இங்கிதமாய் அமைந்தமொழி
வழக்கொழிந்து போகாமல்
வாழுகின்ற தெங்கள்மொழி
நிலத்திலுள்ள மாந்தரெல்லாம்
நிம்மதியாய் வாழுதற்கு
நீதியொடு வாழ்வியலை
நீக்கமறச் சொன்னமொழி !
அகத்திணையும் புறத்திணையும்
அமைகின்ற வகையினிலே
ஆழமாய் கருத்துக்களை
அனைவருக்கும் சொன்னமொழி
நிலத்தியல்பை வாழ்க்கையொடு
இணைத்திடவே இலக்கியத்தை
நெஞ்சமெலாம் பதியவைக்க
நிறையவே தந்தமொழி !
பக்தியினை இலக்கியமாய்
பாரினிலே தந்தமொழி
பலநாட்டார் வியந்துநிற்க
குறள்தந்த பசுமைமொழி
திருவாசகத் தேனை
உருகிற்குத் தந்தமொழி
திசையெல்லாம் புகழ்பரப்பி
நிற்குதிப்போ பெருமையுடன் !
ஆண்டவனின் அருள்பெற்ற
அன்னைத் தமிழ்மொழியை
அரியணையில் ஏற்றிவைத்து
ஆட்சிமொழி ஆக்கவேண்டும்
அழகுதமிழ் உலகெங்கும்
அனைவரிடம் சேர்வதற்கு
ஆர்வமுடன் இணைந்தொன்றாய்
ஆவலுடன் செயற்படுவோம் !
No comments:
Post a Comment