காணாமல் போனோரின் உறவுகள் மீது திருகோணமலையில் தாக்குதல்
பிரித் ஓதி முஸ்லிம் வியாபாரியை மன்னிப்பு கோரச் செய்த தேரர்கள்
ஆர்ப்பாட்டத்தை யாழ்ப்பாணத்தில் நடத்துங்கள்,இது எங்கள் இடம்
அட்டனில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து ஊர்வலம்
150 வருட பழைமை வாய்ந்த காளியம்மன் சிலை உடைப்பு : ஹாலி-எல உடுவரை பெருந்தோட்ட மேற்பிரிவில் சம்பவம
காணாமல் போனோரின் உறவுகள் மீது திருகோணமலையில் தாக்குதல்
10/12/2013 திருகோணமலை பஸ் நிலையத்திற்கு முன்பாக
காணாமல் போனோரின் உறவுகளால் இன்று முற்பகல் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின்
போது இனந்தெரியாத நபர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல்
மேற்கொண்டுள்ளதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்போது பொலிஸார் அருகில் இருந்தும் தாக்குதல் மேற்கொண்டவர்கள் மீது
எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள்
தெரிவிக்கின்றனர். நன்றி வீரகேசரி
பிரித் ஓதி முஸ்லிம் வியாபாரியை மன்னிப்பு கோரச் செய்த தேரர்கள்
12/10/2013 கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக
வலயத்தில் உள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான அழகுசாதனப்
பொருட்களை விற்பனை செய்யும் கடையில் புத்தரின் உருவ சித்திரம் கொண்ட
கையுறைகளை விற்பனைக்காக வைத்திருந்தமை தொடர்பாக ஆத்திரம் கொண்ட
பௌத்த தேரர்கள் மற்றும் பொது மக்கள் முஸ்லிம் கடையில் பிரித் ஓதி
வியாபாரியை பொதுமன்னிப்பு கோரச் செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள குறித்த
வர்த்தக நிலையத்தில் பெண்கள் அணியும் நீண்ட கையுறைகளில் புத்தரின்
உருவ சித்திரம் இருந்துள்ளது. இந்த கையுறையை அணிந்தால் கைகளில் பச்சை
குத்தியது போல் தெரியும்.
இது தொடர்பாக அறிந்து கொண்ட பௌத்த மதகுருக்கள் உட்பட சிலர் அண்மையில்
இந்த கடைக்குச் சென்று ஏற்படுத்திய பிரச்சினையை அடுத்து அந்த கடையை
சில தினங்களுக்கு மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை வர்த்தகர் கடையை மீண்டும் திறக்க
முற்பட்ட போது பௌத்த தேரர்கள் மற்றும் பொது மக்கள் கொண்ட குழுவினர் அந்த
முஸ்லிம் கடையின் முன்பாக பிரித் ஓதும் ஒலி நாடாவை ஒலிக்கவிட்டனர்.
இதன் போது அந்த கடையிலும் அயலிலும் பௌத்த கொடிகள் பறக்கவிடப்பட்டமை
ஒலிபெருக்கி மூலமாக அறிவிப்பு செய்யப்பட்டமையும்
குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் அந்த வர்த்தக நிலையம் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதில் கலந்து கொண்ட பிக்குகளும் பொது மக்கள் சிலரும் பின்னர்
அருகிலுள்ள விகாரைக்குச் சென்றனர்.
இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த
சம்பவம் இடம்பெற்றது. இந்த எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டவர்கள் பொது
பலசேனா அமைப்பினர் என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
நன்றி வீரகேசரி
ஆர்ப்பாட்டத்தை யாழ்ப்பாணத்தில் நடத்துங்கள்,இது எங்கள் இடம்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு
திருகோணமலை பஸ் நிலையத்துக்கு முன்பாக காணாமல் போனோரது உறவினர்கள் நடத்திய
ஆர்ப்பாட்டத்தின்போது இனந்தெரியாதோரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காணாமல்போனோரை தேடியறியும் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த
ஆர்ப்பாட்டத்தின்போது முகத்தை மறைத்துக்கொண்டு வந்த சிலர் தாக்குதல்
மேற்கொண்டுள்ளனர்.
"யுத்தத்தின்போது எமக்கும் இழப்புகள் ஏற்பட்டன. ஏன் அதைப்பற்றி நீங்கள்
கதைக்க மறுக்கிறீர்கள்? உங்களது ஆர்ப்பாட்டத்தை யாழ்ப்பாணத்தில்
நடத்துங்கள். இது எங்களது இடம். இங்கு ஆர்ப்பாட்டம் நடத்த விடமாட்டோம்"
என்று கூறி தாக்குதல் நடத்தியதுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்த
பதாகைகள் மற்றும் காணாமல்போனோரின் புகைப்படங்களையும் கிழித்து
வீசியுள்ளனர்.

இதன்போது 30 இற்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில்
ஈடுபட்டிருந்த போதும் சம்பந்தப்பட்டவர்களைத் தடுக்கவோ கைது செய்யவோ எவ்வித
நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தாக்குதல் சம்பவத்தில் காயமுற்ற சிலர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நன்றி வீரகேசரி
அட்டனில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து ஊர்வலம்
12/10/2013 பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் துஷ்பிரயோகங்களையும் கண்டித்து
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று செவ்வாய்க்கிழமை
அட்டனில் ஊர்வலம் மேற்கொள்ளப்பட்டது.
இவ் ஊர்வலத்தில் அட்டன் பொலிஸ் மற்றும் அம்பகமுவ கோரளை பிரதேச செயலாளர்
காரியாலயம், பிரதேச இளைஞர் சமூக சம்மேளனம் ஆகியோர் இணைந்து விழிப்புணர்வை
ஏற்படுத்தும் வகையில் 'பெண்களை கொடூரர்களிடமிருந்து காப்பாற்றுவோம்",
'சிறுவர்கள் நாளைய நாட்டின் தலைவர்கள்", பெண்களின் வேலைப்பலுவை குறைப்போம்"
, 'பெண்களின்திறமைக்கு வழியமைப்போம்" எனும் வாசகங்களை எழுதிய பதாதைகளை
ஏந்தி ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வீதியில் நாடகம் ஒன்றையும் ஒழுங்கமைத்திருந்தனர்.
நன்றி வீரகேசரி
150 வருட பழைமை வாய்ந்த காளியம்மன் சிலை உடைப்பு : ஹாலி-எல உடுவரை பெருந்தோட்ட மேற்பிரிவில் சம்பவம்
10/12/2013 பதுளை - ஹாலிஎல உடுவரை பெருந்தோட்ட மேற்பிரிவு ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தில் அம்மன் சிலை உடைத்து சேதமாக்கப்பட்டுள்ள சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
150 வருட கால பழைமை வாய்ந்த இந்த
ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் காளியம்மன், அப்பகுதி மக்களின்
குலதெய்வமாக பூஜிக்கப்பட்டு வந்த நிலையிலேயே இந்தச் சம்பவம்
இடம்பெற்றுள்ளது.
இனமுறுகலை ஏற்ப டுத்தும் வகையிலேயே
இச்சிலை உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில்
இருந்து தெரிய வந்துள்ளது.
மேற்படி சிலை உடைக்கப்பட்டமை தொடர்பான தகவல்கள்
கிடைக்கப்பெற்றதும் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், அமைச்சர்
ஆறுமுகன் தொண்டமான், பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம், மாகாண ஆளுநர்
சீ.நந்தமெத்தியூ, மாகாண முதலமைச்சர் சஷிந்திரராஜபக் ஷ ஆகியோரின்
கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
அத்துடன் மாகாண பிரதி பொலிஸ் அதிபருடன் தொடர்பு கொண்டு சிலை உடைப்பில்
சம்பந்தப்பட்ட விவகாரம் தொடர்பாக உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு
சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தும்
படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மாகாண அமைச்சரின் பணிப்பின் பேரில் இ.தொ.கா. ஆலோசகர் டி.வி.சென்னன்
தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உடைக்கப்பட்ட
அம்மன் சிலையினை பார்வையிட்டனர்.
இதேவேளை, ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளரும் முன்னாள் பிரதி
அமைச்சருமான வடிவேல் சுரேஷ் ஸ்தலத்திற்கு விஜயம் செய்து நிலைமையைப்
பார்வையிட்டதுடன் சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறும்
பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தார்.
உடைத்து சேதமாக்கப்பட்ட சிலைக்கு பதிலாக பிறிதொரு சிலையினைப்
பெற்றுக் கொடுக்கவும் அவ்ஆலயத்தையே புனர்நிர்மாணம் செய்யவும் மாகாண
அமைச்சர் செந்தில் தொண்டமான் அவரது செயலாளருக்கு பணிப்புரை
விடுத்துள்ளார்.
சிலை உடைப்பு தொடர்பாக சந்தேகத்திற்கிடமான நபர்களை பொலிஸார் விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர்.


No comments:
Post a Comment