அழிவு வரும்; வந்தே தீரும்; காத்திருங்கள்: மனோ கணேசன்
ஐ.நா. விசேட அறிக்கையாளர் பெயானி இலங்கை வருகை
ஐ.நா. விசேட பிரதிநிதியுடன் விக்னேஸ்வரன் சந்தித்து கலந்துரையாடல்
நள்ளிரவில் கதவைத் தட்டிய கப்பல் கப்டன் பொதுமக்களால் மடக்கிப்பிடிப்பு
முல்லைத்தீவு விகாரையின் காணி உறுதியை ஐ.நா. பிரதிநிதியிடம் காண்பித்த உரிமையாளர்
கமலேந்திரன் ஈ.பி.டி.பியிலிருந்து இடைநிறுத்தம்
பாலியல் வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்வும், எதிர்ப்புப்பேரணியும்
'எங்களுக்கு எதுவும் வேண்டாம் சொந்த இடத்தில் வாழவிடுங்கள்"
=====================================================================
அழிவு வரும்; வந்தே தீரும்; காத்திருங்கள்: மனோ கணேசன்
03/12/2013 கொழும்பு கல்கிசை படோவிட 2ம் வட்டார ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான காணிக்கை உண்டியல் நேற்று இரவு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஒரு வாரத்தில்
கொள்ளை சம்பவத்துக்கு உள்ளான கல்கிசை படோவிட 2ம் வட்டார ஸ்ரீ
முத்துமாரியம்மன் தேவஸ்தானத்துக்கு நேரடியாக இன்று காலை சென்ற மனோ கணேசன்,
அங்கு ஆலய குருக்கள் மற்றும் அறங்காவலர் சபை உறுப்பினர்களிடம் நடந்த
சம்பவம் பற்றி விசாரித்து அறிந்து கொண்டார். மனோ கணேசனுடன் ஜமமு மாநகரசபை
உறுப்பினர்கள் சண். குகவரதன், எஸ். பாஸ்கரா ஆகியோரும் சென்றிருந்தனர். இது
தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மனோ கணேசன் கூறியதாவது,
இச்சம்பவம் பற்றி போலிஸ் மாதிபர் இலங்ககோனுக்கு அறிவித்து என்
அதிருப்தியை தெரிவித்துள்ளேன். இது இரண்டு நாட்களில் போலிஸ் மாதிபருக்கு
நான் நேரடியாக அறிவித்த ஐந்தாவது கோவில் கொள்ளை சம்பவமாகும்.
இந்த சம்பவத்தில் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு, திருவிழா காணிக்கை நிதி
கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் இரத்தினபுரி மாவட்ட கொலொன்ன போலிஸ்
பிரிவிலும், மாத்தறை மாவட்ட தெனியாய போலிஸ் பிரிவிலும் நான்கு சம்பவங்கள்
நடைபெற்று கோவில் உண்டியல் பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
இந்த கொள்ளைகளை யார் செய்கிறார்கள்? இவை இந்து கோவில்களை குறி வைத்து
திட்டமிட்டு செய்யப்படும் சம்பவங்களா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இந்த
குற்றச்செயல்களை எவர் செய்தாலும், இந்நாட்டு வரலாற்றில் என்றும்
இல்லாதவாறு, இந்து கோவில்களின் மீது கை வைக்கும் அளவுக்கு காடைத்தன
சிந்தனையை இன்று இந்நாட்டில் ஊட்டி வளர்ப்பது யார் என்பது மக்களுக்கு நன்கு
தெரியும். இந்நாட்டில் இன்று இந்து தமிழர்கள் கேட்பாரற்ற சமூகத்தினராக,
நாதியற்றவர்களாக இருக்கின்றார்கள் என சிலர் நினக்கிறார்கள். இப்படி
நினைபவர்களுக்கு விரைவில் நாம் யார் என்பதை சாத்வீகமாக எடுத்து
காண்பிப்போம்.
இந்த குற்றசெயல்களுக்கான முன்மாதிரியை இந்த அரசாங்கமே செய்து காட்டி
தந்துள்ளது. வடக்கில் இந்து கோவில்கள இடித்து தரைமட்டம் ஆக்கப்படுகின்றன.
அதை பார்வையிட சென்ற வடக்கு இந்து முதலமைச்சரை உள்ளே விட மறுத்துள்ளார்கள்.
தம்புள்ளையிலும், கொழும்பு கொள்ளுபிட்டியிலும் இரண்டு இந்து அம்மன்
கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளன. இது அரசாங்கத்தின் நேரடி வேலை. இதுபோல்
இந்நாட்டில் அரச ஆதரவுடன் செயல்படும் பௌத்த மத தீவிரவாதிகள் கோவில்களையும்,
பள்ளிகளையும், தேவாலயங்களையும் தாக்குகிறார்கள். இத்தகைய சம்பவங்களினால்,
சாதாரண குற்றவாளிகளுக்கும் ஆலயங்களில் கை வைக்கும் துணிச்சல்
ஏற்பட்டுள்ளது.
இன்று இந்நாட்டில் தாம் எதிர்கொள்ளும் நாளாந்த சவால்களினால்
நிர்க்கதியாகியுள்ள பொதுமக்கள் கடைசியாக சரணடையும் இடமாக வணக்க ஸ்தலங்களே
உள்ளன. இந்நிலையில் வணக்க ஸ்தலங்களையும் விட்டு வைக்காத கொள்ளை கலாச்சாரம்
வெகு வேகமாக பரவி வருகிறது. இதனுடன் இன்று பேரினவாத, மதவாத தீவிரவாதமும்
சேர்ந்து கொண்டுள்ளது. இதனால் குற்றவாளி கும்பல்கள் மேலும்
ஊக்குவிக்கப்பட்டு சிறுபான்மை இனத்தவரின் கோவில்கள், பள்ளிகள், தேவாலயங்கள்
குறிவைக்கப்படுகின்றன. இதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை. இன்று இவைபற்றி
நானும் சலிக்காமல் போலிஸ் மாதிபருக்கும், அனைத்து போலிஸ் அதிகாரிகளுக்கும்
முறையிட்டு வருகிறேன். ஊடகங்களும் இந்த அநீதிகளை பற்றி நாட்டிற்கு
அறிவித்து தங்கள் கடமைமையை செய்து வருகின்றன. போலிஸ் விசாரணைகள் மூலம்
தீர்வு பெரும்பாலும் கிடைப்பதில்லை. ஆனால், இந்நாட்டில் இன்று தமிழ் பேசும்
சிறுபான்மை மக்கள் கேட்பாரற்ற, நாதியற்ற மக்கள் என எவரும் நினைத்து
விடக்கூடாது என்பதாலேயே எம்மாலான இயன்ற உடன் நடவடிக்கைகளையும் நாம்
எடுக்கின்றோம். அநீதிகளை தட்டி கேட்காமலேயே இருந்தால் இத்தகைய சம்பவங்கள்
நாடு முழுக்க இன்னமும் அதிகமாக பரவும் அபாயம் இருக்கிறது.
குற்றவாளிகள் தற்காலிகமாக சட்டத்தின் பிடியில் இருந்து தப்பினாலும்,
ஆண்டவன் சாபத்துக்கு ஆளாவார்கள் என்பது திண்ணம். இந்து தமிழர்கள் அல்லது
சிறுபான்மை மக்கள் கேட்பாரற்றவர்கள் என எண்ணி அம்மன் கோவில்களை
கொள்ளையடிக்கும் திருட்டு கும்பல்களுக்கும், கோவில்களையும், பள்ளிகளையும்,
கிறிஸ்தவ தேவாலயங்களையும் இடித்து, இந்த குற்றவாளிகளை தட்டிகொடுத்து
அவர்களுக்கு முன்மாதிரி தரும் இந்த அரசாங்கத்துக்கும், அரசாங்கத்துடன்
சேர்ந்து செயல்படும் மதவாத கும்பல்களுக்கும் இதை நான் கூறி வைக்க
விரும்புகிறேன். அழிவு வரும்; வந்தே தீரும்; காத்திருங்கள். நன்றி வீரகேசரி
ஐ.நா. விசேட அறிக்கையாளர் பெயானி இலங்கை வருகை
03/12/2013 ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான விசேட அறிக்கையாளர் சலோகா பெயானி
ஐந்து நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று இலங்கை வந்தடைந்தார்.

இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களின் நிலைமை மற்றும் மீள்குடியேற்ற நிலைமை
போன்றவற்றை பார்வையிடும் நோக்கிலேயே அவர் இலங்கை வந்துள்ளார்.
அனைத்து தரப்புக்களிடம் இருந்தும் நான் தகவல்களை பெறுவேன். இடம்பெயர்ந்த
மக்களிடமே தகவல்களை பெறவுள்ளேன் என்று ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் சலோகா
பெயானி தெரிவித்துள்ளார்.
விசேட அறிக்கையாளர் தனது இலங்கை விஜயத்தின்போது யாழ்ப்பாணம் மற்றும்
முல்லைத்தீவு ஆகிய பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு சந்திப்புக்களை
மேற்கொள்ளவுள்ளதுடன் கொழும்பிலும் பல்வேறு தரப்புக்களுடனும் சந்திப்புக்களை
நடத்தவுள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கையின் மீள்குடியேற்ற நிலைமை தொடர்பில் அவர்
ஜெனீவாவில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.நன்றி வீரகேசரி
ஐ.நா. விசேட பிரதிநிதியுடன் விக்னேஸ்வரன் சந்தித்து கலந்துரையாடல்
03/12/2013 ஐ.நா. விசேட பிரதிநிதி கலாநிதி சலோகா பெயானி வடக்கு மாகாண முதலமைச்சர்,
ஆளுநர், யாழ்.அரச அதிபர் ஆகியோரைச் சந்தித்து இன்று கலந்துரையாடியுள்ளார்.

இலங்கைக்கு நேற்று வருகைதந்த ஐ.நா. விசேட பிரதிநிதி கலாநிதி சலோகா பெயானி
உள்ளிட்ட குழுவினர் இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணத்திற்கு
வருகைதந்து வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை அவரது உத்தியோகபூர்வ
அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்பின்பு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தையும்
யாழ்.மாவட்டசெயலகத்தில் ஐ.நா விசேட பிரதிநிதி உள்ளிட்ட குழுவினர் மாவட்ட
செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளானர்.
இதனையடுத்து வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும்
யாழிலுள்ள அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.




நன்றி வீரகேசரி
நள்ளிரவில் கதவைத் தட்டிய கப்பல் கப்டன் பொதுமக்களால் மடக்கிப்பிடிப்பு
03/12/2013 காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கப்பலில் வந்த கப்பலின் உப கப்டன் நள்ளிரவு
வேளையில் ஏழாலை சூராவத்தை பகுதியில் உள்ள வீடொன்றினுள் உட்பிரவேசிக்க
முற்பட்ட வேளை அச்சமடைந்த மக்கள் மடக்கிப் பிடித்து சுன்னாகம் பொலிஸ்
நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கப்பல் நங்கூரமிடப்பட்ட பின்னர் குறிப்பிட்ட உதவிக் கப்டன் இலங்கை மின்சார
சபையின் சுன்னாகம் அலுவலகத்தில் கடமையாற்றும் தனது நண்பனான பொறியியலாளரைச்
சந்திக்கச் சென்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து இருவரும் மது அருந்திவிட்டு நண்பரின் இருப்பிடத்துக்கு
சென்றுள்ளனர். நள்ளிரவு வேளையில் குறிப்பிட்ட உதவிக் கப்டன் வெளியேறி ஏழாலை
சூராவத்தைப் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் உட்பிரவேசிக்க முயன்று கதவைத்
தட்டியதுடன் சிங்கள மொழியில் பேசியும் உள்ளனர்.
இந்நிலையில் திருடன் என நினைத்த பொதுமக்கள் பிடிக்க முற்பட்டவேளை குறித்த
நபர் தாக்கிவிட்டு தப்பியோட முயற்சித்தபோது பொதுமக்கள் அந் நபரை விரட்டிப்
பிடித்து சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் குறித்த நபர் யார் என
இனங்காணப்பட்டுள்ளதுடன் நண்பரான இலங்கை மின்சார சபையில் கடமையாற்றும்
பொறியியலாளரை அழைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உண்மை நிலை
உறுதிசெய்யப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.நன்றி வீரகேசரி
முல்லைத்தீவு விகாரையின் காணி உறுதியை ஐ.நா. பிரதிநிதியிடம் காண்பித்த உரிமையாளர்
05/12/2013 முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் பெளத்த பிக்கு ஒருவரின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள விகாரை அமைந்துள்ள ஆதனத்தின் உரிமையாளர் தனது ஆதனத்திற்குரிய அறுதி உறுதியை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட அறிக்கையிடலாளர் சலோகா பெயானியிடம் காண்பித்து தனது ஆதனத்தை மீட்டுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அது அறுதியுறுதியா என வினாவிய ஐ.நா. பிரதிநிதி அந்த உறுதியின் நகல் பிரதி ஒன்றினையும் பெற்றுச் சென்றுள்ளார்.
நேற்றுப் பிற்பகல் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட
அறிக்கையிடலாளர் பிரதிநிதி முள்ளிவாய்க்கால் பகுதிக்குச் சென்ற
பொழுது இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட
அறிக்கையிடலாளர் சலோகா பெயானி நேற்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு
விஜயம் செய்து முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்களைச் சந்தித்துக்
கலந்துரையாடியுள்ளார். இச் சந்திப்பின் போதுஇ அண்மையில் வெள்ளாம்
முள்ளிவாய்க்கால் பகுதியில் பௌத்த பிக்கு ஒருவருடைய ஏற்பாட்டில்
அமைக்கப்பட்டுள்ள விகாரை அமைந்துள்ள ஆதனத்தின் உரிமையாளர்
கலந்துகொண்டு தனது ஆதனத்தினை மீட்டுத்தருமாறு ஐ.நா.
பிரதிநிதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்பொழுது குறித்த நபர் தனது ஆதனத்தின் உறுதியையும் ஐ.நா.
பிரதிநிதியிடம் காண்பித்துள்ளார். இவ்விடயத்தினை
கருத்திலெடுத்த ஐ.நா. பிரதிநிதி குறித்த நபரிடம் நீங்கள்
காண்பிக்கின்ற இந்த ஆவணம் உங்களுடைய காணியின் உறுதியா? எனக்
கேட்டுள்ளார். அதற்கு அவர் அது தனது காணியின் அறுதியுறுதி எனக்
காட்டியுள்ளார். அந்த உறுதியின் நகல் பிரதி ஒன்றினையும் ஐ.நா. பிரதிநிதி
கோரிப் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.நன்றி வீரகேசரி
கமலேந்திரன் ஈ.பி.டி.பியிலிருந்து இடைநிறுத்தம்
05/12/2013 வடக்கு மாகாணசபையின் எதிர்கட்சித்தலைவரும் யாழ்.மாவட்ட அமைப்பாளரமான
கந்தசாமி
கமலேந்திரன் ஈ.பி.டி.பியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார் என
அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் சி. தவராசா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,
எமது கட்சியின் மூத்த உறுப்பினரும், நெடுந்தீவு பிரதேச சபையின்
தலைவருமாகிய டானியல் றெக்சியன் ரஐPவ் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதனை
மருத்துவமனை ஆதாரங்களை வைத்து நீதிமன்ற விசாரணைகள் நடந்துவருகின்றன.
ஈவிரக்கமற்ற இப்படுகொலை குறித்து சந்தேகத்தின் பேரில் எமது கட்சியின்
உறுப்பினர் கந்தசாமி கமலேந்திரன்; கைதாகி நீதிமன்ற விசாரணைக்கு
உட்படுத்தப்பட்டிருக்கின்றார். நீதிமன்ற விசாரணையில் இருக்கும் இவ்விடயம்
குறித்து நாம் தற்போது எவ்வித கருத்துக்களும் கூற முடியாது.
ஆனாலும், இது குறித்து எமது மக்களுக்கு நாம் கட்சியின் நிலைப்பாட்டை
தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகும். வன்முறைகள், அச்சுறுத்தல்கள், மற்றும்
படுகொலைகள் போன்ற ஜனநாயக விரோத செயற்பாடுகளால் எமது மக்கள் கடந்த
காலங்களில் பேரவலங்களையே சந்தித்து வந்திருக்கின்றார்கள்.
இது போன்ற படுகொலை சம்பவங்களை எமது கட்சியின் தலைமை ஒருபோதும்
அனுமதித்திருந்ததும் இல்லை. நியாயப்படுத்தியிருந்ததும் இல்லை. கட்சி
உறுப்பினர்களுக்கு இடையிலான முரண்பாடுகள் எந்தகட்சிக்குள்ளும் இல்லாமல்
இல்லை. ஆனாலும் அப்படியான முரண்பாடுகள் கட்சியின் கட்டுப்பாட்டு
விதிகளுக்கு உட்பட்டே தீர்க்கப்படல் வேண்டும்.
டானியல் றெக்சியன் ரஐPவ் அவர்களினது படுகொலையானது தனிப்பட்ட
முரண்பாடுகளின் காரணமாகவே நடந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து
தெரியவருகின்றது.
டானியல் றெக்சியன் ரஐPவ் அவர்களின் படுகொலை குறித்த கொலையாளிகள் யார்
என்பது தொடர்பாக நீதிமன்ற விசாரணைகள் ஒழிந்து தீர்ப்புவழங்கப்படும் வரை
எமதுகட்சியின் உறுப்பினர் கந்தசாமி கமலேந்திரன் அவர்களை கட்சியின்
உறுப்பினர் பதவியில் இருந்து இடைநிறுத்தி வைக்க கட்சியின் தலைமைப்பீடம்
தீர்மானித்திருக்கிறது.
எமது கட்சியின் கட்டுப்பாட்டு விதிகளில் இருந்துமீறுவோர் எவராயினும்
கட்சியில் இருந்து நிரந்தரமாகவே விலக்கப்படுவார்கள் என்பதையும், சமூக விரோத
செயல்களை யார் செய்தாலும் அவர்கள் பாகுபாடின்றி சட்டத்தின் முன்
தண்டிக்கப்பட வேண்டும் என்பதையும், நாம் தொடர்ந்து வலியுறுத்தி
வருகின்றோம்..நன்றி வீரகேசரி
பாலியல் வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்வும், எதிர்ப்புப்பேரணியும்
05/12/2013 பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் முகமாகவும்,
பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளுக்கு நீதி கோரியும் இன்று வியாழக்கிழமை
மன்னாரில் விழிர்ப்புணர்வு நிகழ்வும், எதிர்ப்பு பேரணியும் மன்னார் மாவட்ட
மாதர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், மன்னார் மாவட்ட பெண்கள் உரிமைக்கான
செயற்பாட்டுக் குழுவினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.




இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் குறித்த நிகழ்வுகள் ஆரம்பமானது.
இதன் போது மன்னார் மாவட்டத்தில் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களின் பதிவுகளாக மீட்கப்பட்ட பெண்களின் 'ஆடைகள்' காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து பெண்களுக்கெதிரான வன்முறைகளை ஒழிக்கக்கோரி பெண்கள் உரிமைக்கான செயற்பாட்டுக் குழுவினர் தயாரித்த மகஜர் வாசிக்கப்பட்டு அங்கு வருகை தந்த மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நந்தினி ஸ்ரான்லி டி மேல் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு மகஜர் கையளிக்கப்பட்டது.
மகஜர் கையளிக்கப்பட்டதை தொடர்ந்து மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகளை சுட்டிக்காட்டி வீதி நாடகமும் இடம் பெற்றது.
இறுதியாக மன்னார் அரச பேருந்து நிலையத்தில் இருந்து விழிர்ப்புணர்வு ஊர்வலம் ஒன்று ஆரம்பமாகி மன்னார் பொலிஸ் நிலைய வீதியூடாக மன்னார் வைத்தியசாலை சந்தியை சென்றடைந்தது.
குறித்த நிகழ்வில் சட்டத்தரணி எஸ்.வினோதன், மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி பிரிமூஸ் சிறாய்வா, பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செமாலை அடிகளார், மன்னார் மாவட்ட மாதர் ஒன்றியத்தின் மாவட்ட இணைப்பாளர் மகாலட்சுமி குருசாந்தன், மட்டக்களப்பு கலாசாரக் குழு, சமாதான அமைப்பின் தலைவர் பீ.ஏ.அந்தோனி மார்க், பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் என பல நூற்றுக்கணக்கானவர்கள் குறித்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். நன்றி வீரகேசரி
இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் குறித்த நிகழ்வுகள் ஆரம்பமானது.
இதன் போது மன்னார் மாவட்டத்தில் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களின் பதிவுகளாக மீட்கப்பட்ட பெண்களின் 'ஆடைகள்' காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து பெண்களுக்கெதிரான வன்முறைகளை ஒழிக்கக்கோரி பெண்கள் உரிமைக்கான செயற்பாட்டுக் குழுவினர் தயாரித்த மகஜர் வாசிக்கப்பட்டு அங்கு வருகை தந்த மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நந்தினி ஸ்ரான்லி டி மேல் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு மகஜர் கையளிக்கப்பட்டது.
மகஜர் கையளிக்கப்பட்டதை தொடர்ந்து மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகளை சுட்டிக்காட்டி வீதி நாடகமும் இடம் பெற்றது.
இறுதியாக மன்னார் அரச பேருந்து நிலையத்தில் இருந்து விழிர்ப்புணர்வு ஊர்வலம் ஒன்று ஆரம்பமாகி மன்னார் பொலிஸ் நிலைய வீதியூடாக மன்னார் வைத்தியசாலை சந்தியை சென்றடைந்தது.
குறித்த நிகழ்வில் சட்டத்தரணி எஸ்.வினோதன், மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி பிரிமூஸ் சிறாய்வா, பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செமாலை அடிகளார், மன்னார் மாவட்ட மாதர் ஒன்றியத்தின் மாவட்ட இணைப்பாளர் மகாலட்சுமி குருசாந்தன், மட்டக்களப்பு கலாசாரக் குழு, சமாதான அமைப்பின் தலைவர் பீ.ஏ.அந்தோனி மார்க், பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் என பல நூற்றுக்கணக்கானவர்கள் குறித்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். நன்றி வீரகேசரி
'எங்களுக்கு எதுவும் வேண்டாம் சொந்த இடத்தில் வாழவிடுங்கள்"
05/12/2013 எங்களுக்கு எதுவுமே வேண்டாம். எம்மையும் எமது சொந்த நிலங்களில்
குடியிருக்க அனுமதித்தால் மட்டும் போதும் என ஐக்கிய நாடுகள் சபையின்
அகதிகளுக்கான விசேட அறிக்கையாளர் சாலோகா பெயானியிடம் முல்லைத்தீவு
மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நேற்று விஜயம் செய்த ஐ.நா. பிரதிநிதி,
இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கேப்பாபிலவு, சீனிமா
மோட்டைப் பகுதியிலுள்ள மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடும்போதே
இந்த மக்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அங்கு மக்கள் அவரிடம் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் கடந்த நான்கு வருடங்களாக இடம்பெயர்ந்து சொல்லொணாத்
துயரங்களுடன் வாழ்ந்து வருகின்றோம். எங்களை எமது சொந்த இடங்களில்
மீள்குடியேற விடாது இராணுவத்தினர் தடுத்து வருகின்றனர். எமது
நிலங்களில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது எம்மைப்
பிறிதொரு இடத்தில் 1ஃ4 ஏக்கர் (4 பரப்பு) நிலத்தில் குடியிருக்குமாறு
நிர்ப்பந்திக்கின்றனர். இந்த நிலத்தில் எம்மால் விவசாயம் செய்ய
முடியாமல் உள்ளது.
எமக்கு எந்தவொரு வசதிகளும் தேவையில்லை. எம்மை எமது சொந்த
நிலங்களில் குடியமர்த்தினால் நாம் சந்தோஷமாக வாழ்வோம் என்றனர்.
இதேவேளை இந்த மக்களிடம் அடிப்படை வசதிகளான போக்குவரத்து,
மின்சாரம், குடியிருப்பு வீடுகள் என்பன அமைத்துத் தரப்பட்டுள்ளதா
என ஐ.நா. பிரதிநிதி கேட்டபோது அதற்கு மக்கள்கருத்துத்
தெரிவிக்கையில்,
எங்களுடைய பிரதேசத்தில் எமக்காக எந்த வசதிகளும் செய்து
தரப்படவில்லை. எமக்கு மின்சாரம் கிடைக்கவில்லை. எமது நிலங்களில்
கேப்பாபிலவுப் பகுதியில் மட்டும் 512 ஏக்கர் நிலத்தை இராணுவம்
அபகரித்துள்ளது என்றனர்.
இதன்பின்னர் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு விஜயம் செய்த ஐக்கிய
நாடுகள் சபையின் அறிக்கையாளர் அங்கு வசிக்கின்ற மக்களிடம்
நிலைமைகளைக் கேட்டறிந்துள்ளார்.
இவ்விடத்தில் சமுகமளித்திருந்த வடமாகாண சபை உறுப்பினர்
இரவிதரன் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக விளக்கியுள்ளார்.
அவ்விடயம் தொடர்பாக இரவிதரன் கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த 30 வருடங்களாக எமது மக்கள் இடம்பெயர்ந்த அவல வாழ்வினை
வாழ்ந்து வருகின்றனர். கொக்குத்தொடுவாய், கொக்கிளாய்,
கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளில் மக்களின் வாழ்வாதார நிலங்களில்
சுமார் 2ஆயிரத்து 556 ஏக்கர் நிலத்தினை இராணுவத்தினர்
அபகரித்துள்ளனர். எமது மாவட்டத்தில் மக்களை
மீள்குடியமர்த்தியுள்ள பொழுதிலும் தமிழ் மக்கள் தொழில் செய்கின்ற
வாழ்வாதார நிலங்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. இதனால் எமது
மக்கள் விவசாயம் செய்ய முடியாது வருமானமின்றி வறுமையில்
வாடுகின்றனர்.
அண்மையில் கொக்குத்தொடுவாய் பகுதியில் தமிழ் மக்களின் நிலங்களில்
25 ஏக்கர் நிலத்தினை தென் பகுதியைச் சேர்ந்த 22 பேருக்குக்
கொடுத்துள்ளனர். ஆனால் எமது மக்கள் இன்னமும் சொந்த இடங்களில்
மீள்குடியமர முடியாமல் அல்லலுறுகின்றனர்.
இதேபோல் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின்
தலைவரின் சிபார்சுடன் சுமார் 600 முஸ்லிம்களுக்கு காணிகளை வழங்க
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை தமிழ் மக்களுக்கு காணிகளை
வழங்குவதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே எமது தமிழ் மக்களுக்குக் காணிகளை வழங்குவதற்கு ஐ.நா. சபையின் ஊடாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இதேபோல் தென் பகுதி மீனவர்களின் அத்துமீறல்களாலும் தடை
செய்யப்பட்ட தொழில் முறைகளினாலும் எமது தமிழ் மீனவர்களின் தொழில்
பாதிப்படைந்துள்ளது. இதனையும் தடை செய்யவேண்டும் எனக் கூறினோம்
என்றார்.
இதேவேளை இவ்விடத்தில் சமுகமளித்திருந்த வடமாகாண சபை
உறுப்பினரும் பிரதி அவைத் தலைவருமான அன்ரனி ஜெகநாதனும் தமிழ்
மக்களுடைய காணிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை
முன்வைத்தார்.
இவ்விடத்தில் ஒன்று கூடிய தமிழ் மக்கள் தம்மை தமது சொந்த இடங்களில்
குடியமரவும் விவசாயம் செய்யவும் அனுமதிக்கவேண்டும் என்ற
கோரிக்கையினை முன்வைத்தனர்.
இவ்விடயங்களை பொறுமையுடன் கேட்டறிந்து கொண்ட ஐ.நா. பிரதிநிதி
தான் ஐ.நா. அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்துவதாக மக்களிடம்
உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment