

தன்னுடலை வருத்தி நீர்கூட அருந்தாது, தன்னுயிரை ஈகம் செய்த தியாகி திலீபனின் 33வது ஆண்டு நினைவு நிகழ்வு, செப்ரம்பர் மாதம் 26 ஆம் நாள் சனிக்கிழமை (சிட்னி/ குயின்ஸ்லாந்து/ பேர்த் இல்) இடம்பெறவுள்ளது.
ஆயுதந்தரித்து களமாடிய விடுதலைப் போராளியான திலீபன், காந்தி தேசத்திடம் தமிழீழ மக்களுக்காக நீதிகோரி சாத்வீக வழியில் போராடினான். தமிழ் மக்களின் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, திலீபன் மேற்கொண்ட பயணம் எமது விடுதலைப் போராட்டத்தில் உன்னதமான அர்ப்பணிப்பாகியது.
பன்னிருநாட்கள் தன்னை உருக்கி உருக்கி எரிந்தணைந்த அந்தத் தியாக தீபத்தின் நினைவுநாள் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
தற்போதைய கொறானாவைரஸ் இடர்கால நிலையை கருத்திற்கொண்டு, அரச விதிமுறைகள், சமூக இடைவெளியை பேணியவாறு இவ்நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும்.
நிகழ்வுகளில் நேரடியாக கலந்துகொள்ள முடியாதவர்கள் ஏனைய மாநிலத்தவர்கள் இணையவழி ஊடாகவும் இணைந்துகொள்ளமுடியும்.
No comments:
Post a Comment