திருக்குறள் மனனப் போட்டி – 25/05/2025

 



சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றம் பெருமையுடன் நடாத்தும் வருடாந்த திருக்குறள் மனனப் போட்டிகள் மே மாதம் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள தமிழர் மண்டபத்தில் முற்பகல் 9.00 மணியிலிருந்து நடைபெறவுள்ளது.

போட்டி நடாத்தப்படும் பிரிவுகளும் வயது வரம்பும்

பிரிவுகள்

பிறந்த திகதி விபரம்

பாலர் ஆரம்ப பிரிவு

01.08.2020 இலும் அதன் பின்னரும் பிறந்தவர்கள்

பாலர் பிரிவு

01.08.2018 க்கும் 31.07.2020 க்கும் இடையில் பிறந்தவர்கள்

கீழ்ப்பிரிவு

01.08.2016 க்கும் 31.07.2018 க்கும் இடையில் பிறந்தவர்கள்

மத்தியபிரிவு

01.08.2013 க்கும் 31.07.2016 க்கும் இடையில் பிறந்தவர்கள்

மேற்பிரிவு

01.08.2010 க்கும் 31.07.2013 க்கும் இடையில் பிறந்தவர்கள்

அதிமேற்பிரிவு

01.08.2006 க்கும் 31.07.2010 க்கும் இடையில் பிறந்தவர்கள்

 

பங்குபற்றுவர்களின் முழுப்பெயர் மற்றும் பிறந்த திகதி ஆகிய விபரங்களை மின்னஞ்சல் மூலமாக 

மே மாதம் 24ம் திகதிக்கு முன்பாக கிடைக்கக் கூடியதாக tikmsydney@gmail.com    என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் போட்டிக்கான விதிமுறைகள்,  புள்ளிகள் வழங்கும் முறை பற்றிய குறிப்புகள் என்பனவற்றை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்

*************************************************************************************

 பாலர் ஆரம்பபிரிவு

கீழே கொடுக்கப்பட்டுள்ள குறள்கள் மூன்றையும் மனனம் செய்து ஓப்புவித்தல் வேண்டும்.

குறள் 7:

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது

குறள் 138:

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம்

என்றும் இடும்பை தரும்

குறள் 400:

கேடில் விழுச் செல்வங்  கல்வி யொருவற்கு

மாடல்ல மற்றை யவை

*************************************************************************************

 பாலர்பிரிவு

கீழே கொடுக்கப்பட்டுள்ள குறள்கள் நான்கையும் மனனம் செய்து ஓப்புவித்தல் வேண்டும்.

குறள் 355:

எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு

குறள் 50:

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்

குறள் 467:

எண்ணித் துணிக கருமந் துணிந்தபின்

எண்ணுவ மென்ப திழுக்கு

குறள் 131:

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்

*************************************************************************************

 கீழ்ப்பிரிவு 

கீழே கொடுக்கப்பட்டுள்ள  ஐந்து குறள்களையும் மனனம் செய்து ஓப்புவித்தல் வேண்டும்.

குறள் 292:

பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கு மெனின்

குறள் 391:

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக

குறள் 305:

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்

தன்னையே கொல்லுஞ் சினம்

குறள் 969:

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்

குறள் 622:

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்

உள்ளத்தின் உள்ளக் கெடும்

*************************************************************************************

 மத்தியபிரிவு 

கீழே கொடுக்கப்பட்டுள்ள  ஆறு குறள்களையும் மனனம் செய்து ஓப்புவித்தல் வேண்டும்.

குறள் 1025:

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்

சுற்றமாச் சுற்றும் உலகு

குறள் 314:

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயஞ் செய்து விடல்

குறள் 399:

தாமின் புறுவ துலகின் புறக்கண்டு

காமுறுவர் கற்றறிந் தார்

குறள் 596:

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினுந் தள்ளாமை நீர்த்து

குறள் 479:

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல

இல்லாகித் தோன்றாக் கெடும்

குறள் 377:

வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி

தொகுத்தார்க்குந் துய்த்த லரிது

*************************************************************************************

 மேற்பிரிவு - 2025

கிழே கொடுக்கப்பட்ட ஆறு குறள்களையும் மனனம் செய்து, அவற்றின் பொருளையும் தெளிவாக விளக்குதல் வேண்டும்.  (பொருளும் கீழே தரப்பட்டுள்ளது.  பொருள் வேறு படாவண்ணம் தெளிவாக விளக்கினால் போதுமானது)

குறள் 293:

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்நெஞ்சே தன்னைச் சுடும்

மு. விளக்க உரை:  ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய் சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.

குறள் 664:

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்

இச் செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம், சொல்லிய படி செய்து முடித்தல் அரியனவாம்.

குறள் 396:

தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு

மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.

குறள் 467:

எண்ணித் துணிக கருமந் துணிந்தபின்

எண்ணுவ மென்ப திழுக்கு

(செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும், துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.

குறள் 380:

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினுந் தான்முந் துறும்

ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியைஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.

குறள் 156:

ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்

பொன்றுந் துணையும் புகழ்

தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.

*************************************************************************************

 அதிமேற்பிரிவு 

கீழே  கொடுக்கப்பட்ட ஏழு குறள்களையும் மனனம் செய்து அவற்றின் பொருளையும்  தெளிவாக விளக்குதல் வேண்டும் (பொருளும் கீழே தரப்பட்டுள்ளதுபொருள் வேறுபடாவண்ணம் தெளிவாக விளக்கினால் போதுமானது)

குறள் 231:

ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல

தூதிய மில்லை உயிர்க்கு

வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.

குறள் 397:

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

சாந்துணையுங் கல்லாத வாறு

 கற்றவனுக்கு தன் நாடும் ஊரும் போல வேறு எதுவாயினும் நாடாகும், ஊராகும் ஆகையால் ஒருவன் சாகும் வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்.

குறள் 322:

பகுத்துணடு பல்லுயி ரோம்புதல் நூலோர்

தொகுத்தவற்று ளெல்லாந் தலை

கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.

குறள் 396:

தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு

மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.

குறள் 265:

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்

ஈண்டு முயலப் படும்

 விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும்.

குறள் 490:

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த இடத்து

 பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.

குறள் 190:

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்

தீதுண்டோ மன்னு முயிர்க்கு

அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்டோ?

*************************************************************************************

 


No comments: