அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் தாங்கி திங்கட் கிழமைகளில் வெளிவருகிறது. 19/01/2026 - 25/01/ 2026 தமிழ் 16 முரசு 39 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
நாவலர் பெருமானை நாமென்றும் போற்றுவமே !
பலர் பரவசமடைய ஒரு கவிதை!
-சங்கர சுப்பிரமணியன்.
தருவதை அள்ளி எனக்கு தா தா
விரதமிருந்து காண நான் வரவா
நிரந்தரம் உன் நினைவு வேலவா
துள்ளிவரும் மயில்மேல் ஏறிவா
கொள்ளை இன்பம் தந்திட வா
தேவர் படைத்தளபதியே நீ வா
பாவம் போக்கி அருளிடவே வா
அன்னதான பிரபோடு பிறந்தாய்
தன்னலமற்றே நீயும் திகழ்ந்தாய்
கோபமாய் மலமீது ஏறி நின்றாய்
சாபமெலாம் அகற்ற நீ எழுந்தாய்
மூத்த எழுத்தாளர் மாத்தளைச் சோமு அவர்களின் நூல் வெளியீடு
பல்மருத்துவக் கலாநிதி
--- பாரதி இளமுருகனார்
சாகித்திய விருது - தமிழக அரசின் விருது - மதுரை உலக தமிழ்ச் சங்க விருது எனப் பலவித விருதுகளைப் பெற்ற பிரபல மூத்த எழுத்தாளராகிய மாத்தளைச் சோமு அவர்களின் 100 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு நூலின் வெளியீடு கடந்த 30- 11 – 2025 ஞாயிற்றுக் கிழமை சிட்னியில் அமைந்துள்ள துங்காபி புனித அந்தோனியார் தேவாலய மண்டபத்திலே கோலாகலமாக அரங்கேறியது. அரங்கு நிறைந்த தமிழ் ஆர்வலர்களுடன் விழா ஆரம்பமாகியது. மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய விழா வழமைபோலத் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் இசைத்ததைத் தொடர்ந்து வரவேற்புரையை தமிழ் ஆர்வலர் வசந்தராஜா அவர்கள் (தலைவர் - கம்பலாந்து தமிழர் கழகம்) சிறந்த முறையிலே வழங்கினார்.அவரின் கம்பீரமான பேச்சு நடை எல்லோரையும் கவர்ந்திருந்தது. சிட்னியிலே பல தமிழ் நிகழ்ச்சிகளிலே பங்கேற்றுத் தனது ஆளுமையை நிலைநாட்டியவர் திருவாளர் ம. தனபாலசிங்கம் அவர்கள். அவரே இந்த விழாவுக்குத் தலைமை வகித்து ஒரு சிறந்த உரையை அற்புதமாக வழங்கினார். வழமைபோல அவரின் பேச்சு தனித்துவமானதாக அமைந்திருந்தது. தொடர்ந்து கலாபூசணம் நாவை குமரிவேந்தன் அவர்கள் சிறப்பான வகையிலே வாழ்த்துரை வழங்கினார். வளர்ந்துவரும் சிறந்த எழுத்தாளர் ஐங்கரன் விககினேஸ்வரா அவர்களின் அற்புதமான வாழ்த்துரை பாராட்டிற்கு உரியது.
அம்பலம் - சிறுகதை - கே.எஸ்.சுதாகர்
வயது முதிர்ந்தோர் இல்லத்தில் பிரபல எழுத்தாளர் நிரஞ்சன் இருந்தார். அவரைச் சந்திப்பதற்காக பத்திரிகை நிருபரான தணிகாசலம் சென்றிருந்தார்.
“எழுத்தாளர் நிரஞ்சனைப் பாக்க
வேணும்…”
“செகண்ட் ஃப்ளோர் மூண்டாவது ரூமுக்குப் போங்க…”
தணிகாசலம் லிப்ற் இருக்கத்தக்கதாக
படிகளின் வழியே ஏறி மேலே போனார். அறை திறந்து இருந்தது. உள்ளே உறக்கத்தில் இருந்தார்
நிரஞ்சன். அவரை எழுப்புவதா விடுவதா என்ற தயக்கத்தில், அவரின் கட்டிலுக்கு எதிராக இருந்த
கதிரையில் அமர்ந்து கொண்டார்.
நிரஞ்சனின் முகத்தில் சவரம்
செய்யப்படாமல் வெள்ளி முடிகள் எங்கும் பரவிக் கிடந்தன. படுக்கையிலும் தனது மொட்டையை
மறைப்பதற்காக தொப்பி அணிந்திருந்தார். அவரை முதன்முதலாகச் சந்தித்தது அப்படியே நெஞ்சில்
நிழலாட்டமாக இருந்தது தணிகாசலத்திற்கு. தொப்பியைக் முழுகும்போதும் கழட்ட மாட்டாரோ?
இருவருக்கும் வயதில் பெரிதளவு
வித்தியாசம் இல்லை. ஆனால் மூப்பும் பிணியும் வயது பார்த்து வருவதில்லை. அவர்களின் பரம்பரை
அலகுகள், உணவுப் பழக்க வழக்கங்கள் போன்ற பல சங்கதிகள் அவற்றில் அடங்கியிருக்கின்றன.
நிரஞ்சன் உடலாலும் மனதாலும் கொஞ்சம் தளர்ந்து போய் விட்டார். மனித வாழ்வின் நிலையான
துன்பங்களில் ஒன்றான நோய் அவரை வாட்டி வதைக்கத் தொடங்கிவிட்டது. அவர் ஒரு தண்ணிச்சாமி.
அதுவே அவரை நோயாளியாகவும் ஆக்கியிருக்கலாம். நீரிழிவும் கொலஸ்ரோலும் ஒவ்வொரு பக்கமாகப்
பிடித்திழுக்க, ஒரு தடவை ஸ்ரோக்கும் வந்திருந்தது. மனைவி இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டன.
பிள்ளைகள் வேலைக்குப் போவதால் இதுவே பாதுகாப்பான இடம் எனக் கருதி, இங்கே கொண்டு வந்து
விட்டுவிட்டார்கள். இடையிடையே வந்து பார்த்து உணவும் குடுத்துவிட்டுச் செல்வார்கள்.
தமிழ் மக்களுக்கான அந்த முதியோர்
காப்பகத்தில் நிரஞ்சனுடன் ஆணும் பெண்ணுமாக மேலும் பதினான்கு பேர்கள் இருக்கின்றார்கள்.
நிரஞ்சன் `வாசல்’ என்ற சிறுகதைத்தொகுப்பையும்,
`ஊர்வலம்’ என்ற புதுக்கவிதைத் தொகுப்பையும் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் வெளியிட்டிருக்கின்றார்.
அதன் பின்னர் உதிரிகளாகச் சில கதைகளும், புதுக்கவிதைகளும் எழுதியிருக்கின்றார். ஆனால்
தொகுப்பில் போடுமளவிற்குப் போதுமானதாக இருக்கவில்லை. அந்த உதிரிகளிலும் சில இலக்கியத்
தரமில்லாமல் இருந்தன. ஆனால் `வாசல்’ தொகுப்பு சிறுகதை இலக்கியத்திற்கே ஒரு வாசல் என்றும்,
`ஊர்வலம்’ தொகுப்பு புதுக்கவிதையின் ஒரு திறவுகோல் எனவும் இன்றளவில் பலராலும் சிலாகிக்கப்பட்டு
வருகின்றன. சில பல்கலைக் கழகங்களில், இவை இரண்டும் இன்னமும் பாட நூல்களாக இருக்கின்றன.
திடீரென விழித்துக் கொண்ட
நிரஞ்சன், படுக்கையில் இருந்து எழுந்தார்.
“சொன்னபடி வந்துவிட்டீர்கள்.
நான் சற்றே அயர்ந்து போனேன்” சிரித்துக் கொண்டார் நிரஞ்சன்.
“பேட்டியைத் தொடங்கலாமா?” என்றார் தணிகாசலம்.
பரந்தாமன் தலைமையில் பட்டிமன்றம்!
-சங்கர சுப்பிரமணியன்.
பேச்சாளர்கள் பேசுவதை நாம் கேட்டிருப்போம். ஒவ்வொருவர் ஒருவகை. எந்தவித முன்னேற்பாடும் இன்றி மணிக்கணக்கில் பேசுவார்கள். இவர்கள் ஒருகாலத்தில் சென்னை கடற்கரை ஒன்றில் இரண்டு மணி நேரம் உரையாற்றிவிட்டு அப்படியே அதையடுத்து அடுத்த கடற்கரைக்கு சென்றும் இரண்டு மூன்று மணி நேரம் பேசுவார்கள்.
தமிழன் அன்று சீனாவில் வணிகம்! தமிழன் இன்று சீனாவில் பயணம்!! தொடர்- 6…..சங்கர சுப்பிரமணியன்.
பொய் சொல்பவர்கள் தொடர்ந்து பொய் சொல்வதையே வாடிக்கையாக வைத்திருக்கும்போது அவர்கள் சொல்வது எல்லாம் பொய்யாகவே தெரியும். சமூகத்தில் அவர்களின்மேல் நம்பகத் தன்மை போய்விடும். நான் என் தவறை உணர்ந்து விட்டேன். சொர்கத்தைப் பொருத்தவரையில் எல்லா இடத்திலும் தெளிவு இல்லாமலேதான் இருக்கிறது.
மன்னவன் வந்தானடி - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்
சிவாஜி ஏராளமான படங்களில் சீரியஸ் வேடங்களில்
நடித்திருக்கிறார். சில படங்களில் கோமாளியாகவும் நடித்திருக்கிறார். ஆனால் சீரியஸாகவும் , கோமாளியாகவும் அவர் நடித்த படம்தான் மன்னவன் வந்தானடி . ஐம்பது வருடங்களுக்கு முன் வெளிவந்த இந்தப் படத்துக்கு இது பொன் விழா ஆண்டு!
செல்வந்தராக வரும் போது பார்வையாலேயே மிரள வைக்கிறார். நம்பியாரையும் ஆட்டி படைக்கிறார். சாதாரண கதைக்கு கூட தன் நடிப்பால் மெருகூட்ட முடியும் என்பதை நிரூபிக்கிறார் சிவாஜி.
இலங்கைச் செய்திகள்
சீரற்ற வானிலை ; உயிரிழந்தோர் எண்ணிக்கை 639 ஆக அதிகரிப்பு
சீரற்ற வானிலை: 4.95 இலட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 17 இலட்சம் பேர் பாதிப்பு - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
கிண்ணியா பல்கலைக்கழக விஞ்ஞான நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட காணியை வெளிவிவகார அமைச்சுக்கு வழங்க தீர்மானம்
மலையக தமிழ் மக்களை வடக்கில் வாழ்வதற்கு அனுமதிக்க வேண்டும் - சிவபூமி அறக்கட்டளைத்தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய இராணுவத்தால் கள வைத்திய சேவை!
வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் 100 மி.மீ. மழைவீழ்ச்சி மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு
வடக்கு - கிழக்கு மலையகத்துக்கான புகையிரத சேவைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான புகையிரத திணைக்களத்தின் அறிவிப்பு
டெய்சி பாட்டிக்கு நாளை மனநலப் பரிசோதனை ; யோஷித ராஜபக்ஷ, டெய்சிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
யாழில். 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி தொகை பெறுவோரின் பெயர் பட்டியல் இன்று முதல் காட்சிப்படுத்தப்படும்!
சீரற்ற வானிலை ; உயிரிழந்தோர் எண்ணிக்கை 639 ஆக அதிகரிப்பு
Published By: Digital Desk 1
12 Dec, 2025 | 12:06 PM
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 639 ஆக அதிகரித்துள்ளது.
கண்டி மாவட்டத்திலேயே அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கண்டி மாவட்டத்தில் 234 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனை தொடர்ந்து, பதுளை மாவட்டத்தில் 90 பேரும், நுவரெலியாவில் 89 பேரும், குருநாகலில் 61 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 37 பேரும் உயிரிழந்துள்ளனர்.
உலகச் செய்திகள்
காசாவில் ‘பைரன்’ புயல் தாக்கம் ; 14 பேர் பலி
உக்ரைனில் எரிபொருள் நிலையங்களை குறிவைத்து ரஷ்யா ட்ரோன் தாக்குதல் : 90 ஆயிரம் பேர் மின்சாரமின்றி தவிப்பு
மியன்மாரில் வைத்தியசாலை மீது தாக்குதல் ; 34 பேர் உயிரிழப்பு!
இந்தோனேசிய வெள்ள பேரழிவு ; உயிரிழப்பு 1,000ஐ கடந்தது - ஒரு மில்லியனுக்கு அதிகமானோர் இடம்பெயர்வு
தமிழகத்திற்கு மட்டுமல்ல புதுச்சேரி மக்களுக்கும் குரல் கொடுப்பேன்- விஜய்
ஜப்பான் நிலநடுக்கம் ; 30 பேர் காயம்
காசாவில் ‘பைரன்’ புயல் தாக்கம் ; 14 பேர் பலி
13 Dec, 2025 | 09:47 AM
காசா பகுதியில் தாக்கிய ‘பைரன்’ புயலால் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த பகுதியில் கடும் காற்று, கனமழை மற்றும் முன்பு இஸ்ரேலிய தாக்குதலில் சேதமடைந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால், குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்தாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக அங்கு வாழும் மக்களின் வீடுகள் சேதமடைந்துள்ளதால் சுமார் 8.5 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.





.png)








