மண்ணுலகில் - 03/05/1933 இறைவனடி- 20/10/2024
இலங்கை ஏழாலையை பிறப்பிடமாகவும் சிட்னியில் வசித்தவரும்,
இளைப்பாறிய ரத்மலானா இந்து கல்லூரி யாழ் ராமநாதன் கல்லூரி மற்றும் சிட்னி தமிழ் கல்வி நிலையம் ஆசிரியையுமாகிய திருமதி மகேஸ்வரி தில்லைநடேசன் அவர்கள் 20/10/2024 அன்று காலமானார்.
அன்னார் திரு சிவப்பிரகாசம் தில்லைநடேசன் அவர்களின் அன்புமிகு மனைவியும், சிட்னியில் வசிக்கும் அருள்முருகன், யோவனா, உதயசீலன், நந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும். ராகுலன், விஷாலினி, யாதவன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும், ஜதுஷன், துஷான், சஞ்சய், அர்ச்சனா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் South Chapel, Rookwood Crematorium, Memorial Avenue,
Rookwood இல் பார்வைக்காக புதன்கிழமை 23/10/2024 காலை 11.30 இல் இருந்து 12.30 வரை வைக்கப்பட்டு பின்னர் ஈமைக்கிரிகைகள் நடத்தப்பட்டு 2.30 மணிக்கு தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
அறிவித்தல் – நந்தினி