தேர்தல் தொடர்பில் 12 முறைப்பாடுகள்
தமிழ் முற்போக்கு கூட்டணி சத்தியாகிரக போராட்டத்தில்
இலங்கைக்கு ஜி.எஸ்.பி. வரிச்சலுகை: ஒபாமா கையொப்பமிட்டார்
இதுவரை 135 முறைப்பாடுகள்
ஐந்து மாணவிகள் வன்புணர்வு ஆசிரியருக்கு விளக்கமறியல்
தேர்தல் தொடர்பில் 12 முறைப்பாடுகள்
06/07/2015 எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் இதுவரை 12 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது.
பொதுத்தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரை மேற்படி 12 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
தமிழ் முற்போக்கு கூட்டணி சத்தியாகிரக போராட்டத்தில்
08/07/2015 பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளத்தை பெற்றுகொடுக்க வேண்டுமென வலியுறுத்தி தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையில் இன்று தலவாக்கலை நகரசபை மைதானத்தில் சத்தியாகிரக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இப்போராட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான வி.இராதாகிருஷ்ணன் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இலங்கைக்கு ஜி.எஸ்.பி. வரிச்சலுகை: ஒபாமா கையொப்பமிட்டார்
09/07/2015 இலங்கைக்கு ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை வழங்குவதற்கு அனுமதி வழங்கி அதற்கான ஆவணத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கையெழுத்திட்டார் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலன்னே தெரிவித்தார்.
2013 ஆம் ஆண்டு ஜி.எஸ்.பி. வரிச் சலுகை நிறுத்தப்பட்டு தற்போது இரண்டு வருடங்கள் கழிந்து மீளக் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே பேச்சாளர் மஹேஷினி கொலன்னே இதனை தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு அமெரிக்கா ஜி.எஸ்.பி.வரிச் சலுகை வழங்கும். இவ்வாறு 122 நாடுகளுக்கு இச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இலங்கையும் உள்ளது. 5000 பொருட்களுக்கு (அமெரிக்காவுக்கு) ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு இச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இச் சலுகைக்கு குறிப்பிட்ட கால எல்லை வரையறுக்கப்படும். அக்கால எல்லை முடிவடைந்ததும் அமெரிக்க காங்கிரஸ் மீண்டும் அக்கால எல்லையை புதுப்பிக்கும்.
இது இவ் வரிச் சலுகை தொடர்பிலான நடைமுறையாகும். கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கைக்கான அமெரிக்காவின் ஜி.எஸ்.பி. வரிச் சலுகை நிறுத்தப்பட்டது. இச் சலுகை இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தங்கம், வெள்ளி, தைத்த ஆடைகள், இறப்பர், பிளாஸ்டிக் உட்பட பல பொருட்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
கடந்த இரண்டு வருடங்களாக இச் சலுகை நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது இரண்டு வருடங்கள் கழித்து அமெரிக்க காங்கிரஸ் இலங்கைக்கு மீண்டும் ஜி.எஸ்.பி வரிச் சலுகையை வழங்குவதற்கான தீர்மானத்தை -ஜூன் 27ஆம் திகதி தீர்மானித்தது.
இத் தீர்மானத்திற்கான அனுமதியளிக்கும் ஆவணத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கையெழுத்திட்டுள்ளார். ஜூலை (இம் மாதம்) 29 ஆம் திகதி முதல் ஜி.எஸ்.பி.சலுகை எமக்கு கிடைக்கும் வகையில் அது நடைமுறைப்படுத்தப்படும்.
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களில் நூற்றுக்கு 7 வீதத்திற்கு இது கிடைக்கின்றது. நன்றி வீரகேசரி
இதுவரை 135 முறைப்பாடுகள்

இதில் அரச வளங்களை முறைக்கேடாக பயன்படுத்தியமை தொடர்பில் 8 முறைப்பாடுகள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
ஐந்து மாணவிகள் வன்புணர்வு ஆசிரியருக்கு விளக்கமறியல்
10/07/2015 ஒன்றில் கல்வி கற்கும் 5 மாணவிகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதான ஆசிரியரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிவான் மா.கணேசராசா உத்தரவிட்டார்.
பருத்தித்துறை பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தரின் ஆய்வின் பிரகாரம் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டிருந்தார்.
நேற்று முன்தினம் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் இவர் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து நீதிவான் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment