மேலும் சில பக்கங்கள்

மிருகங்களா குழந்தைகளை பராமரித்தவை? - நாட்டியகலாநிதி கார்திகா கணேசர

 


தாய்மையின் உன்னத பாசத்தை மிருகங்களிடமும் கணமுடியும். ஆனால் மனித நாகரீக உலகில் குப்பை தொட்டியில் குழந்தைகள் கண்டெடுக்கப் படுகிறது.  அனாதை இல்ல வாசலில் குழந்தைகள், ஏன் இந்த குழந்தையை பெற்றெடுத்தவள் தாய் இல்லையா? அவளுக்கு பாசம் கிடையாதா?  மிருகங்களிலும் மோசமானவளா அந்த் தாய். இல்வே இல்லை,அவளை அந்த நிலைக்கு ஆளாக்கியது இந்த நாகரீக சமுதாயமே, ஒருவள் திருமண பந்தத்திற்கு உட்படாது கருதரிப்பதோ குழந்தையை பெற்று கொள்வதோ சமுதாயம் ஏற்று கொள்ளாத ஒன்றாக  ,இருந்தமேயே  இத்தகைய கொடுமைகள் நடக்க காரணமானது. அவ்வாறு குழந்தையை பெற்று விட்டவள் அவமான படுத்தப்படுகிறாள்.அதற்கு முகம் கொடுக்க பயந்தே குழந்தையை அறியா பருவத்தில் அனாதரவாக விட்டு விடுகிறாள். இந்த கொடுமை இன்று நேற்று ஏற்படதல்ல, புராண காலத்தில் குந்திதேவியால் கைவிடபட்ட கர்ணன்

கதை நாம் அறிந்ததே.
  காளிதாசனின் நாடகங்களிலே மிக பிரபலமாது சாகுந்தலம், சாகுந்தலை என்ற காவிய நாயகியோ குழந்தைப் படுவத்திலே அன்ன பட்சிகளால் பராமரிக்கப்படுகிறாள், கண்ணுவ முனிவர் அவளை கண்டெடுத்து தனது செல்ல குழந்தையாக வளர்கிறார். அன்ன பட்சி வட மொழியிலே  சாகுந்தலம் ஆகும்.அன்ன பட்சிகளால் வளர்க்க பட்ட பெண் ஆதலால் சாகுந்தலை என பெயரிட்டு வளர்க்கப்பட்டாள். என்ன அன்ன பட்சி வளர்பது வெறும் கற்பனை என தோன்றுகிறதா. மனித குழந்தைகளை மிருகங்கள் பறவைகள்பராமரித்து வளர்பதா? அழகான கற்பனை என எண்ணுகிறோம். ஆனால்மனித ஜென்மங்களால் அனாதரவாக விடப்பட்ட  மனிதக் குழந்தைகளை மிருகங்கள் பராமரித்தமை 
நிஜ வாழ்வில் நடந்த உண்மையே,, அண்மையில் Geographic channel இல்இதை விரிவாக காட்டினார்கள்.

 

றஷ்ய நாட்டிலிருந்து பிரிந்த நாடே யுக்ரேன். இங்கு போதை மருந்துக்கு .அடிமையாகிறார்கள் பிள்ளையை பெற்ற பெற்றோர்.வீட்டில் வளர்பு நாயும் இருந்துள்ளது.நட்டாலியா என்ற பெண் குழந்தை பெற்றோர் கவனிப்பு அற்றவளாக நாய்களின் அரவணைபிலே, நாயின் ஆதரவில் நாய்களால் வளக்கப் படுகிறாள். தனக்கு விவரம் தெரிந்த நாள் முதலாக  நாய்களுடன் படுத்து அவற்றின் அரவணைப்பிலும் ஆதரவான அதன் சூட்டிலும் தான், வளர்ந்தாள் என அவளே கூறுகிறாள். இந்த நிலையிலே எவ்வாறோ வெளி உலகுக்கு இது தெரியவர அவளை அரச சேவையாளர் நாய்களில் இருந்து பிரித்து எடுத்து செல்வதை விடியோ படமாக காண்பித்தார்கள்.  இவ்வாறு பிரித்து எடுத்து போனபோது இவளுக்கு தனது கைகளை பாவிக்க தெரியவில்லை. நாய்கள் மாதிரியே குனிந்து வாயால் உணவை உண்டாள். இவ்வாறான நிலையில் கண்டெடுக்கப்பட்டவளுக்கு,,படிபடியாக சமுக சேவையாளரால் மனித பளக்க வளக்கங்கள் பயிற்றப் படுகிறது. அதுவரை அவளுக்கு பேச தெரியாது. படிபடியாக அவள் மனித சமுதாயத்துடன் ஒன்றி வாழக்கூடியவளாக பயிற்றப்படுகிறாள். இப்போது அவள் பாடசாலையில் படிக்கிறாள். அவளை உற்று நோக்கும்போது மற்ற குழந்தைகளில் இருந்து மாறுபட்டவளாகவே  எமக்கு தோன்றுகிறாள். 6 வயது வரை மனித சகவாசம் அற்று வாழ்ந்ததால்  குழந்தை இயற்கையக மனிதரிடம் இருந்து பார்த்து கேட்டு அறிய வேண்டியவை, அதன் மூலம் பெறும் இயற்கையான மூளை வளர்ச்சி அத்தனையும் அவள் பெறாதவையே.  ஒரு குழந்தையின் மூளை  ஐந்து வயதுக்கு முன் மிக துரித வளர்ச்சி அடைகிறது. மனித மூளை அதன் பின் அத்தனை வேகமாக வளராது. இவை யாவும் அவளை மீட்டு புதிய வாழ்வுக்கு பயிற்றும்போது தடையாக இருந்ததாக வல்லுணர்கள் அபிப்பிராயம் தெரிவித்தனர். இதற்கு மேலும் ஒரு சிறுவனோ குரங்குகள் ஆதரவில் வாளர்ந்துள்ளான்.            

தென் ஆபிரிக்க காடுட்டிலே பையன் ஒருவன் குரங்கு கூட்டத்துடன் காணப்படுகிறான். அவனுக்கு அப்பொளுது வயத எட்டு இருக்கலாம். விக்டர் அவனை கண்டு வீட்டிற்கு அழைத்து வந்துவிடுகிறார். அதுவரை அவன் பேச்சு மொழி எதுவும் தெரியாது குரங்குகளில் ஒன்றாகவே வாழ்ந்தவன். விக்டர் மனைவி மேரி அந்த பையனை கண்டு திகைக்கிறாள், எந்தவித மனித சுபவமும் அற்ற அவனை எவ்வாறு   வீட்டிலே வைத்திருப்பது. இதை ஏன் இங்கு கொண்்டு வந்தாய் என கணவனிடம்  வாதிடுகிறாள். ஆனால் ஒரு மனித பையனை மீண்டும் அனாதரவாக காட்டில் விட மனம்இடம் தரவில்லை. காலப்போக்கில் அவன் மொழியையும் ஓர் அளவு புரிந்து மனிதராக  வாழப் பழகிக்கொள்கிறான்.  தொலைகாட்சியில் அவனை நாம் பார்க்கும் போது அவன் வயது 16,வளரர்ந்த இளைஞன். அவனுக்கு சரியாக பேச முடியவில்லை ஏதோ சிறிது திக்கி கொச்சையாக பேச முடிந்தது. அவன் பேச்சை அவன் குடும்பம் புரிந்துகொள்கிறது. ஆனால் கிட்டார் வாத்தியத்ததை வாசிக்க கற்றுக் கொண்டான். வைத்திய பரிசோதனையில்  அவன் தலையில் பலமாக அடிபட்டதால் அவன் பேச்சு பாதிக்கபட்டுள்ளது என  வைத்தியர் ஆய்வில் கண்டறிந்தனர். 

இவன் குரங்குகளே தன்னை வளர்ததாக கூறுகிறான். அவன் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அவனைஆய்வாளர்கள் அழைத்து சென்ற போது ,அந்த இடத்தை கண்டு அவன் உணர்ச்சிவசப்பட்டதாக கூறப்பட்டது. ஆய்வாளககளின் கணிப்பில் இவன் குரங்குகளால் வளரக்கப் படவிலை.,ஆனால் குரங்கு கூட்டம் இவனை தம் கூட்டத்துடன் இணைத்துக் கோண்டன. இந்த சிறுவனை அவை விரட்டி அடிக்விலை. குரங்ககள் உண்ட மீத காய் கனியை இவன் உண்டு வாழ்ந்துள்ளான்., என கணிக்கின்றனரர். இவர்கள் ஆய்வுஎதையும் கூறலாம், குரங்கு கூட்டத்துடன் வாழாவிட்டால் அவன் என்றோ மடிந்திருப்பான். மேலும் இவன் மிக சிறிய வயதில், மூன்றே வயதிருக்கும் போது மாற்றாம் தாயால் வீடை விட்டு விரட்டப் பட்டுள்ளான். காட்டிற்குள் ஓடிய குழந்தை  குரங்கு கூட்டததுடன் வாழ்ந்ததே உண்மை.குரங்குகளே அவனுகக்கு  வேண்டிய பாதுகப்பை வளங்கி உள்ளன.

1920 வதுகளில் இந்தியாவில் வாழ்ந்த பிரத்தானிய பாதிரியார் ,இரட்டை குழந்தைகளான பெண் குழந்தைகள் ஓநாய்களால் வளர்க்கப் பட்டுள்ளனர், அவற்றை பாதிரியார் மீட்டு எடுத்துவந்து பவானி, கமலா என பெயரிட்டு வளர்கிறார்,  அவர்களின் படத்தை பிருத்தானியா அனுப்பி  உதவி கோரி உள்ளார். பிருத்தானிய ஆய்வாளர்கள் குழந்தைகளை ஓநாய் வளர்க்க முடியாது. பாதிரியாருக்கு இந்தியாவிலே நாதி அற்ற குழந்தைகளை வளர்க்க பணம் தேவையாக இருந்திருக்கும் அதற்காக இபடி ஒரு கதையை சோடித்து படங்களை எடுத்து, மேற்கு நாட்டு பத்திரிகைகளிலே பிரசுரித்தமையால் அவருக்கு குழந்தைகளை வளர்க்க பணம் கிடைத்திருக்கும், என  விமர்சித்தார்கள்.  

ஆனால் இந்தியாவிலே குழந்தைகள் ஓனாயால் வளர்க்க பட்டதாகவும் அதை கிராமவாசகள் கண்டெடுத்தாகவும், பத்திரிகையில் செய்தியாக வாசித்துள்ளேன். மேற்கத்திய ஆய்வாளர்களுக்கு அப்பாற் பட்ட விஷயமாக இது இருக்கலாம். ஆனால் இந்திய பெருங்ீ கண்டத்தில் இவை நிஜமாகவே நடந்த நிகள்வுகள் தான்.

மனிதாபிமானம், மனிதம், இரக்கம் தாய்மை, என மனிதரான நாம் பலவாறு பேசுகிறோம். அத்தனைக்கும் அப்பால் தன்மானம் சமூகத்தின் முன், அவமானம் என்பதற்காக பெற்ற குழந்தையை அனாதரவாக விட துணிகிறது மனிதசமூகம். இது எதுவுமே அறியாத மிருகங்களிடம் காணும் அன்பு கூட அற்றவர்தான் மனிதரா?

இனிமேல்ஆவது ஒரு பெண் திருமண பந்தத்தில் ஈடுபடாது குழ்ந்தையை பெற்றுவிட்டால் மற்றவர் போல குழந்தையும் தாயும்  சமூகத்தால் ஏற்றுக்கொள்ள பட்டால் இந்த கொடுமை நடைபெறாது. மேற்கு நாடுகள் இன்று இதை சகஜமாக அங்கீகரிக்கிறது. ஆனால் எமத சொந்த நாடுகளிலும் இந்த நிலமை வரவேண்டும்.

No comments:

Post a Comment