான்.
கதிர்காமம் பொலிஸ்
நிலையமும் தாக்கப்பட்டது. பொலிசாரால் அந்த
கெரில்லாத் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாது என்பதை
அறிந்த அன்றைய ஸ்ரீமாவின் அரசு இராணுவத்தை
கிளர்ச்சி தொடங்கிய
பிரதேசங்களுக்கு அனுப்பியது. கதிர்காமம்
பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டு பத்து
நாட்களில் பின்னரே அங்கு இராணுவமுகம் அமைக்கப்பட்டது.
லெப்டினன்
விஜேசூரியா அங்கு தலைமை ஏற்றதும் தேடுதல் வேட்டை
தொடர்ந்தது.
அவள்
சித்திரவதைசெய்யப்பட்டாள். அவளும் அவளுடன் பிடிபட்ட மேலும் சில
பெண்களும் வல்லுறவுக்குள்ளாகினர். விஜேசூரியா மட்டுமல்ல
மேலும் சில இரணுவத்தினரும் அவளை சூறையாடினர்.
தொடர்ச்சியான சித்திரவதைக்குப்பின்னர் அவள் கதிர்காமம்
வீதியில் நிர்வாணமாக துப்பாக்கி முனையில்
இழுத்துச்செல்லப்பட்டாள்.
(இந்தக்காட்சியை
எழுதும் நானோ இதனைப்படிக்கும் வாசகர்களோ
கதிர்காமத்தில் நடந்த அந்தக்கொடுமையை நேரில்
பார்த்திருக்கமாட்டோம். ஆனால் 1994 ஆம் ஆண்டு திரைக்கு
வந்த சேகர் கபூர் இயக்கிய சம்பள்
பள்ளத்தாக்கு பூலான் தேவி பற்றிய பண்டிட்
குவின் திரைப் படத்தை பாருங்கள்.
அதில் நடிகை சீமா பிஸ்வாஸ், பூலான்
தேவியாக எப்படி நிர்வாணமாக அழைத்துச்செல்லப்பட்டு
பொதுமக்களின் முன்னிலையில் சித்திரவதை செய்யப்பட்டு
அவமானப்படுத்தப்பட்டாள் என்பதை தெரிந்துகொள்வீர்கள். )
மனம்பேரியின் உடலை அந்த
மண்ணில் புதைப்பதற்கு இராணுவத்தால்
நிர்ப்பந்திக்கப்பட்டவர்களும் இந்த மூவினத்தையும்
சேர்ந்தவர்கள்தான் என அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.
எலடின் என்ற சிங்களவர், காதர் என்ற
இஸ்லாமியர், பெருமாள்
என்ற தமிழர்.
நீண்ட காலத்தின் பின்னர் தற்போது
பட்டலந்தை சித்திரவதை முகாம் பற்றி
பேசப்படுகிறது.
மக்கள் விடுதலை
முன்னணி பீனிக்ஸ் பறவை போன்று உயிர்த்தெழுந்தது.
ஜனநாயக நீரோட்டத்திற்குத்திரும்பி,
தற்போது அரசு அமைத்துள்ளது.
1971 ஏப்ரில்
கிளர்ச்சியின் பொழுதும் 1987 இலும் இலங்கை அரசுக்கு துணைவந்தது
இந்திய அரசு. முன்னர் இந்திராகாந்தியும் பின்னர்
ராஜீவ் காந்தியும் பதவியில் இருந்தார்கள்.
முள்ளிவாய்க்காலிலும் போர் முடிவுக்கு வந்தபொழுது
பக்கத்துணையாக நின்றதும் இந்திய அரசுதான்.
இலங்கையின் ஆளும் வர்க்கத்தை தொடர்ந்து காப்பாற்றிய
பெருமை இந்தியாவுக்குரியது.
ஆனால் -
இந்தப்போர்களில் தமது இன்னுயிர்களை நீத்தவர்கள் அனைவரும் பலரதும்
அரசியல் தேவைகளுக்கு பேசு பொருளானார்கள். மனம்பேரியின் கொலை தொடர்பான
விசாரணை
நீதிமன்றம் வந்தபொழுது
அதனைத்தவறாமல் பார்க்க வந்தவர்தான் ரணசிங்க பிரேமதாஸ.
இறுதியில் அந்த
விசாரணையில் விஜேசூரியாவும் சார்ஜன்ட் அமரதாசவும்
தண்டிக்கப்பட்டனர். சிறையிலிருந்தபொழுது விஜேசூரியா
சுகவீனமுற்று இறந்தான். சார்ஜன்ட் அமரதாச தண்டனைக்காலம்
முடிவுற்று வெளியே வந்தபின்னர் 1988 இல் ம.வி.முன்னணியினர்
அவனைச்சுட்டுக்கொன்று பழி
தீர்த்துக்கொண்டனர்.
1977 பொதுத்தேர்தல்
பிரசாரங்களில் பிரேமதாஸ, மனம்பேரி
மகாத்மியம் பாடிப்பாடியே ஐக்கிய தேசியக்கட்சியின் வாக்கு வங்கியை பெருக்கினார்.
பேச்சுடன் நிற்காமல் பதவிக்கு வந்ததும் மனம்பேரிக்கு
கதிர்காமத்தில் நினைவுச்சின்னமும் அமைத்து அவளின்
குடும்பத்திற்கு ஒரு வீடும் கட்டிக்கொடுத்தார்.
அவ்வேளையில்
கதிர்காமத்தில் மயான அமைதி நிலவியது. ஒரு
சில பஸ்கள்தான் சேவையில் இருந்தன.
தெருவில் மக்களின்
நடமாட்டமும் குறைவு. முதல் நாள் நடு இரவில்
அந்த பஸ்ஸிலிருந்து இறங்கியவர்கள் என்னுடன் வந்த
எனது உறவினர்கள் இரண்டுபேரும் மற்றும் மூன்று
சிங்களப்பயணிகளும்தான்.
அனைவரும் ஒன்றாக
ஒரு மடத்தில் தங்கியிருந்து மறுநாள் கங்கையில்
நீராடி தரிசனம் முடிந்ததும் புறப்பட்டுவிட்டோம்.
அதன் பிறகு அந்தப்பக்கம் செல்ல சந்தர்ப்பம் வரவில்லை.
2005 இல்
வெளியான எனது மற்றும் ஒரு கதைத்தொகுதிக்கு
கங்கைமகள் என்றே பெயரிட்டேன். அதற்கு ஏற்ற ஓவியத்தை
எனக்கு வரைந்து தந்தவர் தமிழ்நாட்டின் பிரபல
ஓவியர் மணியன்
செல்வன்.
கதிர்காமத்தில்
மாணிக்க கங்கை ஓடிக்கொண்டே இருக்கிறது. அந்த கங்கை
நதியோரத்தில் பிறந்த கங்கை
மகள் பிரேமாவதி மனம்பேரி இன்றும்
நினைவுகளில் ஓடிக்கொண்டே இருக்கிறாள்.
No comments:
Post a Comment