மேலும் சில பக்கங்கள்

தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடி – தவத்திரு மறைமலை அடிகள்

(சூலை 15, 1876 - செப்டம்பர் 15, 1950)

 தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடி – தவத்திரு மறைமலை அடிகள்

 A person with a yellow scarf

AI-generated content may be incorrect.

                                                                         

                                                 சிவஞானச் சுடர் பல்மருத்துவ கலாநிதி

                                                                         பாரதி இளமுருகனார்


துங்கமுக  ஐங்கரனின் பாத பங்கயம்

      துணையெனவே மெய்யான துய்யனாய் நித்தம்

எங்குந்தமிழ் எதிலுந்தமிழ் என்று முழங்கி

      இயற்கைதனை எய்தும்வரை அயர்ச்சி இன்றி

தங்கத்தமிழ் மொழிதனிலே பிறமொழிக் கலப்போ

      தகாதென்று போராடி வெற்றி கண்டு

மங்காத புகழுடனே வாழ்ந்த பெரியார்

      மறைமலையெனும் பெயர்கொண்ட அடிகளார் அன்றோ?


இயற்பெயராய்ப் பெற்றோர்கள் வேதா சலமென

     இட்டதையே தமிழாக்கி மறைமலை எனவே

தயக்கமின்றி மாற்றியதொடு தனித்தமிழ் இயக்கம்

     தாயகத்தில் மலர்வதற்கு வித்தும் இட்டார்

மயக்கமுற்றோர் இந்திமொழிக்(கு) ஆதர வளிக்க

     மதயானை போலெதிர்த்துச் சிறைக்குஞ் சென்றார்!

வியக்கவைக்குஞ் செயலெனவே இயற்கை உணவை

     வேகமாகப் பரப்புவதில் தாகங் கொண்டார்!.

Maraimalai Adigal - Alchetron, The Free Social Encyclopedia 







தனித்தமிழே அவர்வாழ்வின் மூச்சாய்ப் பேச்சாய்த்

     தாரகமந் திரமாகித் தனித்தமிழி யக்கமாய்

மனித்தப்பி றவியெடுத்துப் பிறந்த தற்கு

     மகத்தான பணியிதெனத் தூய தமிழதன்

புனிதமென்றும் மங்காதிருக்க வழிச மைத்தார்!

     புதல்வர்க்குக் கலப்பில்லாப் பெயர்கள் சூட்டி

குனித்தபிறை சூடியேதனித் தெய்வ மென்று

     குவலயத்தோர் கும்பிடவும் வேண்டி நின்றார்!

 

கைப்பிடித்த  கயல்விழியாள்  சவுந்திர வல்லியைக்  

     கலந்தாறு பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தார்!

செப்பமுடன் சித்தாந்தத் தீபிகை என்னும்

     செந்தமிழிதழ் ஆசிரியராய்த் தொடர்ந்(து) அதிலே

ஒப்பரிய சித்தாந்தக் கருத்தை யெல்லாம்

     ஓரைந்து கட்டுரையில் எழுதி வைத்தார்

செப்பமுடன் சமரசசன் மார்க்க மென்னும்

     சீரியநற்  சங்கமொன்றைச் சிறப்புற அமைத்தார்!.


பொதுநிலைக் கழகமென்றதற்குத் தனித் தமிழில்

     புதியதொரு பெயரிட்டு வளர்த்து வந்தார்

எதுசிறந்த தெனவகுத்து நூல்க ளாக்க

     எற்றம்மிகு ஆக்கங்களைச் சேக ரித்து

விதுப்புடனே திருமுருகன் அச்ச கத்தை

     வேகமாகத் தாபித்து நூல்கள் பதித்த

சதுரராகத் திகழ்ந்ததுடன் மணிமொழி என்னும்

     சகலநூலகம் நிறுவிச்சா தனையும் புரிந்தார்!

 

திருநெறிய தேன்தமிழின் தேசுடன் வனப்பும்

     திரிபடைந்து குன்றாது என்றும் மாறாப்

பருவமொடு கன்னியென் றிலங்கப் பாவலர்

     பாங்கறிந்து பாடிமகிழ் வெய்த வெண்ணி

அருவருக்குஞ் செயலெனவே பிறமொழி கலக்கும்

     அற்பர்செயல் தடுத்திடவே தனித்தமிழ் இயக்கம்

பெருமனத்தோன் மறைமலையார் பிறக்கச் செய்தார்.

     பேறெனவே தமிழுலகம் போற்று தம்மா!

 

தன்மானங் குன்றிடாத ஆசிரி யராகித்

     தனித்தமிழ் இயக்கத்தை மாணவர் மனதில்

வன்னிப்பாய்ப் பதியவைத்து  வாகர னாகி

     வாஞ்சையொடு மலரவிட்டார்! வளமான பேச்சால்

தென்னரசர் வளர்த்தமைபோற் சீர்மை செய்து

     செந்தமிழுக்(கு) அரணம்போல் விளங்கிய தோடு

மன்னுசைவ நெறியெங்கும் மிகுந்தே ஓங்க

     மாதவத்து அடிகளாகி விளங்கிப் போந்தார்!

 

 


வேதாசலம் = வேதம்-மறை  அசலம்-மலை= மறைமலை

சீர்மை - செம்மை

தென்னரசர் - பாண்டிய மன்னர்கள்

அரணம் – காவல் வேலி

குனித்தபிறை சூடி சிவபெருமான்

விதுப்பு - ஆசை

சதுரர் – அறிஞர்

வன்னிப்பாய் - சிறப்பாக்

வாகர னாகி  - வீரனாகி

 

A stamp with a person in a robe

AI-generated content may be incorrect.

===========================================

பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - சினிமாப் பைத்தியம் - ச. சுந்தரதாஸ்

 .

தமிழ்த் திரையுலகில் முன்ணணி பட நிறுவனங்களில் ஒன்று ஏ எல் எஸ் புரொடக்க்ஷன்ஸ் . இதன் அதிபரான ஏ. எல் . சீனிவாசன் தமிழில் மட்டுமன்றி பல மொழிகளில் படங்களை தயாரித்தவர். அதோடு திரையுலகில் பல சங்கங்களுக்கு தலைவராகவும் விளங்கியவர். இவர் ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்து விட்டால் அதற்குரிய கலைஞர்கள் , தொழிநுட்பவியலாளார்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு ஒதுங்கி விடுவார். படம் அவரின் சாரதா ஸ்டுடியோவில் உருவாகி திரைக்கு வந்து விடும். 


இந்த செயல் முறையின் கீழ் ஏ எல் எஸ் , ஏவி . எம் .ராஜன், முத்துராமன், காஞ்சனா நடிப்பில் , சி வி ராஜேந்திரன் இயக்கத்தில் நியாயம் கேட்கிறோம் என்ற படத்தை தயாரித்தார். படம் தோல்விப் படமானது. ஐந்து இலட்சம் ருபாய் சுளையாக நஷ்டம் ! 

 இதனால் வெறுப்படைந்த ஏ .எல் .எஸ் .தனது படத் தயாரிப்பு நிர்வாகியான வீரய்யாவை அழைத்து கடிந்து கொண்டார். அது மட்டுமன்றி உடனடியாக மற்றுமோர் படத்தை தயாரித்து இலாப கணக்கு காட்ட வேண்டும் என்றும் கடுமையாக சொல்லி விட்டார் . இதன் காரணமாகவே சூட்டோடு சூடாக சினிமாப் பைத்தியம் படம் தயாரானது. 

 முதலாளியின் கடும் சொல்லுக்கு உள்ளான வீரய்யா உடனடியாக சென்று இயக்குனர் முக்தா சீனிவாசனை பார்த்தார். தனக்கு ஏற்பட்டிருக்கும் சங்கடத்தை சொல்லி உதவும் படி கேட்டுக் கொண்டார். வெளிப் படங்களை பொதுவில் இயக்காத முக்தா, வீரய்யாவுக்காக குறைந்த செலவில் துரித கதியில் ஒரு படத்தை உருவாக்கித் தர முன் வந்தார். 

 இதன் காரணமாக ஹிந்தியில் குட்டி ( Guddy ) என்ற பெயரில் புதுமுகம் ஜெயபாதுரி நடிப்பில் தயாராகி வெற்றி பெற்ற படம் தமிழில் சினிமாப் பைத்தியமானது. சினிமா மீது அதீத மோகம் கொண்ட கல்லூரி மாணவி ஜெயா சினிமா பார்த்து ரசிப்பதோடு நின்று விடாது ஒரு படி மேலே போய் நடிகர் ஜெய்சங்கரை கல்யாணம் செய்து கொள்ள கங்கணம் கட்டிக் கொள்கிறாள். இந்த வெறியினால் ஜெய்சங்கரின் பெயரை தன் கையில் பச்சை குத்திக் கொள்கிறாள். 

பாரதி என்றுமே தமிழுக்குச் சொத்தாவான் !

 .

image0.jpeg





மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
 மெல்பேண் .... அவுஸ்திரேலியா


பாரதி எங்கள் பண்பாட்டுப் பெட்டகம்
பட்டதை பக்குவமாய் ஈந்திட்ட வரகவி
விடுதலை நோக்கியே விரைந்திட்ட வீரன்
வீரமும் விவேகமும் நிறைந்த நற்கவிஞன்

தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன் பாரதி
அமுதென்று தமிழதனை அகமிருத்திச் செப்பினான்
பன்மொழிகள் தெரிந்தாலும் தாய்மொழியாம் தமிழை
தலையேற்றி நின்று தரணிக்கே உரைத்தான்

முற்போக்குச் சிந்தனையை முன்னுக்கு வைத்தான்
பிற்போக்கு என்றாலே பிய்த்துமே எறிந்தான்
நற்போக்கு உள்ளோரை நயந்தேற்றி நின்றான்
நாட்டின் விடுதலைக்காய் நலமிழந்தும் நின்றான்

மூடத் தனத்தை மூர்க்கமாய் எதிர்த்தான்
சாதித் திமிரை தகர்த்தெறிந்து நின்றான்
உண்மையை நேர்மையை உயிரெனவே எண்ணினான்
கண்ணிலே கம்பீரம் காட்டியே  நின்றான்

பாரதியின் பாட்டு பாமரர்க்கு விருந்தாகும்
பண்டிதர்க்கு அவர்பாட்டு வேண்டாத மருந்தாகும்
பாப்பாவை முன்னிறுத்திப் பலவுரைத்தான் பாரதி
பற்பல தத்துவங்கள் பலருக்கும் இருந்தன

பக்தியைப் பாரதி பக்குவமாய்ப் பார்த்தான்
சத்தியமாய் பக்தியாய் தன்மனதில் இருத்தினான்
கீதையைப் பாடினான் கண்ணனைப் பாடினான்
பாஞ்சாலி சபதத்தால் பலவற்றைக் கூறினான்

எதுகையும் மோனையும் இணைந்துமே நின்றன
எத்தனையோ வித்தைகளை கவிதையில் காட்டினான்
பாரதியின் பாட்டைப் பலருமே படித்திட்டால்
பார்க்காத அத்தனையும் பார்த்துமே வியந்திடலாம்

அடிமைத் தளையகற்ற அத்தனையும் பாடினான்
ஆனாலும் அதனூடே அன்னைத்தமிழ் ஒளிர்ந்தது
அதிகார வர்க்கத்தை அவன்பாட்டு அசைத்தது
அஞ்சாத சிங்கமாய் அவனெங்கும் திரிந்தானே

விடுதலை வேண்டுவார் பாரதியைப் பார்க்கின்றார்
வீரத்தை நாடுவார் பாரதியை நாடுகிறார்
பக்திக்கும் பாரதியே பண்புக்கும் பாரதி
பாரதி என்றுமே தமிழுக்குச் சொத்தாவான் ! 





இலங்கைச் செய்திகள்

 .

கார் விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன்

பொலிஸ் நாயின் உதவியுடன் 'குஷ்' போதைப்பொருள் மீட்பு - வெளிநாட்டு பயணி கைது!


வாகனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்த மோசடியில் வத்தேகம நகரசபை முன்னாள் தலைவர் கைது!

கார் விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் (ITAK) மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் இன்று (14) இடம்பெற்ற கார் விபத்தில் காயமடைந்துள்ளார்.

அம்பாறை பகுதியில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு, அவர் மட்டக்களப்பிற்குத் திரும்பிக் கொண்டிருந்த வேளையில், அவரது பயண வாகனம் களுவாஞ்சிகுடி பகுதியில் மற்றொரு வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது.

விபத்தில் காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் உடனடியமட்டக்களப்பு போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து மேலதிக தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

உலகத்திற்கு உப்பாய் இரு - குட்டிக் கதை

 .


ஒரு காலத்தில் இந்திரத்யும்னன் என்று ஒரு மாமன்னன் இருந்தான். அவன் ஆட்சி காலத்தில் மக்கள் போற்றும் வண்ணம் தான தர்மங்கள் செய்து, சிறப்பாக அரசாண்டு, நேரே சொர்க்கத்திற்குப் போனான். சொர்க்கபுரியின் இன்பத்தில் திளைத்துக் கொண்டிருந்த அவனை ஒரு நாள் சொர்க்கத்தின் 'தலை' கூப்பிடுவதாக தேவதூதன் வந்து சொன்னான். மன்னன் சென்று என்னவென்று கேட்ட போது 'உனக்கு சொர்க்க வாசம் முடிந்து விட்டது. பூலோகத்திற்கு நாளை கிளம்பத் தயாரக இரு' என்று கட்டளை போட்டது 'தலை'. ஏனென்று மன்னன் கேட்டான். 'நீ செய்த நல்ல காரியங்களை நினைவில் வைத்திருக்க யாருமே இனிமேல் பூலோகத்தில் உயிருடன் இல்லை. இன்றுடன் அந்த கணக்குத் தீர்ந்து விடும். ஆகவே கிளம்பும் வழியைப் பார்' என்று பதில் வந்தது. 'இதற்குத் தீர்வே இல்லையா?' என்று மன்னன் முறையிட்டான். 'தலை' முகவாயைச் சொறிந்து கொண்டு யோசித்தது. பிறகு 'மன்னா, நீ கீழே போய் உனது நற்காரியங்களால் இன்னும் பலன் பெறும் ஒரு ஜீவனையாவது கண்டு பிடித்தால் உனக்கு சொர்க்கம் நீடிக்கப் படும்' என்று சொன்னது.

மன்னனும் கிளம்பிப் பூலோகம் வந்தான். பல நூறு ஆண்டுகள் கடந்து விட்டிருந்தன. அவன் வாழ்ந்த இடமே தலை கீழாக மாறிப் போயிருந்தது. மக்களில் யாரையும் அவனால் அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. மனதைத் தேற்றி நம்பிக்கையை ஏற்றிக் கொண்டு விடாமுயற்சியாகத் தேடி, இருப்பதிலேயே வயதான ஒரு மனிதரை சந்தித்தான். அவரிடம் 'ஐயா! உமக்கு இந்திரத்யும்னன் என்று இந்தப் பகுதியை அரசாண்ட மன்னனைப் பற்றித் தெரியுமா?' என்று ஆர்வத்துடனும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் கேட்டான். வயோதிகர் இடுங்கிய கண்களால் அவனை மேலும் கீழும் பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கி விட்டார். 'வேண்டுமானால் என்னை விட வயதான ஆந்தை ஒன்று பக்கத்து மரப் பொந்தில் தூங்கிக் கொண்டிருக்கிறது. இரவில் அது விழித்த பின் அதனிடம் போய்க் கேள்' என்று சொல்லி விட்டார்.

 

வேறு வழியில்லாமல் இரவு வரை கோவில் நிழலில் உட்கார்ந்திருந்து விட்டு இரவு ஆந்தையைப் பார்த்தான். தலையை முதுகுப் பக்கம் வைத்து ஒரு இரையைக் குறி வைத்துக் கொண்டிருந்த ஆந்தையிடம் இந்திரத்யும்னனைப் பற்றிக் கேட்டான். இரையைத் தப்ப விட்ட எரிச்சலில் ஆந்தை 'எனக்குத் தெரியாது. இங்கே ஒரு கிழட்டு நாரை தினமும் காலைப் பொழுதில் திரியும். வேண்டுமானால் அதைக் கண்டு பிடித்துக் கேள்' என்று சொல்லி விட்டுத் தன் வேலையைப் பார்க்கப் போய் விட்டது.

 

காலையில் அலைந்து திரிந்து நாரையைக் கண்டு பிடித்தான். அதனிடம் கேட்டபோது. 'எனக்கு நினைவில்லை. ஆனால் பக்கத்து ஏரியில் ஒரு ஆமை கிடக்கிறது. அதற்கு நினைவிருக்க வாய்ப்பிருக்கிறது' என்று நம்பிக்கையை வளர்த்தி விட்டது.

 

மன்னன் ஏரியைத் தேடி ஓடினான். அங்கே வயதான ஆமையைப் பார்த்தான். தள்ளாத வயதில் சிரமப் பட்டுக் கொண்டிருந்தது அந்த ஆமை. நம் மன்னன் அதனிடம் இந்திரத்யும்னனைப் பற்றிக் கேட்டான். ஆமை உடனே 'ஆமாம். அவனால்தான் இந்த ஏரியும் இருக்கிறது, அதில் இருக்கும் உயிரினங்களும் நன்றியுடன் உயிர் வாழ்கின்றன' என்று சொன்னது. அப்போது மன்னன் 'நானேதான் அந்த இந்திரத்யும்னன்! எனக்கு இந்த ஏரியை ஏற்படுத்தியதாக நினைவில்லையே. நீ ஏதோ தப்பாகச் சொல்கிறாய்' என்று நம்பிக்கை இழந்து போய் ஆமையிடம் சொன்னான்.
ஆமையும் 'கதை அப்படியில்லையப்பா! நீ அரசாண்ட போது மக்களுக்குத் தினமும் ஏராளமான பசுக்களைத் தானமாக வழங்கினாய். மக்கள் அவற்றையெல்லாம் இந்தப் பகுதியிலுள்ள புல் தரையில் மேய விட்டார்கள். மாடுகள் தினமும் அலைந்து திரிந்து தன் குளம்புகளால் மண்ணைக் கிளப்பி விட்டதால் இந்தப் பகுதி நாளடைவில் பள்ளமாகப் போய் விட்டது. மழை பெய்து நீர் பிடித்ததால் ஏரியாக மாறிவிட்டது. இந்தப் பகுதியின் செழிப்பிற்கே இந்த ஏரிதான் காரணம் என்றும் ஆகி விட்டது. அதைக் கேட்டுத்தான் நான் இங்கே குடியேறினேன். இத்தனை நாள் நன்றியுடன் வாழ்ந்திருக்கிறேன். இன்னமும் பல உயிரினங்களும் வாழ்கின்றன. வாழப் போகின்றன' என்றது.

 

தூரத்தில் சொர்க்கபுரியில் இருந்து மன்னனைக் கூட்டிப் போக விமானம் வருவது மன்னனுக்குத் தெரிந்தது.

 

நீதி: நாம் செய்யும் நல்ல காரியங்களுக்கு பலன் பல நாட்களுக்கும் பல தலைமுறைகளுக்கும் நீட்டித்திருக்கும் படியாக யோசித்துச் செய்வது நல்லது

 

நன்றி: எகனாமிக் டைம்ஸ், இந்தியா

 


மகளைத் திருத்த முயன்ற தாயும், மகள் சொன்ன பதிலும்! கவிதை

 .



-சங்கர சுப்பிரமணியன்.

குடும்பப் பெண்ணாக அடக்கமாய் இராது
எப்போதும் தலைமுடியை விரித்து போட்டபடி
இருக்கிறாயே என்ன இது?
நம் பண்பாடா இது என்று கேட்டாள் தாய்

நீங்கள்தான் பண்பாட்டை மறந்து விட்டீர்கள்
லட்சுமிகரமாக இருக்க வேண்டும் என்பீர்களே
தினம் அந்த  லட்சுமியை வணங்கும் நீங்கள்
பூஜை அறையில் அவள் படத்தைப் பாருங்கள்
அப்புறம் கேள்வியை கேளுங்கள் என்றாள்

லட்சுமி தலைமுடியை விரித்துப் போட்டபடி
எப்போதும் இருப்பது தெரியவில்லையா
அவளென்ன பண்பாடு இல்லாதவளா என்றாள்

அவள் செய்ததைத்தானே நான் செய்கிறேன்
நான் செய்தால் மட்டும் பண்பாடற்றவளா?
பதில் சொன்னாள் மகள் தாயிடம்

எந்த வேலையும் செய்யாமல் வீணாய் குத்துக்கல்லாய் ஓரிடத்தில் நிற்கிறாயேயென
மீண்டும் கண்டித்துக் கேட்ட தாயிடம்

நானாவது தரையில்தான் நிற்கிறேன்
லட்சுமியோ மென்மையான பூவெனவும் பாராது
அதன்மீது ஓரிடத்தில் அசையாது நிற்கிறாளே
அவளென்ன குத்துக்கல்லா அம்மா என
திருப்பியே கேட்டாள் மகளும் தாயிடம்

பெண்ணாய் லட்சணமாய் சுறுசுறுப்பாயிராது
காதில் காதொலிப்பானை மாட்டிக் கொண்டு
ஒரே இடத்தில் அசையாமல் இருக்கிறாயே
என்று மறுபடியும் அலுத்துக் கொண்டாள் தாய்

கையில் வீணையை வைத்தபடி பாறைமீது
ஒரே இடத்தில் இருக்கிறாளே சரஸ்வதி
அதைத்தானே இங்கு நானும் செய்கிறேன்
நான் செய்தால் தவறா அம்மா என்றாள் மகள்

ஐயோ இந்தகாலத்து பெண்பிள்ளைகளிடம்
எதைச் சொன்னாலும் எதிர்த்துப் பேசுவார்கள்
எப்படிப் பேசினாலும் பதிலும் சொல்வார்கள்
மெல்லமாய் சொல்லியே தள்ளியே சென்றாள்
கலிகாலமென முணுமுணுத்தது அவள் வாய்!