பிரதம நீதியரசராக ஸ்ரீபவன்
'கடூழிய சிறை தண்டனையாய் உணர்ந்தேன்' : ஓய்வு பெறும் நிகழ்வில் பிரதம நீதியரசர் ஷிராணி உருக்கம்
வட மத்திய மாகாண முதலமைச்சராக பேஷல ஜயரத்ன சத்தியப்பிரமாணம்
பிரதம நீதியரசராக ஸ்ரீபவன்
31/01/2015 இலங்கையின் 45 ஆவது பிரதம நீதியரசராக கனகசபாபதி ஸ்ரீபவன் நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
இவர் இந்நாட்டின் இரண்டாவது தமிழ் பிரதம நீதியரசராவார். முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பதவி நீக்கப்பட்டு அவ்விடத்திற்கு கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க மீண்டும் நியமிக்கப்பட்டார்.
பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்ட கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க நேற்று முன்தினம் வியாழக்கிழமை தனது பதவியை இராஜிநாமா செய்ததையடுத்தே கே.ஸ்ரீபவன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டார்.
கனகசபாபதி ஸ்ரீபவன் 1952 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதி யாழ்பாணத்தில் பிறந்தார் 1962 ஆம் ஆண்டு யாழ் இந்துக் கல்லூரியில் ஆரம்பக் கல்விகற்ற ஸ்ரீபவன் 1974ஆண்டு இலங்கை சட்டக்கல்லூரியில் சேர்ந்து 1976ஆம் ஆண்டில் முதற்தரச் சித்தியுடன் சட்டத்தரணியானார்.
இதனையடுத்து சில ஆண்டுகள் சட்டத்தரணியாக சேவையாற்றிய 1978 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி பதில் அரச சட்டத்தரணியாக இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்தில் இணைந்து கொண்டார். 1979ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி அவருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது.1989ஆம் ஆண்டில் சிரேஷ்ட அரச சட்டத்தரணியாக பதவியுயர்வு பெற்ற ஸ்ரீபவன் 1996ஆம் ஆண்டு பெப்பரவரி 22ஆம் திகதி சொலிசிடர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். 1992 ஆம் ஆண்டில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் கைத்தொழில் சட்டத்துறையில் டிப்ளோமா சான்றிதழையும் 1994ஆம் ஆண்டில் லண்டன் பல்கலைக்கழகத்திலிருந்து சட்டத்துறை முதுமானிப் பட்டத்தையும் பெற்றிருந்தார்.
2002 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமனம்பெற்ற அவர் 2007ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவராக பதவியுயர்வு பெற்றிருந்தார். 2008ஆம் ஆண்டில் உயர் நீதிமன்ற நீதியரசர் நிஹால் ஜயசிங்கவின் இடத்திற்கு ஸ்ரீபவன் நியமிக்கப்பட்டிருந்தார்.
2013 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஸ்ரீபவன் பதில் பிரதம நீதியரசராக அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவினால் நியமிக்கப்பட்டார்.இதேவேளை நிறைவேற்று ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேன கடந்த 9ஆம் திகதி இவரின் முன்பாகவே சத்தியப்பிரமாணம் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
'கடூழிய சிறை தண்டனையாய் உணர்ந்தேன்' : ஓய்வு பெறும் நிகழ்வில் பிரதம நீதியரசர் ஷிராணி உருக்கம்
30/01/2015 இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 43 ஆவது பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க நேற்று நள்ளிரவு 12.00 மணியுடன் தனது பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். புதுக்கடைஇ உயர் நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்று முற் பகல் இடம்பெற்ற பிரதம நீதியரசரின் சம்பிரதாயபூர்வமான ஓய்வுபெறும் வைபவத்திலேயே கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க இதனை தெரிவித்தார்.
2013 ஜனவரி மாதம் 13 ஆம் திகதி தனக்கு விதிக்கப்பட்ட சட்ட விரோத தடை காரணமாக 746 நாட்கள் தன்னால் உயர் நீதிமன்ற நீதியரசராகவும்இ பிரதம நீதியர்சராகவும் செயற்பட முடியாது போனதாகவும் இந் நாட்களில் தான் கடூழிய சிறைத் தண்டனையை அனுபவிக்கும் நிலமையை உணர்ந்ததாகவும் இதன் போது 43 ஆவது பிரதம நீதியரசர் ஷிராணி பண்டார நாயக்க மேலும் குறிப்பிட்டார்.
பிரதம நீதியரசரின் சம்பிரதாயபூர்வமான ஓய்வுபெறும் இந்த வைபவத்தில் உயர் நீதிமன்றின் ஏனைய 10 நீதியரசர்களும் கலந்துகொண்டிருந்ததுடன், மேன் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களும்இ மேல் நீதிமன்றம்இ மாவட்ட நீதிமன்றம்இ நீதிவான் நீதிமன்றங்களை சேர்ந்த நீதிபதிகளும் கல்ந்துகொண்டிருந்தனர்.
அத்துடன் சட்ட மா அதிபர்இ சொலிசிற்ற ஜெனரல்கள்இ பிரதி சொலிசிற்ற ஜெனரல்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்ததுடன் சட்டத்தரணிகள் சம்ங்கத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட உத்தியோகபூரவ இ உத்தியோகபூர்வமற்ற சட்டத்தரணிகள் என நூற்றுக்கணக்க்கானோர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த இரு வருடங்களாக அடிப்படையற்ற குற்றச் சாட்டுக்களை என்மீது முன் வைத்தனர். அதுமட்டுமன்றி எனது கணவர் பிரதீப் காரியவசம்இ மகன் ஷவீன் மற்றும் எனது இளைய சகோதரி ரேனுகா ஆகியோரை பல்வேறு விதங்களில் இன்னல்களுக்கு உட்படுத்தினர். என்னை இலஞ்ச ஊழல் திணைக்களத்திற்கும், மஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கும் இழுத்துச் சென்றனர். என்னை குற்றமற்றவர் என நிரூபிக்க நான் அங்கெல்லாம் செல்லவேண்டியிருந்தது.
இதன் போது என்னுடன் இருந்த சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரிய உள்ளிட்ட அந்த சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் ஏனைய அனைத்து சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்களுக்கும் நான் இந் நேரத்தில் நன்றி தெரிவிக்கின்றேன்.
746 நாட்களுக்கு பின்னர் நான் மீண்டும் கடமைகளுக்கு சமூகம் தந்துள்ளேன். என்னை சட்டத்துக்கு விரோதமான முறையில் செயற்பட்டு பிரதம நீதியரசராக செயற்படுவதை தடுத்தனர். எனினும் பொதுமக்கள் என்னையே நீதியர்சராக நம்பினர்.
1996 ஆம் ஆண்டு நான் முதன் முதலாக நீதியரசராக நியமனம் பெற்றேன். அன்ரு முதல் இன்று வரை 16 வருடங்கள் நான் நீதியர்சராக கடமைகளை தொடர்ந்துள்ளேன். 2011 ஆம் ஆண்டு நான் உயர் நீதிமன்றின் பிரதம நீதியரசராக நியமனம் பெற்றேன். 2013 ஜனவரி மாதம் 13 ஆம் திகதி முதல் எனக்கு எதிரான நடவ்டிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எனது கடமைகளை முன்னெடுத்துச் செல்ல சட்ட விரோதமான முறையில் எனக்கு தடைகள் விதிக்கப்பட்டன.
இந்த இரண்டு வருடக் காலப்பகுதியில் அதாவதுஇ 746 நாட்களில் நான் மிகவும் புண்படுத்தப்பட்டேன். அந்த இரு வருடங்களிலும் எவ்வித ஆதரமும் இல்லாத குற்றச்சாட்டுக்கள் எனக்கெதிராக முன் வைக்கப்பட்டன. கடூழிய சிறைத்தண்டனையை அனுபவிப்பது போன்று ஒரு அழுத்ததுடனேயே அவற்றுக்கு நான் முகம் கொடுக்க வேண்டியிருந்தது. இப்போது அந்த காலம் முடிந்துவிட்டது. நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது.
நான் தனிப்பட்ட விடயங்களுக்காக இந்த இரு வருடங்களும் போராடவில்லை. நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையை பாதுகாப்பதற்காகவே இந்த போராட்டத்தை நான் முன்னெடுத்தேன். அதன்படி ஆரம்பத்திலிருந்து என்னுடன் கைகோர்த்திருந்த, அனியாயத்துக்கு எதிராக எம்முடன் சேர்ந்து குரல் எழுப்பிய அத்தனை பேரையும் நன்றியுடன் நான் நினைவு கூறுகின்றேன்.
நீதிச் சேவைக்குள் தகுதியானவ்ர்களே உள்வாங்கப்படவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். நீதிச் சேவையின் சுயாதீனம் பேணப்படவேண்டும். நான் இன்று இருக்கலாம். நாளை இல்லாமல் போகலாம். எனினும் எனது நாட்டு மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். கடந்த இரு வருடங்களில் பல்வேறு பாதிப்புக்கள் நீதிச் சேவையில் ஏற்பட்டிருக்கலாம். எனினும் எனது நாட்டு மக்களுக்கு சுயாதீனமான நீதிச் சேவையை கிடைப்பதை நாம் உறுடி செய்ய வேண்டும்.
அந்த வகையில் நீதிமன்ற சுயாதீனத்துக்காகவே இந்த இரு வருடங்கள் போராடிய நான் இன்னும் ஒன்பது வருடங்கள் என்னால் பதவியில் இருக்க முடியுமாக இருந்த போதிலும் ஓய்வுபெறுகின்றேன். இதனையும் நீதிமன்றத்தின் சுயாதீன தன்மையை கருத்தில் கொண்டே நான் முன்னெடுக்கின்றேன். என்னை தொடர்ந்து புதிய நீதியரசராக நியமனம் பெற உள்ள கே. ஸ்ரீபவனுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.என குறிப்பிட்டார். நன்றி வீரகேசரி
வட மத்திய மாகாண முதலமைச்சராக பேஷல ஜயரத்ன சத்தியப்பிரமாணம்
28/01/2015 வட மத்திய மாகாண முதலமைச்சராக பேஷல ஜயரத்ன வடமத்திய மாகாண ஆளுநர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
நன்றி வீரகேசரி
'கடூழிய சிறை தண்டனையாய் உணர்ந்தேன்' : ஓய்வு பெறும் நிகழ்வில் பிரதம நீதியரசர் ஷிராணி உருக்கம்
வட மத்திய மாகாண முதலமைச்சராக பேஷல ஜயரத்ன சத்தியப்பிரமாணம்
பிரதம நீதியரசராக ஸ்ரீபவன்
31/01/2015 இலங்கையின் 45 ஆவது பிரதம நீதியரசராக கனகசபாபதி ஸ்ரீபவன் நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
இவர் இந்நாட்டின் இரண்டாவது தமிழ் பிரதம நீதியரசராவார். முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பதவி நீக்கப்பட்டு அவ்விடத்திற்கு கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க மீண்டும் நியமிக்கப்பட்டார்.

கனகசபாபதி ஸ்ரீபவன் 1952 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதி யாழ்பாணத்தில் பிறந்தார் 1962 ஆம் ஆண்டு யாழ் இந்துக் கல்லூரியில் ஆரம்பக் கல்விகற்ற ஸ்ரீபவன் 1974ஆண்டு இலங்கை சட்டக்கல்லூரியில் சேர்ந்து 1976ஆம் ஆண்டில் முதற்தரச் சித்தியுடன் சட்டத்தரணியானார்.
இதனையடுத்து சில ஆண்டுகள் சட்டத்தரணியாக சேவையாற்றிய 1978 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி பதில் அரச சட்டத்தரணியாக இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்தில் இணைந்து கொண்டார். 1979ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி அவருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது.1989ஆம் ஆண்டில் சிரேஷ்ட அரச சட்டத்தரணியாக பதவியுயர்வு பெற்ற ஸ்ரீபவன் 1996ஆம் ஆண்டு பெப்பரவரி 22ஆம் திகதி சொலிசிடர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். 1992 ஆம் ஆண்டில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் கைத்தொழில் சட்டத்துறையில் டிப்ளோமா சான்றிதழையும் 1994ஆம் ஆண்டில் லண்டன் பல்கலைக்கழகத்திலிருந்து சட்டத்துறை முதுமானிப் பட்டத்தையும் பெற்றிருந்தார்.
2002 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமனம்பெற்ற அவர் 2007ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவராக பதவியுயர்வு பெற்றிருந்தார். 2008ஆம் ஆண்டில் உயர் நீதிமன்ற நீதியரசர் நிஹால் ஜயசிங்கவின் இடத்திற்கு ஸ்ரீபவன் நியமிக்கப்பட்டிருந்தார்.
2013 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஸ்ரீபவன் பதில் பிரதம நீதியரசராக அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவினால் நியமிக்கப்பட்டார்.இதேவேளை நிறைவேற்று ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேன கடந்த 9ஆம் திகதி இவரின் முன்பாகவே சத்தியப்பிரமாணம் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
'கடூழிய சிறை தண்டனையாய் உணர்ந்தேன்' : ஓய்வு பெறும் நிகழ்வில் பிரதம நீதியரசர் ஷிராணி உருக்கம்
30/01/2015 இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 43 ஆவது பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க நேற்று நள்ளிரவு 12.00 மணியுடன் தனது பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். புதுக்கடைஇ உயர் நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்று முற் பகல் இடம்பெற்ற பிரதம நீதியரசரின் சம்பிரதாயபூர்வமான ஓய்வுபெறும் வைபவத்திலேயே கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க இதனை தெரிவித்தார்.
2013 ஜனவரி மாதம் 13 ஆம் திகதி தனக்கு விதிக்கப்பட்ட சட்ட விரோத தடை காரணமாக 746 நாட்கள் தன்னால் உயர் நீதிமன்ற நீதியரசராகவும்இ பிரதம நீதியர்சராகவும் செயற்பட முடியாது போனதாகவும் இந் நாட்களில் தான் கடூழிய சிறைத் தண்டனையை அனுபவிக்கும் நிலமையை உணர்ந்ததாகவும் இதன் போது 43 ஆவது பிரதம நீதியரசர் ஷிராணி பண்டார நாயக்க மேலும் குறிப்பிட்டார்.
பிரதம நீதியரசரின் சம்பிரதாயபூர்வமான ஓய்வுபெறும் இந்த வைபவத்தில் உயர் நீதிமன்றின் ஏனைய 10 நீதியரசர்களும் கலந்துகொண்டிருந்ததுடன், மேன் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களும்இ மேல் நீதிமன்றம்இ மாவட்ட நீதிமன்றம்இ நீதிவான் நீதிமன்றங்களை சேர்ந்த நீதிபதிகளும் கல்ந்துகொண்டிருந்தனர்.
அத்துடன் சட்ட மா அதிபர்இ சொலிசிற்ற ஜெனரல்கள்இ பிரதி சொலிசிற்ற ஜெனரல்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்ததுடன் சட்டத்தரணிகள் சம்ங்கத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட உத்தியோகபூரவ இ உத்தியோகபூர்வமற்ற சட்டத்தரணிகள் என நூற்றுக்கணக்க்கானோர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த இரு வருடங்களாக அடிப்படையற்ற குற்றச் சாட்டுக்களை என்மீது முன் வைத்தனர். அதுமட்டுமன்றி எனது கணவர் பிரதீப் காரியவசம்இ மகன் ஷவீன் மற்றும் எனது இளைய சகோதரி ரேனுகா ஆகியோரை பல்வேறு விதங்களில் இன்னல்களுக்கு உட்படுத்தினர். என்னை இலஞ்ச ஊழல் திணைக்களத்திற்கும், மஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கும் இழுத்துச் சென்றனர். என்னை குற்றமற்றவர் என நிரூபிக்க நான் அங்கெல்லாம் செல்லவேண்டியிருந்தது.
இதன் போது என்னுடன் இருந்த சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரிய உள்ளிட்ட அந்த சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் ஏனைய அனைத்து சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்களுக்கும் நான் இந் நேரத்தில் நன்றி தெரிவிக்கின்றேன்.
746 நாட்களுக்கு பின்னர் நான் மீண்டும் கடமைகளுக்கு சமூகம் தந்துள்ளேன். என்னை சட்டத்துக்கு விரோதமான முறையில் செயற்பட்டு பிரதம நீதியரசராக செயற்படுவதை தடுத்தனர். எனினும் பொதுமக்கள் என்னையே நீதியர்சராக நம்பினர்.
1996 ஆம் ஆண்டு நான் முதன் முதலாக நீதியரசராக நியமனம் பெற்றேன். அன்ரு முதல் இன்று வரை 16 வருடங்கள் நான் நீதியர்சராக கடமைகளை தொடர்ந்துள்ளேன். 2011 ஆம் ஆண்டு நான் உயர் நீதிமன்றின் பிரதம நீதியரசராக நியமனம் பெற்றேன். 2013 ஜனவரி மாதம் 13 ஆம் திகதி முதல் எனக்கு எதிரான நடவ்டிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எனது கடமைகளை முன்னெடுத்துச் செல்ல சட்ட விரோதமான முறையில் எனக்கு தடைகள் விதிக்கப்பட்டன.
இந்த இரண்டு வருடக் காலப்பகுதியில் அதாவதுஇ 746 நாட்களில் நான் மிகவும் புண்படுத்தப்பட்டேன். அந்த இரு வருடங்களிலும் எவ்வித ஆதரமும் இல்லாத குற்றச்சாட்டுக்கள் எனக்கெதிராக முன் வைக்கப்பட்டன. கடூழிய சிறைத்தண்டனையை அனுபவிப்பது போன்று ஒரு அழுத்ததுடனேயே அவற்றுக்கு நான் முகம் கொடுக்க வேண்டியிருந்தது. இப்போது அந்த காலம் முடிந்துவிட்டது. நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது.
நான் தனிப்பட்ட விடயங்களுக்காக இந்த இரு வருடங்களும் போராடவில்லை. நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையை பாதுகாப்பதற்காகவே இந்த போராட்டத்தை நான் முன்னெடுத்தேன். அதன்படி ஆரம்பத்திலிருந்து என்னுடன் கைகோர்த்திருந்த, அனியாயத்துக்கு எதிராக எம்முடன் சேர்ந்து குரல் எழுப்பிய அத்தனை பேரையும் நன்றியுடன் நான் நினைவு கூறுகின்றேன்.
நீதிச் சேவைக்குள் தகுதியானவ்ர்களே உள்வாங்கப்படவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். நீதிச் சேவையின் சுயாதீனம் பேணப்படவேண்டும். நான் இன்று இருக்கலாம். நாளை இல்லாமல் போகலாம். எனினும் எனது நாட்டு மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். கடந்த இரு வருடங்களில் பல்வேறு பாதிப்புக்கள் நீதிச் சேவையில் ஏற்பட்டிருக்கலாம். எனினும் எனது நாட்டு மக்களுக்கு சுயாதீனமான நீதிச் சேவையை கிடைப்பதை நாம் உறுடி செய்ய வேண்டும்.
அந்த வகையில் நீதிமன்ற சுயாதீனத்துக்காகவே இந்த இரு வருடங்கள் போராடிய நான் இன்னும் ஒன்பது வருடங்கள் என்னால் பதவியில் இருக்க முடியுமாக இருந்த போதிலும் ஓய்வுபெறுகின்றேன். இதனையும் நீதிமன்றத்தின் சுயாதீன தன்மையை கருத்தில் கொண்டே நான் முன்னெடுக்கின்றேன். என்னை தொடர்ந்து புதிய நீதியரசராக நியமனம் பெற உள்ள கே. ஸ்ரீபவனுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.என குறிப்பிட்டார். நன்றி வீரகேசரி
வட மத்திய மாகாண முதலமைச்சராக பேஷல ஜயரத்ன சத்தியப்பிரமாணம்
28/01/2015 வட மத்திய மாகாண முதலமைச்சராக பேஷல ஜயரத்ன வடமத்திய மாகாண ஆளுநர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment